Thursday, 19 March 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


:) Relaxplzz

Posted: 19 Mar 2015 09:03 AM PDT

வாழும் மனித நேயம் ************************************ சேலம் புதிய கலெக்டர் அலு...

Posted: 19 Mar 2015 09:00 AM PDT

வாழும் மனித நேயம்
************************************

சேலம் புதிய கலெக்டர் அலுவலகம் அருகில் நிர்வாணக் கோலத்தில் தட்டு தடுமாறியபடி வந்த முதியவரை அவ்வழியாக சென்றவர்கள் காட்சி பொருளாக கண்டனரே தவிர, அவரது மானத்தை மறைக்க யாரும் உதவிட முன்வராதது மனித நேயம் முற்றிலுமாக மரித்துப்போய் கிடக்கிறது என்ற வேதனையான உண்மையை உணர்த்தியது.

வாகனங்களின் இரைச்சலுக்கு மத்தியில் சேலம் மாநகரம் மூழ்கி கிடக்கிறது. வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களைச் சேர்ந்தோரும் இங்கு ஏராளமானோர் உள்ளனர். மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தவறுகளும், குற்றங்களும் அதிகப்படியாக உள்ளது. வாழ வழியின்றி தவிக்கும் கூட்டம் சாலையோர பிளாட்பார்ம்களில் வெயில், மழை பாராமல் கிடக்கின்றனர். மனநலம் பாதிக்கப்பட்டோர் அழுக்கு மூட்டைகளுடன் சுமைதாங்கிகளாக வீதியில் சுற்றிதிரிகின்றனர். அது ஒரு புறமிருக்க, உறவுகளால் ஒதுக்கப்பட்டவர்கள் பசி கொடுமையால் ஆடையின்றி குழந்தை மேனியாக வலம் வரும் நிகழ்வுகளும் சேலம் மாநகரத்தில் அதிகரித்துள்ளது.

வசதி வாய்ப்பை பெருக்கிக் கொள்ள தன்னார்வ அமைப்புகளை உருவாக்கும் நபர்கள், இல்லாதோர், இயலாதோருக்கு உதவ முன்வருவதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. சேலம் திருவள்ளுவர் சிலை அருகில் நேற்று மாலை கொட்டும் மழையில் உடலில் ஆடையின்றி முதியவர் ஒருவர் தட்டு தடுமாறியபடி புதிய கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தார். வாகனங்களில் சென்றோர் அவரை வேடிக்கை பார்த்தபடி சென்றனரே தவிர, முதியவரின் மானத்தை மறைக்க யாரும் முன்வரவில்லை.

இந்நிலையில், அவ்வழியாக வந்த ஆட்டோ டிரைவர் நல்லாச்சி, தனியார் மொபைல் நிறுவன ஊழியர் சேதுராமன் இருவரும் முதியவருக்கு உதவ முன் வந்தனர். ஆட்டோ டிரைவர் தன்னிடம் இருந்த துண்டை எடுத்து அவருடைய இடுப்பில் கட்டி விட்டு மானத்தை மறைத்தார். மொபைல் நிறுவன ஊழியர் அருகில் இருந்த ஜவுளி கடையில் அண்ட்ராயரை வாங்கி வந்து அணிவித்து விட்டார். என்ன நடக்கிறது என்று தெரியாத நிலையில் முதியவர் சோர்ந்து கிடந்தார். அவர் பெயர், ஊர் விபரம் கேட்டபோது சொல்ல முடியாமல் தவித்தார்.

உறவுகளால் ஒதுக்கப்பட்டு நடுரோட்டுக்கு அடித்து விரட்டப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. தன் குடும்பம், தன் மக்கள் என்று ஓடுவோர் எண்ணிக்கை தான் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஒரு சிலர் மட்டுமே உதவும் மனப்பான்மையுடன் வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலான மனிதர்களிடம் மனித நேயம் என்பதே மரித்துப்போய் விட்ட ஒன்றாகி விட்டது.

via Page அறிவோம் ஆயிரம்

Relaxplzz


உஷார் சகோதரிகளே /தோழிகளே! பெண்களுக்கு ஏற்கனவே சமூக வலைதளங்கள் மூலமாக ஆபத்து வரு...

