Wednesday, 18 March 2015

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்துவருவதால் இந்தப் பதிவு... கிரிக்கெட் விளை...

Posted: 18 Mar 2015 08:14 AM PDT

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்துவருவதால் இந்தப் பதிவு...

கிரிக்கெட் விளையாட்டில் பயன்படுத்தப்படும் சில சொற்களுக்கான தமிழ் பெயர்கள் (கலைச் சொற்கள்)

Cricket - மட்டைப்பந்து அல்லது துடுப்பாட்டம்

Wicket - இலக்கு

LBW - குச்சி முன் இலக்கு

Bowler - பந்து வீச்சாளர்

Batsmen - துடுப்பாட்டக்காரர் அல்லது மட்டையாளர்

Stump - குச்சிகள்

Bails - குறுக்குத்தடிகள்

Pitch - ஆடுகளம் அல்லது பட்டிகை

catch - பிடி

இது தவிர வார்த்தைகளுக்கு உங்களிடம் மொழிமாற்றங்கள் இருந்தால் பகிர்ந்துகொள்ளவும்.

பா விவேக்


"மம்மி" சொல்லு,, என்று அடிக்கிறாள் அன்னை.. "அம்மா" என்றே அழுகிறது குழந்தை.....

Posted: 18 Mar 2015 07:30 AM PDT

"மம்மி" சொல்லு,,
என்று அடிக்கிறாள்
அன்னை..

"அம்மா" என்றே
அழுகிறது குழந்தை..

அதானே தாய் மொழி...


தமிழ் மொழியின் முதிர்ச்சி.... மொழி ஆராய்ச்சி மற்றும் அதன் முதிர்ச்சி அளவுகளில் ப...

Posted: 18 Mar 2015 04:30 AM PDT

தமிழ் மொழியின் முதிர்ச்சி....
மொழி ஆராய்ச்சி மற்றும் அதன் முதிர்ச்சி அளவுகளில் பார்த்தால்...
தமிழின் முதல் பிள்ளை கன்னட மொழி.
தமிழின் இரண்டாம் பிள்ளை தெலுங்கு மொழி.
மூன்றாம் பிள்ளை மலையாள மொழி.
இது இல்லாமல் மராட்டிய மொழி தமிழுடன் ஒத்து இருக்கும்...
இது போல தமிழுக்கு ஏகப்பட்ட பிள்ளைகள் இருக்கிறார்கள்.....
இன்று தாயை எட்டி உதைக்கும் இந்தி மொழியின் தாய் வேண்டுமெனில் சமஸ்கிருத மொழியாக இருக்கலாம்.
ஆனால் இந்தி தமிழின் கொள்ளு பேரன்.. எவ்வாறு?
இந்தி > சமஸ்கிருதம் > இந்தோ இரானி > இரானி > சுமரு மொழி..
மொழி அறிவு உள்ளவர்கள் அறிவார் சுமரு மொழியும் தமிழும் ஒத்த மொழிகள் என்று.
இவ்வாறு பார்க்கையில்...
இன்று நாம் பேசும் ஆங்கிலம் முதற்கொண்டு அனைத்து மொழிகளும் தமிழின் பிள்ளையோ அல்லது பேரனோ தான்.
நன்றி : தியாபாரதி அனலிக்கா


:(

Posted: 18 Mar 2015 01:30 AM PDT

:(


தமிழக வரலாற்றில் கடந்த 15-20 வருடங்களுக்கு முன்வரை தண்ணீரை விலைகொடுத்து வாங்கிய...

Posted: 17 Mar 2015 10:36 PM PDT

தமிழக வரலாற்றில் கடந்த 15-20 வருடங்களுக்கு முன்வரை தண்ணீரை விலைகொடுத்து வாங்கிய அவலம் நேர்ந்ததாக தெரியவில்லை.

ஆனால் இன்று தண்ணீரை விலைகொடுத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம். தற்போது குடிநீருக்கு ஏற்பட்ட இந்த நிலை வரும்காலங்களில் பாத்திரம் கழுவ, துணி துவைக்க என எல்லாவற்றுக்கும் தண்ணீரை வாங்கும் நிலையை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம்.

நமது முன்னோர்கள் தண்ணீரை சேமிக்க ஏரிகள், குளங்கள் போன்றவற்றை தீர்மானித்து, கால்வாய்கள் மூலம் ஆறுகளிலிருந்து தண்ணீரை கொண்டு சேர்த்தனர். ஆனால் இன்று நாம் ஆறுகள் மற்றும் ஏரிகளை சாக்கடை நீரால் நிரப்பி, நிலத்தடி நீரின் தன்மையை மாற்றியதுடன், தண்ணீருக்காக பிற மாநிலங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

இந்த நிலை தொடர்தால் நமது நீர்நிலைகள் அனைத்தும் சாக்கடை நீரால் நிரம்பிவிடும். நல்ல மழை பெய்தாலும் அதை தேக்கிவைத்து பயன்படுத்த நம்மிடம் வசதிகள் இருக்காது. இந்த நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நமது நீர்நிலைகளை பாதுகாப்பதன் முக்கியதுவத்தை வலியுறுத்தவும் உலக தண்ணீர் தினமான, மார்ச் 22, 2015 அன்று காலை 10 மணிக்கு மாசுபடாத கூவம் ஆறு பாதுகாப்பு குழு சார்பாக சென்னை மெரினா கடற்கரையில் காந்தி சிலை முதல் கலங்கரைவிளக்கம் வரை நடைபெறவிருக்கும் விழிப்புணர்வு பேரணியை, மதுரை மாநகரின் முன்னால் காவல் ஆணையர் திரு.K. நந்தபாலன் IPS, அவர்கள் கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.

பேரணியின் போது, சென்னை நகரின் குடிநீர் பிரச்சினையை போக்க இன்று நாம் என்ன செய்ய வேண்டும் என்ற தலைப்பில் ஒரு கையேட்டையும் வெளியட உள்ளோம். இந்த பேரணியில் தாங்கள் கலந்துகொள்வதன்மூலம், இந்த கோரிக்கையின் நியாயத்தை அனைவருக்கும் உணர்த்துவோம், நமது வருங்கால சந்ததியினருக்காக நமது நீர்நிலைகளை சாக்கடை நீரிலிருந்து காப்போம். இன்று நீங்கள் விலைகொடுத்து வாங்கிய நீரை குடித்தால், இந்த தகவலை அவசியம் தாங்கள் அனைத்து சென்னை நண்பர்களிடமும் பகிருங்கள்.

- மாசுபடாத கூவம் ஆறு பாதுகாப்பு குழு, அனைக்கட்டுச்சேரி, சென்னை-600072.

தகவலுக்கு நன்றி : ஜெய் கணேஷ்

பா விவேக்

பழங்கள், காய்கறிகள், மூலிகைகளின்... மருத்துவக் குணங்கள்; 1) என்றும் 16 வயது மா...

Posted: 17 Mar 2015 09:36 PM PDT

பழங்கள், காய்கறிகள், மூலிகைகளின்... மருத்துவக் குணங்கள்;

1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் நெல்லிக்கனி.

2) இதயத்தை வலுப்படுத்த செம்பருத்திப் பூ.

3) மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை.

4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் கற்பூரவல்லி (ஓமவல்லி).

5) நீரழிவு நோய் குணமாக்கும் அரைக்கீரை.

6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் மணத்தக்காளிகீரை.

7) உடலை பொன்னிறமாக மாற்றும் பொன்னாங்கண்ணி கீரை.

8) மாரடைப்பு நீங்கும் மாதுளம் பழம்.

9) இரத்தத்தை சுத்தமாகும் அருகம்புல்.

10) கேன்சர் நோயைக் குணமாக்கும் சீதா பழம்.

11) மூளை வலிமைக்கு ஓர் பப்பாளி பழம்.

12) நீரிழிவு நோயை குணமாக்கும் முள்ளங்கி.

13) வாயுத் தொல்லையிலிருந்து விடுபட வெந்தயக் கீரை.

14) நீரிழிவு நோயைக் குணமாக்க வில்வம்.

15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் துளசி.

16) மார்பு சளி நீங்கும் சுண்டைக்காய்.

17) சளி, ஆஸ்துமாவுக்கு ஆடாதொடை.

18) ஞாபகசக்தியை கொடுக்கும் வல்லாரை கீரை.

19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் பசலைக்கீரை.

20) இரத்த சோகையை நீக்கும் பீட்ரூட்.

21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் அன்னாசி பழம்.

22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை)

23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கண்புரை நோய் வராது.

24) மார்புசளி, இருமலை குணமாக்கும் தூதுவளை.

25) முகம் அழகுபெற திராட்சை பழம்.

26) அஜீரணத்தை போக்கும் புதினா.

27) மஞ்சள் காமாலை விரட்டும் "கீழாநெல்லி"

28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் "வாழைத்தண்டு".

நன்றி : ஜெய் கணேஷ்

பா விவேக்

சின்ன வயசுல நாம எப்படியெல்லாம் இருந்தோம். இப்ப எப்படியெல்லாம் இருக்கோம்!! 1. நம...

Posted: 17 Mar 2015 06:30 PM PDT

சின்ன வயசுல நாம எப்படியெல்லாம் இருந்தோம். இப்ப எப்படியெல்லாம் இருக்கோம்!!

1. நமக்கு சாப்புட கைல ஒரு பாக்கெட் மிட்டாய் கிடைச்சாலும் அதை ஒரு நொடில தின்னு காலி பண்ணிருவோம். இல்லாட்டி நம்ம மண்டை வெடிச்சுரும். இப்ப அதை கொடுத்தா ஒன்னு மட்டும் எடுத்து வாய்ல போட்டு பாக்கெட்டை ஓரமா வச்சுடுறோம்.

2. திருவிழா கடைக்கு போனா நம்ம கண்ல பட்டதெல்லாம் கைய நீட்டிக் கேட்டிருப்போம். இல்லை என்ற பதில் தான் அதிகம் கிடைச்சுருக்கும். அதையும் காசு இல்லைன்னு உண்மைய சொல்லாம அந்த பொருள் நல்லா இல்லைன்னு பொய் சொல்லிருப்பாங்க. இப்ப அது எல்லாத்தையும் வாங்க நம்மகிட்ட காசு இருக்கும், ஆனா விளையாட வயசு தான் இருக்காது.

3. அம்மாக்கிட்ட நொய் நொய்ன்னு எதையாவது
பேசிக்கிட்டே இருப்போம். அவங்களும் புரிஞ்சாலும் புரியாட்டியும் மண்டைய ஆட்டி ரசிச்சுருப்பாங்க. இன்னைக்கு அம்மா நம்ம கிட்ட பேசறப்ப, நாம என்னவோ கலெக்டர் வேலைக்கு போற மாறி "சீக்கிரம் சொல்லுமா " ன்னு அலுத்துகுறோம்.

4. அப்பா நேரத்தோட வீட்டுக்கு வரலைன்னா மூஞ்ச தூக்கிட்டு மூலைல உட்காந்திருப்போம். இன்னைக்கு நாம நேரம் கழிச்சு வீட்டுக்குப் போறப்ப அப்பா வீட்டுல இல்லைன்னா "அப்பாடா தப்பிச்சோம்" ன்னு பெருமூச்சு விடுறோம்.

5. சிபிஐ மாறி நம்ம அக்கா, அண்ணா லாம் என்ன பண்றாங்கன்னு கவனிக்கரதையே வேலையா வச்சுருப்போம். "இரு இரு உன்னைய அப்பாக்கிட்ட சொல்றேன்னு" மிரட்டி வேற பாப்போம். இன்னைக்கு நாம பண்ற வேலையெல்லாம் அவங்களுக்கு தெரியாம பாத்துகறதே நமக்கு பெரிய வேலையா இருக்கு.

6. ஏலேய்.... ன்னு ஒரு சத்தம் கேட்டாலே ஓடிபோய் அம்மா முன்னாடி நிப்போம். இப்ப கோர்ட்ல கூப்புடற மாறி 3 தரம் பேரச் சொல்லிக் கூப்டா கூட நம்ம காதுல விழாத அளவுக்கு இணையத்தில் மூழ்கி இருக்கிறோம்.

7. அப்பாவோ அம்மா வோ வெளிய போனா, என்னைக் கூப்டு போயே ஆகனும்ன்னு தரயில படுத்துட்டு உருண்டு புரண்டு அழுவோம். இப்ப அவங்கள வெளிய கூப்டு போய் அவங்ககூட நேரம் செலவழிக்கறத விட பெரிய வேலைகளெல்லாம் நமக்கு இருக்கு.

8. பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்குப் போறப்ப, நேரா நடக்க மாட்டோம். மரக்கிளைய புடிச்சு தொங்கறது, ரோட்ல கிடக்கற கல்ல கலால தள்ளி தள்ளிட்டே போறது. நின்ன இடத்துல சச்சின் போஸ் கொடுக்கறதுன்னு இல்லாத சேட்டைலாம் செஞ்சுக்கிட்டே தான் போவோம். இப்பலாம் ரோட்ல நடக்கறப்ப கைல மொபைல் வச்சுட்டு குனிஞ்ச தலை நிமிராம நேரா போய் செவுத்துல முட்டிக்கிறோம்.

நன்றி : மகேந்திரன்

பா விவேக்


0 comments:

Post a Comment