Relax Please: FB page daily Posts |
- (y) Relaxplzz
- அருமையான முப்பரிமாண ஓவியம்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)
- உங்கள் ANDROID போனை பயன்படுத்தி கணணி இணையத்தில் இணைய வேண்டுமா?....( Use your And...
- 7 நாட்களில் உடல் எடையை குறைக்கும் வழி உடல் எடை குறைப்பு பற்றி பேசும் போதெல்லாம்...
- :) Relaxplzz
- ஒரு பெண் புருஷனோட சண்டை போட்டு கொண்டு தற்கொலை செய்ய மலை உச்சிக்கு போனாள். அங்கே...
- :) Relaxplzz
- :P :P Relaxplzz
- அழகு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)
- ;) Relaxplzz
- தோற்றுவிடுவாய் என்றெண்ணி முயற்சிக்காமல் இருப்பது தான், மிகப் பெரிய தோல்வி...
- அடப்பாவி! நீங்களெல்லாம் எங்கடா இருந்து வாரிங்க ;-)
- ஒருத்தன் அவன் ஆபிஸ் 12வது மாடில நின்னுகிட்டு வடை சாப்பிட்டுகிட்டு இருந்தான். அப...
- :) Relaxplzz
- இவையெல்லாம் நம்ப முடியுமா ? ( Nostradamus ) மரணத்திற்குப் பின் அவர் வாழ்வில் நி...
- தந்தையின் அன்பை எவராலும் வென்றுவிட முடியாது..! <3 <3
- :) Relaxplzz
- தெரிந்து கொள்வோம்
- அழகான 3D ஓவியம்..... பிடித்தவர்கள் லைக் பண்ணவும்... (y)
- :) Relaxplzz
- மாற்றுத் திறனாளிகளுக்கு நாம் செய்யும் ஆகப் பெரும் உபகாரம் அவர்களை வேடிக்கை பார்க...
- அண்ணன்களின் ரகசியமறிந்தவர்களாக தங்கைகளே இருக்கிறார்கள்... மணல் வீடு கட்டவோ கட்ட...
- PK என்ற ஹிந்தி திரைப்படம் இங்கே குறிப்பிடத்தக்க ஒன்றுதான். படம் அப்படி என்ன சொல்...
- தன் வீட்டில் அடுப்பெரிய உழைக்காதவன் சொல்கிறான்! தன் தலைவன் படத்திற்கு தடையென்றா...
- அன்னாசி தோட்டம்.
- :) Relaxplzz
- உண்மை
- எதற்கு எடுத்தாலும் ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள் எனக் கூறும்...
- கோவை திரு. பி.சுப்பிரமணி அவர்கள், ஒரு உன்னத மனிதன், வெகு சிலரே இவர் போல... கோயம...
- உயிரை துச்சமாக நினைத்து வேலை செய்யும் இவர்களுக்கு நம் வாழ்த்துக்கள்..!!!! (y)
Posted: 03 Jan 2015 09:30 AM PST |
Posted: 03 Jan 2015 09:20 AM PST |
Posted: 03 Jan 2015 09:10 AM PST உங்கள் ANDROID போனை பயன்படுத்தி கணணி இணையத்தில் இணைய வேண்டுமா?....( Use your Android Phone as a MODEM) அதிகமான ANDROID பாவனையாளர்களின் போனில் காணப்படும் இணைய இணைப்பின் மூலம் கணணியை எவ்வாறு இணைப்பது என்று பார்ப்போம் 01. முதலில் Android Market சென்று PDANet INSTSALL செய்யவும் கீழே LINK http://pdanet.co/ 02. செட்டிங் சென்று USB debugging mode enable செய்யவும் , (Settings -> Developer options -> USB debugging) (Found new hardware Wizard வந்தால் இன்ஸ்டால் செய்யவும்,) 03. PDANet யை உங்கள் PC இல் விண்டேஸ் இன்ஸ்டால் செய்யவும் அதன் பிறகு RESTART பண்ணவும். கீழே LINK pdanet.co/bin/PdaNetZ350.exe 04. android Device யை USB மூலம் PC உடன் இணைக்கவும் 05. android Device யை PDANet ஓபன் செய்து "Enable USB Tether" 06. Found new hardware Wizard வந்தால் இன்ஸ்டால் செய்யவும் , 07. PC இல் PDANet icon கிளிக் செய்து இன்டர்நெட் CONNECT பண்ணவும் 08. இதன் பிறகு செய்யவேண்டியதை சொல்ல தேவை இல்லை என நினைக்கின்றேன்....... இதை நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள் பயனடைய செய்யுங்கள்... Relaxplzz |
