Relax Please: FB page daily Posts |
- குட்டிக்கதை: அக்பரிடம் ஓர் அறிவாளி சவால் விட்டார். “என் வேலைக்காரன் பெருந்தீனிக...
- ஓட்ஸ் என்னும் அரக்கன் :- இன்றைய நவீன உணவு முறையில் ஓட்ஸ் என்பது அத்தியாவசிய உணவ...
- மிருகக் காட்சி சாலையில் புலி ஒன்று, பார்வையாளரில் ஒருவனைக் கொன்றுவிட்டது. அதைக்...
- ஒற்றுமை வர்ற மாதிரி தெரியுதே...? :P :P
- நம்பிக்கை கதை... --------------------------- ஒரு இளைஞன் தன்னை சீடனாக சேர்த்துக்...
- :) Relaxplzz
- :) Relaxplzz
- படிக்காத பாமரன் முட்டாளும் அல்ல..... படித்தவர்கள் அனைவரும் அறிவாளிகளும் அல்ல.......
- உபயோகமான செய்தி, .. ஒருநாள் உங்களுக்கே உதவலாம்.....! நீங்கள் செல்லும்போது வழியி...
- இது அரசு உத்தரவு :P :P
- :) Relaxplzz
- ஆப்பிள் மேல் எதற்காக sticker ஒட்டி உள்ளது..?. PLU code (price lookup number) இத...
- மின்சாரத்திற்கு அல்லாடும் தமிழகத்தில்.. தில்லான தள்ளுவண்டிக்காரர்..! விழுப்புரம...
- மீத்தேன் ஆபத்தை விளக்கும் காணொளி.. தயவுசெய்து பகிருங்கள்.... நன்றி! எதை எதையோ ப...
- இந்த பிஞ்சு மழலையில் முகபாவங்கள் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- தமிழ் எண்களை கொண்ட கடிகாரம்...
- ;-)
- ■ நவீன தாம்பத்தியம் ■ அவள் தன் உடலைக் கொடுத்தாள் தன் மனதைக் கொடுத்தாள் தன் தூக்...
- பேஷன் காலம் ........ ரஜினிகாந்த் சிகரெட் பேஷன் .............. இந்தியாவிலேயே நம...
- ஒற்றைத் துணி எடுக்க அலமாரி திறக்கையில் உள்ளிருக்கும் ஒட்டுமொத்தமும் சரிந்து தலைய...
- (y) Relaxplzz
- அமைதியாய் இருக்க வேண்டிய தருணங்கள்.. தெய்வத்தை வழிபடும்பொழுது ! குரு போதனை செய...
- :P Relaxplzz
- ஹா ஹா ஹா. இது உண்மைதான். இன்னைக்கு திங்ககிழமை வேற :P :P
- :) Relaxplzz
- மகன் : அப்பா ஓரின சேர்கை என்றால் என்ன ? அப்பா : டாய் இதெல்லாம் தேவையா .. போய் ப...
- மீத்தேன் எனும் அரக்கன் // Share please // நாம் உண்டு குடிக்க பயன்படுத்தம் காவிர...
- ஹா ஹா.. செம ஐடியா :P :P
- விவசாயம் தொழில் மட்டும் அல்ல அது ஒரு கலை.! உழவன் ஒவ்வொரு நாற்று நடும் போது தன்...