Posted: 19 Mar 2015 08:00 AM PDT

உஷார் சகோதரிகளே /தோழிகளே!

பெண்களுக்கு ஏற்கனவே சமூக வலைதளங்கள் மூலமாக ஆபத்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று! தற்போது உடனடி தகவல் ஆப்ஸான வாட்ஸ்அப் மூலமாகவும் வரத்தொடங்கியுள்ளது. 'வாட்ஸ்அப் என்பது தனிநபர் தன் செல்போனில் உபயோகிக்கும் ஆப்ஸ் தானே அதில் என்ன வரப்போகிறது ஆபத்து?' என்பது உங்கள் கேள்வியாய் இருந்தால் நிச்சயம் இருக்கிறது என்பதுதான் பதில்.

என்ன ஆபத்துகள்?
***********************

* யாருக்காவது உங்கள் செல்போன் நம்பர் கிடைத்தால் மட்டுமே போதும். நீங்கள் வாட்ஸ்அப்பில் இருந்தால் அவர்களால் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை பார்க்கவும், உங்கள் புகைப்படத்தை டவுன்லோடு செய்யவும் முடியும்.

* உங்களுக்கு தெரியாத நபர்கள் கூட உங்கள் ஸ்டேட்டஸ் மூலம் உங்களை தொடர முடியும்.

* கடைசியாக நீங்கள் எப்போது உங்கள் கணக்கை பார்த்துள்ளீர்கள் என்பதை கூட அவர்களால் அடையாளம் காணமுடியும்.

* உங்களுக்கு எதிர்முனை நபர் யார் என்று தெரியாத போது அவர் தவறான பெயரில் உங்களை தொடர்பு கொண்டு உங்களது தகவல்களை பெற வாய்ப்புள்ளது.

* உங்களது நண்பர்களில் சிலர் வாட்ஸ்அப் குருப்களில் உங்கள் பெயரையும் இணைக்கும் போது உங்கள் எண் குரூப்பில் உள்ள அனைவருக்கும் பகிரப்பட வாய்ப்புள்ளது.

எப்படி தவிர்க்கலாம்?
****************************

உங்களது வாட்ஸ்அப் தொந்தரவுகளை எப்படி தவிர்க்கலாம் என்றால் உங்கள் வாட்ஸ்அப் அமைப்பில்(செட்டிங்) உங்களது ப்ரைவஸி செட்டிங்கை மாற்றியமைப்பதன் மூலம் இந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

உங்களது பிரைவஸி செட்டிங்கிற்கு சென்று உங்கள் புகைப்படம், ஸ்டேட்டஸ், லாஸ்ட் சீன் ஆகியவற்றை My Contacts அல்லது Only me ஆப்ஷன்களை பயன்படுத்தி உங்களை பாதுகாக்கலாம். குரூப்களில் பெரும்பாலும் இணைவதையும், அதில் அதிதீவிரமாக செய்திகளை அனுப்புவதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதுமட்டுமின்றி ப்ளாக் ஆப்ஷனை பயன்படுத்தி உங்களுக்கு தொல்லை தருபவரை உங்கள் கணக்கை தொடராமல் தடுக்கும் வசதியும் வாட்ஸ்அப்பில் உள்ளது.

முடிந்தவரை தெரிந்தவர்களோடு மட்டும் வாட்ஸ்அப்பில் பேசுவது பாதுகாப்பானது. ஒருவேளை இதனை செய்ய தவறும்போது ஏற்படும் பாதிப்புகள் சமூக வலைதளங்களைவிட மோசமானதாக இருக்கும்...

ஆகையால் எச்சரிக்கையுடன் இருங்கள் சகோதரிகளே !!!

Relaxplzz


திரு விழாவில் அப்பாவின் தோள் மீது அமர்ந்து சாமியை பார்த்த போது தெரியவில்லை..! நா...

Posted: 19 Mar 2015 06:50 AM PDT

திரு விழாவில்
அப்பாவின் தோள் மீது அமர்ந்து
சாமியை பார்த்த போது தெரியவில்லை..!
நான் அமர்ந்து இருப்பதே
சாமியின் தோள் மீது என்று..!


தத்துவம் சொல்லி நாளாச்சி… :D :D தண்ணீர் மேல படகு போனா உல்லாசம். ஆனா, படகு மேல த...

Posted: 19 Mar 2015 06:10 AM PDT

தத்துவம் சொல்லி நாளாச்சி… :D :D

தண்ணீர் மேல
படகு போனா உல்லாசம்.
ஆனா,
படகு மேல தண்ணீர்
போனா கைலாசம். ;-)

நெக்ஸ்டு

Back
வீலு எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
Front வீல ஓவர்டேக் பண்ண
முடியாது. :P

அப்புறம்

டெய்லி ஒரு பீர் சாப்பிட்டா தூக்கம்
வரும்.
10 பீர் சாப்பிட்டா,,,,,,,,,
தூக்க ஆள் வரும். :O

ரைட்டு…

பாயாசம் 10 நாள் கழிச்சி பாய்சன்
ஆயிடும்
ஆனா,
பாய்சன் 10 நாள் கழிச்சி பாயாசம்
ஆகுமா? :D

அடுத்து

என்னதான் MBBS படிச்சி டாக்டர்
ஆனாலும் கம்ப்யுட்டர்ல
இருக்கற
வைரசுக்கு மாத்திரை குடுக்க
முடியுமா? ,,,

யோசிப்பா, யோசி,
last ஆ ஒன்னு சொல்லிக்கறேன்.

பரிட்சைல பெயில் ஆனா திரும்ப
படிச்சி பாஸ் பண்ணலாம்.
ஆனா,
பாஸ் ஆயிட்டா. திரும்ப
படிச்சி பெயில் ஆக முடியாது. '

நல்லா தெரிஞ்சிக்கிட்டீங்களா?

;-) ;-)

Relaxplzz

ஒரு பையனுக்கு ரொம்ப நாளா சந்தேகம். "..முதல் மனுசன் எப்படி வந்தான்? அப்படின்னு."...

Posted: 19 Mar 2015 04:20 AM PDT

ஒரு பையனுக்கு ரொம்ப நாளா சந்தேகம்.
"..முதல் மனுசன் எப்படி வந்தான்? அப்படின்னு."
.
அவன் அவனோட அப்பா கிட்டே போய், "..அப்பா, முதல் மனுசன் எப்படி தோணினான்.?".. அப்படின்னு கேட்டான்.
.
அதுக்கு அவர் சொல்றாரு, "..நாமெல்லாம் ஆதாம் ஏவாள் மூலமா உலகுக்கு வந்தவங்க"..! அப்படின்னு பதில் சொல்றார்.
.
இருந்தாலும் பையனுக்கு குழப்பம் இன்னும் தீரலை.
அவனோட அம்மா கிட்டே போய் கேட்குறான்.
.
அதுக்கு அவங்க சொல்றாங்க,".. நாமெல்லாம் குரங்கிலிருந்து வந்தவங்க"..! அப்படின்னு.
.
இப்போ இன்னும் குழப்பமாயிடுச்சி பையனுக்கு. ரொம்ப யோசனையா உட்கார்ந்து இருக்கான்.
.
அதை பார்த்து அவங்க அப்பா, என்னடா சந்தேகம் இன்னும் தீரலையான்னு கேட்குறார்.
.
அந்த பையன் அவங்க அம்மா சொன்னதை சொல்றான்.
.
அப்பா உடனே சொல்றாரு, "..ரெண்டுமே கரெக்ட் தான்டா..!! நான் எங்க வம்சாவளியை சொன்னேன்...! உங்கம்மா அவ வம்சாவளியை சொல்லி இருக்கா"..! அப்படின்னு.
.
பையன் இப்போ ரொம்ப தெளிவாயிட்டான்.
.
அப்பாவை கேட்டான், "..என்னப்பா இன்னைக்கு சாப்பாடு உங்களுக்கு வெளியிலையா..!!"