Posted: 03 Jan 2015 09:00 AM PST 7 நாட்களில் உடல் எடையை குறைக்கும் வழி உடல் எடை குறைப்பு பற்றி பேசும் போதெல்லாம் கேள்வி படும் ஒரு விஷயம் " பழங்களை மட்டுமே உண்டு ஒரு வாரத்தில் எடை குறைப்பது" ! இது பற்றி சமீபத்தில் அமெரிக்காவின் GM மோட்டார்ஸ் நிறுவனம் கண்டறிந்த முறை "பழங்களை மட்டுமே உண்டு எடை குறைக்கும் வழி. இம்முறையை அமெரிக்காவின் "Agriculture and Food and Drug Administration" அங்கீகரித்துள்ளது. ஒரு வாரத்தில் ஐந்து கிலோ எடை குறைப்புக்கு உத்தரவாதம் என்கிறார்கள் இம்முறையில் ! இந்த முறையில் ஐந்து நாளும் என்னென்ன சாப்பிடலாம் என்று அவர்கள் சொல்லும் லிஸ்டை பாருங்கள் : முதல் நாள்: எந்த பழங்களும் ( வாழை பழம் தவிர்த்து ) சாப்பிடலாம்- தர்பூசணி சற்று அதிகமாக இரண்டாம் நாள்: அவித்த, உப்பு சேர்த்த உருளை கிழங்கு சாப்பிடலாம். தவிர சமைத்த/ சமைக்காத காய்கறிகள் (சாலடுகள்) எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிடலாம். மூன்றாம் நாள் : பழங்கள் + காய்கறிகள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிடலாம் ( தவிர்க்க வேண்டியவை: வாழை பழம் மற்றும் உருளை கிழங்கு) நான்காம் நாள்: வாழை பழங்கள் + டம்ளர் பால் இரவு -வெஜிடபிள் சூப் குடிக்கலாம் ஐந்தாம் நாள் : காலை: காய்கறிகள். ஒரு கப் சாதம். ஒரு பெரிய தக்காளி. இரவு: நான் வெஜ் : பீப் (மாட்டு கறி)ஒரு பெரிய தக்காளி. நாள் முழுதும் நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம் ஆறாம் நாள்: காலை: காய்கறிகள். ஒரு கப் சாதம். நிறைய காய்கறிகள் இரவு: நான் வெஜ் : ஒரு கப் சாதம். beef (மாட்டு கறி) ஏழாம் நாள்: நிறைய பழச்சாறு சமைத்த காய்கறிகள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உடலின் எந்த நோய் இல்லாமலும் வேறு பிரச்சனை இல்லாமலும் இருப்பவர்களும் மட்டும் தான் இந்த ஏழு நாள் சோதனை எடுக்கணுமாம் ! ஒவ்வொரு நாளும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம் ! எட்டாம் நாளில் ரிசல்ட் தெரிவது உறுதியாம் ! இந்த முறையில் எடை குறைய மிக எளிய காரணம் சொல்கிறார்கள்: ஒவ்வொரு நாளும் உணவு மூலம் நமக்கு தேவைப்படுவது ரெண்டாயிரம் கலோரிகள். இந்த முறை மூலம் தினம் 1200 கலோரிகள் மட்டுமே கிடைப்பதால், ஒரு வாரத்தில் ஐந்து கிலோ எடை குறைகிறது என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கடை பிடித்தால் அனீமியா வந்து விடும் என்றும் கூறப்படுகிறது. ஒரு முறை எடை குறைக்கவும், அதன் பின் உடற்பயிற்சி போன்றவற்றில் தக்க வைக்கவும் மட்டுமே இது பயன் படும் இந்த முறை இல்லாமல் தினசரி உணவு பழக்கம் மூலமே உடல் எடையை குறைக்க முடியும் என்று ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் பணிபுரியும் டாக்டர் ஷைனி சந்திரா என்பவர் கூறியுள்ள உணவு முறை: காலை: எழுந்த உடன் அத்திப்பழம். 5 பாதாம் , 2 டேட்ஸ் ; ஊற வைத்த வெந்தயம் தண்ணீரில் சாப்பிட வேண்டும். பத்து நிமிடம் கழித்து ஒரு டம்ளர் பால் குடிக்கலாம் காலை உணவு: இட்லி ராகி/ ஓட்ஸ் இவற்றில் ஏதேனும் ஒன்று அளவோடு சாப்பிட வேண்டும். காலை 11 மணிக்கு : ஒரு டம்ளர் மோர் மதியம்: 150 கிராம் காய்கறி, ஒரு கப் அரிசி சாதம், சாலட் இவை சாப்பிடலாம். அசைவம் எனில் வாரம் இரு முறை அளவோடு சாப்பிடலாம் நான்கு மணிக்கு: கிரீன் டி. உப்பு கடலை அல்லது பொட்டு கடலை எட்டு மணிக்குள்: சப்பாத்தி மற்றும் ஒரு கப் காய்கறி சாப்பிட வேண்டும் இரண்டு மணி நேரம் கழித்து தான் உறங்க போக வேண்டும். இம்முறையில் ஒரு சில மாதத்தில் உடல் எடை குறைக்கலாம் . "வெறும் பழங்களை மட்டுமே சாப்பிட்டு விட்டு எப்படி நாளை ஓட்ட முடியும் பசிக்காதா? "என கேட்கிறீர்களா? ஆனால் மிக அவசரமாக உடல் எடை குறைக்க விரும்பும் சிலர் இதில் முதலில் சொன்ன வழியை பின்பற்றி வெற்றியும் அடைந்துள்ளனர் என்பது உண்மையே ! Relaxplzz ![]() |
Posted: 03 Jan 2015 08:55 AM PST |
Posted: 03 Jan 2015 08:50 AM PST ஒரு பெண் புருஷனோட சண்டை போட்டு கொண்டு தற்கொலை செய்ய மலை உச்சிக்கு போனாள். அங்கே இருந்து கீழே பார்த்ததும் அவளுக்கு பயம். அப்புறம் குழந்தைகள், அப்பா அம்மா, குடும்ப கவலை வேறு இருந்தாலும் புருசன் மீது செம கோபம். தற்கொலை செய்யமால் அப்படியே அமர்ந்து விட்டாள்.ஆனாலும் அவள் உதடுகள் எதையோ முனு முனத்தது. இரண்டு நாளாக அவள் அங்கேயே அமர்ந்திருந்திருந்தால். சிவன் பிரம்மா விஷ்னு மூவருக்கும் ஒரே குழப்பம். அவள் யாரை நினைத்து தவம் செய்கிறாள் என குழப்பத்தை தீர்த்து கொள்ள பூலோகம் வருகிறார்கள். அவள் உதடு அசைவதை வைத்து தன்னைதான் நினைத்து தவம் செய்கிறாள் என மூன்று கடவுளும் சண்டை போட்டு கொள்கிறார்கள். இவர்களின் தீராத சண்டையை கண்டு நாரதர் அவர்கள் முன் தோன்றி ஒரு யோசனை சொல்கிறார்.நான் போய் அவளை எட்டி உதைக்கிறேன் யார் பெயரை சொல்லி கீழே விழுகிறாளோ அவர்கள் சென்று அவளை காப்பாற்றி,அவள் கேட்கும் வரங்களை கொடுங்கள் என்றார். இந்த யோசனை மூவருக்கும் நல்லதாய் தோன்ற அதை ஆமோதிக்கிறார்கள்.நாரதரும் அவள் அருகே சென்று அவளை எட்டி உதைக்கிறார். அவள் மலையிலிருந்து கீழே விழும் போது சொன்னாள் "எந்த லூசு பயடா என்னை எட்டி உதைச்சது".. அட்டென்ட் டைம்ல ஆல் கடவுளும் எஸ்கேப். இதனால நாம சொல்லுறது என்னன்னா பொண்களோட மனசுல உள்ளத ஆன்டவனாலும் கூட தெரிஞ்சிக்க முடியாது . சிரிக்க மட்டும், யாரும் சண்டைக்கு வராதீங்கப்பா.. Just for fun.. :D :D Relaxplzz |
Posted: 03 Jan 2015 08:45 AM PST |
Posted: 03 Jan 2015 08:40 AM PST |
Posted: 03 Jan 2015 08:35 AM PST |
