Wednesday, 25 February 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


Posted: 25 Feb 2015 05:38 PM PST


அஞ்சலகங்கள் இல்லாத காலத்தில் வாழ்ந்த மக்கள்,ஒரு பகுதியில் மக்கள் எழுதிய ஓலைச் சு...

Posted: 25 Feb 2015 06:40 AM PST

அஞ்சலகங்கள் இல்லாத காலத்தில் வாழ்ந்த மக்கள்,ஒரு பகுதியில் மக்கள் எழுதிய ஓலைச் சுவடிகளை ஒன்றாக சேர்த்து,அவைகளை ஒருவர் குதிரை மீது ஏற்றிக் கொண்டு,அடுத்த பகுதியின் எல்லைக்கு வருவார்.

இதுபோலவே அடுத்த பகுதியின் மக்களின் ஓலைச் சுவடிகளை ஒருவர் ஏற்றிக் கொண்டு எல்லை பகுதிக்கு வருவார்.இருவரும் ஓரிடத்தில் சந்தித்து கடித மூட்டைகளைப் பறிமாறிக் கொள்வார்கள்.

இருவரில் யார் முதலில் வந்தாலும் எல்லை கோட்டின் குறிப்பிட்ட பகுதியில் காத்திருக்கும் வகையில் ஒரு கம்பம் நடப்பட்டது.ஆங்கிலத்தில் கம்பம் என்பதற்கு "போஸ்ட்" என்று பெயர்.

இதுவே காலப்போக்கில் கடிதங்களுக்கு 'போஸ்ட்' என்ற பெயர் அமைய காரணமாயிற்று.

@இளையராஜா


பழைய படம்! இடம் :பத்துமலை, மலேசியா.

Posted: 25 Feb 2015 05:38 AM PST

பழைய படம்!

இடம் :பத்துமலை, மலேசியா.


குறுந்தொகை சொல்லும் காதல். என்னுடைய தாயும் உன்னுடைய தாயும் உறவினர்களல்லர். என்ன...

Posted: 25 Feb 2015 04:38 AM PST

குறுந்தொகை சொல்லும் காதல்.

என்னுடைய தாயும் உன்னுடைய தாயும்
உறவினர்களல்லர். என்னுடைய தந்தையும்
உன்னுடைய தந்தையும் எவ்வகையிலும்
உறவினரல்லர். நானும் நீயும் கூட
ஒருவரையொருவர் முன்னர்
அறிந்ததில்லை என்றாலும் கூட, நம் நெஞ்சம்
செம்புலத்திற் பெய்த நீர் போலக்
கலந்து விட்டது. எனவே நான் உன்னைப்
பிரிவேன் என வருந்த வேண்டாம் எனத் தலைவன்
தலைவியைத் தேற்றுகின்றான்.

Love in Kuruntokai.

Transliteration:
Yaayum nyaayum yaaraa kiyarō
Endhaiyum nundhaiyum em'muṟaik kaeḷir
Yaaṉum neeyum evvaḻi yaṟidhum
Chempulap peyaṉeer pōla
Aṉbudai nenjam thāṅkalan thaṉavē.

Meaning:
What could be my mother be

to yours? what kin is my father

to yours anyway? And

did you and I meet ever?

But in love our hearts are as red

earth and pouring rain:

mingled beyond parting.


அழகு தமிழ்நாடு! உதகை! படம் : Mutharasan Photography

Posted: 25 Feb 2015 03:54 AM PST

அழகு தமிழ்நாடு! உதகை!

படம் : Mutharasan Photography


மதத்தை பரப்பனும் என்று ஊருக்கு ஊர் தேவாலயங்களும் , ஜெபக்கூடமும் கட்டனும் என்று ச...

Posted: 25 Feb 2015 03:01 AM PST

மதத்தை பரப்பனும் என்று ஊருக்கு ஊர் தேவாலயங்களும் , ஜெபக்கூடமும் கட்டனும் என்று சொல்பவர்கள் பின்னால் ஒரு பெரும் படை.

இஸ்லாத்தை நிலைநாட்ட புனிதப்போர் ஜிகாத் என்று சொல்பவர்கள் பின்னால் ஒரு பெரும் படை.

