Relax Please: FB page daily Posts |
- இருதய நோயால் கஷ்டப்படுகிறீர்களா? ஆஞ்சியோவுக்கோ அல்லது பைபாஸ் இருதய அறுவை சிகிச்...
- நிதர்சனமான உண்மை..
- டிக்கெட் பரிசோதகா்:- ஐயா, டிக்கெட் கொடுங்க...! பயணி:- பஸ முன்னாடி கண்டக்டா் நிக...
- ;-) Relaxplzz
- அழகு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)
- :) Relaxplzz
- இன்னிக்கு செத்தா நாளைக்கு பிரியாணி இவ்ளோதாங்க வாழ்க்கை...
- ஒரு பேருந்து நிலையத்தில் ஓர் பெண் தன்னுடையபையனுடன் பதற்றமாக நின்று கொண்டிருந்தாள...
- # படித்ததில் பிடித்தது # இவர் என் கம்பெனி அருகே தினமும் கம்மங்கூழ் வியாபாரம் செ...
- என்னை கொஞ்சம் எடுத்து ஓட்டுங்களேன் உங்கள் சுகரையும் பிரஷரையும் நான் ஓட்டுகிறேன்...
- தேவிப்பட்டிணத்தில் "இந்து சகோதரனின்" உடலை சுமந்து செல்லும் "முஸ்லீம்கள்" தமிழனி...
- சிவப்பு என்பது நிறமே, அழகிற்கான தகுதி அல்ல..
- :) Relaxplzz
- அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும்...
- //முக்கிய செய்தி கண்டிப்பாக படித்து பகிரவும் நண்பர்களே// மறை நீர் (Virtual wate...
- அக்கா .., அன்னையால் கொடுக்கப்பட்ட இன்னொரு அம்மா. <3
- பையன் : அம்மா எதிர் வீட்டு ஆண்டி பேரு என்னம்மா? அம்மா : விமலாடா.. . . . . . . ....
- அமர்ந்து பேசி அழகா விளையாடும் நம்ம பாட்டிகளோட விளையாட்டுக்கு ஒரு லைக் போடுங்க.. (y)
- :) Relaxplzz
- உண்மைதான
- சிரிக்க மட்டும் :D சர்ச்சில் திருமணம் நடந்து கொண்டிருந்தது. வந்திருந்தவர்களில்...
- இவர்களின் காதல் வாழக்கையை வென்றது... //வாழ்த்துக்களை பகிர்வோம்// சென்னையைச் சேர...
- 823 வருடங்களுக்கு ஒருமுறை நிகழம் அதிசயம் 2015 ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் அதிசயம...
- இரட்டை கோபுரம் ! தஞ்சை பெரிய கோயில் ! பிடித்தவர்கள் லைக் பண்ணவும்... (y)
- :) Relaxplzz
- இதத்தான் அந்த டெயிலரும் சொன்னான் :P Relaxplzz
- காதலன்: : " எனக்கு ஒரு பெரிய பிரச்சனை டார்லிங்.. . காதலி :: ".. என்னடா செல்லம் ....
- ஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்? சமீபத்தில் சிக்கன் பிரியாணியுடன் வேர்க்கடலையும...
- உழைப்பை எறும்பிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும்... (y) (y)
- நம் சிறு வயது நினைவுகளை தூண்டும் இந்த் விசிலை நினைவிருப்பவர்கள் லைக் பண்ணுங்க......
Posted: 24 Jan 2015 09:00 AM PST இருதய நோயால் கஷ்டப்படுகிறீர்களா? ஆஞ்சியோவுக்கோ அல்லது பைபாஸ் இருதய அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டள்ளதா? நண்பர்களே கவனியுங்கள்----இது உண்மைச் சம்பவம்....இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள்! தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார். தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார். மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல்நாள்ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார். நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார். ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார். இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம். இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள். 1 கப் எலுமிச்சை சாறு 1 கப் இஞ்சிச் சாறு 1 கப் புண்டு சாறு 1 கப் ஆப்பிள் சைடர் விநிகர். எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள். நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள். மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும். நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். கீழ் காணும் முகவரியில் இதை பெற்றுக் கொள்ள முடியும்.. Fettle Bio Products #18, DABC Aishwaryam main Road, Nolambur, Chennai - 95 Tel: +9600125638 email: fettlebioproducts@gmail.com www.fettlebioproducts.com Relaxplzz ![]() |
Posted: 24 Jan 2015 08:55 AM PST |
Posted: 24 Jan 2015 08:50 AM PST டிக்கெட் பரிசோதகா்:- ஐயா, டிக்கெட் கொடுங்க...! பயணி:- பஸ முன்னாடி கண்டக்டா் நிக்கறாரு பாருங்க, அவர்கிட்ட கேளுங்க! பரிசோதகா்:- என்ன குசும்பா? நான் 'செக்கா்'யா, உங்க 'பயண சீட்'டை காட்டுங்க! பயணி:- கொஞ்ச முன்னாடி வரைக்கும் அந்த சீட்ல உட்காா்ந்து இருந்நேன், இப்பதான் இந்த சீட் கெடச்சுதுங்க! பரிசோதகா்:-(கடுப்புடன் பக்கத்திலிருந்தவர் டிக்கெட்டை காட்டி) நான் கேக்கறது இந்த டிக்கெட்டைய்யா...! பயணி:- இதுவா... கண்டக்டர் எனக்கு டிக்கெட் எடுக்க வேணாமுன்னு சொல்லிட்டாா்! பாிசோதகா்:- என்னய்யா சொல்றே, ஏன் வேணாமுன்னு சொன்னார்...? பயணி:- அவா்தான குழந்தைங்களுக்கு டிக்கெட் எடுக்க வேணாமுன்னு சொன்னாா்... என் பேருகூட "குழந்தை"தாங்க! பாிசோதகா்:-????????? :O :O Relaxplzz |
Posted: 24 Jan 2015 08:40 AM PST |
Posted: 24 Jan 2015 08:35 AM PST |
Posted: 24 Jan 2015 08:30 AM PST |
Posted: 24 Jan 2015 08:20 AM PST |
Posted: 24 Jan 2015 08:10 AM PST ஒரு பேருந்து நிலையத்தில் ஓர் பெண் தன்னுடையபையனுடன் பதற்றமாக நின்று கொண்டிருந்தாள்.பக்கத்தில் உள்ளவர்கள் என்னவென்று கேட்டனர். "இவன் காசை முழுங்கிட்டான்.என்ன செய்றதுன்னுதெரியலை'' ஆளாளுக்கு மருத்துவம் சொல்ல ஆரம்பித்தார்கள். ""நாலுவாழைப் பழத்தை ஊட்டிவிடு. தானா வெளியே வந்துடும்'' "ஆஸ்பத்திரிக்குப் போய் எக்ஸ்ரே எடுத்துப் பார்... '' கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் பையனைத்தூக்கிக்குனிய வைத்து முதுகில் தட்டிக் கொடுத்தார். பையன் விழுங்கிய காசுவெளியே வரவில்லை. அப்போது டிப்டாப்பாக உடையணிந்த ஒருவர் வந்தார்.பையனைத்தூக்கி, தலைகீழாகப் பிடித்துக் குலுக்கி, ஒருதட்டுத் தட்டினார். காசு வெளியே வந்து விழுந்தது. எல்லாரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அந்தப் பெண்நன்றியுடன் அவரைப் பார்த்தாள். "சார் நீங்க டாக்டருங்களா?'' "இல்லை இன்கம்டாக்ஸ் ஆபிஸர். எங்கே, எப்படித்தட்டினால் காசு விழும்னு எனக்குத் தெரியாதா? :P :P இது தயாநிதி மாறன நினைச்சி போட்டது இல்லன்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க.. ;-) ;-) Relaxplzz |
Posted: 24 Jan 2015 08:00 AM PST # படித்ததில் பிடித்தது # இவர் என் கம்பெனி அருகே தினமும் கம்மங்கூழ் வியாபாரம் செய்து வருகிறார் விலை அதிகம் இல்லை 5 ரூபாய் தான்.. அவரிடம் இன்று பேச்சுக்கொடூத்தபோது ஏனம்மா ஊரே பத்துரூபாய்க்கு விற்கிறது நீங்கள் ஏன் விலை ஏற்றவில்லை அதற்க்கு அவர் சொன்ன பதில் என் வாழ்க்கையையே புதிய பரிமாணத்திற்கு கொண்டு சென்று விட்டது.. இவர் சரியாக ஒரு நாளைக்கு ...பத்து கிலோ மீட்டர் தன் சைக்கிளை தள்ளி சென்று வியாபாரம் செய்கிறார் ,மேலும் கம்மங்கூழ் கேஸ் அடுப்பில் சமைத்தால் சுவை மாறிவிடும் என்று விறகு அடுப்பில் பாணை வைத்து இவரே தயாரிக்கிறார், இவ்வளவு சிரமபட்டு ஏன் குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறீர்கள் என கேட்டால் என் உழைப்புக்குண்டான ஊதியம் இப்போதே கிடைக்கிறது அதிக லாபம் எனக்கு தேவை இல்லை என்கிறார் இந்த பாட்டியின் நேர்மை இங்கே கடை விரிக்கும் வால்மார்ட் போன்ற நிறுவனங்களுக்கு இருக்குமா என்பது சந்தேகம் தான் நண்பர்களே இனி சாக்கடைகளை பற்றி எழுதுவதை விட இந்த மாதிரி உள்ளவர்களை தேடி பதிவிடுகிறேன் # ஒரு அன்பு வேண்டுகோள் இதை அனைத்து நண்பர்களும் பகிரவும் இந்த பாட்டியின் நேர்மை உலகிற்கு தெரியட்டும்... Relaxplzz ![]() |
Posted: 24 Jan 2015 07:50 AM PST |
Posted: 24 Jan 2015 07:40 AM PST |
Posted: 24 Jan 2015 07:30 AM PST |
Posted: 24 Jan 2015 07:20 AM PST |
Posted: 24 Jan 2015 07:10 AM PST அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடைமேடைகள் எல்லாம் இல்லை; யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும் கிடையாது. யானையின் எடையை எப்படி அறிவது.? என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர். யாருக்கும் அதற்கான வழி தெரியவில்லை. அப்போது அமைச்சர் ஒருவரின் பத்து வயது மகன், 'நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்' என்றான். அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். ஆனால், அவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தார் மன்னர். அந்தச் சிறுவன், யானையை நதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே இருந்த மிகப் பெரிய படகில் யானையை ஏற்றினான். யானை ஏறியதும், தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே அவன், தண்ணீர் நனைத்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான். பிறகு, யானையைப் படகிலிருந்து இறக்கி, பெரிய பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான். முன்பு குறித்து வைத்திருந்த குறியீடு அளவுக்குப் படகு தண்ணீரில் மூழ்கும் வரை, கற்கள் ஏற்றப்பட்டன. பின்பு, அரசரிடம் அந்தக் கற்களைக் காட்டி, ''அவற்றின் எடைதான் அந்த யானையின் எடை'' என்றான். அனைவரும் வியந்தனர். அவனது புத்திசாலித்தனத்தைப் போற்றிப் புகழ்ந்தனர். எல்லோரும் யானையை ஒட்டுமொத்த உருவமாகத்தான் பார்த்தார்கள். ஆகவே, அவர்களால் அதன் எடையைக் கணிக்கமுடியும் எனும் நம்பிக்கை வரவில்லை. ஆனால் அந்தச் சிறுவனோ, பல எடைகளின் கூட்டுத்தொகையே யானையின் எடை என்று எண்ணிச் செயல்பட்டான்; எளிதில் விடை கண்டான். எவ்வளவு பெரிய செயலாக இருந்தாலும், அதைச் சின்னச் சின்ன செயல்களாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். பிறகு, அந்த ஒவ்வொரு செயலையும், செவ்வனே செய்து முடிக்கவேண்டும். அப்போது, ஒட்டுமொத்தத் திட்டமும் அழகாக நிறைவேறிவிடும். Relaxplzz |
Posted: 24 Jan 2015 07:00 AM PST //முக்கிய செய்தி கண்டிப்பாக படித்து பகிரவும் நண்பர்களே// மறை நீர் (Virtual water) பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரின் சராசரி விலை ரூ.20. தமிழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட அம்மா மலிவு விலை குடிநீரின் விலை ரூ.10. இது நமக்கு தெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு மறை நீர் (Virtual water) விலை தெரியும்? மறை நீர் என்பது ஒருவகை பொருளாதாரம். மொத்த உள்நாட்டு உற்பத்தியை (Gross domestic product) ஒரு நாட்டின் பணத்தைக் கொண்டு மதிப்பிடுவதுபோலஒரு நாட்டின் நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம் இது. இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்த கண்டுபிடிப்புக்காக 'ஸ்டாக்ஹோம் வாட்டர் -2008' விருது பெற்றவர். ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும்கண்ணுக்கு தெரியாத நீர் - இதுவே மறை நீர். இது ஒரு தத்துவம், பொருளாதாரம். ஒரு மெட்ரிக் டன் கோதுமை 1,600 கியூபிக் மீட்டர் தண்ணீருக்கு சமம் என்கிறது மறைநீர் தத்துவம். மறை நீர் என்பதற்கு ஆலன் தரும் விளக்கம், "கோதுமை தானியத்தை விளைவிக்க நீர் தேவை. ஆனால், அது விளைந்தவுடன் அதை உருவாக்கப் பயன்பட்ட நீர் அதில் இல்லை. ஆனால், அந்த நீர், கோதுமை தானியங்களுக்காகத்தானே செலவிடப்பட்டிருக்கிறது அல்லது மறைந்திருக்கிறது. இதுவே மறை நீர். கோதுமை தேவை அதிகம் இருக்கும் ஒரு நாடு, ஒரு மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி செய்யும்போது, அந்த நாடு 1,600 கியூபிக் மீட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரைச் சேமித்துக்கொள்கிறது'' என்கிறார் ஆலன். புத்திசாலி நாடுகள்! நீரின் தேவையையும் பொருளின் தேவையையும் துல்லியமாக ஆய்வுசெய்து அதற்கு ஏற்ப உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுக்க வேண்டும். சீனா, இஸ்ரேல் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அப்படித்தான் செய்கின்றன. சீனாவின் பிரதான உணவு பன்றி இறைச்சி. ஒரு கிலோ பன்றி இறைச்சி உற்பத்திக்கான மறை நீர் தேவை 5,988 லிட்டர். அதனால், சீனாவில் பன்றி உற்பத்திக்கு கெடுபிடி அதிகம். ஆனால், தாராளமாக இறக்குமதி செய்துகொள்ளலாம். ஒரு கிலோ ஆரஞ்சுக்கான மறை நீர் தேவை 560 லிட்டர். சொட்டு நீர் பாசனத்தில் கோலோச்சும் இஸ்ரேலில் ஆரஞ்சு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு கெடுபிடிகள் அதிகம். இவ்விரு நாடுகளும் ஒவ்வொரு பொருளுக்குமான மறை நீர் தேவையைத் துல்லியமாகக் கணக்கிட்டு அதன்படி ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுத்துள்ளன. இது இந்திய நிலவரம்! முட்டை உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது மகாராஷ்டிரம். நாமக்கல்லுக்கு இரண்டாவது இடம். நாமக்கல்லில் ஒரு நாளைக்கு மூன்று கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் 70 லட்சம் முட்டைகள் தினசரி வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 4.80 கோடி டாலர்கள் அன்னிய செலவாணி கிடைக்கிறது. மூன்று ரூபாய் முட்டைக்கு 196 லிட்டர் மறை நீர் வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தண்ணீர் பற்றாக்குறை கொண்டவை. ஐரோப்பிய நாடுகள் மறைநீர் தத்துவத்தைப் பின்பற்றுபவை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். சரி, சராசரியாக 60 கிராம் கொண்ட ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 196 லிட்டர் மறை நீர் தேவை. மூன்று ரூபாய் முட்டை 196 லிட்டர் தண்ணீரின் குறைந்தபட்ச விலைக்குச் சமம் என்பது எந்த ஊர் நியாயம்?