Posted: 08 Dec 2014 09:15 AM PST குட்டிக்கதை: அக்பரிடம் ஓர் அறிவாளி சவால் விட்டார். "என் வேலைக்காரன் பெருந்தீனிக்காரன்! அவனை ஒரு மாதம் வைத்திருந்து ஊட்டச்சத்துமிக்க உணவுகளைக் கொடுங்கள். அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது!" பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார் . மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது. மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது. அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார், "அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன். கூண்டின் பூட்டு சரியாக இல்லை என்று சொன்னேன். அச்சம் காரணமாய் ஊட்டச்சத்து உடலில் ஒட்டவில்லை." 'அச்சமின்மையே ஆரோக்கியம்!' 'அச்சத்தை நீக்கி ஆரோக்கியம் வளர்ப்போம் நண்பர்களே !!' @relaxplz |
Posted: 08 Dec 2014 09:00 AM PST ஓட்ஸ் என்னும் அரக்கன் :- இன்றைய நவீன உணவு முறையில் ஓட்ஸ் என்பது அத்தியாவசிய உணவு என ஆகிவிட்டது. அதுவும் நீரிழிவு நோயாளிகள்,உடல் எடை குறைப்பு முயற்சியில் உள்ளவர்கள் ஓட்ஸ் சாப்பிடுவதை பெருமையாக நினைக்கிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்வரை நம்நாட்டில் ஓட்ஸ் இல்லை. ஆனால் இன்று ஆண்டுக்கு சில ஆயிரம் கோடிகளுக்கு விற்பனை ஆகிறது. இதற்கு பின்னால் பன்னாட்டு வணிக மோசடி உள்ளது. ஓட்ஸ் ஆஸ்திரேலியாவில் பெரும்பான்மையாகவும் , ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும் விளையும் ஒரு பயிர் . அதை அப்படியே உணவாக சாப்பிட முடியாது . சில வழிமுறைகளில் தட்டையாக மாற்றப்படுகிறது . அதையும் கூட நம்ம ஊர் உணவு போல அதிக அளவில் எடுத்துக்கொள்ள முடியாது . சில கிராம் மட்டுமே ( ஸ்பூன் அளவு ) எடுத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிடுகிறோம் . அதிலும் சத்து எதுவும் கிடையாது . பசியை கட்டுபடுத்தும் குணம் மட்டுமே இதற்கு உண்டு . அதிக விலை கொடுத்து வாங்கும் ஓட்ஸ் -ஐ விட நம் ஊர் ராகியில் பல மடங்கு சத்து உள்ளது . சுமார் ஒரு கிலோ ராகி சாப்பிடுவது 4 கிலோ ஓட்ஸ் சாப்பிடுவதற்கு சமம் . ஒரு கிலோ ராகி மாவு வெறும் 35 ரூபாய் தான் . 4 கிலோ ஓட்ஸ் 140*4= 560 ரூபாய் . எவ்வளவு மடங்கு விலையில் வித்தியாசம் பாருங்கள் . எங்கோ ஆஸ்திரேலியாவில் விளையும் ( அவர்கள் அதிகம் சாப்பிடுவது கிடையாது ) ஓட்ஸை நாம் சாப்பிடுவதில் MNC கொள்ளை அதிக அளவில் உள்ளது . சில ஆண்டுகளாக போலி விளம்பரங்கள் மூலமும் , மருத்துவர்கள் மூலம் கட்டாயப் படுத்தியும் நம்மை அடிமை ஆக்கி விட்டன . [ குறிப்பாக பெப்சி நிறுவனத்தின் QUAKER பிராண்ட் . குளிர்பான தொழிலில் இந்திய நிறுவனங்களை ஒழித்தது போல உணவில் இந்திய பாரம்பரிய உணவுகளை ஒழிக்கப் பார்க்கிறது . ] அந்தந்த நாடுகளிருந்து இங்கு நம் இந்தியாவுக்கு வர ஆகும் எரிபொருள் செலவு , MNC நிறுவனங்களின் கொள்ளை லாபம் எல்லாம் சேர்த்து பயனற்ற பொருளை அநியாய விலைக்கு நம் தலையில் கட்டுகின்றன. அதைவிட ராகி , கம்பு , சோளம் , திணை , வரகு , சாமை போன்ற நம் நாட்டு தானியங்கள் எல்லாம் பலமடங்கு சத்துள்ளவை . விலையும் குறைவு !!! சத்துநிறைந்த நம் பாரம்பரிய உணவு இருக்க சக்கையை உண்டு நம் பணத்திற்கும் உடல்நலத்திற்கும் வேட்டு வைக்கலாமா !!! ? இதை என்றென்றும் சிந்தையில் இருத்துங்கள் !!! அந்நிய பொருட்களை அநியாய விலைக்கு வாங்குவதை அறவே நிறுத்துங்கள் !!! Relaxplzz ![]() |
Posted: 08 Dec 2014 08:50 AM PST மிருகக் காட்சி சாலையில் புலி ஒன்று, பார்வையாளரில் ஒருவனைக் கொன்றுவிட்டது. அதைக் கண்டு பக்கத்து கூண்டில் இருந்த எலி கேட்டது. எதுக்கு அவனைக் கொன்னேனு… புலி : அந்தப் பரதேசி மூணு மணி நேரமா என்னைப் பார்த்துச் சொல்றான் "எவ்ளோ பெரிய பூனை"ன்னு. Relaxplzz |
Posted: 08 Dec 2014 08:40 AM PST |
Posted: 08 Dec 2014 08:37 AM PST நம்பிக்கை கதை... --------------------------- ஒரு இளைஞன் தன்னை சீடனாக சேர்த்துக்கொள்ளும்படி சூஃபி ஞானி ஒருவரிடம் கேட்டான். 'என்னை முழுமையாக நம்புகிறவர்களை மட்டுமே நான் என் சீடனாக ஏற்றுக் கொள்வேன்' என்றார் அந்த ஞானி. அதற்கு அந்தச் சீடன், 'நான் உங்களை முழுமையாக நம்புகிறேன். என்னை சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள்' என்றான். 'சில நாட்கள் கழித்து பதில் சொல்கிறேன், அதுவரை இங்கேயே தங்கியிரு' என்று கூறினார் ஞானி. மறுநாள் காலை, ஒரு பெரிய மரத்தின் அடியில் அந்த சூஃபி ஞானியின் அருகே ஒரு பெண் அமர்ந்து, மதுவை ஒரு கோப்பையில் அவருக்காக ஊற்றிக் கொண்டிருப்பதைக் கண்டான் அந்த இளைஞன். இதைப் பார்த்தவுடன், பெண் சகவாசமும், மதுப் பழக்கமும் உள்ள அந்த ஞானி, ஒரு ஏமாற்றுக்காரர் என்ற முடிவுக்கு வந்தான் இளைஞன். அந்த இளைஞனின் முகத்தில் காணப்பட்ட அவநம்பிக்கையை கவனித்த அந்த ஞானி அருகே அழைத்தார். அந்த பெண்ணின் முகத்திரையை விலக்கினார். அப்பெண் அந்த ஞானியின் தாயார். மது பாட்டிலில் இருந்ததை அவனிடம் குடிக்கக் குடித்தார். அதைக் குடித்துப் பார்த்து அது வெறும் தண்ணீர் என்பதை உணர்ந்தான் அந்த இளைஞன். ஞானி கூறினார், 'நீ கற்பனை செய்த அழகான பெண் எங்கே?உன்னால் ஒரு மூதாட்டியைக் கற்பனை செய முடியாதது ஏன்? மது பாட்டிலில் இருந்தது வெறும் தண்ணீர் என்று ஏன் நினைக்கவில்லை' என்றார். தன்னை மன்னிக்கும்படி வேண்டினான் அந்த இளைஞன். 