Wednesday, 18 March 2015

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


இந்த ஹிந்திக்காரனுங்க நம்ம ஊர்ல வந்து அடகுக்கடை வைப்பானுங்க,அணு உலை வைப்பானுங்க....

Posted: 18 Mar 2015 09:06 AM PDT

இந்த ஹிந்திக்காரனுங்க நம்ம ஊர்ல வந்து அடகுக்கடை வைப்பானுங்க,அணு உலை வைப்பானுங்க...ஆனா எக்ஸ்ட்ரா ஒரு பானிப்பூரி கேட்டா வைக்க மாட்டானுங்க.

Teaser of most awaited movie #36Vayadhinile

Posted: 18 Mar 2015 05:47 AM PDT

Teaser of most awaited movie #36Vayadhinile


36 Vayadhinile First Look Teaser | Jyotika | Rosshan Andrrews | Santhosh Narayanan

36 Vayadhinile is a 2015 Indian Tamil drama film directed by Rosshan Andrrews. It is a remake of 2014 Malayalam film How Old Are You? written by Bobby Sanjay...

" ஓ மை காட் " என்பது : கெஞ்சல் கொஞ்சல் அதிர்ச்சி ஆச்சரியம் பயம் பரிதாபம் உச்சம்...

Posted: 18 Mar 2015 12:52 AM PDT

" ஓ மை காட் " என்பது : கெஞ்சல் கொஞ்சல் அதிர்ச்சி ஆச்சரியம் பயம் பரிதாபம் உச்சம் ஊக்கம்.

:p

Posted: 18 Mar 2015 12:22 AM PDT

:p


Pls Use Helmet. .

Posted: 18 Mar 2015 12:08 AM PDT

Pls Use Helmet. .


சுவாரிசியமான தகவல்கள் - தெரிந்துகொள்வோம் * கரையான்களால் அரிக்க முடியாத மரம் தே...

Posted: 17 Mar 2015 10:30 PM PDT

சுவாரிசியமான தகவல்கள் - தெரிந்துகொள்வோம்

* கரையான்களால் அரிக்க முடியாத மரம் தேக்கு மரம்.

* ஆப்பிரிக்காவில் ரத்த வேர்வை சிந்தும் நீர்யானை உள்ளது.

* ஆரல் கடல், சாக்கடல், காஸ்பியன் கடல் இவை மூன்றும் கடல் என்ற பெயரைக் கொண்ட ஏரிகள் ஆகும்.

* உலகில் கிடைக்கும் தங்கத்தில் பாதி அளவை தரும் நாடு தென்னாப்பிரிக்கா (ஒரு ஆண்டுக்கு 700 டன்).

* முத்துத் தீவு என அழைக்கப்படும் நாடு பஹ்ரெய்ன்.

* தென்னாப்பிரிக்காவில் ஒரு ஆண், ஒரு பெண்ணை பார்க்க வந்தால் அந்த பெண் மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது வழக்கமாக இருந்தது. அந்த ஆண் தன் மனத்திற்கு பிடித்தவனாக இருந்தால் நீளமான மெழுகுவர்த்தியும், பிடிக்காதவனாக இருந்தால் சிறிய மெழுகுவர்த்தியையும் ஏற்றி வைப்பாள்.

* காண்டா மிருகத்தின் கொம்பு மற்ற மிருகங்களின் கொம்புகளிலிருந்து வேறுபடுகிறது. இதன் கொம்பு எலும்பால் ஆனது அல்ல. தோலிலிருந்தே உருவானது.

* சூரியன் அஸ்தமனத்துக்கு முன் சிவப்பாக தோன்றும். ஆனால், அது பச்சையாகத் தோன்றுவது அண்டார்டிக்காவில் மட்டும் தான்.

* பச்சைத் தங்கம் என அழைக்கப்படும் மரம் யூகாலிப்டஸ் மரம்.

* நச்சுள்ள பாம்பு இன்னொரு பாம்பைக் கடித்தால் கடிப்பட்ட பாம்பு இறந்து விடும்.

* பாம்புகளில் 3,000 வகையான பாம்புகள் உலகம் முழுவதும் உள்ளன. இந்தியாவில் மட்டும் 350 வகைகள் உள்ளன.

* இந்தியா சுதந்திரம் பெற்ற 1947-ம் ஆண்டில் நாட்டில் மொத்தம் 648 வங்கிகளும், 4,819 கிளைகளும் இருந்தன.

படித்ததில் பிடித்தது:- 1. விமானத்தை மிகச் சாதாரணமாகவும்.. வண்ணத்துப் பூச்சியை...

Posted: 17 Mar 2015 08:38 PM PDT

படித்ததில் பிடித்தது:- 1.
விமானத்தை மிகச் சாதாரணமாகவும்.. வண்ணத்துப் பூச்சியை
ஆச்சர்யமாகவும் பார்க்கின்றனர், நகரத்துப் பிள்ளைகள்.!

2. வாழ்க்கையில் உயரச் செல்வதற்கான வாய்ப்பு,
சிலருக்கு படிக்கட்டாகவும்,
சிலருக்கு எஸ்கலேட்டராகவும்,
சிலருக்கு லிஃப்டகாவும் அமைகிறது..

3. பியூட்டி பார்லரை ஏளனச் சிரிப்போடு கடந்து செல்லும்
ஏழைப்பெண் தான் கொள்ளை அழகு.!

4. தோற்றுப்போய் வீடு திரும்புகையில்,
தலை கோதி மடி சாய்க்க ஒருவர் இருந்தால் போதும்,
வாழ்க்கையை ஜெயித்துவிடலாம்.

5. முதியோர் இல்லத்திற்கு
பணம் கொடுங்க,
பொருள் கொடுங்க,
உணவு கொடுங்க,
உடை கொடுங்க..
ஆனா உங்க பெற்றோரை மட்டும் கொடுத்துடாதீங்க..
6.
20 வயசு வரைக்கும்தான் வேளா வேளைக்கு சோறு..
அதுக்கு மேல வேலைக்கு போனால் தான் சோறு..

7. டாக்டரை மறந்து விட்டு
நர்சுகளை ஞாபகம் வைத்திருக்கும்
விசித்திரமான உலகம் இது.!

8.ரெண்டையும் பொண்ணுங்களா பெத்தவங்கள விட,
ரெண்டையும் பசங்களா பெத்தவங்கதான்
பெரும்பாலும் முதியோர் இல்லத்துல இருக்காங்க.!

9. கடவுள் சிற்பத்தை 'கல்' என ஒத்துக்கொள்பவர்கள்,
பணத்தை 'காகிதம்' என ஒத்துக்கொள்வதில்லை..

10. அன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள்..
இன்று சங்கம் வைத்து சாதி வளர்க்கிறார்கள்...
11.
கடவுளாக வாழ கல்லாயிருந்தால் போதும்..
மனிதனாக வாழத்தான் அதிகம் மெனக்கிட வேண்டியிருக்கிறது.! 12.

மழையை நிறுத்த தமிழர்கள் இரண்டு யுக்திகளைக் கையாளுகிறார்கள்..
ஒன்று, ஃபேஸ்புக்கில் கவிதை எழுதுகிறார்கள்..
மற்றொன்று ஸ்கூலுக்கு லீவு விடுகிறார்கள்..

13. மழைக்காக விடப்பட்ட விடுமுறையில் ஒருபோதும் மழை பெய்வது இல்லை..
அவை குழந்தைகள் மீதான கடவுளின் மனிதாபிமானம்..

14. ஷாப்பிங் மால்களில் பேரம் பேச வக்கில்லாத நாம்தான்,
சாலையோரத்து ஏழை வியாபாரியிடம் வெட்கமே இல்லாமல் பேரம் பேசுகிறோம்..

15. ஆளே இல்லாத செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விடுறீங்க
சரிதான்..
ஆள் இருக்கிற எங்க ஊருக்கு எப்படா பஸ் விடுவீங்க..

அக்காலத்துக் காதல் : கண்கள் பார்த்து ! மனங்கள் பேசி ! கடிதங்கள் அழுது ! என்றோ ஒ...

Posted: 17 Mar 2015 07:54 PM PDT

அக்காலத்துக் காதல் :
கண்கள் பார்த்து !
மனங்கள் பேசி !
கடிதங்கள் அழுது !
என்றோ ஒர் நாள் முகம்
பார்த்து பேசிய நினைவுகளை
சுமந்துக் கொண்டு !
அவளுக்காவோ அவனுக்காகவோ வாழ்ந்து
காத்துக் கொண்டிருந்தது அக்காலத்துக் காதல் !

இக்காலத்துக் காதல் :
விரல்கள் பேசி !
புகைப்படம் பகிர்ந்து !
அலைப்பேசி அழுது !
கடற்கறை வெட்கி தலை குனிந்து !
காதல் சலித்து அவனோ அவளோ TaTa காட்டுவது இக்காலத்துக் காதல் !

:p

Posted: 17 Mar 2015 10:42 AM PDT

:p


0 comments:

Post a Comment