Relax Please: FB page daily Posts |
- அழகான கவிதைக்கு சிறந்த எடுத்துக்காட்டுனா எதை சொல்வீங்க A.அம்மா B.நட்பு C.காதல்...
- (y) Relaxplzz
- மக்களுக்காக..... :P
- உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்னவாக இருக்கும...
- படித்தவுடன் பகிரவும்.,!! வீதியில் நடந்து சென்றுகொண்டிருக்கும் போது ஒரு பையனுக்க...
- நீ கை கூப்பி நின்றாலே இறைவனும் இறைஞ்சி கேட்பான் என்ன வரம் வேண்டுமென்று...
- அன்பு நிறைந்த இல்லமே அழகான இல்லம்.... அழகான ஓவியம். பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க...
- (y) Relaxplzz
- உண்மைதான :P :P
- அன்றாடம் பின்பற்ற வேண்டிய… சில உடல் நலக் குறிப்புகள்! 1. உணவுக்கு பின் தண்ணீரில...
- வங்க தேசம் மற்றும் தென்.ஆ., ரசிகர்களிடம் இந்திய ரசிகர்கள் பாடம் கற்க வேண்டும்!...
- திருநங்கை சமூகத்திலிருந்து அரசு வேலை வாய்ப்பு பெற்ற முதல் திருநங்கை குணவதி. நம...
- செம்ம அழகு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)
- :) Relaxplzz
- ஹா ஹா ஹா... :P
- திருமணமான புதியதில் பெண்கள்... 1. கணவர் கூப்பிடாத போதே...என்னங்க கூப்பிட்டீங்கள...
- இன்று அரசியலிலும், சமுக வலை தளங்கலிலும் சில பலரால் கிட்டத்தட்ட காமெடியனாக காட்டப...
- வயலோரத்து ஆலமரத்தடிகளில் கேட்கும் தாலாட்டு ஒரு குழந்தைக்கு மட்டுமானதல்ல... -...
- கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுதோ இல்லையோ அதெல்லாம் கவலை இல்லை ! கல்யாணம...
- சீனாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எஸ்கலேட்டர்..
- :) Relaxplzz
- பெப்சி கோக் மிராண்டா.... .... இதஎல்லாம் சாப்பிட்டா உனக்கிருக்கு ஆஸ்பத்திரி வராண்...
- விமர்சிப்பதற்க்கு முன் தெரிந்து கொள்வோமே... படித்து பகிருங்கள்
- இல்லவே " இல்லாத" நாடுகள் தொடர்பான சில சுவையான தகவல்கள் : 1) "காகங்கள்" இல்லாத ந...
- ஆரம்பபள்ளியில் படித்த காலத்தில் எப்படா உயர்நிலை பள்ளிக்கு செல்வோம் என ஏங்க முக்க...
- ரசித்தது :P
- தமிழ்நாட்டில் ஆழமாய் போய்க் கொண்டிருப்பது நிலத்தடி நீர் மட்டுமல்ல.டீக்கடை டம்ளர்...