:P :P

Relaxplzz

Ambuja Simi இறங்கும் நேரத்தில் கிடைக்கும் ஜன்னலோர சீட் போலத்தான் என் வாழ்க்கையு...

Posted: 19 Mar 2015 04:11 AM PDT

Ambuja Simi

இறங்கும் நேரத்தில் கிடைக்கும் ஜன்னலோர சீட் போலத்தான் என் வாழ்க்கையும்.. வறுமையை வென்று முடித்தபோது இளமைக்காலம் முடிந்துவிட்டது..

- Ambuja simi


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 5

:) Relaxplzz

Posted: 19 Mar 2015 04:00 AM PDT

ஆண்கள் அழகாக எளிய டிப்ஸ்... 1.ஆண்களுக்கு முழங்கை மூட்டுக்கள் எளிதில் கருமை அட...

Posted: 19 Mar 2015 03:50 AM PDT

ஆண்கள் அழகாக எளிய டிப்ஸ்...

1.ஆண்களுக்கு முழங்கை மூட்டுக்கள் எளிதில் கருமை அடைகின்றன. இதனைத் தவிர்க்க தக்காளிச் சாறு, தயிர், தேன், கடலை மாவு ஆகிய நான்கையும் கலந்து பேஸ்ட்டாக்கி, வாரம் ஒருமுறை இரண்டு கைகள் முழுவதும் தடவி வந்தால் கருப்பு நிறத் திட்டுக்கள் மறையும்.

2. கற்றாழை, உடல் குளுமைக்கும் தோல் பொலிவுக்கும் ஏற்றது. வெயில் காலங்களில் கற்றாழையை ஏழு முறை கழுவி, கற்றாழை ஜெல் எடுத்து அதனுடன் பசும்பால் சேர்த்து கை கால்களில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிய பிறகு வெளியே போனால், சூரியக் கதிர்களில் இருந்து கை,கால்களை பாதுகாக்க முடியும்.

3.முகம் பொலிவு அடைய, அரை கப் பப்பாளி பழம், ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன் தேன் ஆகியவற்றை கலந்து முகத்துக்கு பேக் போட்டு 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.அதன் பின்னர் மீண்டும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த பேக் கை, கால்களிலும் போட்டுக்கொள்ளலாம்.

4. உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கவும், உடல் பொலிவாக இருப்பதற்கும் பழச்சாறுகள் துணைபுரிகின்றன. தினமும் இரண்டு அல்லது மூன்று பழச்சாறுகள் அருந்தி வந்தால், உடல் புத்துணர்வு அடைவதுடன் பொலிவும் கிடைக்கும். தர்பூசணி ஜூஸ், வெள்ளரி ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், புதினா ஜூஸ், எலுமிச்சை ஜூஸ், ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் போன்றவை அருந்தலாம்.

5.ரோஜா இதழ்களை இரவிலேயே ஒரு பக்கெட் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். காலையில் எழுந்து ரோஜாவில் ஊறவைத்த தண்ணீரில் குளித்தால், உடல் முழுவதும் நறுமணம் வீசும், உடலில் புத்துணர்ச்சி கிடைக்கும். தோல் பொலிவடையும்.

6.சூடான உடல்வாகு கொண்டவர்கள், தினமும் குளித்த பின்னர் புதினா இலைகளை தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவைத்து நன்றாக ஆறிய பின்னர், பருத்தித் துணி அல்லது பஞ்சு எடுத்து புதினா தண்ணீரில் நனைத்து உடல் முழுவதும் தடவிக்கொள்ளவேண்டும். உடலில் வியர்வை துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும்.

7.முகத்தில் உள்ள கறுப்புத் திட்டுக்கள் மறைய, தினமும் முட்டையின் வெள்ளைக்கரு எடுத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகம் கழுவினால், கறுப்பு நிறத் திட்டுக்கள் மறையும். முகம் புத்துணர்ச்சியாக இருக்க ஐஸ் கட்டிகளைகொண்டு முகத்தில் மசாஜ் செய்யலாம்.

8.வெயில் காலங்களில்இறுக்கமான ஜீன்ஸ் தவிர்க்கவும். உள்ளாடைகள் பருத்தித் துணியால் இருப்பதே சிறந்தது. உள்ளாடைகளை தினமும் துவைத்து வெயிலில் காய வைக்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு மேல் ஒரே உள்ளாடையைப் பயன்படுத்தக் கூடாது.

Relaxplzz


"நலமுடன் வாழ" - 3

முன்னலாம் சின்ன குழந்தைகளிடம் அப்பா பிடிக்குமா அம்மா பிடிக்குமானு கேட்பாய்ங்க இப...

Posted: 19 Mar 2015 03:45 AM PDT

முன்னலாம் சின்ன குழந்தைகளிடம் அப்பா பிடிக்குமா அம்மா பிடிக்குமானு கேட்பாய்ங்க இப்பெல்லாம் அஜித் பிடிக்குமா விஜய் பிடிக்குமான்னு தான் கேட்கிறானுங்க..

#உஸ்ஸ்ஸ்... :P

- விவிகா சுரேஷ்

சார்ட் பேப்பரில் வடிவமைத்த மினியேச்சர் ஈஃபில் டவர்..!!! பிடித்தவர்கள் லைக் பண்ண...

Posted: 19 Mar 2015 03:38 AM PDT

சார்ட் பேப்பரில் வடிவமைத்த மினியேச்சர் ஈஃபில் டவர்..!!!

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


திறமைகள்..

:) Relaxplzz

Posted: 19 Mar 2015 03:30 AM PDT

பிறந்தநாள் என்றால் என்ன ? இந்த ஒரு கேள்வி BBC வேர்ல்ட் நிறுவனத்தார் உலகில் உள்ள...

Posted: 19 Mar 2015 03:20 AM PDT

பிறந்தநாள் என்றால் என்ன ?

இந்த ஒரு கேள்வி BBC வேர்ல்ட் நிறுவனத்தார் உலகில் உள்ள பெரிய மனிதர்கள்(VIP) எல்லோரிடமும் கேட்டனர்.அதில் மிக சிறந்த பதிலாக தேர்வு செய்ய பட்டது யாருடைய பதில் தெரியுமா?

அப்துல் கலாம் அவர்களின் பதில் தான்.......அது என்ன தெரியுமா?
.
.
.
..
.
.
.
.
.
.
" வாழ்கையில் அந்த ஒரே ஒரு நாள் , உன்னுடைய அழுகை குரல் கேட்டு உன் தாய் சிரிப்பது "

Relaxplzz

<3 Relaxplzz

Posted: 19 Mar 2015 03:10 AM PDT

மறந்து போன வாடகை சைக்கிள்.... நான் சிறு வயதாக இருந்த போது தெருவுக்கு ஒரு வாடகை...

Posted: 19 Mar 2015 02:58 AM PDT

மறந்து போன வாடகை சைக்கிள்....

நான் சிறு வயதாக இருந்த போது தெருவுக்கு ஒரு வாடகை சைக்கிள் கடையாவது இருக்கும். எங்கள் தெருவில் ஒரு வாடகை சைக்கிள் கடை உண்டு. சனி ஞாயிறு என்றால் அங்கு படை எடுத்து சென்று விடுவோம்.

எல்லாம் அங்குள்ள ஒன்றிரண்டு சிறிய சைக்கிளை வாடகைக்கு எடுத்து ஓட்டுவதற்கு தான். நாம் போகும் முன்பே வேற ஒருத்தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்று விட்டால் அவன் வரும் வரை அங்கேயே உக்கார்ந்து இருக்க வேண்டி இருக்கும். அவன் எப்ப வருவான் எப்ப வருவான் என்று அடிக்கு ஒரு தரம் வெளியே எட்டி எட்டி பார்த்துக்கொண்டே இருப்போம். ஒரு வழியாக அவன் வந்து ஸ்டைலாக நிறுத்திய அடுத்த நொடி அந்த சைக்கிளை பெற ஒரு போரே நடக்கும்.

இதில் சில விசமிகள் சைக்கிளை திரும்ப விடுவது போன்று வந்து "அண்ணே மணி என்னாச்சுனே" என கேட்பான். மணியை சொன்னவுடன் அப்படியா சரி அப்ப இன்னும் அரை மணி நேரம் எனக்கு காசு இருக்கு என திரும்பவும் பறந்து விடுவான். மணிக்கு ஒரு ரூபாயோ என்னமோ. எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. சிலர் வேண்டும் என்றே வீட்டில் ஒரு மணி நேரத்திற்கு கொடுக்கும் காசில் ஐந்து பத்து பைசாவிற்கு மிட்டாய் வாங்கி சாப்பிட்டு விட்டு கடைகாரரிடம், "அண்ணே, பத்து பைசா கீழ எங்கயோ விழுந்துடுச்சுன்னே" என பரிதாபமாக பார்ப்பான். அவரும் சரி சரி வுட்டுட்டு போ என்பார்.

சிறுவர்களாகிய எங்களுக்கென்று சைக்கிள் எல்லாம் அப்போது வாங்கி கொடுத்ததில்லை.

- ஆதி மனிதன் .

Relaxplzz


"நினைவுகள்"

சாகசம் செய்யும் குருவிகள்.. முதலில் இந்தப் படத்தைக் கிளிக் செய்த படப்பிடிப்பாளர...

Posted: 19 Mar 2015 02:50 AM PDT

சாகசம் செய்யும் குருவிகள்..

முதலில் இந்தப் படத்தைக் கிளிக் செய்த படப்பிடிப்பாளரைப் பாராட்டியாக வேண்டும்.. கூட்டிலிருந்து விழுந்த குஞ்சை தாய்க்குருவியும், அப்பாக்குருவியும் கீழே விழாமல் எப்படி இலாவகமாக ஏந்திக் கொள்கிறார்கள் என்று பார்த்தீர்களா?

எல்லாமே மின்னல் வேகத்தில் நடக்கின்றது.
படப்பிடிப்பாளரின் விரல்களும்கூட !

#பிடிச்சா_லைக்_பண்ணுங்கள்.. (y)

Relaxplzz


புத்தர் உயிரோட வந்து பேஸ்புக்கில் 'ஆசையே துன்பத்திற்கு காரணம்'னு போஸ்ட் பண்ணாலும...

Posted: 19 Mar 2015 02:45 AM PDT

புத்தர் உயிரோட வந்து பேஸ்புக்கில் 'ஆசையே துன்பத்திற்கு காரணம்'னு போஸ்ட் பண்ணாலும் 'என்ன தல வீட்ல அடி பலமோ?'னு தான் கமெண்ட் வரும்.

#ஏன்னா..டிசைன் அப்டி. :P

- விவிகா சுரேஷ்

:) Relaxplzz

Posted: 19 Mar 2015 02:40 AM PDT

:) Relaxplzz

Posted: 19 Mar 2015 02:28 AM PDT

அலுவலகத்தில் இருந்து வந்த கணவன் மிகவும் சோர்வாக இருந்தான்..வந்தவன் டிவி யை ஆன் ச...

Posted: 19 Mar 2015 02:20 AM PDT

அலுவலகத்தில் இருந்து வந்த கணவன் மிகவும் சோர்வாக இருந்தான்..வந்தவன் டிவி யை ஆன் செய்து சோபாவில் அமர்ந்தான்..

மனைவியை அழைத்து '"சீக்கிரமா ஒரு கப் காப்பி தா........ஆரம்பிக்கபோகுது'" என்றான்..
அவளும் காப்பி கொடுத்தாள்...

5 நிமிடங்கள் கழித்து...

'" இன்னிக்கு நியூஸ் பேப்பர எடுத்து குடேன்..காலைல படிக்கவேயில்ல ........ ஆரம்பிக்க போகுது'' என்றான்..
அவளும் பேப்பரை எடுத்து கொடுத்தாள்..

10 நிமிடங்கள் கழித்து....
'" அப்ப குடுத்த காப்பி சூடே இல்ல..இன்னொரு காப்பி சூடா தாயேன்....(.டிவியை பார்த்துக் கொண்டே )....சீக்கிரம் ஆரம்பிக்க போகுது '" என்றான்..
ஒன்னுமே சொல்லாம இன்னொரு காப்பி கொடுத்தாள்.

15 நிமிடங்கள் கழித்து ..
'"எங்கம்மா காப்பி குடிச்சிட்டாங்களா ....இப்ப ஆரம்பிக்க போகுது'என்றான்.

மனைவி,'எல்லாம் குடிச்சாச்சு..ம்கும்..நீ குடிச்சியான்னு ஒரு வார்த்த என்ன கேக்க முடில..நானும் காலைலேர்ந்து எவ்ளோ வேலைகள செஞ்சுட்டு இருக்கேன்..என்னை ஒரு வார்த்தை கேக்க இந்த வீட்ல யார் இருக்கா, ...என் மேல கொஞ்சமாச்சும் உங்களுக்கு அக்கறை இருக்கா....நான் இருந்தா என்ன செத்தா என்ன..யாருக்கு கவலை....உங்களுக்கு உங்கம்மா தான் முக்கியம்............''' கண்ணுல அருவி கொட்டுது....கிச்சன்ல பாத்திரம் கொட்டுது.......

(.பிஜிம்....டன்ட னக்கா டன்ட னக்கா.....)

கணவன் சொன்னான் ''ஆரம்பித்து விட்டது' :P :P

- Chelli Sreenivasan

Relaxplzz

:P Relaxplzz

Posted: 19 Mar 2015 02:10 AM PDT

25 வருடங்களுக்கு முன் செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டுக் கொண்டோம்.. ஆணியில்...

Posted: 19 Mar 2015 01:56 AM PDT

25 வருடங்களுக்கு முன்

செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டுக் கொண்டோம்..

ஆணியில் மாட்டி கிழிந்த துணியை டானிங்க் செய்தது உடுத்தி கொண்டோம்.

முதல் நாள் கூட்டு பொறியல் ரசம் சாம்பாரை சுருண்ட செய்து பழங்கஞ்சியுடன் பருகினோம்.

எல்லா கல்யாணத்திலும் மத்திய உணவு பிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன்.

ரயில் பயணத்திற்கு புளியன்சாதமும் எலுமிச்சை சாதமும் கட்டி சென்றோம்.

பெரும்பாலும் பேருந்தில் தான் போனோம்.

பள்ளி மாணவர்கள் குழந்தைகளாக இருந்தனர்.

இளையராஜா தான் எங்கும் ஒலித்தார்.

பாடல்களின் வரிகள் புரிந்தன.

காதலிப்பதற்கும் உறவுகளுக்கும் கடிதங்கள் எழுதினோம்.

ரஜினி கமல் பொங்கல் தீபாவளி க்ரீடிங்க்ஸ் கிடைத்தது.

உண்டு களித்து தீபாவளிக்கு சினிமா பார்த்தோம்.

காணும் பொங்கலுக்கு உறுவுகளை பார்த்தோம்.

திருடனை பிடிக்க ஊரே ஓடியது.

பாம்படிக்க பக்கத்து வீட்டு மாமா வந்தார்.

பக்கத்து வீட்டு பெரியவர்களுக்கு பயந்தோம்.

கல்யாணத்திற்கு உறவுகள் இரண்டு நாள் முன்னரே வந்தனர்.

எல்லாவற்றையும் விட காலை பொழுதுகள் ரம்மியமாக இருந்தது,
சுவாசிக்கவும் யோசிக்கவும்.

Relaxplzz


# படித்ததில் பிடித்தது # - 4

பேராண்டி பனங்கிழங்கு வாங்கிட்டு போயி அம்மாகிட்ட கொடு... பாளாப்போன பர்கரை வாங்கி...

Posted: 19 Mar 2015 01:50 AM PDT

பேராண்டி

பனங்கிழங்கு வாங்கிட்டு போயி அம்மாகிட்ட கொடு... பாளாப்போன பர்கரை வாங்கிகொண்டு கொடுக்காத... :)


வாய்ச்சண்டையை நிறுத்த கையில் உருட்டுகட்டையை கொடுப்பது தான் சிறந்தவழி! #ஆங்ங் ;-...

Posted: 19 Mar 2015 01:45 AM PDT

வாய்ச்சண்டையை நிறுத்த கையில் உருட்டுகட்டையை கொடுப்பது தான் சிறந்தவழி!

#ஆங்ங் ;-)

- விவிகா சுரேஷ்

:D :D (y) (y)

Posted: 19 Mar 2015 01:43 AM PDT

:D :D (y) (y)


தேங்காய் ஓட்டில் வீடு......பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 19 Mar 2015 01:39 AM PDT

தேங்காய் ஓட்டில் வீடு......பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 19 Mar 2015 01:32 AM PDT

:P Relaxplzz

Posted: 19 Mar 2015 01:19 AM PDT

#பசங்களுக்கு_மட்டும்_ஏன்_இந்த_விதி? காதலிக்கும் வரை "வெட்டிப்பய"னு சொல்லுவாங்க...

Posted: 19 Mar 2015 01:10 AM PDT

#பசங்களுக்கு_மட்டும்_ஏன்_இந்த_விதி?

காதலிக்கும்
வரை "வெட்டிப்பய"னு சொல்லுவாங்க
காதலியை மணந்தபின்
"கெட்டிக்காரன்"னு சொல்றாங்க.

வேலை கிடைக்கும்
வரை "தண்டச்சோறு" என்பார்கள்
வேலை கிடைத்தபின்
"கண்ணா,ராஜா" என்கிறார்கள்.

சம்பளத்தை வீட்டில் கொடுக்கும்
தினம் "இன்னும்
ரெண்டு இட்லி வைக்கவா"
என்று கேட்கிறார்கள்.
கொடுத்த காசு தீர்ந்த தினம்
"இன்னிக்காவது ஆபிசுக்கு சீக்கிறம்
போயேன்" என்கிறார்கள்.

ஆசைப்பட்டு ஐ-போன்
வாங்குனா "வீண் செலவு"
என்பார்கள்.
இதுவே வீட்டுக்கு பிளாஸ்மா டி.வி வாங்கினா "அத்தியாவசியம்"
என்கிறார்கள்.

மாசத்துக்கு ரெண்டு தடவை பொண்ணுங்க
டிரெஸ் எடுக்கும்போது "அந்த ரெட்
கலர் சுடியும்
வாங்கிக்கோமா"னு சொல்வாங்க.
நாம
வருசத்துக்கு ஒரேயொரு ஜீன்ஸ் பேன்ட் வாங்கினா "போன வருச பொங்களுக்கு தான்
எடுத்துட்டில"னு சொல்றாங்க.

பொண்ணுங்க
கல்யாணத்துக்கு ஆறேழு லட்சம்
செலவு.
நம்மலுக்கு வெறும் ஒன்னேகால்
லட்சம் தான் செலவு.

இந்த உண்மைய வீட்டுல
சொன்னா "உனக்கு சோறு கிடையாது"னு மிரட்டுறாங்க.

எல்லாம் விதி...

சம்பாதிங்க...சந்தோசமா இருங்க...

;-) ;-)

Relaxplzz

Posted: 19 Mar 2015 01:07 AM PDT


0 comments:

Post a Comment