Posted: 03 Jan 2015 08:29 AM PST |
Posted: 03 Jan 2015 08:24 AM PST தோற்றுவிடுவாய் என்றெண்ணி முயற்சிக்காமல் இருப்பது தான், மிகப் பெரிய தோல்வி... ![]() "யதார்த்தங்கள் - தத்துவங்கள்" |
Posted: 03 Jan 2015 08:21 AM PST |
Posted: 03 Jan 2015 08:10 AM PST ஒருத்தன் அவன் ஆபிஸ் 12வது மாடில நின்னுகிட்டு வடை சாப்பிட்டுகிட்டு இருந்தான். அப்போ அவனை நோக்கி வேகமா வந்த ஒருத்தன், 'பீட்டர், உன் பொண்ணு மேரி கார் ஓட்டிக்கிட்டு போகும்போது லாரி மோதி செத்து போய்ட்டா' என்று கத்தினான். விஷயத்தை கேள்வி பட்டதும் என்ன செய்றதுன்னு புரியாம 12வது மாடியில இருந்து கீழ குதிச்சிட்டான். பத்தாவது மாடி வரும்போது தான் அவனுக்கு யோசனையே வந்துச்சி 'நம்மகிட்ட கார் எதுவுமே இல்லையே...' எட்டாவது மாடிய தாண்டும்போது தான் தோணுச்சி, 'அடடா நமக்கு மகளே கிடையாதே...' . ஆறாவது மாடி கடக்கும்போது தான் ஞாபகம் வந்துச்சி 'நமக்கு இன்னும் கல்யாணமே ஆகலியே...'. மூணாவது மாடிய நெருங்கியபோது தான் தெளிவா புரிஞ்சுது, 'ஐயோ என் பேரு பீட்டரே இல்லையே...'. விதி கடைசியில விளையாடிடுச்சி. 'ஆஹா...வடை போச்சே...' :P :P Relaxplzz |
Posted: 03 Jan 2015 08:06 AM PST |
Posted: 03 Jan 2015 07:58 AM PST இவையெல்லாம் நம்ப முடியுமா ? ( Nostradamus ) மரணத்திற்குப் பின் அவர் வாழ்வில் நிகழப்போவதைப் பற்றி கூறிய ஆரூடம் பலித்தது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியமான விஷயம்! "என் கல்லறையைத் தோண்டி என் பிணத்தை எடுக்க முயல்பவர் உடனே இறந்து போவார்" என்று தன் கல்லறை மீது பொறிக்குமாறு அவர் இறக்கு முன்னர் வேண்டிக் கொண்டார். 1566ம் ஆண்டு அவர் இறந்தபின்னர் அவரது கல்லறையில் இதே வாசகம் பொறிக்கப்பட்டது. வருடங்கள் உருண்டோடின. அவரது கல்லறை வாசகங்களைப் பார்த்துச் சிரித்த மூன்று பேர் கல்லறையைத் தோண்டி அவர் எலும்புக்கூட்டை எடுத்தனர். பிரெஞ்சு புரட்சியின் உச்சகட்ட நேரம் அது! மிகவும் புகழ் பெற்ற ஜோதிடரான அவரது மண்டை ஓட்டில் ஒயினை ஊற்றிக் குடித்தால் எதிர்காலம் கூறும் பிரபல ஜோதிடர் ஆகலாம் என்று நம்பி அந்த மூன்று பேரும் கல்லறையைத் தோண்டியிருந்தனர். அதில் ஒருவன் மண்டையோட்டை எடுத்து பையில் இருந்த ஒயினை எடுத்து அதில் ஊற்றிக் குடித்து விட்டு ஒரு அடி எடுத்து வைத்தான். அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு துப்பாக்கிக் குண்டு அவனைத் துளைத்து அவன் உயிரைக் குடித்தது. புரட்சிக்காரன் ஒருவனின் குண்டுதான் அவனை இறக்க வைத்திருந்தது. மற்ற இரண்டு பேரும் திரும்பி எலும்புக்கூட்டைப் பார்த்த போது எலும்புக்கூட்டின் மார்பில் ஒரு தாமிரத் தகடு கட்டப்பட்டிருப்பதைப் பார்த்தனர். அதில் மே 1793 என்று எழுதப்பட்டிருந்தது. சரியாக அதே 1793ம் ஆண்டு மே மாதம் தான் அந்த எலும்புக்கூட்டை அவர்கள் தோண்டி எடுத்திருந்தனர். இதனால் பயந்து போன அவர்கள் ஓடத் தொடங்கினர். தன் கல்லறையை எந்த வருடம் எந்த மாதம் தோண்டி