ஏசு அழைக்கிறார் என்று ஒரு புரோக்கர் சொல்லிகிட்டு இருக்கார்.
அவர் பின்னே ஒரு பெரும்படை.

சிவராத்திரி அன்று சிவதரிசனம், ஆழ்நிலை தியானம், இன்பமான வாழ்க்கை என்று ஒரு புரோக்கர் சொல்லிகிட்டு இருக்கார்.
அவர் பின்னே ஒரு பெரும்படை.

ராமர் கோவில் இருந்த இடத்தில் பாபர் மசூதி கட்டிட்டாங்க அதனால் அதை இடிச்சிட்டு ராமர் கோயில் கட்டுவோம் என்று சொல்பவர்கள் பின்னால் ஒரு பெரும் படை.

பாபர் மசூதியை மீண்டும் கட்டுவோம் என்று சொல்பவர்கள் பின் ஒரு பெரும் படை.

இப்படி கூட்டம் சேர்க்கனும் என்றால் கடவுளை காரணம் காட்ட வேண்டும் போல..!

அப்போ ஒரு நிமிடம் விவசாயியை கடவுளாகவும், விவசாய நிலத்தை கோவிலாகவும், அதை அழிக்க நினைப்பவனை எதிரியாகவும் நினைத்து பாருங்கள்.
இந்த புனிதப்போரில் எளிதாக வென்றிடலாம் தானே..!
முதலில் நம்ம சோத்துக்கு பங்கம் வராமல் பாத்துக்குவோமே..!

@அபிமன்யு


தமிழக அரசின் கீழ் நடக்கும் இந்தித் திணிப்பு !! தாராபுரம் பேருந்து நிலையத்தில்...

Posted: 25 Feb 2015 02:56 AM PST

தமிழக அரசின் கீழ் நடக்கும் இந்தித் திணிப்பு !!

தாராபுரம் பேருந்து நிலையத்தில் இந்தியில் தகவல் எழுதியுள்ளார்கள் நகராட்சி நிர்வாகம். அதுவும் அனுமதி பெற்ற விளம்பரம் என்று எழுதியுள்ளனர்.

யாருக்காக தமிழகத்தில் இந்தியில் எழுதுகிறார்கள் ? எதற்காக தமிழகத்தில் இந்தியை திணிக்க வேண்டும் ? இங்கு வாழும் மக்கள் தமிழர்கள் தானே ? அனைவருக்கும் தமிழில் செய்தி வழங்குவது தானே நகராட்சியின் கடமை? இதை செய்வதை விட்டு இந்திய அரசு தமிழர்கள் மீது இந்தியை திணிப்பது போல தமிழக அரசின் கீழ் செயல்படும் தாராபுரம் நகராட்சி இவ்வாறு செய்வது எந்த வகையில் நியாயம்? இப்படி பகிரங்கமாக இந்தியை திணித்த தாராபுரம் நகராட்சி ஆணையரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழர் பண்பாட்டு நடுவம் கோரிக்கை வைக்கிறது . தாராபுரம் பகுதியில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் இந்த செய்கையை உடனே கண்டிக்க வேண்டும், இந்தியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

படம் உதவி : பழ. சிவகுமார்

- இராச்குமார் பழனிசாமி


தமிழும், தமிழரும் வேறல்ல! 'தமிழ்' என்ற சொல்லை இளங்கோவடிகள் 'தமிழர்' என்னும் பொர...

Posted: 25 Feb 2015 01:40 AM PST

தமிழும், தமிழரும் வேறல்ல!

'தமிழ்' என்ற சொல்லை இளங்கோவடிகள் 'தமிழர்' என்னும் பொருளிலேயும் பயன்படுத்துகின்றார். ஆரிய வேந்தரான கனகனும், விசயனும் தென் தமிழக வேந்தரைப் பழித்து உரைத்ததனைச் சினங்கொண்டு கூறுமிடத்து,

"அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர்"

(சிலம்பு 26:161)

என்று செங்குட்டுவனும் சேர மன்னனின் படையெடுப்பைக் கேட்டுக் கனன்றெழுந்து,

" தென் தமிழ் ஆற்றல் காண்குதும்"

(சிலம்பு 26 :285)

எனக் கனக விசயரும் கூறுமிடங்களிலும்,

"வடவாரிய ரொடு வண்டமிழ் மயக்கத்து"

(சிலம்பு 25:158)

என வில்லவன் கோதையின் கூற்றாகவும்,

"செறிகழல் வேந்தன் தென்தமிழ் ஆற்றல் அறியாது மலைந்த ஆரிய மன்னர்"

(சிலம்பு 27:5-6)

எனத் தன் கூற்றாகவும் இளங்கோவடிகள் 'தமிழ்' என்னும் சொல்லைத் தமிழர் என்னும் பொருளிலே பயன்படுத்துகின்றார். ஆம்! மொழிப் பெயர் வேறு. இனப்பெயர் வேறு என்ற இரு வேறு நிலை தமிழர்க்கு இல்லை தானே!

-சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம்.


தாவரங்கள் தண்ணீரையும் சூரிய ஒளியையும் ஆற்றலாக மாற்றி தன் செல்களில் சேமித்து கொள்...

Posted: 25 Feb 2015 01:05 AM PST

தாவரங்கள் தண்ணீரையும் சூரிய ஒளியையும் ஆற்றலாக மாற்றி தன் செல்களில் சேமித்து கொள்கின்றன, கால்நடைகள் 'நோகாமல் நொங்கு தின்பதற்கு' எடுத்து காட்டாக அத்தாவரங்களை கபளீகரம் செய்து தங்களுடைய செல்களில் சேமித்து கொள்கின்றன, மானிடப் பதர்களாகிய நாம், 'ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கைய்யே' என்ற சொற்றொடருக்கு எடுத்து காட்டாக அக்கால்நடைகளை வேக வைத்து வெளுத்து கட்டி அதன் செல்களில் உள்ள ஆற்றலை எடுத்து கொள்கிறோம், (தக்காளி வாழ்க்க ஒரு வட்டம்னு இளைய தளபதிக்கு டயலாக் எழுதுனவரு சும்மாவா சொன்னாரு !! ) நீங்க இல தழைய தின்னாலும், அந்த இல தழைய திங்குற அனிமல்ஸ தின்னாலும்,, கொல கொல தான்,, குத்தம் குத்தம் தான்.. நாயம் நாயம் தான். இதுல என்னடா வெஜிடேரியன், நான்-வெஜிடேரியன்னு பிரிவு வேற...

- சகலகலா ஜீன்ஸ்

Ancient Tamil Civilization: Hill of Jeradan Kal, is located 4 kilometers nort...

Posted: 25 Feb 2015 12:55 AM PST

Ancient Tamil Civilization:


Hill of Jeradan Kal, is located 4 kilometers north of Satkar village near Pernampattu of Gudiyatham Taluk, Vellore district. At a height of 50 feet, there is a rock of size 15' tall x 10' wide could be seen. On this rock, one could visualize more than 40 different hieroglyphs. Right beneath this rock, there is a perennial water spring and about 200 feet away from this rock there exists another water source.

HIEROGLYPHS

From here, if we go on walk, there is a rock called Yaanaikundu appear in the slope. This rock could be found 175' above land. In this rock too, one could find more than 100 hieroglyphs etched. Some of the characters are in dilapidated condition. There is a fresh water source about 15' away from Yaanaikundu. A hillock located 50' away from the water source where one could find hieroglyphs along with a peacock portrayed at the centre surrounded by 5 or 6 human figures. Some of the symbols are analogous to graffiti found in megalithic burial pots of TN.

It appears that these hieroglyphs have a close sorority with Indus valley signs, which makes to prove that migration of Velirs and Aruvalars from Tuvarai (Dwarka), which was then a part of late Harappan civilization, is of no doubt a reality.

Velir migration was first ascribed to Kapilar, who in his Purananuru poem 201 eulogizing the chief, IRUNKOVEL, acknowledge that his predecessors came down south with the help of Vadamuni or Kudamuni or Agattiyar, 49 generations before him. I provide the Purananuru reference below:

நீயே வட பால் முனிவன் தடவினுள் தோன்றிச்
செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை
உவரா ஈகைத் துவரை யாண்டு
நாற்பத்து ஒன்பது வழி முறை வந்த
வேளிருள் வேள

You are the best Vēlir of the Vēlir clan,
with a heritage of forty nine generations of Vēlirs
who gave without limits,
who ruled Thuvarai with its long walls that
was made of copper, the city that
appeared in the sacrificial pit of a northern sage.
King who is victorious in battles!

Velir migration to south is indicated in many ancient Tamil works like Purapporul Venpa Maalai, Silappadhikaram, etc. Migration of Kongars and Kocars from Konkan and the lands beyond them is also addressed in many Sangam poems.

If we take a walk towards east, village of Poongulam can be reached which is located 4 kilometers from Yanaikundu rock. On the west side of Poongulam, there stands a majestic hillock which is called KURANGU KUNDU. Here too one could find hieroglyphs at a height of 45'.

In Vellore district, hieroglyphs were found in places of SIVANATHAPURAM, PETHOOR, ALANGAYAM, RATNAGIRI, CHINNAPALAPPAKKAM, PAIYAMPALLI and APPUKKAL. Hieroglyphs of Appukkallu is lost because of quarrying.

Mentioned finds were made by Mr.Sundharam of South Indian Cultural and Historic Centre. His find was published in a newspaper of 1996 in Tamil.

Translated by Murugaanandan Raiju

.....

வேலூர் மாவட்டம் குடியேற்றம் (குடியாத்தம்) தாலுக்கா பேரணாம்பட்டு அருகில் சாத்கர் என்ற ஊருக்கு வடக்கு புறமாக காட்டுக்குன்று பகுதியில் சுமார் 4 கி.மீட்டர் தூரம் நடந்து சென்றால் "ஜெரடான் கல்" என்று அழைக்கப்படும் இடம் பாறைகள் நிறைந்த பகுதி.

50 அடி உயரத்தில் 15 அடி உயரம், 10 அடி அகலம் உடைய பாறை உள்ளது. அதில் 3 அடியிலிருந்து 8 அடி உயரம் வரை பரவலாக 40-க்கும் மேற்பட்ட சித்திர எழுத்துக்கள் தீட்டப்பட்டுள்ளன. இதற்கு கீழ் வற்றாத நீர் நிலை உள்ளது. அங்கிருந்து 200 அடி தூரத்தில் வற்றாத நீர் ஓடை செல்லுகிறது. பரந்த இடவசதி உள்ளது.

சித்திர எழுத்துக்கள்

அங்கிருந்து கால்நடையாக நடந்து சென்றால் தரைபகுதியிலிருந்து 175 அடி உயரத்தில் சரிவான பகுதியில் "யானைகுண்டு" என்று அழைக்கப்படும் மிகப்பெரிய பாறை உள்ளது. அந்தப்பாறை 125 அடி நீளம், 35 அடி உயரம் உள்ளது. அந்தப் பாறையின் அடிப்பகுதியிலிருந்து 3 அடி முதல் 8 அடி உயரம் வரை சுமார் 125 சதுர பரப்பில் பாறை சமன் செய்து ஏறக்குறைய 100 சித்திர எழுத்துக்கள் தீட்டப்பட்டுள்ளன. அதில் சில எழுத்துக்கள் சிதைவடைந்து உள்ளன. அதன் அருகில் 15அடி தூரத்தில் வற்றாத நீர் நிலை உள்ளது. யானை குண்டுக்கு அடுத்த 50 அடி தூரத்தில் பல நூற்றுக்கணக்கான பலகை கற்களால் ஆன 8அடி உயரம், 20 அடி நீளம் கல் திட்டு உள்ளது. பாறையின் சரிவுபகுதியை மேடாக்கி போக்குவரத்திற்கு பயன்படுத்தி உள்ளனர். தீட்டப்பட்ட எழுத்துக்களுக்கு மத்தியில் மயில் உருவமும் ஐந்து (அ) ஆறு மனித உருவங்களும் தீட்டப்பட்டுள்ளன. இதில் ஒரு பகுதியில் இரண்டு வரிகளில் உள்ள எழுத்தை நான் உணவு, உ.உணவு என்று படித்தேன். பரவலாக இதன் மத்தியில் பெரும் கற்படைச் சார்ந்த சட்டி, பானை, கறுப்பு, சிவப்பு நிறம் உடைய மண் பாண்டங்களிலும் பொறித்து இருப்பது போன்ற குறியீடுகள் இதில் நிறைந்து காணப்படுகிறது.

ஆரியர் வட இந்தியாவை கைப்பற்றிய பிறகு சிந்துவெளி திராவிட இனமக்கள் தென்னிந்திய பகுதியில் குடியேறி நிலை கொண்ட பிறகு இச்சித்திர எழுத்துக்கள் தீட்டி இருக்கவேண்டும். இதன் காலம் கி.மு.1500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. சிந்து சமவெளி மக்கள் மனிதர், புச்சி, மிருகங்கள், இலைகள், சக்கரங்கள் போன்றவற்றிலிருந்து உயிர்மெய் எழுத்துக்களை கி.மு.5000 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்து அதை பயன்படுத்தி இருக்கிறார்கள் என வரலாற்று ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்

யானை குண்டு

சிந்து சமவெளி சித்திர எழுத்துக்களைப் பற்றி மதிவாணன் ஆய்வு செய்து இந்தியா முழுவதும் எழுத்துக்களை பற்றி புத்தகம் வெளியிட்டுள்ளர். அவருடைய புத்தகத்தில் இல்லாத சில சித்திர எழுத்துக்களும் மயிலும் யானை குண்டு பகுதியில் உள்ளன.

கற்கால் ஆயுதம்

யானை குண்டு தெய்வ வழிப்பாட்டு தலமாகவும், குடியிருப்பு பகுதியாகவும் இருந்து இருக்கவேண்டும். இந்த எழுத்துக்கள் தீட்ட சுண்ணாம்பு, கரி, இனம் புரியாக கலவை கொண்டு வெண்மை நிறத்தில் தீட்டப்பட்டுள்ளன. மேலும் இந்த பகுதி பெரும் ஆய்வுக்குரியது. இரும்பாலான ஈட்டிகள் இரண்டும், பழைய கற்கால ஆயுதங்கள், இடை கற்கால ஆயுதங்கள், புதிய கற்கால ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இரண்டு மனிதர்கள் கைகளால் இணைந்து மல்யுத்தம் செய்வது போலவும் உள்ளனர். மனிதன் ஒருவன் தன் இரண்டு கைகளால் சூலாயுதம் போன்ற ஆயுதத்தை வைத்து இரண்டு கால்களையும் விரித்து போருக்கு தயார் நிலையில் இருப்பதை போலவும் சித்தரிக்கப்பட்டு உள்ளது.

இரண்டு கைகளிலும்

ஒரு மனிதன் நின்ற நிலையில் தன் இரண்டு கைகளிலும் ஆயுதத்துடன் நிற்பதை போலவும் காணப்படுகிறது.

ஒரு மனிதன் நின்ற நிலையில் உடற்பயிற்சிக்கு (தயார் நிலையில்) மவுன நிலையில் இருப்பதை போலவும் உள்ளது. மேலும் இரண்டு கைகளும் சரிசமமான நிலையிலும் காலகள் இரண்டும் ஒன்று சேர்ந்து இருப்பது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. மற்றும் இருபுறமும் விரித்த நிலையிலும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

குரங்கு குண்டு

யானை குண்டிலிருந்து கரடு முரடான பகுதியை நோக்கி கிழக்கு புறமாக சுமார் 4 கி.மீட்டர் கால் நடையாக சென்றால் பூங்குளம் என்ற ஊருக்கு மேற்கு புறத்தில் குன்றின் அடிவாரத்தில் குரங்கு குண்டு என்ரு அழைக்கப்படும் இரண்டு பிளவுபட்ட பாறையில் இடது புறத்தில் பாறையின் அடிவாரத்தில் 3 அடி முதல் 15 வரை பரவலாக 14 எழுத்துக்கள் தீட்டப்பட்டுள்ளன. அதில் சில எழுத்துக்கள் சிதைந்து உள்ளன. பாறையின் உயரம் சுமார் 45 அடி உள்ளது. உட்புறத்தில் குகை ஒன்று உள்ளது. எழுத்துக்கள் அமைந்து இருக்கும் இடத்திற்கு இடது புறமாக 7 அடி உயரம் உடைய கல்குண்டு உள்ளது. அதில் மதுரையை ஆண்ட மருதநாயகம் என்கிற யூசுப்கான் என்று தெலுங்கு கல்வெட்டு உள்ளது. கல்வெட்டின் நீளம் 51 அங்குல நீளம் 3 அடியிலிருந்து 13 அங்குல அகலமுடையது. யூசுப்கான் ஆட்சி புரிந்த ஐந்தாவது ஆண்டில் ஆங்கிலேயர்கள் அவரை தூக்கிலிட்டு கொன்ற பிறகு உடலின் ஒரு பகுதியை இந்தப்பகுதியில் அடைக்கலம் செய்யப்பட்ட பிறகு கல்வெட்டை பொறித்து இருக்க வேண்டும். மேலும் இந்த இடத்தில் தெய்வ வழிபாடு, உடலின் ஒரு பகுதியை இந்த பகுதியில் அடக்கம் செய்யப்பட்ட பிறகு பலியிடல் நடந்து இருப்பதாக பூங்குளம் மக்கள் கூறுகின்றனர். மேலும் இந்த பகுதியை ஆராய்ச்சி செய்தால் பல வரலாற்று உண்மைகள் வெளிவரலாம்.

வேலூர் மாவட்டத்தில் சிந்து சமவெளி சித்திர எழுத்துக்கள் பற்றி சிவநாதபுரம், பெத்தூர், ஆலங்காயம், இரத்தினகிரி, சின்ன பாலப்பாக்கம், பையனபள்ளி, அப்புக்கல் ஆகிய இடங்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் அப்புக்கல் என்ற இடத்திலுள்ள சித்திர எழுத்துக்கள் கல் உடைத்து அழிந்துவிட்டது.

ஆர். சுந்தரம்

மேற்கண்ட சித்திர எழுத்துக்கள் பற்றி தென்னிந்திய கலாச்சாரம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி மைய உறுப்பினர் ஆர். சுந்தரம் நேரில் சென்று ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துள்ளார். இவர் குடியேற்றம் நெல்லூர்பேட்டையை சேர்ந்தவர்.


*ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் நாமதான் ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமு...

Posted: 25 Feb 2015 12:01 AM PST

*ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் நாமதான் ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமுறையும் நாமதான

*செல்போன்ல பட்டன பாத்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

*மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாமாதான்...!

*கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

*மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

*வெட்டிப்போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

*தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும

*கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

*காதல்கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி ,பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப்பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான்
இருக்கும்.

*நண்பர்களுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

*10th 12th ரிசல்ட் பேப்பர் ல பார்த்த கடைசி தலாமுறை நாம தான்

*கதவு வச்ச டிவி ய பாத்த கடைசி தலைமுற நாம தான்

*ஆடியோ கேசட்டில் பாட்டு கேட்டதும் நம்ம தான்.

*சைக்கிளில் கால் எட்டாத போதும் குரங்கு பெடல் ஓட்டியது நம்ம தலைமுறை தான்.

*போஸ்ட் கார்டு ல ரிசல்ட் வந்த தலைமுறை நாம தான்
*ஜவ்வுமிட்டாயில் வாட்ச் கட்டினது

*நாம் படித்த புத்தகத்தை விற்று அதில் வரும் பணத்தை
அடுத்த வகுப்புக்கும் புத்தகங்கள் வாங்கினது,

கோனார் தமிழ் உரை,வெற்றி அறிவியல் உரை
இதெல்லாம் போச்சு.

*நொண்டி, கிட்டிப்புள், பம்பரம், கண்ணாம்பூச்சி, கோலி cf c பலவிதமான விளையாட்டுகளுக்கு கடைசி தலைமுறை நாம்தான்...

*5,10,20,25 பைசா நாணயங்களை கடைசியா பாத்த தலைமுறையும் நாமதான்,

*மண் குழப்பி வீடு கட்டி விளையாடிய கடைசி தலைமுறை

இதையெல்லாம் படிக்கும்போது சிறுதுளி கண்ணில். எட்டி பார்ப்பதும், அதை ரசிக்கும் கடைசி தலைமுறையும் நாம்தான்.


0 comments:

Post a Comment