- அருமை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
Posted: 29 Mar 2015 09:35 AM PDT அழகான கவிதைக்கு சிறந்த எடுத்துக்காட்டுனா எதை சொல்வீங்க A.அம்மா B.நட்பு C.காதல் D.வாழ்க்கை E.நண்பர்கள் E.தோழன் தோழி G.எல்லாமே தான் Relaxplzz |
Posted: 29 Mar 2015 09:30 AM PDT |
மக்களுக்காக..... :P Posted: 29 Mar 2015 09:20 AM PDT |
Posted: 29 Mar 2015 09:10 AM PDT உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்னவாக இருக்கும்??? #விஜயகாந்த்: மிகப்பெரிய மைதானத்தில் 11 பேர் பீல்டிங் செய்யும் வேளையில் நம் அணியினர் இரண்டு பேர் மட்டுமே பேட்டிங் செய்ததும் மற்ற 9பேர் உட்கார்ந்து இருந்து வேடிக்கை பார்த்ததுமே இந்திய அணியை தோல்வியடையச் செய்தது. #திருமாவளவன்: இந்திய அணி தோல்விக்கு பாமக ராமதாஸ் அவர்களே காரணம்.சிறுபான்மை கிறிஸ்த்தவ மக்களுக்கு கிடைத்த வெற்றி. #கலைஞர்: ஆஸ்திரேலிய அதிமுகவினரின் அராஜக விளையாட்டை திமுக கண்டிக்கிறது. #ஓபிஎஸ்: மாண்புமிகு அம்மா அவர்கள் இல்லாததே தோல்விக்கு காரணம் #கிருஷ்ணசாமி: கொம்பன் படமும் நெல்லை தூத்துக்குடியில் தாழ்த்தப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டதுமே தோல்விக்கு காரணம்.தோனி தலைமையிலான இந்திய அணியை கலைக்க வேண்டும். #சுப_வீரபாண்டியன்: சென்ற ஆண்டு உலககோப்பையை வாங்கியதின் எதிர்வினை. #கீ_வீரமணி: ஆதிக்க சாதி இந்து சக்திகளுக்கு எதிராக கிறித்துவ ஆஸ்திரேலியவினருக்கு கிடைத்த வெற்றி. #ஜிகே_வாசன்: காமராஜர் தலைமையிலான இந்திய அணி அமையாததே காரணம் #தமிழிசை: விரைவில் அமித்ஷா மோடி தலைமையில் கோவையில் உலககோப்பையை வெல்வோம். #ஜெயா: தெய்வம் விதி சதி செய்துவிட்டது. #வைகோ: உலககோப்பையை முல்லைபெரியார் மைதானத்தில் நடத்தாதே காரணம் #சீமான்: நம் அணியில் ஈழத்தமிழர்கள் இல்லாததும்,சிங்கள அம்பயர்கள் இருந்ததும் தோல்விக்கு காரணம். ;-) ;-) - Jayant Relaxplzz |
Posted: 29 Mar 2015 09:00 AM PDT படித்தவுடன் பகிரவும்.,!! வீதியில் நடந்து சென்றுகொண்டிருக்கும் போது ஒரு பையனுக்கு கண்ணில் தூசிவிழுந்தது, அதை அவன் கசக்கி விட்டு சென்று விட்டான். பின்னர் சிறிது நேரம் கழித்து கண் தக்காளிப்பழம் போல் சிவந்தது. ஓரிரு நாட்களில் கண் சிவந்து புடைத்தது. அதன் பின்னரே மருத்துவரிடம் காண்டிருக்கிறான் அந்த பையன் அப்போது மருத்துவர் பரிசோதித்து பார்த்த போது தூசியில் புழுவின் முட்டை கண்ணில் சென்று இருக்கிறது அது படிப்படியாக அது பெரிதாகிய படியாலே அவனின் கண் சிவந்து வீங்கி இருக்கிறது. பின்னர் சத்திரசிகிச்சை மூலம் அந்த புழுவினை அகற்றி இருக்கிறார்கள். தயவு செய்து தூசி கண்ணில் பட்டால் உங்கள் கண்களை நன்றாக தூய நீரால் கழுவவும். இதனை தயவு செய்து அனைவருக்கும் Share செய்யவும். நன்றி Relaxplzz ![]() |
Posted: 29 Mar 2015 08:50 AM PDT |
Posted: 29 Mar 2015 08:40 AM PDT |
Posted: 29 Mar 2015 08:30 AM PDT |
உண்மைதான :P :P Posted: 29 Mar 2015 08:20 AM PDT |
Posted: 29 Mar 2015 08:10 AM PDT அன்றாடம் பின்பற்ற வேண்டிய… சில உடல் நலக் குறிப்புகள்! 1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்! 2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது. 3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி (15 மில்லி) எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை தினமும் சில மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால், உடல் எடை குறையும். 4. காலை உணவிற்கு முன் தினமும், ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும். இப்படி சில மாதங்களுக்கு தொடர்ந்து இதைச்செய்தாலும் உடல் எடை குறையும். 5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த, 10-, 12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும். தொடர்ந்து இதனை, சில மாதங்களுக்கு கடைபிடித்து வந்தால், உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம். 6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைத்துக்கொண்டு, அதற்கு பதிலாக, கோதுமை எடுத்துக் கொள்ளலாம் இதுவும் உடல் எடை குறைக்க உதவும். 7. கடுமையான இருமல் இருந்தால், 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து, அதனை சில நாட்களுக்கு குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். 8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும். உடனே வலி குறையும். 9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க, குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்கவும். விரைவில் தழும்புகள் மறையும். 10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு, நீருடன் தேனைக் கலந்து கொடுத்தால், விரைவில் இருமல் நிற்கும். காய்ச்சல் குறையும். 11. காரட் மற்றும் தக்காளிச் சாறு ஆகியவற்றுடன், கொஞ்சம் தேன் கலந்து, குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், உடல் வலிமை பெரும். 12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த, கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது. இப்படியான சின்னச்சின்ன மருத்துவ பொருள்களில், நம் உடலை பாதுகாத்துக் கொள்ள முடியும். Relaxplzz |
Posted: 29 Mar 2015 08:00 AM PDT வங்க தேசம் மற்றும் தென்.ஆ., ரசிகர்களிடம் இந்திய ரசிகர்கள் பாடம் கற்க வேண்டும்! தோல்வி கண்டு தாய்நாடு திரும்பிய ஜோகன்ஸ்பர்க் தென்ஆப்ரிக்க வீரர்களை அந்நாட்டு ரசிகர்கள் விமானநிலையத்தில் அன்புடன் வரவேற்றனர். வீரர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு உற்சாகமான அளவாளவினர். அடுத்த உலகக் கோப்பையில் கோப்பையை வென்று நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டுமென்று அன்பு கட்டளையிட்டனர்... ஆனால் இந்திய ரசிகர்கள்... :( - Vikatan Relaxplzz ![]() |
Posted: 29 Mar 2015 07:50 AM PDT |
Posted: 29 Mar 2015 07:40 AM PDT |
Posted: 29 Mar 2015 07:30 AM PDT |
ஹா ஹா ஹா... :P Posted: 29 Mar 2015 07:20 AM PDT |