தன் எலும்புக்கூட்டை எடுக்கப் போகிறார்கள் என்பதைக் கூட அவர் துல்லியமாகக் கணித்துச் "சொல்லியிருந்தது" உலகினர் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது! இந்தியத் தலைவர்கள் பற்றிய அவரது ஆரூடங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. அவரது ஆறாம் காண்டத்தில் 74ம் பாடலில் அவர் இந்திரா காந்தி கொலை செய்யப்படுவதைக் கணித்துக் கூறியுள்ள வாசகங்கள் நம்மை அயர வைக்கும்! "மூன்று புறம் கடல் சூழ்ந்த நாட்டில் பெரும் அதிகாரம் கொண்ட பெண்மணி எதிர்கட்சிகள் ஒற்றுமை இன்றி இருப்பதால் அதிகாரத்தை மீண்டும் பெறுவார். தனது சொந்த மெய்காப்பாளர்களாலேயே அவர் 67ம் வயதில் கொல்லப்படுவார். இது நூற்றாண்டு முடிய 16 ஆண்டுகள் இருக்கும்போது நடக்கும்" எமர்ஜென்ஸியினால் தேர்தலில் தோற்றுப்போன இந்திரா காந்தி எதிர்கட்சிகள் ஒற்றுமை இல்லாமல் தமக்குள் சண்டை போட்டுக் கொண்டதால் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதையும் 1984ல் அவர் சொந்த மெய்காப்பாளர்களில் ஒருவனால் சுடப்பட்டதும் உலகம் அறிந்த சம்பவம்! இதே போல ராஜீவ் காந்தி கொலை செய்யப்படுவதை அவர் ஒன்பதாம் காண்டத்தில் 53ம் பாடலில் தெரிவித்துள்ளார். "நேரு குடும்ப மூன்றாம் தலைமுறையினரின் இளைஞர் துருப்புகளை அனுப்பி எரிக்கச் செய்வார். இந்த நிகழ்வுகளிலிருந்து தூர இருக்கும் மனிதனே உண்மையில் சந்தோஷமானவன். மூவர் அவரை இரத்தம் வெளிப்படச் செய்து கொல்வர்" இதில் விசித்திரம் என்னவென்றால் இந்தப் பாடல் பிரபல கன்னட வாரப் பத்திரிக்கையான 'விக்ரம' என்ற பத்திரிக்கையின் 28-4-1991 தேதியிட்ட இதழில் பிரசுரிக்கப்பட்டிருந்ததுதான்! சரியாக மூன்று வாரங்கள் கழித்து அவர் கொல்லப்பட்டார்! இலங்கைப் போரில் அவர் துருப்புகளை ஈடுபடச் செய்ததையும் பின்னர் மூன்று தற்கொலைப் படையினர் சதி செய்து தமிழகத்தில் அவர் வருகை புரிந்த போது அவரைக் கொன்றதும் வரலாற்று உண்மை! அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதல் பற்றிய அவரது கணிப்பு அமெரிக்கர்கள் உள்ளிட்ட உலக மக்கள் அனைவரையும் திடுக்கிட வைத்தது; திகைக்க வைத்தது! "கடவுளின் நகரம் மீது இடி இடிக்கும்! இரண்டு சகோதரர்கள் குழப்பத்தில் நாசம் அடைவர்! கோட்டை காக்கப்படும் போது பெரிய தலைவர் இறந்துபோவார். மூன்றாம் உலகப் போர் மூளும்!' இன்னும் ஒரு பாட்டில், "ஒன்பதாம் மாதம் பதினொன்றாம் நாளில் இரண்டு இரும்புப் பறவைகள் பெரிய சிலைகள் மீது மோதும்" என்று அவர் குறிப்பிடுகிறார். ஆனால் இதை விட துல்லியமாக 10ம் காண்டம் 72ம் பாடலில் அவர் கூறுவது:- "1999ல் ஒன்பதாம் மாதம் வானிலிருந்து ஒரு பெரிய அரக்கன் தோன்றுவான்"! இந்தச் சம்பவத்தை அவர் சுட்டிக் காட்டும் பாடலாகவே நாஸ்டர்தாமஸை வியந்து போற்றுவோர் கூறுவர்.ஆனால், இதைப் பற்றி பெரிய controversy இன்னும் நிலவுகிறது. Relaxplzz ![]() மறைக்கப்படும் உண்மைகள் |
Posted: 03 Jan 2015 07:50 AM PST |
Posted: 03 Jan 2015 07:46 AM PST |
Posted: 03 Jan 2015 07:40 AM PST |
Posted: 03 Jan 2015 07:35 AM PST |
Posted: 03 Jan 2015 07:31 AM PST |
Posted: 03 Jan 2015 07:21 AM PST மாற்றுத் திறனாளிகளுக்கு நாம் செய்யும் ஆகப் பெரும் உபகாரம் அவர்களை வேடிக்கை பார்க்காமல் இருத்தலே.. ![]() ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 2 |
Posted: 03 Jan 2015 07:10 AM PST அண்ணன்களின் ரகசியமறிந்தவர்களாக தங்கைகளே இருக்கிறார்கள்... மணல் வீடு கட்டவோ கட்டியதை இடிக்கவோ தங்கைகள் தேவைப்படுகிறார்கள்... நடை பழகும் நாட்களில் கைபிடித்து கொள்ள அண்ணன்களையே தேர்ந்தெடுக்கிறார்கள்... அடம் பிடித்தோ அழுது புரண்டோ பொட்டோ, பூவோ முதல் முதலில் தங்கைக்கே வாங்குகிறான் அண்ணன்... '' அ" வில் தொடங்கி சைக்கிள் பழக்கி மகிழுந்து வரை அண்ணன்களே ஆசிரியர் தங்கைகளுக்கு... அண்ணனாக மட்டுமன்றி நண்பனாகவும் சில நேரங்களில் தந்தையாகவும் மாற்றி விடுகிறார்கள் தங்கைகள்... தங்கைகளின் எந்தவித கோரிக்கையும் அண்ணன்களிடமே வருகிறது தங்கைகளுக்கான முதல் சிபாரிசை அண்ணன்களே முன்னெடுக்கிறார்கள்... அக்காக்களிடம் மறைத்த அண்ணன்களின் காதலை அறிந்தே இருக்கிறார்கள் தங்கைகள்... அண்ணன்களுக்காக அப்பாக்களிடம் கோபம் கொள்வதில் தங்கைகளே முதலில் இருக்கிறார்கள்... தங்கைகளில்லா வீடு அமைதியாகவே இருக்கிறது தீராத மௌனம் சுமந்து... திருமணமாகிச் செல்கையில் அப்பாக்கள் அழுகிறார்களோ இல்லையோ அழாமல் நடிக்க அண்ணன்கள் கற்றுக் கொள்கிறார்கள்.. # படித்ததில் பிடித்தது # Relaxplzz ![]() |
Posted: 03 Jan 2015 07:00 AM PST PK என்ற ஹிந்தி திரைப்படம் இங்கே குறிப்பிடத்தக்க ஒன்றுதான். படம் அப்படி என்ன சொல்கிறது? ஏன் மதவாதிகள் இந்த படத்தை எதிர்கிறார்கள்? . நம் உலகை ஆராய்ச்சி செய்ய வரும் ஒரு வேற்றுகிரக வாசிதான் கதாநாயகன். பூமிக்கு வந்தவுடன் தனது கிரகத்துடன் தொடர்பு கொள்ளும் கருவியை களவு கொடுக்கிறான். அதை தேடி அலையும்போது யாரை கேட்டாலும் கடவுளுக்குதான் தெரியும் என்கிறார்கள். அதன் பின் கடவுளையே தேடி அலைய ஆரம்பிக்கிறான். மிதமானது முதல், கொடூரமானது வரை எல்லா பிரார்த்தனைகளும் செய்கிறான். மதங்களை அறிகிறான். மதகுருக்களை அறிகிறான். . பூமியில் கிடைத்த ஒரு நண்பனை ஒரு குண்டுவெடிப்பில் இழக்கிறான். குண்டு வெடிப்பை செய்த அமைப்பு அவர்கள் மதத்துக்காக, அவர்கள் கடவுளை பாதுகாப்பதற்காக இதை செய்ததாக சொல்கிறார்கள். . பிறகு ஒரு மதகுருவிடம் உரையாடும் வாய்ப்பை பெறுகிறான். இறந்து போன தன் நண்பனின் செருப்பை கையில் வைத்துகொண்டே பேசுகிறான். மிகவும் உருக்கமான சிந்திக்கவைக்கும் உரையாடல் இது. . அதில் இந்த மதகுருவும் தன் கடவுளை தான்தான் பாதுகாப்பதாக சொல்கிறார். அதற்கு ஹீரோ சொல்லும் பதில். . "இத்தனை பெரிய பிரபஞ்சத்தையும், இத்தனை கோடி நட்சத்திரங்களையும், கிரகங்களையும் படைத்த இறைவனை, ஒரு சின்ன கிரகத்தின், ஒரு ஊரில் உள்ள, ஒரு தெருவில் இருந்துகொண்டு நீ எப்படி காப்பாற்றுவாய்? இப்படித்தான் தன் கடவுளை காப்பாற்றுவதாக சொல்லி ஒருவன் குண்டுவைத்துவிட்டான். அதில் என் நண்பனை இழந்து விட்டேன். இப்போது அவன் செருப்புதான் உள்ளது. இப்படியே போனால் மனிதர்களுக்கு பதில் செருப்புகள் தான் இந்த உலகில் இருக்கும். . கடவுள் மீது நம்பிக்கை வைத்தால் நமக்கு ஆறுதல் கிடைக்கிறது, தைரியம் கிடைக்கிறது. ஆனால் எந்த கடவுளை நம்புவது? எல்லாவற்றையும் படைத்த ஒரே ஒரு சரியான கடவுளை விட்டுவிட்டோம். நீங்கள் தவறான பல கடவுள்களை/மதங்களை உண்டாக்கி விட்டீர்கள். பிறப்பால் நம் உடலில் நாம் எந்த மதம் என்ற முத்திரைகள் கிடையாது. இப்படி தவறான கடவுள்களை/மதங்களை நம்பிக்கொண்டு இருப்பதுதான் மக்களை பிரிக்கிறது. சாகவும் செய்கிறது. இந்த பூமி கிரகத்தின் மிக ஆபத்தான பிரச்சனை நீங்களே உண்டாக்கி வைத்திருக்கும் இந்த பொய்யான கடவுள்கள்தான்" என்கிறான் வேற்றுகிரகவாசி. கடவுளை அல்ல கடவுளின் மேனேஜர் போல வாழும் மனிதர்களைத்தான் தாக்குகிறது இந்த படம். இப்போது இந்த படத்திற்கு ஏன் எதிர்ப்பு யார் எதிர்க்கிறார்கள் என்பதை புரிந்து கொள்வது கடினமல்ல. - சகலகலா ஜீன்ஸ் |
Posted: 03 Jan 2015 06:50 AM PST தன் வீட்டில் அடுப்பெரிய உழைக்காதவன் சொல்கிறான்! தன் தலைவன் படத்திற்கு தடையென்றால் தமிழ் நாடு எரியுமென்று..!! Relaxplzz ![]() |
அன்னாசி தோட்டம். Posted: 03 Jan 2015 06:40 AM PST |
Posted: 03 Jan 2015 06:30 AM PST |
உண்மை Posted: 03 Jan 2015 06:20 AM PST |
Posted: 03 Jan 2015 06:10 AM PST எதற்கு எடுத்தாலும் ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள் எனக் கூறும் தாய்மார்களே முதலில் ஒன்று புரிந்து கொள்ளுங்கள். சட்னி அரைக்க மிக்சி கண்டுபுடிச்சது ஒரு ஆண். மாவு அரைக்க கிரைண்டர் கண்டுபுடிச்சது ஒரு ஆண். துணி துவைக்க வாஷிங் மெசின் கண்டுபுடிச்சது ஒரு ஆண். வீடு பெருக்க துடைக்க வாக்குவம் கிளீனர் கண்டுபுடிச்சது ஒரு ஆண். துணி தைக்க தையல் மெசின் கண்டுபுடிச்சது ஒரு ஆண். பாத்திரம் தேய்க்க டிஷ் வாஷர் கண்டுபுடிச்சது ஒரு ஆண். ஆக இதுல எதையுமே பெண் கண்டு பிடிக்கல. ஏன்னா... கஷ்டப்படர ஒருத்தன்தான் தன் வேலையை சுலபமா முடிக்க ஒரு வழி தேடுவான். ஆனா இதை எல்லாம் சொன்னா நம்மளை ஆணாதிக்க ஜென்மம்னு சொல்லுவாங்க..... அங்க என்னங்க சத்தம்? ------------- என் மனைவியின் குரல் ஒண்ணும் இல்லம்மா.. சும்மா Share பண்ணிக்கிட்டு இருக்கேன்......... (ப.பி) #ஆமாம்_நம்ம_வீரத்த_எல்லாம்_போஸ்ட்லதான_காட்டமுடியும். :P :P Relaxplzz |
Posted: 03 Jan 2015 06:00 AM PST கோவை திரு. பி.சுப்பிரமணி அவர்கள், ஒரு உன்னத மனிதன், வெகு சிலரே இவர் போல... கோயமுத்தூர் மக்கள் பெரும்பாலானவர்களுக்கு கோவை சிங்கா நல்லூரில் அமைந்திருக்கும் சாந்தி கேண்டீன் அல்லது சாந்தி பெட்ரோல் பங்க் பற்றி தெரியாமல் இருக்காது. அதைப் பற்றிய மேலும் பல முக்கியத் தகவல்கள் இங்கே . கோவையில் எவ்வளவோ வழிகளில் பொதுமக்களின் பணத்தைப் பல வழிகளில் , தொழில் தர்மத்துக்குப் புறம்பாக அபகரிக்கும் பல நிறுவனங்கள், தனி நபர்கள் , மருத்துவர்கள், உணவகங்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியவர்களுக்கு இடையே, தான் சம்பாதித்த பணம் முழுக்க பொது மக்களுக்குச் சென்று சேர வேண்டும் என்ற உயரிய நோக்கில் செயல்படும் சில நம்பிக்கை மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் இன்று நாம் பார்க்கப் போவது , சாந்தி கியர்ஸ் திரு. பி.சுப்பிரமணி அவர்கள். தன் மனைவியின் நினைவாக "சாந்தி சோஷியல் செர்வீசெஸ்" என்ற மக்களுக்கான பொது நல அமைப்பை நிறுவியவர். அவர்கள் மேற்கொண்டிருக்கும் நற்காரியங்களில் சில : 1.கோவையில் அதிக விற்பனை மற்றும் தரம் நிறைந்த எரிபொருள் விநியோகிக்கும் பெட்ரோல் பங்க். (இதன் சிறப்பு, எவ்வளவு பெட்ரோல் அல்லது டீசல் விலை ஏற்றம் இருப்பினும், முற்றும் முழுதாக அவை இங்கே தீரும் வரை பழைய விலை தான்.) 2. 24 மணி நேரமும் செயல்படும் மருந்தகம். நம்பினால் நம்புங்கள், எம்.ஆர்.பி. யில் இருந்து 20 சதவிகிதம் தள்ளுபடி இங்கே கிடைக்கிறது.. (மேலும் விற்பனை விலை மீதான அறக் கட்டளையால் ஏற்றுக் கொள்ளப் படுகிறது, 15 முதல் 20 கிலோமீற்றுக்கு உள்ளாக இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச டோர் டெலிவரி.) 3. சாந்தி மருத்துவக ஆய்வகத்தில் அமைந்திருக்கும் ஆய்வகத்தில் எடுக்கப் படும் ஸ்கேன் , எக்ஸ்.ரே , உள்ளிட்ட பல விதமான முக்கியமான டெஸ்டுகளுக்கு மற்ற இடங்களில் இருந்து 50 இல் இருந்து 70 சதவிகிதம் வரை விலை குறைவு. 4. சாந்தி மருத்துவமனை - மருத்துவருக்கான கட்டணம் 30 ரூபாய் என்பதில் இருந்து, இவர்களின் லாப நோக்கமற்ற சமூக சேவையை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.மற்ற விவரகங்களுக்கு இணையதளத்தைப் பார்க்க. 5.டயாலிசிஸ் - முழுக்க முழுக்க அதிநவீன மருத்துவ உபகரணங்களைக் கொண்டு செயல்படும் இங்கே, ஒரு முறை டயாலிசிஸ் செய்து கொள்ள கட்டணம் வெறும் 500 ரூபாய். மேலும், 750 ரூபாய்க்கு மின் மயானம், ஒரு நாளிக்கு 10000 பேர் தற்போது உபயோகிக்கும் உணவகம், ரேடியாலஜி செண்டர் , ஏழை மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி, அரசுப் பள்ளிகளில் புதிய கட்டிடங்கள் கட்டிக் கொடுத்தல், ஆசிரியர்கள் குறைவாக உள்ள பள்ளிகளுக்கு தன் செலவில் ஆசிரியர்களை பணியில் அமர்த்தல் என்று எண்ணற்ற சேவைகளைச் செய்து வரும் சாந்தி சோஷியல் செர்வீசெஸ் அறக்கட்டளைக்கும், அதை நிறுவியவர்களுக்கும் கோவை மக்களின் சார்பாக ஒரு ராயல் சல்யூட். இதுவரை இந்த அறக்கட்டளைக்காக பொது மக்களிடம் அல்லது வேறு எங்கும் ஒரு ரூபாயாகக் கூட நிதி வசூலித்ததில்லை என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறோம். விவரங்களுக்கு http://www.shanthisocialservices.org/index.html Relaxplzz ![]() |
Posted: 03 Jan 2015 05:50 AM PST |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment