திருநள்ளாறுக்கு நேர் மேலே வரும்போது செயற்கைகோள்கள் தடுமாறுகின்றன... ராமர் கட்டிய பாலத்தை அமெரிக்காவின் நாஸா கண்டுபிடித்துள்ளது... என்றெல்லாமும் பதிவுகளைப் படித்திருப்பீர்கள். அந்த வரிசையில் லேட்டஸ்ட் வர்சன் இது. படித்து ரசித்து சிரியுங்கள்...
"நம் முன்னோர் பெருமையை உலகறிய செய்வோம்..!
"வாகனங்களுக்கு முன்னால் எலுமிச்சம்பழம், மிளகாய் கட்டும் பழக்கம் மூடநம்பிக்கை இல்லை. விஞ்ஞானபூர்வமானது.
எலுமிச்சையில் உள்ள சிட்ரோனிக் அமில்கா (Cidronic amilga) என்னும் அமிலமானது மிளகாயில் உள்ள பென்னியோசிட் (Benniyocid) என்னும் காரத்துடன் இரசாயனப் பகுப்பாகி, மிதீரியட் (methiriyed) என்னும் ஒருவகை உந்து வாயுவை வெளியிடுகிறது.
அந்த வாயுவை வாகனத்தின் பானட்டில் இருந்து ஸ்டியரிங் வரை செல்லும் எத்ஹோயிட் (Ethgoid) என்னும் கலப்பு மூலகத்திலான உலோகக்கம்பி வாகனத்தின் உட்பகுதிவரை கடத்துகிறது.
அது ஓட்டுனரை நித்திரை கொள்ளாமலும், உற்சாகத்துடனும் இருக்கச் செய்வதுடன், பிரேக் ஆயிலையும் வற்றாமல் பாத்துக்கொள்கிறது.
இந்த வாயுவானது மேற்சொன்ன இரசாயனப் பகுப்பால் ஒரு வாரம் மட்டுமே கிடைக்கிறது.அதனால்தான் வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் ஏற்கனவே கட்டப்பட்ட எலுமிச்சை மற்றும் மிளகாய்கள் அகற்றப்பட்டு புதிதாகக் கட்டப்படுகின்றது..!
வெள்ளிக்கிழமைகளில் இதனைச் செய்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. பூமியானது சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் இடையில் வடமத்திய ரேகையில் கடக்கக் கோட்டுக்கு தெற்கே 5 டிகிரி மேல்நோக்கி ஏறி, 3 டிகிரி கீழ்நோக்கி இறங்குவதால் இந்த இரசாயன பகுப்பு அதிகம் நடக்கிறது ..!!!
நம் முன்னோர்கள் மூடர்கள் அல்ல..!
விஞ்ஞான அடிப்படையில் தான் செயல்பட்டிருக்கிறார்கள்..!
நம் முன்னோர் பெருமையை உரக்க சொல்வோம்..!"
# அதுசரி.. லாரிய நம்ம நாட்டுல பயன்படுத்த ஆரம்பிச்சி எம்பது நூறு வருசம் இருக்குமா.. அதுக்கு எலுமிச்ச கட்டணும்னு எந்த முன்னோர்யா சொன்னான்??
@டி.வி.எஸ். சோமு

0 comments:
Post a Comment