'உன்னிடம் உள்ள நம்பிக்கை வற்புறுத்தி ஏற்படுத்தப்பட்டது. கட்டாயத்தின் பேரில் உள்ள நம்பிக்கை இப்பொழுதோ, எப்பொழுதோ நிச்சயம் உடைந்து போகும். உனது நம்பிக்கை, ஒரு முயற்சி. உண்மையான நம்பிக்கை ஒரு முயற்சியாக இருக்க முடியாது. நம்பிக்கை வலுக்கட்டாயமாக இருக்கக் கூடாது. இயற்கையாக வரும்போது அது அழகாக இருக்கும். அப்போது அதை எதனாலும் அழிக்க முடியாது' என்று கூறி அனுப்பி வைத்தார். ''நம்பிக்கை என்பது உண்மையாக இருக்க வேண்டும். வேறு வழியில்லாமல் நம்புவது என்பது நிலையில்லாதது. அந்த நம்பிக்கை எப்போது வேண்டுமானாலும் அவநம்பிக்கையாக மாறிவிடும்.'' ![]() "நீதி கதை" |
Posted: 08 Dec 2014 08:30 AM PST |
Posted: 08 Dec 2014 08:30 AM PST |
Posted: 08 Dec 2014 08:00 AM PST படிக்காத பாமரன் முட்டாளும் அல்ல..... படித்தவர்கள் அனைவரும் அறிவாளிகளும் அல்ல.... நான் காய்கறி வாங்க கடைக்கு சென்றேன்.. அங்க எனக்கு முன் ஒரு பெரியவர் வாங்கி கொண்டிருந்தார்.... வெள்ளை வேட்டி(பளுப்பு நிறமாக மாறியது).. சந்தனகலர் கட்டம் போட்ட சட்டை... கையில் ஒரு கருப்பு குடை... காலில் இப்பவோ அப்பவோ என உயிர் ஊசலாடி கொண்டிருக்கும் செருப்பு.... சில காய்கறிகளை வாங்கினார்.. கடையில் இருப்பவர் விலை சொன்னதும் இடுப்பில் கட்டி இருந்த பெல்ட்டிலிருந்து பணத்தை எடுத்து இருமுறை எண்ணி கொடுத்தார்.... கடைக்காரர் பாலிதீன் பை எடுத்தார்... பெரியவர்: வேண்டாம்பா எங்கிட்டயே இருக்கு... கடைக்காரர்: பழைய பாலீத்தின் பைய ஏன் தூக்கிட்டு திரியுறிக்க?..... உங்களுக்கு கொடுக்கிற ஒரு பையில் நான் கொறஞ்சிடமாட்டேன்... பெரியவர்: நீ பெரிய கர்ணபிரபுன்னு எனக்கு தெரியும்... இந்த கருமத்தல(பாலிதீன்) வீடு குப்பையாச்சி... ஊரு குப்பையச்சி... நாடு குப்பையாச்சி... இந்த உலகமே குப்பையாச்சி... மண்ணுல போட்டா மண்ண கெடுத்துடுது... எரிச்சிவிட்டா காத்த கெடுத்துடுது... இலவசமா கிடைக்குது.. பாவிக்க(பயன்படுத்த) சுலபமா இருக்கு... அதுக்காக ஏன் நல்லா இருக்குறத குப்பைல போடனும்.... அந்த பை எவ்வளவு காலம் உழைக்குதோ அதுவரைக்கும் பாவிச்சிட்டு இனி முடியாங்கும் போது தூக்கி குப்பைல போடு.... இப்படி செஞ்சாலே கொட்டுற முக்காவாசி குப்பைங்க கொறஞ்சிடும்... பயன்படுத்திய பொருளை எடுத்துவச்சி திரும்ப பயன்ப்டுத்துவதில் என்ன வெட்டம்?...(முனுமுனுத்து கொண்டே சென்றார்...) சுட்டிவிரலில் ஊசியால் குத்தியதுபோல் சுள் என்று இதயத்தில் ஒரு வலி.... படித்தவர்கள்..... பட்டத்துக்கு மேல் பட்டம் வாங்கி குவித்தவர்கள்.... நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுபவர்கள்... அனைத்து மொழி செய்திதாளையும் தினந்தோறும் தவராமல் படித்து பொதுஅறிவை வளர்ப்பவர்கள்.... இதில் எத்தனை பேர் இதை யோசிச்சிருப்பாங்க..... எத்தனை பேர் பின்பற்றுவாங்க..... பயன்படக்கூடிய பொருள் குப்பைக்கு போவதை தடுத்தாலே... சுற்றுசூழல் பிரச்சனை பாதியாக குறையும் என்று அவருக்கு தெரிந்திருக்கிறது.... 5 நிமிடத்திற்கு முன் சாதாரண பாமரனாக தெரிந்த அவர்... 5 நிமிடத்திற்கு பிறகு மாமனிதராக தெரிந்தார்.. அன்றிலிருந்து நானும் அதனை பின்பற்ற முயலுகிறேன்... - துரை.அதிரதன் Relaxplzz ![]() |
Posted: 08 Dec 2014 07:45 AM PST உபயோகமான செய்தி, .. ஒருநாள் உங்களுக்கே உதவலாம்.....! நீங்கள் செல்லும்போது வழியில் ஏதாவது முக்கிய ஆவணங்களான, * PASSPORT * DRIVING LICENCE, * PAN CARD, * VOTER ID, * RATION CARD, * BANK PASSBOOK, * ATM CARD முதலியவற்றில் ஏதாவதை கண்டால், உடனடியாக அவற்றை அருகில் உள்ள POST BOX - ல் போட்டு விடவும். அஞ்சலகம் அதனை உரிமையாளர்களிடம் சேர்த்து விடும். அதற்குரிய தொகையை உரியவர்களிடம் பெற்று கொள்ளும்... உதவும் மனப்பான்மை கொண்ட, நல்ல உள்ளங்கள் இதனை அ SHARE செய்து மற்றவர்களுக்கும், விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இதனை SHARE செய்வதினால் எனக்கென்ன பயன் என்று நினைத்து, இதனை SHARE செய்யாமல் செல்லும் சகோதர சகோதரிகளே...... ஒரு நாள் இது உங்களுக்கும் உதவக்கூடும் என்பதனை மறந்திடவேண்டாம் Relaxplzz ![]() |
Posted: 08 Dec 2014 07:40 AM PST |
Posted: 08 Dec 2014 07:30 AM PST |
Posted: 08 Dec 2014 07:15 AM PST ஆப்பிள் மேல் எதற்காக sticker ஒட்டி உள்ளது..?. PLU code (price lookup number) இதனை வைத்து நாம் சாப்பிடும் ஆப்பிள் இயற்கையானதா, மரபணு மாற்று உற்பத்தியா, chemical உரங்களில் விளைந்ததா என அறிய முடியும். எவ்வாறு அறிவது: 1. PLU code ல் 4 எண்கள் இருந்தால் - முழுக்க வேதி உரம் கலந்தது... 2. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "8" என ஆரம்பித்தால் அது மரபணு மாற்றம் செய்யபட்டது. 3. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "9" என ஆரம்பித்தால் அது முழுக்க இயற்கையானது. இனி ஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும். அந்த sticker ம் ஆபத்தானதே. எடுத்து விட்டு சாப்பிடுங்க..!! Relaxplzz ![]() |
Posted: 08 Dec 2014 07:00 AM PST மின்சாரத்திற்கு அல்லாடும் தமிழகத்தில்.. தில்லான தள்ளுவண்டிக்காரர்..! விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரில் நிற்கிறது தள்ளுவண்டி ஜூஸ் கடை. இந்த கடையின் மேல்கூரை சூரிய ஒளிமூலம் மின்சாரம் தயாரிக்கும் solar panel-களால் ஆனது. இந்தக் கடையின் உரிமையாளர் ராமதாஸ், தனக்கு வித்தியாசமாக தோன்றிய ஐடியாவை பாண்டிச்சேரியில் உள்ள ஒரு நிறுவனத்தில் சொல்லி செயல்வடிவம் கொடுத்துள்ளார். 5 அடி அகலம், 10 அடி நீளம் என 50 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கும் solar panel மூலம் 1000 watts-க்கு உட்பட்ட மிக்ஸி, சிறிய அளவிலான பிரீசர் (Freezer) , மின் விளக்கு போன்ற கடைக்கு தேவையான சாதனங்கள் இயங்குகின்றன. இதனால் வழக்கமாக வீட்டு மின்சாரத்தை உறிஞ்சி பிறகு கடையில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள் தேவையில்லை. டீசலை உறிஞ்சும் ஜெனரேட்டர்களும் தேவையில்லை. சோலார் பேனல்களுக்கு 25 வருடங்கள் கியாரண்டி இருப்பதால், முதல்முறை செலவுசெய்தால் பிறகு 25 வருடங்கள் வரை செலவு செய்யத் தேவையில்லை. 'மற்ற தள்ளுவண்டி கடைகளில் தினசரி 300 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை மின் சக்திக்கென ஆகும். ஆனால் எனக்கு அந்தப்பிரச்சினை இல்லை. இந்த சோலார் பேனலுடன் கூடிய கடையை வடிவமைக்க ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ஆகியது. காலப்போக்கில் நான் போட்ட பணம் வந்துவிடும். சுற்றுச்சூழலை மாசுப்படுத்தாத மன நிம்மதியும் எனக்கு கிடைக்கும்' என்கிறார் ராமதாஸ். ஒரு நகரத்தில் உள்ள தள்ளுவண்டி கடைகள் அனைத்தும் இதுபோன்று வடிவமைக்கப்பட்டால், சேமிக்கப்படும் மின்சாரம் மற்றும் டீசலின் அளவு எவ்வளவு இருக்கும் என்று நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது. குஜராத்தில் நர்மதா நதியின் மேல் போடப்பட்டுள்ள சோலார் திட்டத்தைப் பார்த்து அதிசயத்திருக்கிறோம். அதைவிட கூடுதலாக பல வாய்ப்புகள் தமிழக்த்தில் இருக்கின்றன என்பதற்கு இந்த தள்ளுவண்டி கடை ஒரு உதாரணம். Relaxplzz ![]() |
Posted: 08 Dec 2014 06:45 AM PST மீத்தேன் ஆபத்தை விளக்கும் காணொளி.. தயவுசெய்து பகிருங்கள்.... நன்றி! எதை எதையோ பகிரும் நாம், நம்முடைய வாழ்வாதார பிரச்சனையைப் பற்றின இந்த பதிவையும் பகிரலாமே?! தயவுசெய்து பகிருங்கள்! நன்றி! ![]() மீத்தேன் ஆபத்தை விளக்கும் காணொளி.. தயவுசெய்து பகிருங்கள்.... நன்றி!எதை எதையோ பகிரும் நாம், நம்முடைய வாழ்வாதார பிரச்சனையைப் பற்றின இந்த பதிவையும் பகிரலாமே?! தயவுசெய்து பகிருங்கள்! நன்றி! |
Posted: 08 Dec 2014 06:45 AM PST |
Posted: 08 Dec 2014 06:30 AM PST |
Posted: 08 Dec 2014 06:14 AM PST |
Posted: 08 Dec 2014 04:31 AM PST |
Posted: 08 Dec 2014 04:15 AM PST ■ நவீன தாம்பத்தியம் ■ அவள் தன் உடலைக் கொடுத்தாள் தன் மனதைக் கொடுத்தாள் தன் தூக்கத்தைக் கொடுத்தாள் தன் விசுவாசத்தைக் கொடுத்தாள் தன் உழைப்பைக் கொடுத்தாள் தன் சம்பாத்தியத்தைக் கொடுத்தாள் தன் செலவுகளின் கணக்கினைக் கொடுத்தாள் அவனுக்கு நிறையவே இல்லை அவள் மின்னஞ்சலின் கடவுச் சொல்லைக் கொடுக்கும் வரை ■ மனுஷ்யபுத்திரன் ■ `இதற்கு முன்பும் இதற்குப் பிறகும்' தொகுப்பிலிருந்து. Relaxplzz ![]() எழுத்தாளர் வரிகள் சில |
Posted: 08 Dec 2014 03:59 AM PST பேஷன் காலம் ........ ரஜினிகாந்த் சிகரெட் பேஷன் .............. இந்தியாவிலேயே நம்பர் ஒன் ஸ்டைல் நடிகர் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிதான்.ரஜினி என்றாலே கலைந்த தலைமுடியும், சிகரெட்டை தூக்கிப் போடும் ஸ்டைலும்தான் நினைவுவரும்.மூன்று முடிச்சு படத்தில் ரஜினிகாந்த் ஆன்டி ஹீரோவாக சிறப்பாக நடித்திருந்தார். சிகரெட்டை மேலே தூக்கிப் போட்டு, வாய்க்கு கொண்டு வரும் ஸ்டைலை இந்தப் படத்தில் தான் ரஜினி அறிமுகம் செய்தார்.70களின் 80களின் சிகரெட் வித்தையால் ரசிகர்களை ஈர்த்தவர் பின் குறிப்பு ............ இன்றே புகைப் பழக்கத்தை கைவிட வேண்டும். மது அருந்தாமலிருக்க வேண்டும்," என்று வேண்டுகோள் விடுத்தார் ரஜினி. இந்த வேண்டுகோள் ரசிகர்கள் மத்தியில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியுள்ளது. மாநிலம் முழுவதும், ஆங்காங்கே சிகரரெட் பழக்கத்துக்கு குட்பை சொல்லி, சிகரெட்டுகளை ஒன்றாக சாலையில் கொட்டி எரித்து வருகின்றனர் ரசிகர்கள். இதில் சில பொதுமக்களும் கலந்து கொண்டு, புகைப்பழக்கத்தை விடுவதா சபதம் எடுத்துள்ளனராம். Relaxplzz ![]() அந்தக் காலத்தில |
Posted: 08 Dec 2014 03:45 AM PST ஒற்றைத் துணி எடுக்க அலமாரி திறக்கையில் உள்ளிருக்கும் ஒட்டுமொத்தமும் சரிந்து தலையில் வழிவது போல்... எங்கிருந்தோ வரும் பாடலின் ஒரே ஒரு வரி போதுமானதாய் இருக்கிறது .. உன் நினைவு முழுவதையும் சரித்து என்னுள் வழியவிட .... - Shanmuga Vadivu. ![]() "காதல் கவிதைகள்" - 3 |
Posted: 08 Dec 2014 03:30 AM PST |
Posted: 08 Dec 2014 03:15 AM PST அமைதியாய் இருக்க வேண்டிய தருணங்கள்.. தெய்வத்தை வழிபடும்பொழுது ! குரு போதனை செய்யும்பொழுது ! பெற்றோர் பெரியோர் பேசும்பொழுது ! தாய் தந்தை சகோதரர் கண்டிக்கும்போழுது ! ஒருவர் உன்னிடம் பிறரைப்பற்றி புறம் கூறும்பொழுது ! ஒருவர் உன்னைப் புகழும்பொழுது! ஒருவர் உன்னை இகழும்பொழுது! ஒருவர் உனது கோப உணர்வைத் தூண்டும்போழுது ! '' அமைதி காப்பவன் ஆனந்தம் அடைவான் ! ஆனந்தம் அடைந்தவன் அமைதி பெறுவான் ! ' Relaxplzz ![]() வாழ்வியல் |
Posted: 08 Dec 2014 02:52 AM PST |
Posted: 08 Dec 2014 02:40 AM PST |
Posted: 08 Dec 2014 02:30 AM PST |
Posted: 08 Dec 2014 02:16 AM PST மகன் : அப்பா ஓரின சேர்கை என்றால் என்ன ? அப்பா : டாய் இதெல்லாம் தேவையா .. போய் படிடா மகன் : நீங்கள் சொன்னால் அடுத்த நான் வேலையை பார்க்க போவேன் , இல்லையெனில் Internet'l பார்க்க போவேன் .. அப்பா : ஒரே இனத்தை சேர்ந்த இருபாலரும் சேர்வது டா . மகன் : அப்ப , என் இனத்து பெண் என் இனத்து ஆணுக்குதான் உன் ஆண் இனத்து ஆண் உன் இனத்து பெண்ணுக்குதான் என்று சாதி வெறியில் அலையும் எல்லோரும் ''ஓர் இன சேர்கையாளர்களா'' அப்பா ? அப்பா : நீ வார்த்தையை தப்பாய் புரிந்து கொண்டாய் . மகன் : சிறியவர்கள் வார்த்தையைதான் தப்பாக புரிந்து கொள்வோம் நீங்கள் வாழ்க்கையை தப்பாக புரிந்து கொண்டு வாழ்கிறீர்கள்.. - V.Natarajan. Relaxplzz ![]() "மனம் தொட்ட வரிகள்" - 1 |
Posted: 08 Dec 2014 02:00 AM PST மீத்தேன் எனும் அரக்கன் // Share please // நாம் உண்டு குடிக்க பயன்படுத்தம் காவிரி நீரில், நச்சை பாய்ச்சி அழிக்க திட்டம்!! இதுவும் இனப்படுகொலையே!! விவசாயிகளின் போராட்டம் அவர்களின் தொழிலுக்கானது அல்ல... நம் வருங்கால சந்ததியின் உணவுக்காக தான்... இப்பவே குழந்தைகள் கழனியை பார்த்து ஏன் புல் வளர்க்கிறாங்க என கேட்கிறார்கள். வருங்காலத்தில் அரிசின்னா என்னம்மா எப்படி இருக்கும் என கேட்காமல் இருக்க வேலை வாய்ப்பு கிடைக்குமாம் அது சரி ஆனா சோறு திங்குற வாய்ப்பு போயிரும் பரவால்லியா.. நம் தலைமுறையை உணவு பஞ்சத்தில் இருந்து காப்பற்ற இதை தடுத்து நிறுத்துவோம் மக்கள் வாழ்வதற்கு வழி செய்யாவிட்டாலும் பரவாயில்லை புதைப்பதற்கு குழி வெட்டாதீர்கள் வருங்காலத்துல பணக்காரனுக்கும் சோறு இருக்காது.. அது மட்டும் நிதர்சனம்! ப்ளாட் போட்டு கொஞ்ச கொஞ்சமாக விவாசயம் அழிந்தது மீத்தேன் வந்தால் மொத்தமாக அழிந்துவிடும் 1950-களில் கோதுமைக்கு அமெரிக்காவிடம் கையேந்தியது போல்; அரிசிக்கு பிற நாடுகளிடம் கையேந்தும் நிலை வராமல் இருக்க. மண் மலடாகும் என்று புரிந்த பிறகு இதை தடுக்காமல் விடுவோமா ?? அரசியல்வாதிகளுக்கு ஒரு நாள் புரியும் பணத்தை உண்ண முடியாது என்று விவசாயத்தை Farm ville கேமில் மட்டும் காணும் நிலையை வரவிடாமல் தடுப்போம் மீத்தேன் இல்லாம சைக்கிள் மிதிச்சாவது உயிர் வாழலாம் சோறு இல்லாம... ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.. மீத்தேன் வந்தால்.. பதம் பார்க்க ஒரு பருக்கை சோறும் இருக்காது பன்னாட்டு நிறுவனம் காவிரி படுகையில் உறிஞ்சப்போவது தண்ணீரும் வாயுவையும் அல்ல. அது நம் அடுத்த தலைமுறையின் உயிரும் வாழ்க்கையுமே களத்தில் இறங்கி போராடவில்லை என்றாலும் அவர்களுக்கு கை கொடுக்க நாம் இருக்கிறோம் என்றாவது உனர்த்துவோம் #stopmethaneexplorationinkaveridelta "மீத்தேனுக்கு எதிரான பல நண்பர்களின் பதிவுகளின் தொகுப்பு இது" Relaxplzz ![]() |
ஹா ஹா.. செம ஐடியா :P :P Posted: 08 Dec 2014 01:50 AM PST |
Posted: 08 Dec 2014 01:40 AM PST |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment