Wednesday, 25 February 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


:) Relaxplzz

Posted: 25 Feb 2015 09:30 AM PST

இதில் ஒரு அமைதியான படகு சவாரி செய்ய பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 25 Feb 2015 09:20 AM PST

இதில் ஒரு அமைதியான படகு சவாரி செய்ய பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


அமெரிக்காவில் பூமிக்குக் கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். "500" அடி ஆழத்தில் மின...

Posted: 25 Feb 2015 09:10 AM PST

அமெரிக்காவில் பூமிக்குக் கீழே தோண்டிக்கொண்டு போனார்கள்.

"500" அடி ஆழத்தில் மின்சார கேபிள்கள் கிடைத்தன. உடனே அவர்கள் அறிவித்தார்கள்..."! "எங்களது முன்னோர்கள் மின்சாரத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்தி உள்ளார்கள்" என்று பெருமையோடு..."!!

இரஷ்யர்கள் உடனே அவர்களும் பூமிக்குக் கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். "500" அடி ஆழத்தில் டெலிபோன் கேபிள்கள் கிடைத்தன. அவர்கள் சொன்னார்கள்..."! "எங்களது முன்னோர்கள் அந்தக்காலத்திலேயே டெலிபோனை பயன்படுத்தியுள்ளார்கள்" என்று ஆச்சரியத்தோடு ..."!!

இந்தியர்களும் தோண்டினார்கள். "500" அடி தாண்டி "1000" அடி தோண்டியும் ஒன்றும் கிடைக்கவில்லை...! உடனே அறிவித்தார்கள்...? "எங்களது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே "வயர்லெஸ்" தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளார்கள்" என்று திமிரோடு..."!!

விடுவமா நம்ம..."! #தமிழன்டா.

via Jaguar V.I.P

Relaxplzz

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம் ==================================== 1. அறம் செய வ...

Posted: 25 Feb 2015 09:00 AM PST

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்
====================================
1. அறம் செய விரும்பு / Learn to love virtue.

2. ஆறுவது சினம் / Control anger.

3. இயல்வது கரவேல் / Don't forget Charity.

4. ஈவது விலக்கேல் / Don't prevent philanthropy.

5. உடையது விளம்பேல் / Don't betray confidence.

6. ஊக்கமது கைவிடேல் / Don't forsake motivation.

7. எண் எழுத்து இகழேல் / Don't despise learning.

8. ஏற்பது இகழ்ச்சி / Don't free load.

9. ஐயம் இட்டு உண் / Feed the hungry and then feast.

10. ஒப்புரவு ஒழுகு / Emulate the great.

11. ஓதுவது ஒழியேல் / Discern the good and learn.

12. ஒளவியம் பேசேல் / Speak no envy.

13. அகம் சுருக்கேல் / Don't short change.

14. கண்டொன்று சொல்லேல் / Don't flip-flop.

15. ஙப் போல் வளை / Bend to befriend.

16. சனி நீராடு / Shower regularly.

17. ஞயம்பட உரை / Sweeten your speech.

18. இடம்பட வீடு எடேல் / Judiciously space your home.

19. இணக்கம் அறிந்து இணங்கு / Befriend the best.

20. தந்தை தாய்ப் பேண் / Protect your parents.

21. நன்றி மறவேல் / Don't forget gratitude.

22. பருவத்தே பயிர் செய் / Husbandry has its season.

23. மண் பறித்து உண்ணேல் / Don't land-grab.

24. இயல்பு அலாதன செய்யேல் / Desist demeaning deeds.

25. அரவம் ஆட்டேல் / Don't play with snakes.

26. இலவம் பஞ்சில் துயில் / Cotton bed better for comfort.

27. வஞ்சகம் பேசேல் / Don't sugar - coat words.

28. அழகு அலாதன செய்யேல் / Detest the disorderly.

29. இளமையில் கல் / Learn when young.

30. அரனை மறவேல் / Cherish charity.

31. அனந்தல் ஆடேல் / Over sleeping is obnoxious.

32. கடிவது மற / Constant anger is corrosive.

33. காப்பது விரதம் / Saving lives superior to fasting.

34. கிழமைப்பட வாழ் / Make wealth beneficial.

35. கீழ்மை அகற்று / Distance from the wicked.

36. குணமது கைவிடேல் / Keep all that are useful.

37. கூடிப் பிரியேல் / Don't forsake friends.

38. கெடுப்பது ஒழி / Abandon animosity.

39. கேள்வி முயல் / Learn from the learned.

40. கைவினை கரவேல் / Don't hide knowledge.

41. கொள்ளை விரும்பேல் / Don't swindle.

42. கோதாட்டு ஒழி / Ban all illegal games.

43. கெளவை அகற்று / Don't vilify.

44. சக்கர நெறி நில் / Honour your Lands Constitution.

45. சான்றோர் இனத்து இரு / Associate with the noble.

46. சித்திரம் பேசேல் / Stop being paradoxical.

47. சீர்மை மறவேல் / Remember to be righteous.

48. சுளிக்கச் சொல்லேல் / Don't hurt others feelings.

49. சூது விரும்பேல் / Don't gamble.

50. செய்வன திருந்தச் செய் / Action with perfection.

51. சேரிடம் அறிந்து சேர் / Seek out good friends.

52. சையெனத் திரியேல் / Avoid being insulted.

53. சொற் சோர்வு படேல் / Don't show fatigue in conversation.

54. சோம்பித் திரியேல் / Don't be a lazybones.

55. தக்கோன் எனத் திரி / Be trustworthy.

56. தானமது விரும்பு / Be kind to the unfortunate.

57. திருமாலுக்கு அடிமை செய் / Serve the protector.

58. தீவினை அகற்று / Don't sin.

59. துன்பத்திற்கு இடம் கொடேல் / Don't attract suffering.

60. தூக்கி வினை செய் / Deliberate every action.

61. தெய்வம் இகழேல் / Don't defame the divine.

62. தேசத்தோடு ஒட்டி வாழ் / Live in unison with your countrymen.

63. தையல் சொல் கேளேல் / Don't listen to the designing.

64. தொன்மை மறவேல் / Don't forget your past glory.

65. தோற்பன தொடரேல் / Don't compete if sure of defeat.

66. நன்மை கடைப்பிடி / Adhere to the beneficial.

67. நாடு ஒப்பன செய் / Do nationally agreeable s.

68. நிலையில் பிரியேல் / Don't depart from good standing.

69. நீர் விளையாடேல் / Don't jump into a watery grave.

70. நுண்மை நுகரேல் / Don't over snack.

71. நூல் பல கல் / Read variety of materials.

72. நெற்பயிர் விளைவு செய் / Grow your own staple.

73. நேர்பட ஒழுகு / Exhibit good manners always.

74. நைவினை நணுகேல் / Don't involve in destruction.

75. நொய்ய உரையேல் / Don't dabble in sleaze.

76. நோய்க்கு இடம் கொடேல் / Avoid unhealthy lifestyle.

77. பழிப்பன பகரேல் / Speak no vulgarity.

78. பாம்பொடு பழகேல் / Keep away from the vicious.

79. பிழைபடச் சொல்லேல் / Watch out for self incrimination.

80. பீடு பெற நில் / Follow path of honour.

81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / Protect your benefactor.

82. பூமி திருத்தி உண் / Cultivate the land and feed.

83. பெரியாரைத் துணைக் கொள் / Seek help from the old and wise.

84. பேதைமை அகற்று / Eradicate ignorance.

85. பையலோடு இணங்கேல் / Don't comply with idiots.

86. பொருள்தனைப் போற்றி வாழ் / Protect and enhance your wealth.

87. போர்த் தொழில் புரியேல் / Don't encourage war.

88. மனம் தடுமாறேல் / Don't vacillate.

89. மாற்றானுக்கு இடம் கொடேல் / Don't accommodate your enemy.

90. மிகைபடச் சொல்லேல் / Don't over dramatize.

91. மீதூண் விரும்பேல் / Don't be a glutton.

92. முனைமுகத்து நில்லேல் / Don't join an unjust fight.

93. மூர்க்கரோடு இணங்கேல் / Don't agree with the stubborn.

94. மெல்லி நல்லாள் தோள்சேர் / Stick with your exemplary wife.

95. மேன்மக்கள் சொல் கேள் / Listen to men of quality.

96. மை விழியார் மனை அகல் / Dissociate from the jealous.

97. மொழிவது அற மொழி / Speak with clarity.

98. மோகத்தை முனி / Hate any desire for lust.

99. வல்லமை பேசேல் / Don't self praise.

100. வாது முற்கூறேல் / Don't gossip or spread rumour.

101. வித்தை விரும்பு / Long to learn.

102. வீடு பெற நில் / Work for a peaceful life.

103. உத்தமனாய் இரு / Lead exemplary life.

104. ஊருடன் கூடி வாழ் / Live amicably.

105. வெட்டெனப் பேசேல் / Don't be harsh with words and deeds.

106. வேண்டி வினை செயேல் / Don't premeditate harm.

107. வைகறைத் துயில் எழு / Be an early-riser.

108. ஒன்னாரைத் தேறேல் / Never join your enemy.

109. ஓரம் சொல்லேல் / Be impartial in judgement.

- ஔவையார்.

Relaxplzz


:) Relaxplzz

Posted: 25 Feb 2015 08:55 AM PST

தமிழ் டீச்சர், இங்கிலீஷ் டீச்சர்,மேத்ஸ் டீச்சர்........... மூணு பேரும் ஒரு பள்ளத...

Posted: 25 Feb 2015 08:50 AM PST

தமிழ் டீச்சர், இங்கிலீஷ் டீச்சர்,மேத்ஸ் டீச்சர்...........
மூணு பேரும் ஒரு பள்ளத்துல விழுந்துட்டாங்க.

தமிழ் டீச்சர் "உதவி உதவி" னு கத்துறாங்க..

இங்கிலீஷ் டீச்சர் "ஹெல்ப் ஹெல்ப்" னு கத்துறாங்க..

மேத்ஸ் டீச்சர் எப்படி கத்துவாங்க ?
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
"108...........108!"

:P :P

Relaxplzz

உன் வாழ்கை உன் கையில் என்பது இதுதானோ....

Posted: 25 Feb 2015 08:45 AM PST

உன் வாழ்கை உன் கையில் என்பது இதுதானோ....


இரவு நேரத்தில் சுக்கு காப்பி குடிக்க பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 25 Feb 2015 08:38 AM PST

இரவு நேரத்தில் சுக்கு காப்பி குடிக்க பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 25 Feb 2015 08:30 AM PST

உண்மையான அன்பு ஈடுஇணையில்லாதது.. <3 <3

Posted: 25 Feb 2015 08:25 AM PST

உண்மையான அன்பு ஈடுஇணையில்லாதது.. ♥ ♥


தெரிஞ்சு மட்டும் என்ன செய்ய போறோம்????

Posted: 25 Feb 2015 08:20 AM PST

தெரிஞ்சு மட்டும் என்ன செய்ய போறோம்????


ஆசைதான் எனக்கு இன்று காதலியாய் இருக்கும் நாளை என் மனைவியை வாரம் ஒரு முறையாவது அ...

Posted: 25 Feb 2015 08:10 AM PST

ஆசைதான் எனக்கு

இன்று காதலியாய் இருக்கும்
நாளை என் மனைவியை
வாரம் ஒரு முறையாவது
அவளுக்கு முன் எழுந்து
அவள் துங்கும் அழகை ரசிக்க
ஆசை!

தினமும் மலர் சூடி
அவள் நெற்றியில்
என் இதழ் சேர்க்க ஆசை!

அனைவரும் இருக்கும் நேரத்தில்
கள்ளவனாய் அவள் இடைக்கில்ல
ஆசை

யாரும் இல்லா நேரத்தில்
முத்தத்தில்
அவளை நனைக்க ஆசை

குழந்தையாய் அவள் செய்யும்
தவறுகளை ரசிக்க ஆசை

யாரும் இல்லா சாலையில் அவள்
கைபிடித்து நடக்க ஆசை

முதன் முதலில் நான் வாங்கும்
வாகனத்தில்
அவளோடு வெகுதுரம்
செல்ல ஆசை!

மழை நேரத்தில் ஒரு குடைக்குள்
அவளுடன் இருக்க ஆசை!

மழையில் நனைந்த என் தலையை
அவள் புடவை நுனி கொண்டு
துடைக்க ஆசை...!!

என் உயிர் சுமக்கும் அவளை
அன்று என் கண்ணுக்குள்
வைத்து
பார்க்க ஆசை!

என் உயிர் பிறந்த பின்பும்
அவள் முகம் முதல் பார்க்க ஆசை

இப்படியே 60 ஆண்டு காலம்
அவளோடு நான் வாழ
ஆசை

60 ஆன பின்பும் அவள் முகத்தில்
விழுந்த ரேகையையும்
கன்னத்தில் விழுந்த குழியையும்
மூக்கு கண்ணாடி போட்டு ரசிக்க
ஆசை

உயிர் பிரியும் வேலையில்
உன் முகம் பார்த்து
உன் மடியில் உயிர் பிரிய ஆசை....

♥ ♥

"படித்ததில் பிடித்தது"

Relaxplzz

குடிகாரத்தமிழனுக்கு தெரியுமா?? ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் கட்டிய கட்டிடங்கள...

Posted: 25 Feb 2015 08:00 AM PST

குடிகாரத்தமிழனுக்கு தெரியுமா??

ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் கட்டிய கட்டிடங்களே இடிந்துவிழும் இந்த சூழலில்,
1000 ஆண்டுக்கும் மேலாகியும், நிமிர்ந்து நிற்கும் தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டியது நம் பாட்டன் என்று??

கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும். மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையைக் கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப்படுகிறது. அப்போதே வெள்ளத்தடுப்பை ஏற்படுத்தி, விவசாயத்திற்க்கு உயிரூட்டியவன் தமிழனாகிய நம் முப்பாட்டன் என்பது தெரியுமா??

உலகில் உள்ள மதங்கள் போதிக்கும் அனைத்தையும் 1330 குறள் மூலமாக மனிதனின் வாழ்க்கையே நெறிப்பாடுத்திய வள்ளுவன் வம்சம் நாம் என்று??

ஒரு கரு உருவாவதிலிருந்து, பிறக்கும் வரை என்ன நடக்கிறது என்பதை தொல்காப்பியத்தில் குறிப்பிட்டு,மருத்துவத்துறையில் கைதேர்ந்தவன் நம் முன்னோர்கள் என்பது தெரியுமா??

உலகின் 7 ஆம் மிகப் பெரிய சாம்ராஜ்யம் சோழசாம்ராஜ்யம் நம் பாட்டன் கொண்டிருந்தான் என்பது தெரியுமா??

இன்னும் எத்தனையோ கூறலாம்...
இத்தனை சிறப்புகள் ஒருசேரக்கொண்டிருந்த ஒரு இனம், இப்போது
குடித்தே சாகிறது!
சாதியை எவன் கூறினாலும் அவன் பின்னே சென்று அடித்து கொண்டு சாகிறது

இலவசங்களுக்கு கையேந்துகிறது.
அடிமை வாழ்க்கை வாழ்கிறது.
திருடர்களை ஆளவைத்து அழகுபார்க்கிறது.
சினிமாவில் மூழ்கிக்கிடக்கிறது.

Relaxplzz


உடல்வலித்த உழைப்பு ஒருநாள் உண்மையான கூலிதரும்... (y)

Posted: 25 Feb 2015 07:50 AM PST

உடல்வலித்த உழைப்பு ஒருநாள் உண்மையான கூலிதரும்... (y)


அபி: என் பொண்டாட்டி எப்பவும் பணம் கேட்டு நச்சரிக்கிறா சிபி: தார பணத்தயெல்லாம் எ...

Posted: 25 Feb 2015 07:45 AM PST

அபி: என் பொண்டாட்டி எப்பவும் பணம் கேட்டு நச்சரிக்கிறா

சிபி: தார பணத்தயெல்லாம் என்ன செய்றேண்ணு கேட்டுர வேண்டியது தானே

அபி: அது எப்படி முடியும். நான் தான் இது வர பணமே கொடுத்ததில்லயே......

:O :O

தன்னை தானே செல்பி எடுத்துகொண்ட சச்சின்...... சச்சினை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்...

Posted: 25 Feb 2015 07:40 AM PST

தன்னை தானே செல்பி எடுத்துகொண்ட சச்சின்......

சச்சினை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (Y)


:) Relaxplzz

Posted: 25 Feb 2015 07:30 AM PST

:) Relaxplzz

Posted: 25 Feb 2015 07:20 AM PST

உலகக் கோப்பையை கைப்பற்ற இந்திய கேப்டன் தோனிக்கு நம் தலைவர்கள் ஆலோசனை சொன்னால் எப...

Posted: 25 Feb 2015 07:10 AM PST

உலகக் கோப்பையை கைப்பற்ற இந்திய கேப்டன் தோனிக்கு நம் தலைவர்கள் ஆலோசனை சொன்னால் எப்படி இருக்கும்.???

ஒரு கற்பனை...

ஜெயலலிதா: வீரர்கள் ஒழுங்கா பந்தாடறாங்களோ இல்லையோ, அவங்களை நாம பந்தாடணும். அதிரடி பேட்ஸ்மேனை திடீர்னு பவுலிங்குக்கு அனுப்பணும். பவுலரை பந்து பொறுக்கிப் போடச்சொல்லிட்டு, அந்த வேலை செய்யுற பையனை அம்பயர் ஆக்கிடணும். 'எப்போ, யாரைத் தூக்குவாங்களோ'ங்கிற கிலியில நல்லா ஆடுவாங்க. எதிர் டீம்ல நல்லா ஆடுற வீரருக்கு , இன்னோவா தரப்படும்னு ஆசை காட்டி கூப்பிட்டு வச்சுக்கலாம். அப்புறம் கப்பு நமக்குத்தான்.

மோடி: ''ஹமாரா தேஷ் கோ இந்துஸ்தான் சப்பக் பச்சக் லேத்தா ஹூம்..'' அப்படீன்னு கம்பீரமா ஒரு சவுண்ட் விட்டுக்கிட்டே பந்தை வீசுங்க. என்ன சொல்றீங்கன்னு புரியாம ஜெர்க் ஆகியே பேட்ஸ்மேன் அவுட் ஆகிடுவாரு. முதல்ல நீலநிற டிரஸ்ஸை மாத்துங்க. நம்ம பார்ட்டி நம்பருக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தா எல்லாருக்கும் காவி கலர் யூனிபார்ம் ரெடியாகிடும். டிரெஸ்ல ஒவ்வொரு நூல்லயும் உங்க பேரை பிரின்ட் பண்ணச் சொல்லிடலாம். எதிர் டீம் உங்க டிரெஸ் பத்தி மட்டும் பேசிட்டு, மேட்ச்சை கோட்டை விட்டுடுவாங்க. எதுக்கும், கில்லாடி அமித்ஷாகிட்ட ஒரு தடவை ஆலோசனை கேட்டுக்கங்க. டெல்லி மேட்ச் தவிர எல்லாத்துக்கும் சூப்பரா ஐடியா கொடுப்பார்.

கருணாநிதி: தம்பீ! எனக்கென்னவோ இந்த ஆஸ்திரேலியாவை ஜெயிச்சு கப்பு வாங்க முடியும்னு தோணலை. அதனால ஆஸ்திரேலியாவுக்கு எதிரா உங்க தலைமையில பொது அணி உருவாகணும்னு குரல் கொடுங்க. அப்படி யாரும் சேர வரலைன்னா, 'அம்பயர்களுக்கு பணம் கொடுத்து ஆஸ்திரேலியா ஜெயிச்சுடுச்சு'ன்னு புகாரைக் கிளப்பிவிடுங்க. நம்ம மக்கள் நிச்சயம் நம்புவாங்க. ஆனா ஒண்ணு.. எது நடந்தாலும் கேப்டன் பதவியை மட்டும் விட்டுடவே கூடாது.

விஜயகாந்த்: ஜெயிக்கறதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்ல. சமீபத்துல டெல்லியிலகூட காஜல் அகர்வால்.. வந்து.. சமீபத்துல.. அதிகபட்ச.. ஓட்டு.. அதிகபட்ச ரிஸ்க் எடுத்து.. ஓட்டுவீட்டுல ஏறி ஒரு ஷூட்டிங்குல நடிச்சாங்க. பிளேயர்ஸ் எல்லாரையும் வந்து வரிசையா நிக்கச் சொல்லுங்க. நான் ஒவ்வொருத்தர் தலையிலயும் தட்டறேன். என்கிட்ட தட்டு வாங்கின ராசி உங்களுக்கு கப்பு கிடைக்கும். அப்புறம், நாக்கை கொஞ்சம்போல உள்ளார மடிச்சுக்கிட்டு கண்ணை சிவக்க வச்சு அம்பயரைப் பாருங்க.. பயந்து போயி அவுட் கொடுத்திடுவாரு.

ராமதாஸ்: இன்றைய இளைஞர்கள் சீரழியறதுக்கு காரணமே காதல்தான். அதனால காதலிக்கிற வீரர்களை டீம்ல இருந்து தூக்குங்க. குறிப்பா அந்த நடிகையை காதலிக்கிற 'கோலி'ப்பயலை தூக்கிடுங்க. இதையெல்லாம் பண்ணியும் டீமைத் தேத்த முடியாதுன்னு தோணினா, பேசாம ஜெயிக்கிற நிலைமையில இருக்கிற டீமோட கூட்டணி சேர்ந்துடுங்க. அதையும் மீறித் தோத்துட்டா, கவலைப்படாதீங்க... 2019-ல் கோப்பையை வெல்வோம்னு நிதானமா அறிக்கை விட்டுக்கலாம்..

ஓ.பன்னீர்செல்வம்: போட்டியில ஜெயிக்க உடம்பு ஃபிட்னஸ் ரொம்ப முக்கியம். சீட் நுனிகூட ஜாஸ்தி. அதைவிட கம்மியான இடத்துல உட்காரப் பழகணும். நீங்க கேப்டனாவே இருந்தாலும் உங்களை இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுத்தது தேர்வுக் குழுங்கிறதை மறந்துடக்கூடாது. அவங்க அனுமதியில்லாம மைதானத்துல டீம் மீட்டிங்கூட போடக்கூடாது. ஒவ்வொரு தடவை டாஸ் போடும்போதும் அவங்களை நினைச்சு கண் கலங்கணும். நாம ஏதோ சோகத்துல இருக்கமாதிரி அடிக்கடி டவலால கண்ணை துடைச்சிட்டே இருக்கணும். தேவைப்பட்டா கிளிசரின்கூட பயன்படுத்தலாம்.

;-) ;-)

Relaxplzz

யார் இந்த வைதேகி? எதற்காக காத்திருக்கிறாள்? இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரிந்து...

Posted: 25 Feb 2015 07:00 AM PST

யார் இந்த வைதேகி?
எதற்காக காத்திருக்கிறாள்?

இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரிந்துகொள்ள இந்த பதிவைப் படிக்க ஒரு சில நிமிடங்களை செலவழியுங்கள்.

ஏனெனில், உங்கள் நட்போ அல்லது உறவோ இல்லை யாரோ தூரத்து சொந்தமோ அவர்களுக்கு வைதேகியைப் பற்றி நீங்கள் சொல்வதால் நன்மை ஏற்படும்.

வைதேகியைப் பற்றிய சிறு குறிப்பு. அழகான தோற்றம், மென்பொருள் நிறுவனத்தில் வேலை, சரிசமமாக நடத்தும் கணவர், வாழ்க்கைக்கு வசந்தம் சேர்க்க மகள், சுதந்திரத்தைத் தட்டிப் பறிக்காத புகுந்த வீடு. இதுதான் வைதேகியின் வாழ்க்கை. இதைவிட என்ன வேண்டும் ஒரு பெண்ணுக்கு என நீங்கள் கேட்பது புரிகிறது. அப்படித்தான் வைதேகியும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தார். 2014-ம் ஆண்டு வரை.

எப்போதும் சுறுசுறுப்பாக, பரபரப்பாக வீடு, வேலை, குடும்பம், குழந்தை என இருந்த வைதேகிக்கு திடீரென வலது புற கழுத்தில் ஒரு கட்டி ஏற்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில் வலி அதிகமாகிறது. காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் செல்ல சில மருந்துகளை தருகிறார். தற்காலிக நிவாரணம். உடனே, தனது குடும்ப மருத்துவரிடம் ஆலோசனை செய்கிறார். அவர் இதை அசட்டை செய்ய வேண்டாம் என எஃப்.என்.ஏ.சி. என்ற மிக முக்கியமான பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார்.

மருத்துவ பரிசோதனை முடிவு, வைதேகியின் கணவரிடம் தெரிவிக்கப்படுகிறது. கண்ணீர் கண்களை மறைக்க, மனைவியையும் மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறார். மருத்துவர் முதலில் ஒரு மணி நேரம் இருவருக்கும் கவுன்சிலிங் தருகிறார். வைதேகியின் நிலவரம் அறிந்து மொத்தக் குடும்பமும் நிலை குலைந்து போகிறது.

தனிமையில் சிந்திக்க ஆரம்பிக்கிறாள் வைதேகி... "நான் வெஜிடேரியன். ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கம் கொண்டவள். சோம்பேறி இல்லை. வீட்டு வேலை, அலுவலக வேலை என எப்போதும் பரபரப்பாக இருப்பவள். வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக பேணுபவள். உடற்பயிற்சிகள் செய்யத் தவறியதில்லை. அப்புறம் எப்படி எனக்கு..?" வைதேகியின் யோசனை நீள்கிறது. அவருக்கு ஒரு தெளிவு பிறக்கிறது.

இது போன்ற நோய் ஏற்பட இதுமட்டும்தான் காரணம் என குறிப்பிட்டு வரையறுக்க முடியாது. காரணம் எது வேண்டுமானாலும் இருக்கலாம். வாழ்க்கைமுறை இல்லாமல், பரம்பரை தாக்கம் இல்லாமல், வேறு ஏதோ ஒன்றுகூட காரணமாக இருக்கும் என புரிந்து கொள்கிறார்.
அந்த தெளிவு பிறந்தவுடன் தொடங்குகிறது ஒரு யுத்தம். அது 'lymphoma' என்ற வகையான புற்றுநோயுடனான யுத்தம். இரண்டாவது கட்டத்தை நோய் எட்டியிருந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். புற்றுநோய் என்பதே வேதனை என்றால் அதற்கான சிகிச்சையும் வேதனையளிப்பதாகவே இருக்கிறது. கீமோதெரபி, ஸ்டெராய்டு, நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் ஊசிகள். பக்க விளைவுகளும் வந்தன. அழகான, அடர்த்தியான கூந்தல் அனைத்தையும் கொத்து கொத்தாக வைதேகி இழந்து கொண்டிருந்தபோது, வைதேகியின் கணவர் தலையை முழுவதும் மொட்டை அடித்துக் கொண்டு வந்து நிற்கிறார். இறைவா இந்த அன்பைவிட எனக்கு வேறு என்ன வேண்டும் என்ற வைதேகி சிலாகிக்கிறாள்.

சிகிச்சைக்கு ஒத்துழைப்பதைத் தவிர வேறு வழியில்லை. பொறுமையாக காத்திருக்கிறாள் வைதேகி. வைதேகியை முன்பு பார்த்தவர்கள் அவளை அடையாளம் காண முடியாத அளவு உருக்குலைந்து கொண்டிருந்தது. கண்ணாடி பார்ப்பதை தவிர்த்தாள் வைதேகி. 4 சுற்று சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் பரிசோதனை செய்யப்படுகிறது. வைதேகி உடலில் புற்றுநோய் அறிகுறிகள் முற்றிலும் அழிந்திருந்தன. இருப்பினும் அணு அளவேனும்கூட இருந்துவிடக் கூடாது என்பதால் இன்னும் சில காலத்துக்கு மருந்து, மாத்திரை உட்கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்கள் அறிவுரை.

முழுமையாக ஓராண்டு கடந்துவிட்டது. இப்போது வைதேகி இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார். அவரது வருகைக்காகவே காத்திருந்த அவரது நிறுவனம் அவரை மீண்டும் பணியமர்த்திக் கொண்டது. ஸ்டெராய்டு தாக்கம் உடலில் இருந்து மெல்ல, மெல்ல குறைந்து வருகிறது. தலையில் முடி லேசாக எட்டிப்பார்க்க துவங்கியிருக்கிறது. வைதேகி காலையில் எழுந்து குழந்தையை பள்ளிக்குத் தயார் செய்து. உணவு சமைத்து. மின்சார ரயில் பிடித்து, பின்னர் ஒரு ஷேர் ஆட்டோ ஏறி அலுவலகம் செல்கிறார். வைதேகி யுத்தத்தில் வெற்றி பெற்றுவிட்டார் என்று உங்கள் மனசு சொல்வது கேட்கிறது.

இந்த வைதேகியை நீங்கள் எப்படி இந்த எழுத்தின் மூலம் தெரிந்து கொண்டீர்களோ... அதேபோல்தான் நானும் எழுத்து மூலம் தெரிந்து கொண்டேன். ஆம், வைதேகியே அவரது வலைப்பதிவு பக்கத்தில் பதிந்திருந்த பதிவில் இருந்து அறிந்து கொண்டேன்.

இன்றைய காலகட்டத்தில் அன்றாடம் யாருக்காவது புற்றுநோய் வருகிறது. சிலர் போராடுகிறார்கள் பலர் தோற்றுப்போகிறார்கள் என்றுதானே சொல்கிறீர்கள். உண்மைதான். ஆனால், வைதேகி தனது வெற்றியோடு நின்றுவிடவில்லை. வைதேகி காத்திருக்கிறாள். தன்னைப் போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனதிடத்தை வளர்த்துக் கொள்வதற்கான ஆலோசனை வழங்க, சிகிச்சை பெறும் வழிமுறைகள் கூற, சிகிச்சை பின்விளைவுகளை ஏற்றுக் கொள்வது எப்படி என தெரிவிக்க காத்திருக்கிறாள். தன் வலைப்பதிவின் கீழ் அவர் பதிந்திருக்கும் நிலைத்தகவல் இதுவே...

"புற்றுநோய் எனக்கு நிறைய பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறது. நண்பர்கள் யார் என அடையாளம் காட்டியிருக்கிறது. உறவுகளின் நம்பகத்தன்மையை உணர வைத்திருக்கிறது. இவற்றைவிட முக்கியமானது மனக்குழப்பத்தை தவிர்க்க வேண்டும் என்பது. இருப்பது ஒரு லைஃப். அதை அமைதியாக வாழ்வோமே. நீங்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு சிற்சில ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம். நான் வாழத் தொடங்கியிருக்கிறேன். வாழ்ந்து காட்டுவேன்."
இப்போது புரிகிறதா வைதேகி ஏன் காத்திருக்கிறாள் என்று.
வைதேகியின் பதிவில் இருந்து சில பாடங்கள்:

1. புற்றுநோய் பேதம் பார்ப்பதில்லை. ஏழை, பணக்கார, சாதி, மதம், வயது வித்தியாசம் இதற்குக் கிடையாது.

2. நான் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் கொண்ட நபர். எனக்கு புற்றுநோய் வர வாய்ப்பே என்ற எண்ணம் தவறானது.

3. அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்வது நல்லது.

4. மருத்துவப் பரிசோதனைகளுக்கு செலவு செய்வது தேவையற்றது என்ற எண்ணம் கூடாது.

5. சரி, நோய் வந்தேவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். முடங்கிப் போகாதீர்கள்.

6. இருப்பது ஒரு வாழ்க்கை அதை மகிழ்ச்சியாக அனுபவிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு இவை தவிர்த்தும் வேறேனும் தோன்றியிருக்கலாம். படித்த கையோடு பகிர்ந்துவிடுங்கள்.

வைதேகியின் வலைப்பதிவை வாசிக்க My fight against the dreadful disease - CANCER

Thanks to The Hindu!

Relaxplzz


சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா??? #கிராமத்து_நினைவுகள், ,

Posted: 25 Feb 2015 06:50 AM PST

சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா???

#கிராமத்து_நினைவுகள், ,


அப்பா : கடவுள் கிட்ட எனக்கு நல்ல புத்திய குடுன்னு வேண்டிக்கடா..... # # # # # # #...

Posted: 25 Feb 2015 06:45 AM PST

அப்பா : கடவுள் கிட்ட எனக்கு நல்ல புத்திய குடுன்னு வேண்டிக்கடா.....
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
மகன் : கடவுளே என் அப்பாவுக்கு நல்ல புத்திய குடு.....

அப்பா :??????????? :O :O

தேவதைகள் மண்ணில் பிறக்கிறார்கள் <3

Posted: 25 Feb 2015 06:40 AM PST

தேவதைகள் மண்ணில் பிறக்கிறார்கள் ♥


:) Relaxplzz

Posted: 25 Feb 2015 06:30 AM PST

;-) Relaxplzz

Posted: 25 Feb 2015 06:20 AM PST

நீதிபதி: இவ்ளோ பேர் இறந்திருக்கற இந்த ரயில் விபத்துக்கு ட்ரைவர்ங்கற முறைல நீ என்...

Posted: 25 Feb 2015 06:18 AM PST

நீதிபதி: இவ்ளோ பேர் இறந்திருக்கற இந்த ரயில் விபத்துக்கு ட்ரைவர்ங்கற முறைல நீ என்ன சொல்ற....

ட்ரைவர்: நான் இவ்ளோ பேரெல்லாம் கொல்லல. ஒருத்தன் தண்டவாளத்து மேல நடந்துனு போயினு இருந்தான். அவனதான் கொல்லனும்னு நினைச்சேன்....

நீதிபதி: அப்பறம் எப்படி இவ்ளோ பேர் செத்தாங்க....

ட்ரைவர்: நான் என்ன பண்றது. அவன் திமிரா தண்டவாளத்த விட்டு எறங்கி நடக்க ஆரம்பிச்சிட்டான். அதனால தான் நானும் ட்ரைன எறக்க வேண்டியதா போச்சு....

:O :O

Relaxplzz

:) Relaxplzz

Posted: 25 Feb 2015 06:07 AM PST

மதம் மாறுவதை விட..... மனம் மாறுவதே சிறந்தது....... (y)

Posted: 25 Feb 2015 05:50 AM PST

மதம் மாறுவதை விட.....

மனம் மாறுவதே சிறந்தது....... (y)


பல்லாங்குழி விளையாடிய அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (Y)

Posted: 25 Feb 2015 05:40 AM PST

பல்லாங்குழி விளையாடிய அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (Y)


:D Relaxplzz

Posted: 25 Feb 2015 05:31 AM PST

0 comments:

Post a Comment