Relax Please: FB page daily Posts |
- :) Relaxplzz
- கடவுளை வேண்டினேன், ஆண் குழந்தை பிறந்தது.. அந்த கடவுளே வேண்டும் என்று வேண்டினேன்,...
- அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய சுவாரஸ்யமான பொது அறிவு தகவல்கள்... ஒட்டகசிவிங்கிய...
- சல்மான் கான் வழக்கு பைல்கள் தீ விபத்தில் நாசம்: மகாராஷ்ட்ர அரசு தகவல்.. வாழ்க ஜ...
- ஆண்மையை அழிக்கும் பிராய்லர் கோழி: கட்டாயம் படியுங்கள் பயனுள்ள பதிவு..!! 40 நாட்...
- :) Relaxplzz
- உங்கள் வீட்டில் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் காலாவதியாகும் தேதி (Expiry date) தெ...
- வாவ்...
- இப்படியும் சில... 1. Facebookல நல்ல பதிவுகள் போடறவங்க கண்டிப்பா நல்லவங்களா தான்...
- குடிநீரை வீணாக்காதீங்க........!
- நிலக்கரி ஃபைல்ஸ்... காக்கா தூக்கிட்டு போயிருச்சி... அம்மா வழக்கு... கால்குலேட்ட...
- என் கண்களுக்கு, ட்ராபிக் ராமசாமி ஹீரோவாக தெரிகிறார்...! அவர் ஒரு ஓட்டு வாங்கினா...
- இந்த பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஏங்கிகொண்டிருக்கலாம் நாம் வாழும் இந்த வ...
- மின்கம்பத்தைக் கட்டித் தழுவி முழுப்பூவுருவாய் மகிழ்ந்து நிற்கிறது இம்மரம் !
- சவூதி அரேபியாவில் வேலை செய்பவர்கள் தங்கள் பிரட்சனைகளை எங்கு எவ்வாறு முறைஇடுவது?...
- :) Relaxplzz
- திருப்பதி வரலாறு !!! கிருஷ்ணாவதாரத்தை முடித்து பெருமாள் வைகுண்டத்தில் தங்கியிரு...
- இது அனைத்து அம்மாக்களுக்கும் சமர்ப்பணம். =================== அப்பா கட்டிய வீடா...
- உலகத்திலேயே முதல்முறையாக கொசு மருந்து அடிக்கும் பேருந்தை மதுரையில் அறிமுகப்படுத...
Posted: 29 May 2015 08:30 AM PDT |
Posted: 29 May 2015 07:50 AM PDT |
Posted: 29 May 2015 04:10 AM PDT அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய சுவாரஸ்யமான பொது அறிவு தகவல்கள்... ஒட்டகசிவிங்கியின் நாக்கு கரு நீல நிறத்தில் இருக்கும். புலிகளின் ரோமங்களில் இருக்கும் கோடுகள் போல அதன் தோலிலும் கோடுகள் இருக்கும். ஒரு புலிமீது இருக்கும் கோடுகள் போல வேறு எந்த புலிக்கும் இருக்காது. ஒவ்வொரு புலிக்கும் வெவ்வேறு அமைப்பில் தான் கோடுகள் இருக்கும். யானைகளால் 3 மைல்கள் தொலைவில் இருக்கும் தண்ணீரை முகர முடியும். ஆமைகளின் பாலினத்தை அது எழுப்பும் ஒலியை வைத்து வித்தியாசப்படுத்தலாம். கை ரேகைகளை வைத்து மனிதர்களை கண்டறிவதை போல, நாய்களின் மூக்கில் இருக்கும் ரேகைகளை வைத்து அவற்றை கண்டறியலாம். எறும்புகள் தூங்குவதே இல்லை. நாய்களால் மனிதனின் முகத்தை பார்த்தே அவர்கள் எந்த மனநிலையில் இருக்கிறார்கள் என்பது தெரிந்துக்கொள்ள முடியும். நெருப்புகோழியால் குதிரையை விட வேகமாக ஓடமுடியும். ஆண் நெருப்புகோழியால் ஒரு சிங்கத்தை போல குரல் எழுப்பமுடியும் Relaxplzz |
Posted: 29 May 2015 03:38 AM PDT |
Posted: 29 May 2015 01:10 AM PDT ஆண்மையை அழிக்கும் பிராய்லர் கோழி: கட்டாயம் படியுங்கள் பயனுள்ள பதிவு..!! 40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி🐓 வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது. பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும்மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 🐓ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுக்களை அழிக்கிறது. 🐓குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் பிராய்லர் கோழி. 🐓"பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கோழி தான் காரணம்". 🐓டைலோ சின் போஸ்பேட், டினிடோல்மைடு, டயாமுலின் ஹைடயோஜின், மைக்ரோமைன்-பி.சி.எஃப், டோக்சிலின்-ஈ.எஸ்., யூ.எஸ்., குர்ராடோக்ஸ் எம்.எஸ்., நோவா சில்பிளஸ் போன்ற மருந்துகளை ஊசிமூலம் போடுகிறார்கள். "இந்த மருந்துகள்தான் சின்னஞ் சிறுமிகளையும் பெரிய மனுஷிகளாக்கி விடுவதாக கூறப்படுகிறது". 🐓பிராய்லர் கோழி சதையில் கெட்ட கொழுப்பு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. 🐓கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. 🐓100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத் துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள். 🐓சிறு நீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகிரதாம். 🐓தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள். 🐓மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது. 🐓மஞ்சள் காமாலை , இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம் . 🐓ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது .... அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர்களான சில அரசியல்வாதிகள் வியாபார நோக்கத்துடம் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்து கொள்கின்றனர். நாட்டுக் கோழிகளுக்கு பெரும்பாலும் தானியங்கள் போன்ற இயற்கையான உணவுகள் அளிக்கப்படுகிறது. இதனால் அவை குறிப்பிட்ட கால அளவில்தான் வளர்ச்சி பெறும். இதனால் அதில் புரோட்டீன், புரதச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த நாட்டு கோழியை சாப்பிடுவோருக்கு தேவையான புரோட்டீன், புரதச் சத்துக்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் நமக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது. Relaxplzz |
Posted: 29 May 2015 12:37 AM PDT |
Posted: 29 May 2015 12:31 AM PDT உங்கள் வீட்டில் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் காலாவதியாகும் தேதி (Expiry date) தெரிந்து கொள்ள வேண்டுமா? காலாவதியான கேஸ் சிலிண்டரைப் பயன்படுத்துவதால் பயங்கரமான ஆபத்துகள் வர வாய்ப்புகள் உள்ளன. அதனால் இனி உங்கள் வீட்டுக்கு சிலிண்டர் கொண்டு வரும் போதோ, அல்லது வாங்கும் போதோ, முதலில் காலாவதியாகும் தேதியைப் பாருங்கள். பிறகு வாங்குங்கள். ஏற்கனவே காலாவதியாகி இருந்தால் அதை திருப்பி தந்து விடுங்கள். ஆபத்தை தவிருங்கள். அந்த Expiry date - ஐ எப்படி கண்டுபிடிப்பது என்பதை பார்க்கலாம். படத்தில் இருப்பது போலத் தான் ஒவ்வொரு கேஸ் சிலிண்டரின் இன்சைட்(inside)-லும் எழுதியிருக்கும். முதலில் வரும் ஆல்ஃபபெட்ஸ் லெட்டர் (alphabets letter) மாதத்தின் பெயரைக் குறிக்கிறது. இரண்டாவதாக வரும் டூ டிஜிட்ஸ் நம்பர் (two digits number) வருடத்தின் (Year) பெயரைக் குறிக்கிறது. A , B, C & D இந்த நான்கில் ஒரு லெட்டர்தான் ஒவ்வொரு சிலிண்டரிலும் எழுதப்பட்டிருக்கும். அதன் முழு அர்த்தம் இது தான். A - மார்ச் -முதல் காலாண்டு(1st quarter) B - ஜூன் -இரண்டாம் காலாண்டு(2nd quarter) C - செப்டம்பர் -மூன்றாம் காலாண்டு(3rd quarter) D - டிசம்பர் - நான்காம் காலாண்டு(4th quarter) உதாரணத்திற்கு, மேலே உள்ள படத்தில் B-13 என்று எழுதப்பட்டிருக்கிறது. அதன் அர்த்தம் ஜூன் மாதம் 2013-ம் (ஜூன், ஜூலை, ஆகஸ்ட்) வரை அந்த சிலிண்டரைப் பயன்படுத்தலாம்...!" அறியாமை தவறல்லா..!! அறியாமல் இருப்பது தான் தவறு. உங்களுக்கு தெரிந்த இந்த தகவலை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். Relaxplzz ![]() "தெரிந்து கொள்வோம்" - 1 |
வாவ்... Posted: 28 May 2015 11:24 PM PDT |
Posted: 28 May 2015 11:10 PM PDT இப்படியும் சில... 1. Facebookல நல்ல பதிவுகள் போடறவங்க கண்டிப்பா நல்லவங்களா தான் இருப்பாங்கனு முட்டாள்தனமா நம்பறது. 2. ervamatin use பண்ணின வழுக்கை தலையில வாழமரம் கூட வளரும்னு நம்பறது. 3. புடவை கட்டின பொண்ணுங்க எல்லாம் அடக்க ஒடுக்கமானவர்கள். ஜீன்ஸ் மிடி போட்ட பொண்ணுங்க பஜாரிங்கனு நினைக்கிறது. 4. SSLC/+2 ல ஸ்டேட் பர்ஸ்ட் எடுத்தவங்க ஈஸியா வாழ்க்கைல முன்னேறிருவாங்கனு அபத்தமா நினைக்கிறது. 5. தம், தண்ணி அடிக்கறது ஆம்பளைக்கு அழகுனு அசட்டுதனமா நினைக்கிறது. 6. அழகும் பணமும் இருந்தா போதும், எந்த பையனையும் அல்லது பொண்ணையும் மடக்கி விடலாம்னு மனக்கோட்டை கட்டறது. 7. பிரைவேட் ஸ்கூல்ல படிக்கிற புள்ளைங்க தான் நல்லா படிப்பாங்கன்னு புளுகறது. 8. காதலுக்கும் காமத்துக்கும் வித்தியாசம் தெரியாம கண்மூடித்தனமா love பண்ணி நாசமா போறது. 9. பெண்மை பெண்மைனு வெளில பெனாத்திட்டு, கட்டுன பொண்டாட்டிய கொடுமைப்படுத்துறது. 10. கடைசியா........... . . . . . . . . . . . . . . . . . . . இப்படி ஒரு வெத்து போஸ்ட் போட்டுட்டு, எதுவுமே பண்ணாம சும்மா உக்காந்து விட்டத்த வேடிக்கை பாக்கறது (வேற என்ன பண்ண முடியும்?!?). ;-) ;-) Relaxplzz |
Posted: 28 May 2015 10:30 PM PDT |
Posted: 28 May 2015 10:10 PM PDT நிலக்கரி ஃபைல்ஸ்... காக்கா தூக்கிட்டு போயிருச்சி... அம்மா வழக்கு... கால்குலேட்டர் காப்பாத்திருச்சி.... சல்மான்கான் வழக்கு ஆவனங்கள்... எரிஞ்சி போச்சி... ஆனா.. நான் வேண்டாம்ன்னு எழுதிக்கொடுத்து சரண்டர் பண்ணிய !? ரிலையன்ஸ் டேடா கார்ட்க்கு பணம் கட்டலைன்னு, வக்கீல் நோட்டிஸ் வந்திருக்கு.. அதுவும் பெனால்ட்டி போட்டு கட்டணுமாம்..! இல்லைன்னா.. ரெண்டு வருஷம் ஜெயிலாம்....! பார்ப்போம்.. ஒருநாள் என்னோட டாக்குமெண்ட்ஸ் எரிஞ்சி போகாமலா இருக்க போகுது..! - Bala Salem @ Relaxplzz |
Posted: 28 May 2015 10:03 PM PDT என் கண்களுக்கு, ட்ராபிக் ராமசாமி ஹீரோவாக தெரிகிறார்...! அவர் ஒரு ஓட்டு வாங்கினாலும், அது ஜனநாயக முறையில், நேர்மையாக வாங்கியதாகவே இருக்கும்..! கூழை கும்பிடு போட்டும், பயந்தும் பின்வாங்கும் ஆட்களின் மத்தியில், தன் எதிர்ப்பை ஆண்மையோடு பதிவு செய்திருக்கும் அந்த கிழவனின் துணிச்சல் வியக்க வைக்கிறது...! வாழ்த்துக்கள் தாத்தா...... (y) - Bala Salem @ Relaxplzz |
Posted: 28 May 2015 09:58 PM PDT இந்த பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஏங்கிகொண்டிருக்கலாம் நாம் வாழும் இந்த வாழ்க்கைக்காக... ![]() ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 2 |
Posted: 28 May 2015 09:50 PM PDT |
Posted: 28 May 2015 09:26 PM PDT |
Posted: 28 May 2015 09:03 PM PDT சவூதி அரேபியாவில் வேலை செய்பவர்கள் தங்கள் பிரட்சனைகளை எங்கு எவ்வாறு முறைஇடுவது? சவூதியில் வாழும் பெரும்பாலான தமிழர்களுக்கு தங்கள் பணிபுரியும் இடங்களில் பல வகையான பிரட்சனைகளை சந்தித்து வருகின்றனர் அதாவது முதளாளி தொழிலாளிக்கு செர வேண்டிய சம்பளத்தையோ அல்லது பிற சலுகைகளையோ அதாவது விடுப்புப் பணம் (வெக்கேசன் மணி) சர்விஸ் மணி ஆகியவற்றை குறைவாக கொடுப்பது அல்லது கொடுக்காமல் இருப்பது எக்சிட் (exit)கொடுக்க மறுப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்ப்படும் போது அதை எவ்வாறு எதிர் கொள்வது யாரை அனுகுவது எப்படி முறையாடுவது என்பது பற்றி பார்ப்போம் 1.ஆன்லைன் மூலம் முறை இடலாம் 2.தொழிலாளர் அமைச்சகம்(ministroy of labor)தொலைபேசி எண்மூலம் முறைஇடலாம் 3.இந்திய தூதரகத்தில் (embassy of india)முறை இடலாம் 4.இந்திய இனை தூதரகத்தில் (consulate of general of india)முறை இடலாம் 5.தொழிலாளர் நீதிமன்றம்(labor court)அனுகவும் 6.தொழிலாளர் நலன் மற்றும் வழிநடத்தும் குழு இம் முறைகளை பற்றி விரிவாக பார்க்கலாம் 1.ஆன் லைன் மூலம் விண்ணப்பித்தல ministry of் labor வெப்சைட்டிற்க்கு சென்று ஆன்லைன் மூலம் மிக எளிதாக தங்களது குறைகளை முறை இடலாம் அவ்வாறு முறைஇடும்போது தங்களது பெயர்/முகவரி/இக்காமா எண் ஆகியவை சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்களது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படும் ஆன்லைன் புகார் தெறிவிக்க http//portal.mot.gov.sa/en/pages/ complaints.aspx 2.தொழில் அமைச்சகம்(ministry of laber) தொலைபேசி மூலமும் 1.riyadh:01-4039857/kharj:01-4548231 duwadmi:01-6420920 majmaa:06-4321724 wadi addawasir:01-7840264 zulfi:06-4220235 sahqra:01-6221342 makkah:02-5420745 jeddah:02-6311687 taif:01-7461616 qun fudah:07-7320761 madinah:04-8654416 yanbu:04-3222688 al ula:04-8840380 onaizah:06-3640285 qassim(buraidah):06-3250387 al rass:04-3333502 hail:06-5321139 dammam:03-8261419 ahsa:03-5822801 hafralbatin:03-7220220 knobar:03-8641541 abqaqiq:03-5661324 jubail:03-3620150 khafji:03-7660380 ras tannurah:03-6670424 aseer(abha):07-2224128 bisha:07-6226718 baha:07-7253240 najran:07-5224995 jazan:07-3213671 jauf:04-6421108 qurrayat:04-6421108 tabuk:04-4221181 al wahj:04-4421970 arar:04-6627128 turaif:04-6521029 3.இந்திய தூதரகத்தில் மறைஇடலாம் தொழிலாளர்கள் தங்களது பிரட்சனைகளுக்கு தீர்வுகாண அனைத்து வேலை நாட்களிலும் 9:00am லிருந்து12:30pm வரை கிழ்கண்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நேரில் சென்று கொடுக்கவும் labor-complain form http//www.scribd.com/mobile/ doc/227679439?width=320 4.இந்திய இனை தூதரகத்தில் முறை இடலாம் தொழிலாளர்களுக்கு நேர்ந்த பிரச்சனைகளை தீர்வுகாண எல்லா வேலை நாட்களிலும் கீழே உள்ள விண்ணப்பத்தை அனுகவும் labor complaint-consulte http//www.scribd.com/mobile/doc/227681763?width=320 5.தொழிலாளர்கள் நீதிமன்றத்தை அனுகலாம் laber court கீழே உள்ள தொலைபேசி எண்னுக்கு தொடர்புகொண்டு தீர்வுகாணலாம் makkah:02-5420745 jeddah:02-6311687 taif:02-7495200 qunfudah:07-7321250 madina:04:8654417 yanbu:04-3222488 alula:04-8840830 abha:07:2242128 bishan:07-6226718 al bahan:07-7253240 najrah:07:5221431 jazan:07-3226446 tabuk:04-4421181 al wahj:04-4421970 அனைத்து தொழிலாளர்கள் பிரச்சனைக்கு மேற்க்கண்ட இடங்களில் சரியான முறையில் தீர்த்து வைக்கப்படும் நீங்கள் செல்லும் போது சரியான ஆவணங்களை அதாவது வேலை ஒப்பந்த நகல் பாஸ்போர்ட் நகல் இக்காமா நகல் கபிலுடைய தொலைபேசி எண் மற்றும் முழு விலாசம் கொடுக்க வேண்டும் மேழும் நீங்கள் கொடுக்கும் விண்ணப்பங்கள் அரபியில் இருக்க வேண்டும் 6.தொழிலாளர் நலன் மற்றும் வழி நடத்தும் குழு தொழிலாளர்கள் நலன் காக்கவே புதிதாக ஒரு அலுவலகம் ஜித்தாவில் திறக்கப்பட்டுள்ளது இங்கும் நீங்கள் நேரில் சென்று முறை இடலாம் உங்களுக்கு ஆலோசனைகள் வழங்கி அப்பிரச்சனைக்களும் சட்ட ரீதியாக தீர்வுகாண உதவிடுவர் முகவரி:- office of the domestic workers committee the director of welfer&guidance consultant of training&social reserch near al harama(formerly sofitel) hotel jeddah tel:6616688 fax:6653238 cell:0504658803 நண்பர்களே படித்ததை இங்கே பதிவு செய்துள்ளேன் நண்பர்களுக்கு பகிரவும் நன்றி - Mohammed Yusuf' Relaxplzz ![]() "விழிப்புணர்வு" |
Posted: 28 May 2015 08:34 PM PDT |
Posted: 28 May 2015 07:24 PM PDT திருப்பதி வரலாறு !!! கிருஷ்ணாவதாரத்தை முடித்து பெருமாள் வைகுண்டத்தில் தங்கியிருந்தார். பூலோகத்தில் கலியுகம் தொடங்கி அநியாயங்கள் பெருகின. மீண்டும் இறைவன் பூமியில் அவதாரம் செய்ய வேண்டி, காஷ்யப முனிவர் தலைமையில் முனிவர்கள் யாகம் தொடங்கினர். யாகத்தை காண வந்த நாரதர், ""யாகத்தின் பலனை யாருக்குத் தரப் போகிறீர்கள்? என்று முனிவர்களைக் கேட்டார். பலனை சாந்தமான மூர்த்திக்கு தருவதென்று முடிவு செய்தனர். மும்மூர்த்திகளில் சாந்தமானவரை தேடி பிருகு வைகுண்டம் சென்றார். திருமால் பிருகுமுனிவரை கண்டு கொள்ளாமல் இருக்கவே, அவர் மார்பில் எட்டி உதைத்தார். திருமால் கோபம் கொள்ளாமல் உதைத்த பாதத்தை தடவி கொடுத்தார். பொறுமையும், அமைதியும் நிறைந்த திருமாலுக்கே யாகபலனைத் தருவதென முனிவர்கள் முடிவெடுத்தனர். மார்பில் உதைத்த பிருகு முனிவரைத் தண்டிக்கும்படி லட்சுமி சொல்ல திருமால் மறுத்துவிட்டார். லட்சுமி கோபம் கொண்டு பாற்கடலில் இருந்து கிளம்பி, பூலோகத்தை அடைந்து தவத்தில் ஆழ்ந்தாள். திருமாலும் திருமகளை தேடி பூவுலகத்தைச் சுற்றி அலைந்து வேங்கடமலையில் வந்து ஒரு புற்றில் கண்மூடி அமர்ந்தார். அவருக்கு பசித்தது.இதுபற்றி, நாரதர் தவத்தில் இருந்த லட்சுமியிடம் சொன்னார்.லட்சுமி வருத்தமடைந்தாள். நாரதர் அவளிடம் திருமாலின் பசியைப் போக்க உபாயம் சொன்னார். அதன்படி பிரம்மாவும், சிவனும் பசுவாகவும் கன்றாகவும் மாற, லட்சுமி தாயார் அவற்றின் எஜமானி போல் வேடமணிந்து, அப்போது அப்பகுதியை ஆட்சிசெய்த மன்னனிடம் விற்கச்சென்றாள். மன்னன் வாங்கிய பசு மேய்ச்சலுக்குச் செல்லும்போது திருமால் இருந்த புற்றுக்குச் சென்று பால் சொரிந்தது. பசுவினை மேய்த்த இடையன் பசுவின் பின்னால் சென்று புற்றில் பால் சொரிவதைக் கண்டான். கோடரியால் பசுவை அடிக்க முயன்றான். கோடரி தவறி புற்றுக்குள் இருந்த பெருமாளின் தலையில் பட்டு ரத்தம் சிந்தியது. தன் காயம் தீர மூலிகை தேடிச் சென்ற பெருமாள்ஆஸ்ரமம் ஒன்றினைக் கண்டார். அது வராஹ மூர்த்தியின் ஆஸ்ரமம். அங்கிருந்த வகுளாதேவி (முற்பிறவியில் கண்ணனின் அன்னை யசோதையாக பிறந்தவள்) தன் பிள்ளையான திருமாலின் முகத்தைக் கண்டவுடன் பாசத்தில் மூழ்கினாள். திருமாலும் அன்புடன் வகுளாதேவியை "அம்மா என்று அழைத்தார்.வகுளாதேவி தன் பிள்ளைக்கு "சீனிவாசன் (செல்வம் பொருந்தியவன்)என்று பெயரிட்டாள். தன் பிள்ளையின் காயம் தீர மருந்திட்டு, பசிபோக்கிட கனிகளைத் தந்தாள். இந்நிலையில், சந்திரிகிரி என்ற பகுதியை ஆகாசராஜன் என்பவன் ஆண்டு வந்தான். பிள்ளை வரம் வேண்டி தன் குலகுரு சுகமாமுனிவரின் ஆலோசனைப்படி புத்திர காமேஷ்டி யாகம் செய்ய நல்ல நேரம் குறித்தான். யாகம் செய்யும் இடத்தை செம்மைப்படுத்தும் போது, பூமியில் புதைந்திருந்த பெட்டிக்குள் இருந்த தாமரையில், படுத்த நிலையில் ஒரு பெண் குழந்தை கிடைத்தது. தாமரைக்கு "பத்மம் என்று பெயர் உண்டு. எனவே குழந்தைக்கு "பத்மாவதி என்று பெயரிட்டான்.ராமாவதாரத்தின் போது வேதவதி என்னும் பக்தை, ராமனை மணாளனாக பெற வேண்டி தவம் செய்தாள். ராமனும் அவளிடம், பின்னாளில் அவளை மணம் செய்து கொள்வதாக வாக்குறுதி தந்தார். அதன்படியே வேதவதி பத்மாவதியாகப் பிறந்தாள். பிறந்து ஆகாச ராஜனின் மகளாக வளர்ந்து வந்தாள். சீனிவாசப் பெருமாளுக்கும், பத்மாவதிக்கும் திருமணம் இனிதே நடந்தது. அதன்பின் சீனிவாசப்பெருமாள் கலியுகம் முடியும் வரை திருமலையில் சிலாரூபமாக பக்தர்களுக்கு அருள் தரும் விதமாக திருமலையில் எழுந்தருளினார். சோழமன்னன் தொண்டைமான், தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் உதவியுடன் பெருமாளுக்கு கோயில் ஒன்றை எழுப்பினார். பத்மாவதி அலமேலுமங்காபுரத்தில் அருளாட்சி செய்கிறாள். சீனிவாசப் பெருமாள் தினமும் திருச்சானூர் வந்துதங்கிவிட்டு காலையில் திருமலைக்கு திரும்பி விடுவதாக ஐதீகம் நிலவுகிறது http://devotional-hints.blogspot.in/ ![]() |
Posted: 28 May 2015 10:10 AM PDT இது அனைத்து அம்மாக்களுக்கும் சமர்ப்பணம். =================== அப்பா கட்டிய வீடாயிருந்தாலும் அது நமக்கு அம்மா வீடுதான் ! =================== அடுப்படியே அம்மாவின் அலுவலகம் ! அன்பு மட்டுமே எதிர்பார்க்கும் சம்பளம் ! =================== காய்ச்சல் வந்தால் மருந்து தேவையில்லை ! அடிக்கடி வந்து தொட்டுப்பார்க்கும் அம்மாவின் கையே போதுமானது ! =================== இவ்வளவு வயதாகியும் புதுச்சட்டைக்கு மஞ்சள்வைத்து வருபவனைக் கேலி செய்யும் நண்பர்களே .......... அது, அவன் வைத்த மஞ்சள் அல்ல ! அவன், அம்மா வைத்த மஞ்சள் ! =================== டைப்பாய்டு வந்து படுத்த அம்மாவுக்கு 'சமைக்க முடியவில்லையே' என்கிற கவலை ! =================== 'அம்மா தாயே' என்று முதன் முதலில் பிச்சை கேட்டவன் உளவியல் மேதைகளுக்கெல்லாம் ஆசான் ! =================== எந்தப் பொய் சொல்லியும் அம்மாக்களை ஏமாற்றிவிடமுடியும் 'சாப்பிட்டு விட்டேன் ' என்கிற அந்த ஒரு பொய்யைத்தவிர ! =================== அத்தி பூத்தாற்போல அப்பனும் மகனும் பேசிச்சிரித்தால் விழாத தூசிக்கு கண்களை தேய்த்துக்கொண்டே நகர்ந்து விடு்கிறார்கள் அம்மாக்கள் ! =================== வெளியூர் செல்லும் பிள்ளைகளின் பயணப்பைக்குள் பிரியங்களைத் திணித்து வைப்பவர்கள் இந்த அம்மாக்கள் ! =================== பீஸ் கட்ட பணமென்றால் பிள்ளைகள் அம்மாவைத்தான் நாடுகின்றன ........ காரணம், எப்படியும் வாங்கிக் கொடுத்துவிடுவாள் ! அல்லது எடுத்துக் கொடுத்துவிட்டு திட்டு வாங்கிக்கொள்வாள் ! =================== வீட்டுக்குள் அப்பாவும் இருந்தாலும் அம்மா என்றுதான் கதவு தட்டுகிறோம் ! =================== அம்மாக்களைப் பற்றி எழுதப்பட்ட எல்லா கவிதைகளிலும் குறைந்தபட்சம் இரண்டு சொட்டுக்கண்ணீர் ஈரம் உலராமல் ! =================== அகில உலக அம்மாக்களின் தேசிய முழக்கம் இதுதான் .......... " எம்புள்ள பசி தாங்காது! " Relaxplzz |
Posted: 28 May 2015 09:50 AM PDT |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment