Thursday, 19 February 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


"ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் நாட்களிலும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் வையை"...

Posted: 19 Feb 2015 09:17 PM PST

"ஆற்றுப்
பெருக்கற்று அடிசுடும்
நாட்களிலும் ஊற்றுப்
பெருக்கால் உலகூட்டும்
வையை"

- ஔவையார்


இவுங்க மாட்ட கொடுமைப்படுத்தறதுக்காகவே வளர்க்கிறாங்க.. . அவுங்க மாட்ட காப்பாத்துற...

Posted: 19 Feb 2015 08:49 PM PST

இவுங்க மாட்ட
கொடுமைப்படுத்தறதுக்காகவே வளர்க்கிறாங்க..
.
அவுங்க மாட்ட
காப்பாத்துறதுக்காகவே தடை வாங்குறாங்க...
நாங்க நம்பிட்டோம்!

ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டுக்கொண்டேயிருந்தால்
இன்னும் 10,20 வருடத்தில்
எருது இனமே இல்லாமல்
போகும்..


பெண்களின் தைரியத்துக்கு ஆண்களின் அகராதியில் திமிர் என்ற பெயரும் உண்டு......! ஆண...

Posted: 19 Feb 2015 09:30 AM PST

பெண்களின்
தைரியத்துக்கு
ஆண்களின் அகராதியில்
திமிர் என்ற பெயரும்
உண்டு......!

ஆண்களின்
பணிவை கோழைத்தனம்
என்று பெண்களே கூறும்வரை....!!

நோக்கு அஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாக்குத்தி கோட்டிடைக் கொண்டு குலைப்பதன் தோற்றம்...

Posted: 19 Feb 2015 08:41 AM PST

நோக்கு அஞ்சான் பாய்ந்த
பொதுவனைச் சாக்குத்தி
கோட்டிடைக்
கொண்டு குலைப்பதன்
தோற்றம் காண்

- கலித்தொகை


அழகு தமிழ்நாடு! மஞ்சளாறு அணையின் சுற்று பகுதி! படம் : Mutharasan Photography

Posted: 19 Feb 2015 06:54 AM PST

அழகு தமிழ்நாடு! மஞ்சளாறு அணையின் சுற்று பகுதி!

படம் : Mutharasan Photography


ப்ரு விளம்பரத்தில் கார்த்தி காஜல் அகர்வாலுக்கு காபி போட்டு கொடுத்து ,"உன் ப்ரெண்...

Posted: 19 Feb 2015 06:34 AM PST

ப்ரு விளம்பரத்தில்
கார்த்தி காஜல்
அகர்வாலுக்கு காபி போட்டு கொடுத்து ,"உன்
ப்ரெண்ட் ஹஸ்பண்ட்
இவ்ளோ நல்லா காபி போடுவாரா?"ன்னு கேக்குறாரு.

அவங்க "நீ தான்
பெஸ்ட்"ன்னு சொல்றாங்க.

இந்த இடத்துல "உன்
ப்ரெண்ட் புருஷன்
காபி போட்டு கொடுத்து நீ
எப்படீ
குடிச்ச?"ன்னு கேட்டு ஒரு அறை உட்ருக்கணும்
கார்த்தி சார்..

-குடும்பத்தில்
குண்டு வைப்போர்
சங்கம்

@பூபதி

"20 ரூபாய் மினரல் வாட்டர் பாட்டிலை 30 ரூபாய்க்கு விக்கிறாங்க கொடுமை" என ஒருவர் அ...

Posted: 19 Feb 2015 06:24 AM PST

"20 ரூபாய் மினரல்
வாட்டர் பாட்டிலை 30
ரூபாய்க்கு விக்கிறாங்க
கொடுமை" என ஒருவர்
அலுத்துக்கொண்டார்.

குடிக்கும் நீரை லிட்டர்
20 ரூபாய்க்கு விற்றால்
பரவாயில்லை என
மக்களை நினைக்க
வைத்தது தான்
கார்ப்பரேட்களின்
வெற்றி.

@பூபதி

பழந்தமிழ் எழுத்துருக்கள் மீட்பு ! அனைவரும் எளிதில் பயன்படுத்தலாம் !! 1000 ஆண்டு...

Posted: 19 Feb 2015 03:55 AM PST

பழந்தமிழ் எழுத்துருக்கள் மீட்பு ! அனைவரும் எளிதில் பயன்படுத்தலாம் !!

1000 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய வட்டெழுத்து எழுத்துருவை இப்போது நாம் கணினியில் பயன்படுத்தலாம் .
2000 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த தொல்காப்பியர் காலத்து தமிழி எழுத்துருவையும் இப்போது நம் கணினியில் பயனபடுத்தலாம். நமது பெயர்களை பழந்தமிழ் எழுத்துக்களில் இனி எழுதி மகிழலாம். பழந்தமிழ் எழுத்துருக்களை கணினியில் கொண்டுவந்த தமிழர்களுக்கு நம் பாராட்டுகள் !!

படத்தில் :முதலில் இருப்பது இன்றைய தமிழ் எழுத்துரு. இரண்டாவது 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமிழி எழுத்துரு. மூன்றாவது இராசராசன் காலத்தில் இருந்த வட்டெழுத்து முறை.
------------------------------------------------------------------
இசுக்கொத்துலாந்தில் மொழிகளின் கணிணியாக்கத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சென்னையைச் சேர்ந்த வினோத்ராசன் அவர்களின் அரிய முயற்சி தமிழி எழுத்துருவாக்கம்.

2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழி எழுத்துரு தரவிறக்க, http://www.virtualvinodh.com/download/Adinatha-Tamil-Brahmi.zip
இன்றைய தமிழைத் தமிழி எழுத்துருவுக்கு மாற்ற
http://www.thevaaram.org/sirppi_transliteration.php

தமிழி எழுத்துரு தந்த எனதருமை அன்பர், நண்பர், மொழிகளின் கணிணியாக்கத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சென்னையைச் சேர்ந்த வினோத்ராசன் பாராட்டுக்குரியவர். அவரைச் சில ஆண்டுகளுக்கு முனனர் சென்னைப் பல்கலைக் கழக அரங்கில் பாராட்டும் பேறு என்னுடையதாயிற்று.

பாண்டியர் சோழர் பயன்படுத்திய வட்டெழுத்தை இப்பொழுது உங்கள் கணிணியில் நீங்களே எழுதலாம். அடுத்துள்ள இணைப்புக்குச் செல்க, எழுத்துருவைத் தரவிறக்குக. தமிழ் ஒருங்குறியில் தட்டச்சிடுக. ஒருங்குறி எழுத்துருவாக e-Vatteluttu OT தேர்க. 35 ஆண்டுகளுக்கு முந்தைய எழுத்துருவுக்கு e-Tamil 100 தேர்க.

Wonderful news for the lovers of all Tamil scripts.
A new font is available, created by Elmar Kniprath, who lives in Hamburg.
See: "http://www.aai.uni-hamburg.de/indtib/Material.html".
Vaṭṭeḻuttu (வட்டெழுத்து) font newly available, thanks to Elmar Kniprath
Now everyone can write in வட்டெழுத்து என்கிறார் புதுவை வாழ் பேராசிரியர் இழாண் Jean-Luc Chevillard (Pondy) அவர்கள்.

என்னே... என்னே.... என்னே....
செய்தி தந்த புதுவைப் பேராசிரியர் இழான் அவர்களுக்கும்
அரிதின் முயன்று எழுத்துரு உருவாக்கிய ஆம்பேர்க்கு வாழ் பேராசிரியர் எல்மார் இணிப்பிராதருக்கும்
தமிழ் மக்கள் என்றென்றும கடமையுள்ளவர்கள்.

நன்றி நன்றி : மறவன்புலவு க. சச்சிதானந்தன்
https://www.facebook.com/photo.php?fbid=940787222598522&set=a.230885290255389.72002.100000017588742&type=1&theater


சோழப்பேரரசின் தலை நகரமாக விளங்கிய உறையூர் பின்னாளில் காவிரிப்பெருக்கினால் அழிந்த...

Posted: 19 Feb 2015 02:44 AM PST

சோழப்பேரரசின் தலை நகரமாக விளங்கிய உறையூர் பின்னாளில் காவிரிப்பெருக்கினால் அழிந்ததைக்கூறும் கல்வெட்டுக்கள்:

அல்லூர் என்னும் இடத்தில் உள்ள ஒரு கோயில் கல்வெட்டு:
"ஊரின் வடகிழக்கின் னிலம் அல்லூர் காவிரிப்பெருகிக் குலை உடைத்து மணல் விட்டுப் புன்செய்யாக் கிடக்க ஆறேழாட்டைக் கால் பயிர் ஏறாதே பாழ்கிடக்க"

அதாவது உறையூரின் வடகிழக்கில் அமைந்துள்ள அல்லூர் என்ற ஊரின் நிலங்கள் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரைகள் உடைந்து தண்ணீர் பாய்ந்து நன்செய் நிலங்கள் யாவும் மணற்பாங்கான புன்செய் நிலங்களாக மாறி ஆறு, ஏழு ஆண்டுகளாக பாழ் பட்டுக்கிடக்கின்றன. கி பி 10 ஆம் நூற்றாண்டில் முதலாம் பராந்தகனின் 17 ஆம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்

படம் - உறையூர் வெக்காளியம்மன் கோயில்

நன்றி : குழந்தைவேலு


குருடாயிலு .பேரல் ..150 டாலர் வித்தப்ப பெட்ரோல் விலை 77 ரூவா.. . . இன்னிக்கு 60...

Posted: 19 Feb 2015 02:27 AM PST

குருடாயிலு .பேரல் ..150
டாலர் வித்தப்ப பெட்ரோல்
விலை 77 ரூவா..
.
.
இன்னிக்கு 60 டாலர்
விக்கிரப்ப..பெட்ரோல் ..60
ரூவா....
.
எப்புடின்னே..??


பிப்ரவரி 19: தமிழ் தாத்தா என்று அழைக்கப்படுகிற உ.வே.சா பிறந்த நாள் இன்று!!

Posted: 19 Feb 2015 01:58 AM PST

பிப்ரவரி 19: தமிழ்
தாத்தா என்று அழைக்கப்படுகிற
உ.வே.சா
பிறந்த நாள் இன்று!!


:(

Posted: 18 Feb 2015 10:48 PM PST

:(


பதில் சொல்லுங்க தலைவரே??

Posted: 18 Feb 2015 09:30 PM PST

பதில் சொல்லுங்க தலைவரே??


0 comments:

Post a Comment