Posted: 29 Mar 2015 07:10 AM PDT திருமணமான புதியதில் பெண்கள்... 1. கணவர் கூப்பிடாத போதே...என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன். 2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. வாங்க இரண்டு நாள் அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம் 3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன். 4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும். 5. அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க. 6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு. 7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு. 8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப். நல்லா பேசுறாங்க. 9. ஓகே. நான் சினிமாவிற்கு ரெடி.போகலாம் பா. சிறிது ஆண்டுகள் கழித்து ======================= 1.நான் வேலையா இருக்கேன். அலறாதீங்க.பக்கத்தில் வந்து சொல்லிட்டு போனா என்ன? 2. நானும் குழந்தைகளும் போறோம்.10 நாள்கள் கழித்து வந்தால் போதும் புரியுதா?? 3. எனக்கு கோஸ் பொரியல்.உங்களுக்கு ஒன்றும் பண்ணவில்லை. ஊறுகாய் போதும்ல? 4. இது ஒரு கலர்னு எப்படிதான் இந்த சேலையை எடுத்தீங்களோ. 5. ம்ம்ம்.உங்க அம்மாகிட்ட இருந்து தான் லெட்டர். 6. எவ்வளவு நேரம் தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான் இருக்கு. 7. எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே! 8. உங்க வீட்டு மனிதர்களிடம் வாய் கொடுத்து ஜெயிக்க முடியுமா? 9. கிரைண்டர் போடுற அன்றைக்கு தான் சினிமாவுக்குக் கூப்பிடுவீங்க. நீங்க போங்க. பல ஆண்டுகள் கழித்து ===================== 1. காதில் வாங்குவதே இல்லை. 2. போறவளுக்கு வர்ற வழி தெரியும்.யாரும் வர வேண்டாம் 3. இன்னைக்கு கோஸ் மட்டும் தான். பிடிச்சா தின்னுங்க. இல்லாட்டி போங்க. 4. ஒரு 5000 ரூபாய் மட்டும் வெட்டுங்க. புடைவையெல்லாம் நான் பார்த்துக்கிறேன். 5. உங்களை பெத்த இம்சை மகராசி தான் லெட்டர். 6. போதும்.போதும் வாரி வாரி தலை சொட்டை ஆனது தான் மிச்சம். 7. எப்ப பார்த்தாலும் என்ன ஈ...? வாயை மூடுங்க. கொசு போய்டபோது. 8. உங்க பரம்பரையே ஓட்டை வாய்தானோ? 9. சினிமாவும் வேண்டாம். டிராமாவும் வேண்ட்டாம். என் பொழைப்பே சினிமா எடுக்கிறாப்புல இருக்கு. Relaxplzz |
Posted: 29 Mar 2015 07:00 AM PDT இன்று அரசியலிலும், சமுக வலை தளங்கலிலும் சில பலரால் கிட்டத்தட்ட காமெடியனாக காட்டப்பட்டு வரும் திரு.விஜயகாந்த் அவர்களின் பரிணாமத்தை மாறுபட்ட கண்ணோட்டத்தில் அலசவே இந்த பதிவு. இது முழுக்க முழுக்க என் தனிப்பட்ட கருத்தே ஆகும். சினிமாவில் நடிக்கும் ஆசையில் எழுபதுகளின் இறுதியில் மதுரை மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்த விஜயராஜ் தான் பின்னாளின் ஒரு வெற்றிகரமான நடிகரான விஜயகாந்த் ஆவார். சினிமாவிற்குண்டான சில இலட்சணங்களை மீறிய தருணம் அது. சிகப்பு நிறமில்லை. சிலிர்க்க வைக்கும் உடற்கட்டு இல்லை. சினிமா பின்னணி இல்லை. இத்தனைக்கும் அந்த நேரத்தில் ரஜினியும் கமலும் மசாலா படங்களின் மூலம் கோலோச்சிய காலம். நெடிய போராட்டத்திற்கு பின்பு "இனிக்கும் இளமை" என்றொரு படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இவரின் அடுத்த படமான "தூரத்து இடி முழக்கம்" மாநில மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதினை பெற்ற படமாகும். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் இவரின் வெற்றி நடை ஆரம்பம் ஆனது. அந்த காலகட்டத்தில் ஓடும் குதிரையில் (இயக்குனர்) தான் ரஜினியும் கமலும் பயணித்த நேரத்தில் புதிய இயக்குனர்களின் தேர்வாக இவர் அமைந்தார். திறமையான புதிய இயக்குனர்களின் கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வெளி வந்த அனைத்து படங்களும் சக்கை போடு போட்டன. திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்புகளை அளித்து ஊக்கம் அளித்தவர் இவர் மட்டுமே. ஆபாவாணன், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார் என பட்டியல் நீளும். அம்மன் கோவில் கிழக்காலே, வைதேகி காத்திருந்தாள், சின்னக்கவுண்டர், கேப்டன் பிரபாகரன், ஊமை விழிகள் என சிறு தயாரிப்பளர்களின் வசூல் சக்ரவர்த்தியாக இவர் திகழ்ந்தார். இயக்குனர்கள் மட்டும் அல்ல. இவர் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட / ஒத்துழைப்பு அளிக்கப்பட்ட நிறைய சினிமா பிரபலங்கள் உண்டு. பீலி சிவம், அ.செ.இப்ராகிம் ராவுத்தர், நடிகர் சரத்குமார், கசான்கான், அருண் பாண்டியன், ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், விஜய் என இந்த பட்டியலும் நீளமே. இவ்வளவு ஏன்? கடந்த தேர்தலில் இவரை கடைந்தெடுத்த வடிவேலு கூட இவரால் வளர்ந்தவரே. அறிமுகம் வேண்டுமானால் ராஜ்கிரணாக இருக்கலாம். ஆனால் தொடர்ச்சியாக வாய்ப்பளித்தது விஜயகாந்த்தான். சின்ன கவுண்டர் படத்தில் கவுண்டமணியால் ரிஜெக்ட் செய்யப்பட்ட வடிவேலுவை மீண்டும் பேசி சிபாரிசு செய்து நடிக்க வைத்தார். மீண்டும் கங்கை அமரன் இயக்கத்தில் வந்த கோயில் காளை திரைப்படத்தில் கவுண்டமணி முட்ட அமரனிடமும் கவுண்டமணியிடமும் பேசி வடிவேலுவை நடிக்க வைத்தார். இதை நடிகர் செந்திலே ஒரு பேட்டியில் தெரிவித்தார். இப்படி இவரால் வாழ்க்கை பெற்றவர்களே அதிகம். அதனால்தான் திரைப்பட உலகத்தில் எவரும் இவரை குறைத்து பேச மாட்டர். இயக்குனர் பாக்யராஜ் மீண்டும் திரை இயக்கம் தொடங்கிய போது இவரின் முதல் தேர்வாக அமைந்தவர் விஜயகாந்த்தான். இவரின் நிர்வாகத்திறமையை சிலர் குறைத்து மதிப்பிடுகின்றனர். பல ஆண்டுகளாக கடனில் தவித்த, சிவாஜி, மேஜர், ராதாரவி போன்ற ஜாம்பவான்களாலும் கைவிடப்பட்ட திரைப்பட இயக்குனர் சங்கத்தின் தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அதன் கடனை முற்றிலும் அடைத்ததோடு மட்டுமின்றி கையிருப்பையும் அதிகப்படுத்தினார். அனைத்து நடிகர்களையும் மலேசியாவிற்கு அழைத்து சென்று நிகழ்ச்சிகள் நடத்தியது இவர்தான். அந்த சமயத்தில் இவரது திறமையான நிர்வாகம் அனைவராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இவரின் தொலைக்காட்சி நிர்வாகமும் சிறப்பாக இருந்து வருகிறது. அரசியலுக்கு வருவேன் என பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்காமல் அதிலும் காலூண்றி சாதித்தவர் விஜயகாந்த். ஜெயலலிதா, கருணாநிதி போன்ற பழம் தின்று கொட்ட போட்டவர்கள் மத்தியில் யாதொரு அனுபவமும் இன்றி தனி ஆளாக இவரின் ஆவர்த்தனம் ஆரம்பம் ஆனது. எந்த ஒரு நடிகையையும் இவர் கொள்கை பரப்பு செயலாளர் ஆக்கியதில்லை. இவரின் கூட்டங்களுக்கு வந்த மக்களை கவர யாதொரு கவர்ச்சி நடிகையும் கிடையாது. கருணாநிதிக்கு ஒரு எம்ஜியார் போல எம்ஜியாருக்கு ஒரு ஜெயலலிதா, நிர்மலா போல நடிகர் பட்டாளம் எதுவும் கிடையாது. எவருடனும் கூட்டணி இல்லாமல் இவர் வாங்கிய ஓட்டுக்கள் அரசியலில் ஜாம்பவானாக அறியப்பட்ட வைகோவையும் கலங்க வைத்தது. இவரின் தேர்தல் வாக்குறுதியான கறவை மாடுகள் வழங்கப்படும் என்கிற திட்டம் அதிமுக வால் இப்பொழுது செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருவாடானை தொகுதியில் ஒரு சுயேச்சை கூடை சின்னத்தில் போட்டியிட்டு முரசுவின் 24000 ஓட்டுக்களை பிரித்ததால் அங்கு 3000 ஓட்டுக்கள் வித்யாசத்தில் தேமுதிக தோற்றது. இது போல வஞ்சகத்தால் பிரிந்த ஓட்டுக்களுக்கு கணக்கே இல்லை. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் இவ்வளவு போட்டிகளின் மத்தியிலும் இவர் 10000 வாக்குகளுக்கு கூடுதலாக பெற்றார் என்பது சிந்திக்க வேண்டிய விசயம். இயற்கையிலேயே சிவந்த கண்களுக்கு சொந்தக்காரர் ஆன இவருக்கு முன் கோபமும் அதிகம். இதன் மூலம் மற்ற கட்சிக்காரர்களுக்கு கேலிச்சித்திரமானார். இவர் நடத்திய கணிணி இலவச வகுப்புகளினால் பயனடைந்த கிராமப்புற மாணவர்கள் அதிகம். இலங்கை தமிழர்களின் துயரை மனதில் கொண்டு இவர் பிறந்த நாள் விழாவே கொண்டாட மாட்டேன் எனவும் மகனுக்கு பிரபாகரன் எனவும் பெயரிட்டு தன் பங்கினை அளித்தவர் இவர். விஜயகாந்த்தின் பல திறமையான செயல்பாடுகளும், மக்கள் மனதில் இவர் பெற்ற இடமும் இருட்டடிப்பு செய்யப்பட்டது என்பதே உண்மை... Posted by Kondiyan Gopalan. Relaxplzz ![]() |
Posted: 29 Mar 2015 06:57 AM PDT |
Posted: 29 Mar 2015 06:50 AM PDT |
Posted: 29 Mar 2015 06:45 AM PDT கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுதோ இல்லையோ அதெல்லாம் கவலை இல்லை ! கல்யாணம் பண்ண போற பெண்ணோ ஆணோ தாய் தந்தையின் மனசுக்கு பிடிச்சு இருந்தாலே வாழ்க்கை சொர்க்கம்தான் :) #மஹியானந்தா |
Posted: 29 Mar 2015 06:40 AM PDT |
Posted: 29 Mar 2015 06:29 AM PDT |
Posted: 29 Mar 2015 06:20 AM PDT |
Posted: 29 Mar 2015 06:14 AM PDT விமர்சிப்பதற்க்கு முன் தெரிந்து கொள்வோமே... படித்து பகிருங்கள் ![]() Timeline Photos #Respect A 19 years old guy from Delhi belonging to a middle class family was playing a Ranji Trophy match for his hometown. On the 2nd Day when he was batting in his 40s,suddenly he got a call from his uncle informing about his father's demise.He didn't leave for the funeral,stood by his team's side till the last day and scored a match winning ton and removed his helmet hugged his close friend present at the non strikers end and cried looking up towards sky.Today that man is a living legend in terms of Cricket.And He goes by the name Virat Kohli. So think twice before you criticize. "If u can't stand with them in defeat... U should not celebrate their wins also. A team that many outruled of reaching the semifinals also performed well in world cup. Winning and loosing are part of the game. All d best for the future games. Play n have fun. - Sachin Tenndulkar" @[297395707031915:274:Relaxplzz] |
Posted: 29 Mar 2015 06:10 AM PDT இல்லவே " இல்லாத" நாடுகள் தொடர்பான சில சுவையான தகவல்கள் : 1) "காகங்கள்" இல்லாத நாடு - நியூசிலாந்து 2) "தினசரி பத்திரிகைகள் " இல்லாத நாடு - காம்பியா 3) "திரையரங்குகள்" இல்லாத நாடு - பூட்டான் 4) "ரயில்" இல்லாத நாடு - ஆப்கானிஸ்தான் 5) "பாம்புகள் " இல்லாத நாடு - அயர்லாந்து 6) தனக்கென " உத்தியோகபூர்வ தலைநகரம்" இல்லாத நாடு - நவ்ரு 7) தனக்கென "தாய்மொழி" இல்லாத நாடு - சுவிட்சர்லாந்து 8 ) "பொதுக்கழிப்பறைகள்" இல்லாத நாடு -பெரு 9) " வாடகைக்கார்கள்" இல்லாத நாடு - பெர்முடா. Relaxplzz |
Posted: 29 Mar 2015 06:01 AM PDT ஆரம்பபள்ளியில் படித்த காலத்தில் எப்படா உயர்நிலை பள்ளிக்கு செல்வோம் என ஏங்க முக்கிய காரணம் ஜாமெட்ரி பாக்ஸ். ஜாமெட்ரி பாக்ஸ் (geometry box): பாகைமானி ,முக்கோண மானி,காம்பஸ் என்று அவர்கள் சொல்வதை கேட்க நேரிடும் போதெல்லாம்... ஆரம்பபள்ளியில் படித்த காலத்தில் ..எப்படா உயர்நிலை பள்ளிக்கு செல்வோம் என ஏங்க ....முக்கிய முக்கிய காரணம் ஜாமெட்ரி பாக்ஸ். மூத்த மாணவர்கள் கையில் இதை பார்க்கும் போதே ஆசையாக வரும் ..பாகைமானி ,முக்கோண மானி,காம்பஸ் என்று அவர்கள் சொல்வதை கேட்க நேரிடும் போதெல்லாம் ...எதோ வெப்பமானி போன்ற அளவிடும் ...கருவி,பெரிதாக இருக்கும் என்றே நினைத்திருக்கிறேன் ... ஒரு வழியாய் எட்டாம் வகுப்பில் இந்த அற்புத பொருள் என் கையில் கிடைத்தது ... பின்னாட்களில் முதன்முதலில் ..,அலைபேசி கணிணி வாங்கும் போது வராத மகிழ்ச்சி அப்போது வந்தது ..ஆரம்பத்தில் சில நாட்கள் பத்திரமாய் கவர் பிரிக்காமால் ...பாதுகாத்தேன் ..உள்ளே ஒரு காகிதம் மடித்து வைத்து ..ஒரு கடவுள் படம் ..சில்லறை காசு ..நடராஜா பென்சில் ,ரப்பர் ,பென்சில் சீவி ..எப்போதும் ஒழுகும் பேனா ..கரிகாம்பு ..நிப்பு போன்ற spareparts ..என எனது பொக்கிசங்கள் அனைத்தும் அடைத்து வைக்கப்படும் .மூடி பகுதியின் உட்புறமும் காகிதம் மடித்துவைத்து ..பாதுகாத்த பழக்கம் ..மறக்க முடியவில்லை ..சில மாதங்களில் லேசாக துருபிடிததும் ..காம்பஸ் கொண்டு ..மேல் பகுதியில் பேர் எழுதி ...பெருமை பட்டேன் .. ஜாமெட்ரி பாக்ஸ் இல் இருக்கும் இரு முனை கொண்ட ஒரு வாஸ்து ..கடைசிவரை ..பள்ளியில் நான் பயன்படுத்தும் அவசியமே இல்லாமல் போனது .. எனக்கே எனக்கான உடமை என்ற அக்கறை ...பின்னாட்களில் மற்ற எந்த பொருள் மீதும் இந்த அளவு இருந்ததில்லை என்பது நினைக்கும் போது ஆச்சர்யமே .. - muralikrishnan Relaxplzz ![]() "நினைவுகள்" |
ரசித்தது :P Posted: 29 Mar 2015 05:58 AM PDT |
Posted: 29 Mar 2015 05:45 AM PDT தமிழ்நாட்டில் ஆழமாய் போய்க் கொண்டிருப்பது நிலத்தடி நீர் மட்டுமல்ல.டீக்கடை டம்ளர்களில் தரும் டீயும் தான் - Kalimuthu, ![]() ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 3 |
Posted: 29 Mar 2015 05:40 AM PDT |
Posted: 29 Mar 2015 05:36 AM PDT |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment