Tamil History and Culture Facebook Posts |
:-( :-( @ Indupriya MP ... Posted: 22 Apr 2015 08:11 AM PDT |
Posted: 21 Apr 2015 07:41 PM PDT அந்தப் பெரிய கூட்டத்தில் கராத்தே, குங்பூ போன்ற போர்க்கலைகளைப் பயின்றவர்கள் தங்கள் வித்தகத்தைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு துறவி வந்தார். அவர் கையில் இருந்த வைரங்கள் பதிக்கப்பட்ட வாள் எல்லாரையும் ஈர்த்தது. துறவி வாள் சண்டையில் தனது திறமையைக் காட்டப் போகிறார் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர் மேடைக்கு வந்து வாளைக் கீழே வைத்தார். துறவி உறுதியான குரலில் கூடியிருந்தவர்களிடம் சவால் விட்டார். ""இந்த வாளினால் என்னை வெட்டுங்கள் பார்க்கலாம்'' இதனைக் கேட்டவர்கள் அதிர்ந்து போனார்கள். ஒரு துறவியை, அதுவும் வயதான, கனிவான முகம் கொண்டவரை வெட்ட எப்படி மனது வரும்? 'சரி வெட்ட வேண்டாமய்யா! இந்த வாளினால் என்னைத் தொடுங்கள் போதும். அப்படிச் செய்பவர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வாளை பரிசாக எடுத்துக் கொள்ளலாம்.'' பலர் சவாலை ஏற்க முன் வந்தார்கள். துடிப்பாக இருந்த வீரன் ஒருவனைத் தேர்ந்தெடுத்தார் துறவி. கராத்தே சண்டையில் எதிராளியை வணங்குவது போல் துறவியை வணங்கிவிட்டு, வாளைக் கையில் எடுத்தான் வீரன். எசகுபிசகாக வாள் துறவி மேல் பட்டு அதனால் காயம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சி மெதுவாக அவரை வாளினால் தொடப்போனான். அமைதியாக, ஆனால் மிக உன்னிப்பாக அவனையே பார்த்துக் கொண்டிருந்த துறவி, தனது கால்களை அசைக்காமல் உடலை மட்டும் வளைத்தார். வாள் அவர் மேல் படவில்லை. சில விநாடிகள் துறவியையே பார்த்துக் கொண்டிருந்த வீரன், வாளை வேகமாகச் சுழற்றி துறவியைத் தொட முயற்சித்தான். ஆனால் வேகமாக விலகினார் துறவி. வீரனுக்கு லேசான எரிச்சல். அதனை வெளிக்காட்டாமல், வாளை இன்னும் வேகமாக வீசினான். இதனை எதிர்பார்த்த துறவி சாமர்த்தியமாக உடலை வில்லாக வளைத்துத் தப்பித்தார். ஆனால், தான் கால் ஊன்றிய இடத்தில் இருந்து துறவி நகரவில்லை. இப்போது வீரனுக்கு எரிச்சல் அதிகமானது. முதலில் துறவிக்குக் காயம் பட்டுவிடக்கூடாதே என்று ஆதங்கப் பட்ட வீரன் இப்போது கண் முன்னால் வாளுக்கு அருகில் இருப்பவரை ஒன்றும் செய்யமுடியவில்லையே என்ற கோபத்தில், 'இந்தத் துறவி செத்தால் என்ன?' என்ற எண்ணத்துடன் வாளை சுற்றினான். அப்போதும் துறவி தப்பி விட்டார். ஆத்திரமடைந்த வீரன், இன்னும் ஆவேசமாகி, துறவியை கொன்றாலும் பரவாயில்லை என செயல்பட்டான். ஆனால், துறவியின் மேல் வாள் படவில்லை. அரை மணி நேர முயற்சிக்குப் பின் துவண்டு போய் உட்கார்ந்தான் வீரன். அப்போது, துறவி சொன்ன வார்த்தைகள் வாள் பயிற்சிக்கு மட்டும் அல்ல! வாழ்க்கைக்கும் பொருந்தும். ""நான் கற்ற "கெண்டோ' வாட்பயிற்சி மற்ற பயிற்சிகளிலிருந்து வேறு பட்டது. எதிராளி எப்படி எல்லாம் தாக்குவான் என்று முன்பே முடிவு செய்து, தயார்படுத்திக் கொள்வது கிடையாது. அதே போல் எப்படி எதிரியைத் தாக்க வேண்டும் என்று திட்டமிடுவதும் கிடையாது. மனதைச் சமநிலையில் வைத்துக் கொண்டு, எந்த தாக்குதலுக்கும் தயாராக இருப்போம். எதிரி தனது தாக்குதலைத் தொடங்கிய பிறகுதான் அதனைத் தடுக்கும் வழியைச் சிந்தித்துச் செயல்படுவோம். எதிரி தாக்கத் தொடங்கிய முதல் சில நிமிடங்களில்தான் ஆபத்து அதிகம். அதை சமாளித்து விட்டால் ஆபத்து இல்லை. தனது தாக்குதல் பலிக்கவில்லையே என்ற ஆத்திரம் எதிரிக்கு வந்துவிடும். ஆத்திரம் வந்து விட்டால் எதிரி பலமிழந்து விடுவான். அதன்பின் நம்மைத் தற்காத்துக் கொள்வது மிகவும் சுலபம். அது மட்டுமல்ல! தாக்குதல்களைத் எதிர்க்கிறோமே தவிர, தாக்குபவனை அல்ல,'' என்றார். நன்றி : ஜெய் பா விவேக் |
You are subscribed to email updates from தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம் - Tamil History and Culture's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment