‘‘காது குத்துவதால் கண்களுக்குப் பாதுகாப்பா? என்ன... எங்களுக்கே காது குத்துகிறீர... Posted: 15 Apr 2015 10:09 PM PDT ''காது குத்துவதால் கண்களுக்குப் பாதுகாப்பா? என்ன... எங்களுக்கே காது குத்துகிறீர்களா?'' என்று கேட்காதீர்கள். எந்நேரமும் புகை மண்டிக் கிடைக்கும் சமையல் அறையிலேயே இருந்தாலும் நம் நாட்டுப் பெண்களுக்கு பார்வைக் கோளாறு வராமல் இருப்பதற்கு, காது குத்துவதே காரணம் என்று சீன மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். போதிய வெளிச்சம் இல்லாத சமையல் அறைகளில் கண் எரிச்சலுடன் வேலை செய்வதால் கண்கள் விரைவில் பாதிப்படையும். ஆனால், அப்படி வேலை செய்யும் பெண்கள் ஆண்களை விட குறைவாகவே கண்ணாடி அணிகின்றனர். இதைப் பற்றி ஆய்வு செய்த சீன அக்குபங்சர் மருத்துவர் சூலின், ''காது குத்துதல் அக்குபங்சர் முறையில் கண்களைப் பாதுகாக்கும் முறை. அதுதான் பெண்களின் கண்களைக் காக்கிறது. மேலும் காதுகளுக்கும் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் கூட சம்பந்தம் உண்டு. அதனால்தான் கருப்பையில் முழு வளர்ச்சியடைந்த ஒரு குழந்தையின் வடிவம் எப்படி இருக்குமோ, அதே வடிவத்தில் காதுகள் அமைந்திருக்கின்றன'' என்கிறார். தைவான் மருத்துவக் குழுவும் இந்த முடிவை உறுதி செய்துள்ளது. காது குத்திய பெண்களில் 72 சதவீதத்தினருக்கு நிறக்குருடு, கிட்டப்பார்வை ஆகிய கண் நோய்கள் இல்லையாம். மேலும், அவர்கள் மங்கலான வெளிச்சத்தில் கூட பல்வேறு வண்ணங்களை எளிதில் அடையாளம் காண்கிறார்களாம். ஆகவே, காது குத்துங்க! நன்றி : கிருஷ்ணமோகன் பா விவேக்  |
இது எத்தனை பேருக்குப் பிடிக்கும் ??? பா விவேக் Posted: 15 Apr 2015 07:53 PM PDT இது எத்தனை பேருக்குப் பிடிக்கும் ??? பா விவேக்  |
தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரிபவர்கள் மட்டுமல்லமால் பலரும் loan வாங்கி வீட்ட... Posted: 15 Apr 2015 07:17 PM PDT தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரிபவர்கள் மட்டுமல்லமால் பலரும் loan வாங்கி வீட்டை வாங்கி விட வேண்டும் என நினைக்கின்றனர்.. அதனால் ஏற்படும் விளைவுகளை யோசிப்பதில்லை.. சென்னை போன்ற நகரங்களில் 2BHK flat வாங்க குறைந்தது 35 லட்சம் தேவைபடுகிறது. தந்தை PF பணம், தனது கொஞ்சம் சேமிப்பு, தாய் அல்லது மனைவியின் நகை போன்றவற்றை சேர்த்து 10 லட்சம் முன்பணம் கொடுத்து, மீதமுள்ள 25 லட்சங்களுக்கு loan பெற்று, மாதம் ரூ.25000 EMI ஆக 20 வருடங்களுக்கு கட்டுகின்றனர். இதில் உள்ள பிரச்சனைகள்: 1. பெரும்பாலான சம்பளம் வீட்டு கடனாக செல்கிறது. 2. 20 வருடங்கள் வரை வேலை இருக்குமா என்று தெரியாது. உங்களுக்கு தெரியாமல் வட்டி விகிதம் மாறும் போது வருடங்கள் அதிகரிக்கும். 3. அவசர தேவைக்கு கூட கையில் பணம் இல்லாமல் போகிறது. 4. ஒரு சிலர் வீட்டுக்கு வாடகை கொடுப்பதற்கு பதில், EMI கொடுக்கலாம் என்பார்கள். ஆனால் நீங்கள் 25000 வாடகை கொடுக்கப்போவதில்லை. முன்பணம் வங்கியில் FD ஆக சேமித்தால், அதை வைத்து வாடகை கட்டலாம். 25000 EMI பதிலாக RD இல் சேமித்தால் அவசர தேவைக்கு உதவியாக இருக்கும். 5. ஒரு சிலர் tax benifit கிடைக்கும் என வாதிடுவர். மாதம் 2000 சம்பளத்தில் கூட வருவதற்கு, 25000 loan கட்டுவது சரியா? உதாரணமாக, 25 லட்சத்திற்கு 25000 EMI கட்டினால், நீங்கள் வங்கிக்கு 60 லட்சங்கள் மொத்தம் கட்ட வேண்டும். அதற்கு பதில், 25000-த்தை RD மூலம் சேமித்தால், 1.6 கோடி உங்களுக்கு கிடைக்கும். வட்டிக்கு வரி பிடித்தம் செய்தாலும் 1.3 கோடி கிடைக்கும். ஆனால் எதையும் சிந்திக்காமல், மற்றவர்கள் வீடு வாங்குகிறார்கள் என தானும் வாங்குகின்றனர். யார் வீடு வாங்கலாம் என்றால், எவரால் குறைந்த நாட்களில் கடனை அடைக்க முடியுமோ அவர்கள் வாங்கலாம். கடனை அடைக்க 20 வருடங்கள் தேவைபடுபவர்களுக்கு, எந்த பயனும் இல்லை. நமது பெற்றோர்கள் கடைசி காலத்தில், தனது சேமிப்பை வைத்து வீடு வாங்குவர்.. இப்போது உள்ள இளையதலைமுறையினர், எடுத்த உடனே நல்ல சம்பளம் கிடைப்பதால், loan எடுத்து வீட்டை வாங்கி ரியல் எஸ்டேட் துறை கொழுத்த லாபம் அடைகிறது. இன்னும் தெளிவாக இதைப் பற்ரி அறிய இளைய தலைமுறை பக்கத்தினை அணுகவும்... நன்றி : இளைய தலைமுறை பா விவேக் |
0 comments:
Post a Comment