முட்டையினுள் இருக்கும் ஒரு கிராம் புரோட்டீனுக்கு 29 லிட்டர் மறை நீர் தேவை. ஒரு கிலோ பிராய்லர் கோழிக் கறி உற்பத்திக்கான மறை நீர் தேவை 4325 லிட்டர். சென்னை கதைக்கு வருவோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான கார்களைத் தயாரித்து அவர்கள் நாடு உட்பட வெளிநாடுகளுக்குஏற்றுமதி செய்கின்றன. ஏன்? அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா? இடம்தான் இல்லையா? உண்டு. இங்கு மனித சக்திக்கு குறைந்த செலவு என்றால், நீர்வளத்துக்கு செலவே இல்லை. 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கான மறை நீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள். இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்களில் 72 % வேலூர் மாவட்டத்தில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் 2013-14-ம் ஆண்டில் தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கு 850 கோடி டாலருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 5,500 கோடி ரூபாய்க்கு தோல் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன. அன்னிய செலவாணி வருவாய் ஆண்டுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய். ஒரு எருமை அல்லது மாட்டின் ஆயுள்கால மறை நீர் தேவை 18,90,000 லிட்டர். 250 கிலோ கொண்ட அக்கால்நடையில் இருந்து ஆறு கிலோ தோல் கிடைக்கும். ஒரு கிலோ தோலை பதனிட்டு அதனை செருப்பாகவோ கைப்பையாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் மறை நீர் தேவை. பனியன், ஜட்டி உற்பத்தியில் முதலிடம் திருப்பூருக்கு.ராக்கெட் தயாரிக்கும் வல்லரசுகளுக்கு ஜட்டி தயாரிக்க தெரியாதா? 250 கிராம் பருத்தி உற்பத்திக்கான மறை நீர் தேவை 2495 லிட்டர்கள். ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 10,000 லிட்டர் மறை நீர் தேவை. தண்ணீருக்கு எங்கு கணக்கு? ஒரு பொருளின் விலை என்பது அதன் எல்லா செலவுகளையும் உள்ளடக்கியதுதானே? அப்படி எனில், பெரும் நிறுவனங்கள் எல்லாம் தண்ணீருக்கு மட்டும் ஏன் அதன் விலையை செலவுக் கணக்கில் சேர்ப்பது இல்லை. ஏனெனில், நம்மிடம் இருந்து இலவசமாகத் தண்ணீரைச் சுரண்டி நமக்கே கொள்ளை விலையில் பொருட்களை விற்கின்றன அந்நிறுவனங்கள். இப்படி எல்லாம் முட்டையில் தொடங்கி கார் வரைக்கும் கணக்கு பார்த்தால் நாட்டின் வளர்ச்சி என்னவாவது? நாம் என்ன கற்காலத்திலா இருக்கிறோம் என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. கண்ணை மூடிக்கொண்டு பொத்தாம்பொதுவாய் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வேண்டாம் என்கிறது மறை நீர் பொருளாதாரம். மறை நீருக்கு மதிப்பு கொடுத்திருந்தால் உலகின் பணக்காரர்களிடம் பட்டியலில் என்றோ இடம் பிடித்திருப்பான் இந்திய விவசாயி. இனியாவது இந்திய அரசு மறை நீர் தத்துவத்தை உணர வேண்டும். Relaxplzz ![]() |
Posted: 24 Jan 2015 06:50 AM PST |
Posted: 24 Jan 2015 06:45 AM PST பையன் : அம்மா எதிர் வீட்டு ஆண்டி பேரு என்னம்மா? அம்மா : விமலாடா.. . . . . . . . . . . . . . . . . பையன் : ஆனா பாரே.. அப்பாவுக்கு இது கூட தெரிய மாட்டேதுங்கும்மா அந்த ஆண்டிய "டார்லிங்"னு கூப்பிடுறார். . . . # பயபுள்ள எப்படி கோத்து விடுது பாருங்க. :P :P |
Posted: 24 Jan 2015 06:40 AM PST |
Posted: 24 Jan 2015 06:30 AM PST |
உண்மைதான Posted: 24 Jan 2015 06:20 AM PST |
Posted: 24 Jan 2015 06:10 AM PST சிரிக்க மட்டும் :D சர்ச்சில் திருமணம் நடந்து கொண்டிருந்தது. வந்திருந்தவர்களில் ஒரு சிறுமி, தனது அம்மாவிடம் கேட்டாள்: ''அம்மா, ஏன் கல்யாணப் பொண்ணு வெள்ளைக் கலர்லே கவுன் போட்டுருக்கு?'' ''வெள்ளைக் கலர் மகிழ்ச்சிக்கு அடையாளம். இன்னைக்கு அந்த பொண்ணுக்கு வாழ்க்கையிலே சந்தோஷமான நாள் இல்லையா? அதனால்தான் வெள்ளைக்கலர் கவுன் போட்டுருக்கு'' ''அப்ப, மாப்பிள்ளை ஏன் கருப்புக் கலர் கோட் சூட் போட்டுருக்காரு?'' ''??????'' இதுக்கு உங்க யார்கிட்டயாவது பதில் இருக்கா....? :P :P Relaxplzz |
Posted: 24 Jan 2015 06:00 AM PST இவர்களின் காதல் வாழக்கையை வென்றது... //வாழ்த்துக்களை பகிர்வோம்// சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது காதல் கணவருக்கு சிறுநீரகத்தை தானம் அளித்ததன் மூலம் அவரை சர்வதேசப் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்ல வைத்து சாதனை புரியச் செய்திருக்கிறார். சென்னையிலுள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் ஹரிகுமார்(28). இவர் தன்னுடன் வேலை பார்க்கும் பெண்ணை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். சந்தோச வாழ்க்கையில் திளைத்த இத்தம்பதியினரின் வாழ்வில் சில மாதங்களிலேயே உடல் நலக்கோளாறு மூலம் பிரச்சினை ஏற்பட்டது. ஹரிக்குமாரின் உடல் நலத்தில் சிக்கல் ஏற்படவே மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்தனர். அப்போது ஹரிகுமாரின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டது தெரியவந்தது. ஆனாலும் நொறுங்கிப் போகாமல் போராடினர் இந்த தம்பதியர். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வது என முடிவாயிற்று. ஆனால் சிறுநீரகம் கிடைப்பது எளிதாக இல்லை. எனினும் மனைவி சரண்யாவே தனது காதல் கணவருக்கு ஒரு சிறுநீரகத்தை தானமாகத் தந்து உயிரைக் காப்பாற்றினார். உடல் நலமடைந்த உடன் சர்வதேச அளவில் சாதனை புரிந்துள்ளார் ஹரிகுமார். தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரில் கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை நடைபெற்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் ஹரிகுமார் பங்கேற்றார். இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட ஹரிகுமார், வட்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று நம் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். இதில் பெரிதும் மகிழ்ந்தது சரண்யாதான். நம் குடும்பத்தில் ஒருவர் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படும் போது குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் சிறுநீரகம் தானம் அளிப்பதே சிறந்தது என தனது அனுபவத்தின் மூலம் கூறியுள்ளார் சரண்யா. உண்மைக்காதல் ஜெயித்ததோடு சர்வதேச அளவில் தங்கப்பதக்கத்தையும் பெற வைத்துள்ளது. Relaxplzz ![]() |
Posted: 24 Jan 2015 05:50 AM PST |
Posted: 24 Jan 2015 05:40 AM PST |
Posted: 24 Jan 2015 05:30 AM PST |
Posted: 24 Jan 2015 05:20 AM PST |
Posted: 24 Jan 2015 05:10 AM PST காதலன்: : " எனக்கு ஒரு பெரிய பிரச்சனை டார்லிங்.. . காதலி :: ".. என்னடா செல்லம் ..? என்ன பிரச்சனை? " . காதலன்: " என் வீட்ல ஒரு எலியை பார்த்தேன்.." . காதலி :: " ஒ..அது சின்ன பிரச்சனை..! ஜஸ்ட் ஒரு எலிப்பொறி வெச்சுட்டா போச்சு.." . காதலன்: " எங்க வீட்ல எலிப்பொறி இல்லையே.." . காதலி :: ". அதனால் என்ன..! புதுசா ஒன்னு வாங்கிட்ட போச்சு .." . காதலன்: "..எங்கிட்ட இப்போ வசதி இல்லையே .." . காதலி :: "நான் வாங்கி தரேன் .. . காதலன்: ".. சூப்பர் ..தேங்க்ஸ் .." . காதலி :: ".. ஆனால் ...அதில கொஞ்சம் ப்ரெட் துண்டு வெச்சுடு.. அப்பதான் எலி வந்து மாட்டிக்கும் .." . காதலன்: "..எங்க வீட்ல ப்ரெட் இல்லையே ..!" . காதலி :: ".. நான் வாங்கி தரேண்டா..பட்..! ப்ரெட் மேல கொஞ்சம் ஆயில் தடவி வெச்சுடு ..ஓகே யா ?".. . காதலன்: "..ஆனா..! எங்க வீட்ல ஆயில் இல்லையே ..!" . காதலி :: " பரவால்ல டா ..! கொஞ்சம் சோறு வடிச்ச கஞ்சிய ஊத்திடு ..ஓகே வா ? . காதலன்: ".. ஓகே தான்..பட் ..எங்க வீட்ல அரிசி இல்லையே ..! . ( காதலி டென்ஷனாகி விடுகிறார் ) . காதலி :: ".. ஒன்னுமிலாத அந்த வீட்ல அந்த அறிவுகெட்ட எலி என்னத்ததான் :P :P ;-) .." Relaxplzz |
Posted: 24 Jan 2015 05:00 AM PST ஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்? சமீபத்தில் சிக்கன் பிரியாணியுடன் வேர்க்கடலையும் சேர்த்துச் சாப்பிட்ட சிறுவன் இறந்து போன செய்தியைப் படித்தேன். ஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்? எந்த காம்பினேஷன் உணவுகளைச் சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்படும்? பதில் சொல்கிறார் டயட்டீஷியன் புவனேஸ்வரி இந்த உணவுகளைச் சாப்பிட்டதால்தான் ஃபுட் பாய்சன் ஏற்பட்டது என்பது தவறான தகவல். சாப்பிட்ட உணவில் என்ன பிரச்னை என்றுதான் பார்க்க வேண்டும். வேர்க்கடலையோ, பிரியாணியில் இருந்த சிக்கன் பீஸோ கெட்டுப் போயிருக்கலாம். இரண்டையும் சேர்த்துச் சாப்பிட்டதால்தான் இறந்து போனான் என்ற தகவலில் உண்மையில்லை. இன்றைக்கு ஃபுட் பாய்சன் அதிகம் நடக்கிறது. புரதம் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் கெட்டுப்போகும் தன்மை கொண்டவை. வேர்க்கடலை, பால், அசைவ உணவு வகைகள், எண்ணெய் எல்லாம் சீக்கிரமே கெட்டுப் போகும். எண்ணெயில் பொரித்த உணவுகளை சேர்த்து வைத்து சாப்பிட்டால் ஆபத்தும் சேர்ந்து வரும். மழை, பனிக்காலத்தில் உணவுகள் கெட்டுப் போகக் காரணமாக இருப்பவை பூஞ்சைகள். அரிசி, பருப்பு போன்ற கிச்சனுக்குள் இருக்கும் பொருட்களுக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளும் இந்தப் பூஞ்சைகள் பொருளையும் கெடுத்து, நோய்களையும் கொடுத்துவிட்டுப் போகும். மளிகைப் பொருட்களில் ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. ஃப்ரிட்ஜுக்குள்தானே இருக்கிறது என்கிற நினைப்பு வேண்டாம். ஃப்ரிட்ஜில் ஒரு பொருளில் இருக்கும் பூஞ்சை மற்ற உணவுப் பொருட்களுக்கும் பரவிவிடும். கிச்சன் பொருள்களில் பூச்சிகள், பூஞ்சைகள் இருப்பது தெரிந்தால் அதை வெயிலில் உலர்த்தி மறுபடியும் பயன்படுத்துவார்கள். வெயிலில் காய வைப்பதால் பூஞ்சைகள் மறைந்துவிடாது. அவற்றை உடனடியாக கொட்டிவிடுவது நல்லது. எக்ஸ்பயரி ஆன பொருள்களைப் பயன்படுத்தினாலும் ஃபுட் பாய்சன் ஏற்படும். சிப்ஸ் வகைகளை வாங்கும்போது கவனமாக இருங்கள். எண்ணெயில் இருந்து கெட்டுப்போன வாசனை வந்தால் அதைச் சாப்பிடுவது ஆபத்து. கெட்டுப்போன பழங்களுக்கும் இதே கதிதான். காய்கறிகள், பழங்களை ஃப்ரெஷ்ஷாக வாங்கி பயன்படுத்த வேண்டும். ஃப்ரிட்ஜில் உணவுகளை அடைத்து வைக்காமல், கொஞ்சமாக சமைத்துச் சாப்பிடப் பழகுங்கள். பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு முடிந்தவரை ஸ்நாக்ஸை நீங்களே தயாரித்து அனுப்புங்கள். கடையில் வாங்கிச் சாப்பிடுவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். மீன் சாப்பிட்ட பிறகு தயிர் சாப்பிடக் கூடாது, சிக்கன் சாப்பிட்டதும் பால் சாப்பிடக் கூடாது போன்ற கட்டுக்கதைகளைத் தூக்கி ஓரமாக வைத்து விட்டு, ரிலாக்ஸ் ஆகுங்கள். Relaxplzz ![]() |
Posted: 24 Jan 2015 04:50 AM PST |
Posted: 24 Jan 2015 04:40 AM PST |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment