Saturday, 30 May 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


நடைபயிற்சி செய்யும்போது உங்களுடைய பாதத்தை பாதி கடித்தும் கடிக்காததுமாக பச்சையும்...

Posted: 30 May 2015 08:10 AM PDT

நடைபயிற்சி செய்யும்போது உங்களுடைய பாதத்தை பாதி கடித்தும் கடிக்காததுமாக பச்சையும் மஞ்சளுமான நிறத்தில் ஒரு மாம்பழம் தடுக்கியதா?

இன்று உங்கள் வீட்டில் வாசல் தெளிக்கையில் நேற்றுப்போட்ட கோலத்தின் மேல் செக்கச்சிவப்பாக ஒரு வாதாம்பழம் கிடந்ததா?

பள்ளிக்கூடத்திலிருந்து வருகிற உங்கள் பிள்ளையின் கையில் ஒரு காக்கைச்சிறகு இருக்கிறதா?

சந்தோஷப்படுங்கள்!

உங்களுடைய இந்த நாள் நன்றாகத் துவங்கியிருக்கிறது.
சந்தோஷப்படுங்கள் இந்த நாள் நன்றாக நிறைந்துகொண்டிருக்கிறது.
..
ஒரு கடிபட்ட மாம்பழத்திற்காக, ஒரு வாதாம்பழத்திற்க்காக, ஒரே ஒரு காக்கைச்சிறகுக்காக எல்லாம் ஒருவன் சந்தோஷப்படமுடியுமா என்று கேட்கீறிர்களா?

நிச்சயம் சந்தோஷப்படலாம்.

நீங்கள் மாமரங்களுக்கருகில் வாதாம்மரத்திற்கருகில் மட்டுமல்ல,
பழந்திண்ணி வவ்வால்களோடும், அணில்பிள்ளைகளோடும், காகங்களோடும் இருக்கிறீர்கள்.
உங்கள் உலகம் பத்திரமாக இருக்கிறது.
..
அலுவலகத்திலிருந்து திரும்பிவரும் போது உப்புபோட்டுக் குலுக்கிய நாவல்பழங்களுள்ள ஒரு வெங்கலக்கிண்ணம் உங்களை வரவேற்கிறதா?
சந்தோஷப்படுங்கள்.
..
உங்களுக்கு பிடித்த பெரியம்மாவைப் பார்க்க வேண்டுமென்று திடீரென உங்களுக்குத் தோன்றுகிறது. பஸ் ஏறிப்போகிறீர்கள். அழிக்கதவைத் திறந்து வீட்டுக்குள் கால்வைக்கும் போது மஞ்சள்பொடி வாசனையுடன் பழங்கிழங்கு வேகிற வாசனை வருகிறது.
சந்தோஷப்படுங்கள்.
..
இலந்தப்பழம் கொண்டுவருகிற உறங்கான்பட்டி ஆச்சிக்காக,
மருதாணி அரைத்து எல்லோருக்கும் வைத்துவிடுகிற மீனா அக்காக்காக,
திருவாசகம் படித்துக்கொண்டே பழைய செய்தித்தாள்களில் விதம்விதமாக பொம்மை செய்து தருகிற பூசைமடம் தாத்தாவுக்காக
சந்தோஷப்படுங்கள்.
..
கடவுளின் துகள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்ட மின்அணுமயமாகிவிட்ட வேகவேகமான பதிவிறக்க நாட்களில் இதற்கெல்லாம் ஒருத்தன் சந்தோஷப்படுவானா என்று யாரும் உங்களைக் கேலி செய்தால் அந்த மெட்ரோக்கேலிகளை மாநகரக்கிண்டல்களை சற்றே ஒதுக்கித்தள்ளுங்கள்.
அவர்கள் சுத்திகரிக்கப்பட்ட பாட்டில் தண்ணீரை விலைக்கு வாங்கிக் குடிக்கிறவர்கள்.
அவர்களை நீங்கள் அதிகம் பொருட்படுத்தாதீர்கள்.
..
ஓடுகிற ஆற்றில் கல்மண்டபத்து படித்துறையிலிருந்து உங்களுடைய வட்டப்பாறைகளுக்கு நீங்கள் உங்கள் போக்கிலே நீந்திக்கொண்டு சென்றிருங்கள்.
உங்களுடைய நாணல்திட்டுகளுக்கு,
தாழம்புதர்களுக்கு,
புளியமரச்சாலைகளுக்காக நீங்கள் சந்தோஷப்படுங்கள்.
உங்கள் வீட்டுக்குப் போகிற வழியில் உதிர்ந்து கிடக்கும் வேப்பம்பூக்களுக்காக,
பூ கொறித்து பூ உதிர்த்து தாவும் அணில் குஞ்சுகளுக்காக சந்தோஷப்படுங்கள்.
அரிநெல்லிக்காய்களுக்காக, செம்பருத்திப்பூக்களுக்காக, விதையுள்ள கொய்யாப்பழங்களுக்காக சந்தோஷப்படுங்கள்.
..
இயற்கை உங்களுக்கு மிக அருகில் இருக்கிறது.
நீங்கள் இன்னும் இயற்கையின் நடுவிலே இருக்கிறீர்கள்.
உங்கள் வீட்டுச் செம்மண் முற்றத்தில்தான் மழைக்குப்பிந்திய மண்புழுக்கள் நெளியும்.
உங்கள் வீட்டுச்சுவரோரம்தான் மார்கழிமாதம் வளையல்பூச்சிகள் ஊர்ந்துசெல்லும்.
சரியாகச்சுடப்பட்ட ஒரு பேக்கரிரொட்டியின் நிறத்தில்தான் ஒரு குடைக்காளான் நீங்கள் புகைப்படமெடுப்பதற்கு தயாரானதுபோல முளைத்திருக்கும்.
உங்களுடைய தினங்களில் அணில் கடித்த பழமாக,
வவ்வால் போட்ட வாதம் கொட்டையாக,
காக்கைச்சிறகாக கிடைப்பதையெல்லாம் உங்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கிற சந்தோஷங்கள்.
..
கொஞ்சம் குனியுங்கள்.
உங்களுக்கு கிடைத்திருக்கிற சந்தோஷங்களை நீங்களே பொறுக்கிக் கொள்ளுங்கள்.

- வண்ணதாசன்

Relaxplzz

எது #காதல் காதலை பற்றி என்னயா தெரியும் உங்களுக்கு, காதல்ன என்ன தெரியுமா, , கடல...

Posted: 30 May 2015 08:10 AM PDT

எது #காதல்

காதலை பற்றி என்னயா தெரியும் உங்களுக்கு, காதல்ன என்ன தெரியுமா, ,

கடல் கடந்து போனாலும் மனைவி படத்தை பர்சுக்குள்ள வச்சு பதுக்கி
பதுக்கி பாக்குறானே அதுதான #காதல்

குடும்பத்துல சண்டையாவே இருந்தாலும் அந்த மனுசனுக்கு புடிக்கும்னு
நெஞ்செலும்பை மட்டும் தனியா எடுத்துவைப்பாளே மனைவி
அதுதான #காதல்,

ஏர் புடிச்சதுபோதும் வெரசா வந்து சாப்பிட்டு போய்யான்னு வரப்புல
ஒக்காந்து தூக்குவாளிய முந்தானையால விசிறிக்கிட்டு பட்டினியோட
ஒக்காந்துருப்பாளே மனைவி அதுதான #காதல்,

ஃபங்சனுக்கு இந்த ட்ரெஸ்ஸ போட்டுட்டு போகச் சொல்லுடான்னு
புள்ளைகிட்ட சொல்லுவாளே கோவத்தல பேசாத மனைவி
அதுதான #காதல்,

ஜம்பது வயசுலயும் கெழவிக்கி சளிபுடிச்சுருக்குன்னு சிரிச்சிக்கிட்டே
பொண்டாட்டி மூக்கை சிந்திவிடுவானே கெழவன் அதுதான #காதல்,

மத்ததெல்லாம், #காதலா,,,,,

Relaxplzz

அவமானத்துக்கே அஞ்சாத இந்த உலகில் மனிதாபிமானம்தான் முக்கியம் என்று ஒருவர் வாழ்ந்த...

Posted: 30 May 2015 08:00 AM PDT

அவமானத்துக்கே அஞ்சாத இந்த உலகில் மனிதாபிமானம்தான் முக்கியம் என்று ஒருவர் வாழ்ந்திருக்கிறார்.இந்த மனிதாபிமானத்தின் விலை ஒரு கோடி ரூபாய். அவருக்கு கோவிலே கட்டி கும்பாபிஷேகமே நடத்தலாம் என்று தோன்றுகிறதல்லவா? அதையும் செய்திருக்கிறார் நம்ம ஊர் மனிதநேய நடிகர் பார்த்திபன்...

கேரளாவின் எர்ணாகுளத்தில் வசிக்கிறார் அய்யப்பன். அடிப்படையில் கூலித்தொழிலாளியான இவர் கடனுக்கு ஐந்து லாட்டரி சீட்டுகளை வாங்கினார். பணம் கொடுத்துவிட்டு சீட்டை வாங்கிக் கொள்கிறேன் என்று அந்த சீட்டுகளை வியாபாரி சுரேஷிடமே ஒப்படைத்துவிட்டு கிளம்பிவிட்டார். என்ன ஆச்சர்யம்? இதில் ஒரு சீட்டுக்கு ஒரு கோடி பிரைஸ் விழுந்தது...

நினைத்தால் சீட்டை மாற்றியிருக்கலாம். அல்லது பதுக்கியிருக்கலாம். அல்லது பணம் தராத சீட்டுக்கு நீ எப்படி உரிமை கொண்டாடலாம் என்று சட்டையை பிடித்திருக்கலாம். இப்படி எதுவுமே செய்யாத சுரேஷ், அய்யப்பனை தேடிப்பிடித்து லாட்டரி சீட்டை கொடுத்ததுடன் அந்த சீட்டுக்கு ஒரு கோடி பரிசு விழுந்த விபரத்தையும் சொன்னாராம். பணமே தரவில்லை. அதற்கு நான் எப்படி உரிமை கொண்டாட முடியும் என்று அய்யப்பன் மறுக்க, இல்லையில்ல... அது உனக்குதான் சொந்தம் என்று சுரேஷ் இறுக்க, திகைக்க திகைக்க அங்கே ஒரு சென்ட்டிமென்ட் காட்சி நடந்திருக்கிறது...

இதை எப்படியோ கேள்விப்பட்ட நடிகர் பார்த்திபன், எர்ணாகுளத்திலிருக்கும் சுரேஷை எட்டு பேர் கொண்ட குடும்பத்தோடு சென்னைக்கு தனது செலவிலேயே பிளைட்டில் வரவழைத்து அவரது நேர்மையை பாராட்டி ஒரு லட்ச ரூபாய் பரிசும் கொடுத்திருக்கிறார். இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் விவேக் ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கினார். சுரேஷுக்கு சிறந்த மனிதநேயர் பட்டமும் வழங்கினார்கள்...

சுரேஷ் போன்ற ஒரு சில மனிதர்கள் இருப்தால்தான் ,நாட்டில் மழையே பெய்கிறது...!

Relaxplzz


அலுவலகம் கிளம்பிய பின் மகளிடம் விடை பெறுதலை விட கடினமான வேலை அப்பாக்களுக்கு இருக...

Posted: 30 May 2015 07:50 AM PDT

அலுவலகம் கிளம்பிய பின் மகளிடம் விடை பெறுதலை விட கடினமான வேலை அப்பாக்களுக்கு இருக்கப் போவதில்லை...

- மழைக் காதலன்


:) Relaxplzz

Posted: 30 May 2015 04:02 AM PDT

:) Relaxplzz

Posted: 30 May 2015 03:43 AM PDT

:) Relaxplzz

Posted: 30 May 2015 02:43 AM PDT

:) Relaxplzz

Posted: 30 May 2015 02:16 AM PDT

:) Relaxplzz

Posted: 30 May 2015 02:04 AM PDT

பறவை வீடு கொஞ்ச நாட்களுக்கு முன்னால், கிளிக்கூட்டம் ஒன்னு எங்க வீட்டை நோட்டம் வ...

Posted: 29 May 2015 11:58 PM PDT

பறவை வீடு

கொஞ்ச நாட்களுக்கு முன்னால், கிளிக்கூட்டம் ஒன்னு எங்க வீட்டை நோட்டம் விட்டபடி இருந்தது. திடீரென ஒரு நாள் பால்கனியை ரெய்டு பண்ணிய கிளிக்கூட்டம் அங்கே பயன்படாமல் தூர்பட்டுப் போயிருந்த தண்ணீர் குழாயில் கூடொன்று கட்டிக் கொண்டது. அங்கேயே கொஞ்ச நாள் தங்கி முட்டையிட்டு, குஞ்சு பொரித்து, குஞ்சினை பறக்காட்டி ஒரு நாள் எல்லாக் குஞ்சையும் கூட்டிக் கொண்டு பறந்து போய்விட்டது.

அதுபோல சமீபத்தில் மைனா இரண்டு சேர்ந்து தோட்டதில் நாங்கள் வைத்திருக்கும் லவ்பேர்ட்ஸ் கூண்டின் மேற்புற இடுக்கில் கூடு கட்டத்தொடங்கியது... என்னடா இது இந்த இடுக்கில் போய் கூடுகட்டுதே என்று நினைத்து மைனாக்கள் இல்லாத நேரமாய் நைசாய் கூட்டை எட்டிப்பார்த்தேன். பச்சை வண்ணத்தில் மூன்று முட்டைகள் இட்டிருந்தது மைனா. பாதுகாப்பாய் மூடி வைத்துவிட்டு அப்படியே இறங்கி வந்துவிட்டேன்.
smile emoticon

கடந்த மூன்று நாட்களாய் அந்தக் கூட்டிலிருந்து கீச்சு கீச்சென்று சத்தம். ஏணி போட்டு ஏறி எட்டிப்பார்த்தால் இரண்டு மைனாக் குஞ்சுகள்.... அழகாய் வாயைப் பிளந்து கொண்டிருக்கின்றன....

பாவம் பறவைகள்... முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்க எத்தனை கஷ்டப்பட வேண்டியிருக்கு...

தம்பி ஓம்பிரகாஷிடம் " இப்படி தேசாந்திரியாய் வரும் பறவைகளுக்கு எதானும் உதவ வேண்டுமே... இவை முட்டையிட்டு குஞ்சு பொறிக்க நம் தோட்டத்திலேயே வீடு கட்டிக் கொடுப்போமா?" - என்று கேட்டேன்.

மூன்றே நாட்களில் நான்கு வீடுகள் ரெடி பண்ணிவிட்டார் தம்பி. . ( அதனால்தான் தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்கிறார்கள் :) )

பறவைகள் பாதுகாப்பாக பயமின்றி பயன்படுத்திக் கொள்ள நான்கு மரங்களின் மீது போதுமான உயரத்தில் அந்தப் பறவை வீடுகளைக் கட்டி விட்டிருக்கிறோம்.

உங்க பக்கம் ஏதேனும் புள்ளத்தாச்சிப் பறவையைப் பார்த்தீர்களா நண்பர்களே? பார்த்தால் இந்தப் பறவை வீடுகளின் முகவரி சொல்லி அனுப்பி வையுங்கள். முட்டையிட்டுக் குஞ்சு பொறித்துப் பல்கிப் பெருகட்டும்..

நீங்களும் உங்க வீட்டுல முயற்சிக்கலாமே.. :)

- Ilangovan Balakrishnan

Relaxplzz


மோடி : தூரத்துல தெரியிதே என்ன நாடு? இந்தியா சார் அங்க போகனும்,விசா ரெடி பண்ணுங...

Posted: 29 May 2015 11:05 AM PDT

மோடி : தூரத்துல தெரியிதே என்ன நாடு?

இந்தியா சார்

அங்க போகனும்,விசா ரெடி பண்ணுங்க.. :P :P

- Kalimuthu


அரசாங்கம் இந்த ஆட்டோகாரனுங்கல மதிய வெயிலில் சொட்டர் போட்டு வண்டி ஓட்டனும்ன்னு சொ...

Posted: 29 May 2015 10:14 AM PDT

அரசாங்கம் இந்த ஆட்டோகாரனுங்கல மதிய வெயிலில் சொட்டர் போட்டு வண்டி ஓட்டனும்ன்னு சொன்னா கூட கேப்பாய்ங்க போல,

மீட்டர் போட்டு வண்டி ஓட்ட சொன்னா அவ்ளோ கோபம் வருது...

- Boopathy Murugesh @ Relaxplzz

மின்சாரத்தால் டிஜிட்டல் கேமராவில் உள்ள flash மூலம் உடலுக்குச் செல்ல முடியுமா? 10...

Posted: 29 May 2015 10:10 AM PDT

மின்சாரத்தால் டிஜிட்டல் கேமராவில் உள்ள flash மூலம் உடலுக்குச் செல்ல முடியுமா? 100% முடியும்...

//எச்சரிக்கை, படித்து பகிருங்கள்//

மும்பையில் நடந்த உண்மை சம்பவம்... 21 வயதுடைய பொறியியல் மாணவன் தனது நண்பர்களுடன் கல்வி சுற்றுலா சென்றான். வீடு திரும்ப இவர்கள் இரயில்வே நிலையத்தில் காத்துக் கொண்டிருந்த போது அங்கிருந்த சிலர் group photo எடுத்துக் கொண்டிருந்தனர்.

அதை கண்டபின் இந்த மாணவனும் கையில் டிஜிட்டல் கேமராவை எடுத்துக்கொண்டான். அவனுக்கு அருகே 40,000 volt மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் மின்கம்பி இருந்தது. அவன் போட்டோ எடுக்க முயற்சி செய்தபோது 40,000 volt மின்சாரமானது கேமராவின் flash lite வழியாக அவனை தாக்கியது. உயிருக்கு போராடிய நிலையில் அவனை மருத்துவமனையில் சேர்த்தனர். சுய நினைவை இழந்த இரண்டு நாட்களில் உயிர் பிரிந்தான்... ஆகவே தோழர்களே!

Pls don't use mobile phone/digital camera-flash at railway stations or any other place, where there is a heavy electricity wire. This is for u r safety,,...........

Pls share it...

Relaxplzz

அன்பு நண்பர்களுக்கு முக்கிய செய்தி.! நமது அஞ்சலகத்தில் புதிய நல்ல திட்டம் ஒன்றை...

Posted: 29 May 2015 10:00 AM PDT

அன்பு நண்பர்களுக்கு முக்கிய செய்தி.!

நமது அஞ்சலகத்தில் புதிய நல்ல திட்டம் ஒன்றை அமுல் படுத்தபட்டுள்ளது. செல்வமகள் திருமணத்திட்டம் என அழைக்கப்படும் இத்திட்டத்தில் பத்து வயதிற்க்கு உட்பட்ட 02/12/2003 பிறகு பிறந்த பெண் குழந்தைகள் பதிவு செய்ய தகுதி பெற்றவர்களாவர்.!

முதன் முதலாக ₹1000 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்து உங்கள் குழந்தைகளை இந்த திட்டத்தில் இணைக்கலாம்..!அதன் பிறகு மாதம் 100 ரூபாய் மட்டும் செலுத்தி வர வேண்டும்.இது 21 வயதை தொட்டதும் உங்கள் குழந்தையின் திருமணத்திற்காக ₹6,50,000-/- கிடைக்கும் .மத்திய அரசின் சிறப்பான திட்டம் அனைத்து பெண்குழந்தைகளுக்கும் கிடைக்கப்பெற்று வளமான வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.

மிக இலகுவான விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்ய தேவையானவை.!

(1) தந்தையின் புகைப்படம் ஒன்று.மற்று இருப்பிடம் உறுதி செய்ய அடையாள அட்டை.(வாக்காளர் அட்டை. அல்லது ஆதார் அட்டை நகல் ஓன்று)

(2).பெண் குழந்தையின் பிறப்புச்சான்று நகல்

(3)₹1000 ஆயிரம் ரூபாய் பணம்.!
இது அனைத்து அஞ்சலகத்திலும்(post office)கிடைக்கப்பெறும்.!

More Details: http://www.relakhs.com/sukanya-samriddhi-account-govt-scheme-girl-child/

- முத்துக்குமார்


0 comments:

Post a Comment