Monday, 1 December 2014

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


வெள்ளை மான்கள்.. செம அழகு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 01 Dec 2014 09:15 AM PST

வெள்ளை மான்கள்.. செம அழகு..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


ஷாருகான் நடித்த இந்தி படத்தில் தமிழ் பேசும் நாயகியின் தந்தையாக நடிக்க பெரும் தொக...

Posted: 01 Dec 2014 09:10 AM PST

ஷாருகான் நடித்த இந்தி படத்தில் தமிழ் பேசும் நாயகியின் தந்தையாக நடிக்க பெரும் தொகையுடன்
சத்யராஜை அணுகியிருக்கிறார்கள்.

அப்போது சத்யராஜ் போட்ட சில கண்டிஷன்கள்தான் அவர் மேல் இருந்த மரியாதையை மேலும் பல மடங்கு உயர்த்தியது.

அதாவது ' நான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடத்தப்படக்கூடாது .. நீங்கள்
அபடியே படப்பிடிப்பை அங்கு நடத்தினாலும் நான்
அங்கு வரமாட்டேன் ... படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் கூட இலங்கையி நடத்தக்கூடாது .. தமிழ்
நாட்டையோ தமிழர்களையோ கிண்டல்
செய்வது மாதிரியோ இழிவு படுத்துவது மாதிரியோ காட்சிகள் அமையக்கூடாது.. என்று பல கண்டிஷன்களைப் போட்டதோடு அதை காண்டிராக்ட் அக்ரிமென்டிலும் சேர்க்கச் சொல்லியிருகிறார் சத்யராஜ்.

வாழ்த்துக்கள் - சத்யராஜ் சார்..!!!|

Relaxplzz


எச்சரிக்கை! சில மாதங்களுக்கு முன்னர் நடந்த ஒரு உண்மை சம்பவம். ஒரு வீட்டில் சமய...

Posted: 01 Dec 2014 09:00 AM PST

எச்சரிக்கை!

சில மாதங்களுக்கு முன்னர் நடந்த ஒரு உண்மை சம்பவம்.

ஒரு வீட்டில் சமயலறையில் கேஸ் அடுப்பில் குக்கரில்
சமையல் ஆகிக்கொண்டிருக்கும்போது.,

அடுப்புக்கருகே ஒரு கரப்பான் பூச்சி ஓடுவதை கண்ட அந்த சகோதரி ., உடனே சென்று கரப்பான் பூச்சிகளை கொள்ளும் மருந்து ஸ்ப்ரேயை (spray ) கொண்டுவந்து
அதன் மீது அடிக்க துவங்கினார்.ஒருநொடிக்குள் அந்த spray இலிருந்து வெளிவந்த வாயுவுடன் சேர்ந்து வெடித்து அந்த சகோதரி மருத்துவமனையில்உயிருக்கு போராடி இறந்தாள்.

அவளை காப்பாற்ற சென்ற கணவரும் தீப்புண்களோடு மருத்துவமனையில்.

இது போன்ற spray மருந்துகள் ("RAID"..."MORTEIN" போன்ற) எப்போதும் எளிதில் தீப்பற்றக்கூடியசாதனங்கள் என்பதை மறக்க வேண்டாம்.

அவைகளை பயன்படுத்தும்போது அருகில் எதுவும்
எரியும் நிலையில் இருக்க வேண்டாம்.

எச்சரிக்கை.

பிறருக்கும் இச்செய்தியினை அதிகம் ஷேர் செய்யுங்கள்...!

Relaxplzz


(y) Relaxplzz

Posted: 01 Dec 2014 08:55 AM PST

நம் வாழ்க்கையில் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாத 7 கெட்ட பழக்கங்கள்!! 1. நெகட்டிவ்...

Posted: 01 Dec 2014 08:50 AM PST

நம் வாழ்க்கையில் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாத 7 கெட்ட பழக்கங்கள்!!

1. நெகட்டிவ் சிந்தனை
2. தாழ்வு மனப்பான்மை
3. பொய் சொல்வது
4. அடிமைப்படுத்துவது
5. உடல் ரீதியாக பிறரைத் துன்புறுத்துவது
6. அடிமைப்படுத்துவது
7. ???
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் அக்கவுண்ட் வைத்துக் கொள்வது!

:P :P

Relaxplzz

;-) Relaxplzz

Posted: 01 Dec 2014 08:48 AM PST

செம அழகு..

Posted: 01 Dec 2014 08:41 AM PST

செம அழகு..


அர்த்தம் நிறைந்த படம்... புரிந்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 01 Dec 2014 08:35 AM PST

அர்த்தம் நிறைந்த படம்...

புரிந்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 01 Dec 2014 08:30 AM PST

நம்ம டிசைன் அப்படி :D

Posted: 01 Dec 2014 08:25 AM PST

நம்ம டிசைன் அப்படி :D


"சோக்கா சொல்ராங்க" - 2

:P :P Relaxplzz

Posted: 01 Dec 2014 08:20 AM PST

:P :P Relaxplzz


ஒரு கணவனும் மனைவியும் மாலை நேரத்தில் பால்கனியில் அமர்ந்திருக்க,கணவன் மது அருந்தி...

Posted: 01 Dec 2014 08:10 AM PST

ஒரு கணவனும் மனைவியும் மாலை நேரத்தில் பால்கனியில் அமர்ந்திருக்க,கணவன் மது அருந்திக் கொண்டிருந்தான்.

அந்தக் கணவன் மது அருந்தியவாறே சொன்னான்"உன்னை நான் மிக விரும்புகிறேன்;நீ இல்லாமல் என்னால் வாழவே முடியாது.

அப்படி ஒரு வாழ்க்கையை என்னால் நினைத்துப்பார்க்கவே இயலவில்லை"

மனைவி கேட்டாள்"என்ன மிக ரொமாண்டிக் மூட் போல!

நீங்கள் பேசுகிறீர்களா உங்களுக்குள் போன மது பேசுகிறதா?"

கனவன் சொன்னான்"நான்தான் பேசுகிறேன்.மதுவோடு பேசிக் கொண்டிருக்கிறேன்!!"

:P :P

Relaxplzz

1.கல்லூரி உணவகத்தில் சாப்பிடும் தட்டிற்கு பஞ்சம் வந்த போது, கிடைத்த ஒரு தட்டில்...

Posted: 01 Dec 2014 08:01 AM PST

1.கல்லூரி உணவகத்தில் சாப்பிடும் தட்டிற்கு பஞ்சம் வந்த போது, கிடைத்த ஒரு தட்டில் இருவரும் சாபிட்டதுண்டு.

2.உன் உடையை நானும், என் உடையை நீயும் மாற்றி அணிந்ததுண்டு.

3.நீ என் வீட்டில் தங்கி தேர்விற்கு இரவெல்லாம் இருவரும் ஒன்றாய் படித்ததுண்டு.நான் உன் ஊருக்கு வந்து உன் வீட்டில் தங்கி கடைசி வருட ப்ராஜெக்ட் யை முடித்ததுண்டு.

4.கல்லூரி பேருந்து நெரிசலில் உன் மடியில் அமர்ந்து நான் பயணம் செய்ததுண்டு.

5.சட்டை கிழிய சண்டை போட்டாலும் , சட்டென சமாதானம் ஆனதுண்டு.

6.என் தவறுக்கு என்னுடன் சேர்ந்து நீ தண்டனை வாங்கியதுண்டு.

7.என் ரெக்கார்ட் நோட்டில் என் கை எழுத்தை விட, உன் கை எழுத்தே அதிகம் இருக்கும்.

8.உன் புத்தகத்தின் கடைசி அட்டையில் என் கிறுக்கல்களே அதிகம் இருக்கும்.

# இப்படியே சென்ற நான்கு வருட கல்லூரி வாழ்வில், நீ என்ன சாதி என்று நானும் , நான் என்ன சாதி என்று நீயும் கடைசி வரை கேட்கவே இல்லை.

- கனா காண்கிறேன்

Relaxplzz


# படித்ததில் பிடித்தது # - 4

என்ன மச்சான் நம்மாள இன்னைக்கு காணோம்.. ;-)

Posted: 01 Dec 2014 07:49 AM PST

என்ன மச்சான் நம்மாள இன்னைக்கு காணோம்.. ;-)


"அனிமல் ஸ்டோரி"

;-) Relaxplzz

Posted: 01 Dec 2014 07:43 AM PST

இதுதான் தாயின் அன்பு....படத்தின் அர்த்தம் புரிந்தவர்கள் மட்டும் லைக் போடுங்க.......

Posted: 01 Dec 2014 07:40 AM PST

இதுதான் தாயின் அன்பு....படத்தின் அர்த்தம் புரிந்தவர்கள் மட்டும் லைக் போடுங்க.... (y)


கத்தி படம் பார்த்த பிறகு கோக் , பெப்சி போன்ற குளிர் பானங்கள் குடிப்பதை தவிர்பவர்...

Posted: 01 Dec 2014 07:35 AM PST

கத்தி படம் பார்த்த பிறகு கோக் , பெப்சி போன்ற குளிர் பானங்கள் குடிப்பதை தவிர்பவர்கள் மட்டும் இதை Like செய்யவும்..

கணக்கெடுப்பு . :D

:) Relaxplzz

Posted: 01 Dec 2014 07:30 AM PST

:) Relaxplzz

Posted: 01 Dec 2014 07:20 AM PST

இன்னிக்கு ஒரு சேஞ்க்கு திகில் கதை சொல்லுறேன் ஓகே மணி செரியாக 9 அடிக்க நான்கு நி...

Posted: 01 Dec 2014 07:10 AM PST

இன்னிக்கு ஒரு சேஞ்க்கு திகில் கதை சொல்லுறேன்

ஓகே மணி செரியாக 9 அடிக்க நான்கு நிமிடங்கள் இருக்கிறது வானம் இருளை தழுவிக் கொண்டிருகிறது தனது இரு சக்கர வாகனத்தை எடுத்து கொண்டு அந்த ஆள் நடமாட்டம் இல்லாத ரோடில் செல்கிறான் மனதில் ஒரு படபடப்பு, பயம் அதன் வெளிபாடு அவனது மிதிவண்டியீன் வேகம் அதிகரிக்கிறது

அந்த சமயம் சற்று தொலைவில் ஒரு புத்தக கடையை பார்க்கிறான் தனது மிதிவண்டியை நிறுத்திவிட்டு சுற்றி பார்க்கிறான் ஒரு மனிதனையும் காணவில்லை கடைக்குள் செல்கிறான் ஒரு 75 வயது மதிகதக்க முதியவர் ஒருவர் இருக்கிறார் அவன் சில புத்தகங்களை பார்க்கிறான் அவன் கண்ணுக்கு அந்த புத்தகம் தென்படுகிறது அதன் அட்டை படத்தை பார்க்கிறான் அதில் ஒரு மனிதன் தனது இதயத்தை கையில் வைத்துக்கொண்டு இருக்கிறான் அதன் மேல் "வாழ்கையின் கடைசி நிமிடம்"

என்று தலைப்பு இருக்கிறது. அந்த புத்தகத்தின் விலையை கேட்கிறான் அதற்கு அந்த முதியவர் 500 ருபாய் என்று சொல்கிறார் மீண்டும் 500 ரூபாயா என்று அவன் கேட்கிறான் தனது சட்டை பையில் இருந்து 500 நோட்டை எடுத்து அந்த முதியவரிடம் கொடுகிறான். அதை பெற்றுக்கொண்டு அந்த புத்தகத்தை அவன் கையில் கொடுக்கிறார் அவனை பார்த்துவிட்டு இந்த புத்தகத்தின் கடைசி பக்கத்தை மட்டும் பார்க்காதே அப்படி பார்த்தால் உன் உயிருக்கு ஆபத்து என்று சொல்கிறார் ஒரு வித பயத்தோடு அந்த புத்தகத்தை பெற்றுக்கொண்டு தனது வீட்டுக்கு செல்கிறான் உள்ளே சென்று கதவை சாற்றிவிட்டு அந்த புத்தகத்தை நாற்காலியில் வைத்துவிட்டு அருகில் உள்ள தனது படுகையில் சாய்கிறான் கண்கள் இருளுகின்றது திடிரென்று கண்விழிக்கிறான் மின் விசிரியின் வேகத்தினால் அருகில் உள்ள மேஜையின் மேல் இருந்த அந்த புத்தகத்தின் பக்கங்கள் வேகமாக புரளுகிறது அவன் மனம் படபடக்கிறது அந்த 75 வயது முதியவர் சொன்ன அந்த வார்த்தை (இந்த புத்தகத்தின் கடைசி பக்கத்தை மட்டும் பார்க்காதே அப்படி பார்த்தால் உன் உயிருக்கு ஆபத்து) அவன் நினைவுக்கு வருகிறது திடிரென்று எழுந்து அந்த புத்தகத்தின் பக்கங்கள் அந்த காற்றில் பறக்காமல் இருக்க அதன் மேல் கை வைகிறான் அது கடைசி பக்கத்தில் நிற்கிறது அவனது இதயம் படபடக்கிறது பயத்தினால் அவனது முகம் வேர்வையில் நனைகிறது சற்று பயத்தை போகிகொண்டவனாய் அந்த பக்கத்தில் இருந்து தனது கையை மெல்ல வீலகி அதை படிக்கிறான்

எழுத்தாளர் - கு.பகவதிநாத்
11thhour பதிபகம், சென்னை
விலை - 74 ருபாய்

என்று அதில் எழுதி இருக்கிறது அதை பார்த்தவுடன்

ஹ ஹ ஹ ஹ ஹ ஹ !!!!!!!!
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ !!!!!!!!
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ !!!!!!!!

Relaxplzz

// கண்டிப்பாக படித்து பகிருங்கள் நண்பர்களே.. நண்பர் ஒருவருக்கு நடந்த உண்மை சம்பவ...

Posted: 01 Dec 2014 07:00 AM PST

// கண்டிப்பாக படித்து பகிருங்கள் நண்பர்களே.. நண்பர் ஒருவருக்கு நடந்த உண்மை சம்பவம்..//

நண்பர்களே என் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றமிது கடைசி படம் தான் என் இன்றைய நிலை மற்றபடங்கள் எல்லாம் பழைய படங்கள்தான்..

காரணம் இதுதான் பலவருடங்களாக நான் பான்பராக் சாப்பிட்டு வந்தேன் அதனால் எனக்கு வாயில் கேன்சர் ஆரம்ப நிலையில் அறுவைசிகிச்சை நடந்தது..

இப்போது பத்துலட்சம் செலவு செய்து வாழ்க்கையுடன் போராடி நாட்களை கழித்து வருகிறேன் உங்கள் ஆசீர்வாத்தினால் இன்னும் சில வருடங்கள் இருப்பேன் என நம்புகிறேன்.. எனக்கு அடுத்த வருட ஆரம்பத்தில் இன்னும் சில சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும் அதற்கு பணம் சேர்ந்து வருகிறேன் இதுதான் என் தற்போதைய நிலை நண்பர்களே..

நீங்களும் உங்கள் நண்பர்களும் பான்பராக் போடுபவர்களாக இருந்தால் என்படத்தை காட்டுங்கள் அவர்களாவது என் நிலைவராமல் பாதுகாத்துத் கொள்ளட்டும்

- சேலம் சிவக்குமார் @ Relaxplzz

Original Post: https://www.facebook.com/Salemsivakumar/posts/622362777874381


ஆண்களுக்கு அன்பை வெளிக்காட்டும் முறை மட்டும் தெரிந்திருந்தால் இன்றைக்கு அவர்கள்...

Posted: 01 Dec 2014 06:50 AM PST

ஆண்களுக்கு அன்பை வெளிக்காட்டும் முறை மட்டும் தெரிந்திருந்தால் இன்றைக்கு அவர்கள் தான் தாய் .!

- Kalimuthu @ Relaxplzz


ஒரு ஊர்ல குப்புசாமின்னு ஒருத்தன் இருந்தானாம். அவனுக்கு சாவே வரக்கூடாதுன்னுரொம்ப...

Posted: 01 Dec 2014 06:45 AM PST

ஒரு ஊர்ல குப்புசாமின்னு ஒருத்தன் இருந்தானாம்.

அவனுக்கு சாவே வரக்கூடாதுன்னுரொம்ப காலமா கடவுளை வேண்டி தவம் இருந்தானாம்.

ஒரு நாள் கடவுள் நேர்ல வந்தாராம்"பக்தா என்ன வரம் வேண்டும் கேள்" அப்படின்னு கேட்டாராம்..

குப்புசாமியும் ரொம்ப ஆர்வமா"கடவுளே எனக்கு சாவே வரக்கூடாது"ன்னுகேட்டானாம்..

"சரி பக்தா அப்படியே ஆகட்டும்"னு சொல்லிட்டுகடவுள் மறைஞ்சு போய்ட்டாராம்.

குப்புசாமி ரொம்ப சந்தோசமாகிட்டுவீட்டுக்கு போய்ட்டு இருந்தானாம்.

வழியில யாரோ ஒருத்தர் குப்புசாமியை கவனிச்சுக்கிட்டே வந்து "உங்க பேரு என்ன?ன்னு கேட்டாராம்..

அதுக்கு குப்புசாமி அவனோட பேரை சொல்லமுடியாம "குப்புமி" "குப்புமி" "குப்புமி"ன்னு சொன்னானாம்
பாவம் கடைசிவரை அவனுக்கு "சா" வே வரலையாம்…

சாமியின் background voice..

"வரம் கேக்குற உனக்கே இத்தன அதப்புனா குடுக்குற எனக்கு எவ்வோளவு இருக்கும்...

:P :P

Relaxplzz

அண்ணன் தங்கை பாசத்தின் நேசம் உணர்ந்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 01 Dec 2014 06:40 AM PST

அண்ணன் தங்கை பாசத்தின் நேசம் உணர்ந்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 01 Dec 2014 06:30 AM PST

:) Relaxplzz

Posted: 01 Dec 2014 06:20 AM PST

இல்லத்தரசிகளுக்கு இனிய யோசனைகள்! பெண்கள் பொதுவாக சமையலில் வெளுத்து வாங்குவார்கள...

Posted: 01 Dec 2014 06:10 AM PST

இல்லத்தரசிகளுக்கு இனிய யோசனைகள்!

பெண்கள் பொதுவாக சமையலில் வெளுத்து வாங்குவார்கள். அவங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. இருந்தாலும் அவர்களின் சமையலுக்கு உதவதற்காக குட்டிக் குட்டி டிப்ஸ். பல பேருக்குத் தெரிஞ்சதும் இருக்கலாம், தெரியாததும் இருக்கலாம். உங்களுக்குத் தேவையான டிப்ஸை எடுத்துக்கோங்க.. குடும்பத்தாரின் பாராட்டை அள்ளிக்கோங்க!

* டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில்உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணத்தோடு சுவையாக இருக்கும்.

* மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது. வெறும் வாணலியை அடுப்பில் வைத்துச் சூடேற்றி, அதில் வடகத்தைப் போட்டு, சற்றுப் புரட்டி எடுத்து விட்டு, எண்ணெயில் பொரித்தால் நன்றாகப் பொரியும்.

* தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும், பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

* வெங்காய ஊத்தப்பம் செய்யும்போது தோசை இரு புறமும் வெந்து இருந்தால்தான் சுவையாக இருக்கும். தோசையின் நடுப் பகுதியில் சிறு ஓட்டை போட்டு எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்தும், சுவையாகவும் இருக்கும்.

* தோசைக்கு ஊற வைக்கும்போது 1 கிலோவிற்கு 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான, சுவை அதிகமான, சத்து நிறைந்த தோசை ரெடி.

* சமைத்த சாதம் மிஞ்சிப் போய் விட்டால், அதைப் போல் இரண்டு பங்கு தண்ணீ­ரைக் கொதிக்க வைத்து, அதில் பழைய சாதத்தைக் கொட்டி, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடித்து விடவும். பின்னர் மறுபடியும் 5 நிமிடம் வடித்த சாதத்தை அடுப்பில் வைத்து இறக்கினால் நீர்ப்பசை அகன்று புதிதாகச் சமைத்ததைப் போல் இருக்கும்.

* வீட்டில் ஜாம் தயாரிக்க விரும்பினால் சரியாகப் பழுக்காத பழங்களையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் ஜாம் நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.

* காலிஃபிளவரை சமைக்கும் முன் அவற்றைக் கொஞ்சம் கொதிக்க வைத்த உப்பு நீரில் சிறிது நேரத்திற்கு முக்கி எடுக்கவும். அதனால் அந்த பூக்களுக்குள் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகள் விலகிவிடும்.

* குக்கரில் பருப்பை சமைக்கும் போது, ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூளையும், ஒரு டீ ஸ்பூன் நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள். அதிலிருந்து வரும் மணத்திற்கே, அனைவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்.

* நன்றாகக் காய்ந்து போன பிரட், பன் போன்றவைகளை எடுத்துத் தண்ணீர் கலந்து பிசைந்து விடுங்கள். நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்றவற்றுடன் கொஞ்சம் உப்பை சேர்த்து மாவாக ஆக்கி விடுங்கள். கொஞ்சம் எண்ணெயை சுட வைத்து இந்த கலவையை வடை சுடுவது போல் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து விடுங்கள். பஜ்ஜிகளுக்கு போட்டியாக சூப்பர் சுவையாக இருக்கும்.

* சப்பாத்திக்கு மாவு உருட்டும் போது அந்த உருட்டு பலகையின் கீழ் ஒரு சமையலறைத் துணியை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் அந்த பலகை ஆடாமலும் விலகாமலும் இருக்கும், நீங்களும் வேகமாக மாவைத் தேய்க்கலாம்

* வாழைத்தண்டுகள், கீரைத்தண்டுகள் மற்றும் கொத்துமல்லி இலைகள் வாடாமல் இருக்க அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.

* பழம், ஃப்ரூட் சாலட், ஜூஸ் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்.

* வீட்டிலேயே கேக் செய்யும் பேது, பேகிங் ஓவன் தட்டில் சரியாக எண்ணெய் அல்லது நெய் தடவியிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே பேக் செய்யத் தொடங்குங்கள்.

* தேங்காயை சரிபாதியாக உடைக்க தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.

* இனிப்புகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்குப் பதில் வெல்லம் அல்லது தேன் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.

* வெங்காயம் வதக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் எளிதில் வதங்கி விடும்.

* ஊறுகாய் தயாரிக்கும்போது கைகளைப் பயன்படுத்தக் கூடாது மரத்தினால் ஆன கரண்டிகளையே பயன்படுத்துங்கள்.

* கோதுமை மாவு அரைக்கும்போது அதனுடன் சோயா பீன்ஸையும் சேர்த்து அரைத்தால் சப்பாத்திகள் ஊட்டம் கூடுவதுடன் ருசியும் அபாரமாக இருக்கும்.

* வெங்காயத்தைத் தோலோடு குளிர்ந்த நீரில் போட்டு பின்னர் நறுக்கினால் கண்களில் கண்ணீ­ர் வராது.

* பச்சை மிளகாய் ஒரு மாத காலத்திற்கு மேலாக கெடாமல் இருக்க ஒரு காகிதக் கவரில் சிறிய துளையிட்டு கவரில் பச்சை மிளகாய்களை அதில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி உப்பை கலக்கவும் பிறகு இதில் முட்டையை போடவும் முட்டை மூழ்கினால் அது புதிய முட்டை. மிதந்தால் பழைய முட்டை.

* இஞ்சி, பூண்டு, சட்னி தயாரிக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.

* காய்ந்த பழங்களைப் பராமரிக்க அதை வைத்திருக்கும் பாத்திரத்தில் 23 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு ருசி கெடாமல் இருக்கும்.

* கேக் பேக் செய்யும்போது தேவையான நேரத்திற்கு முன்பாகவே பேகிங் ஓவனைத் திறக்காதீர்கள்.

* தண்ணீரில் சிறிதளவு வினிகரைச் சேர்த்தால் விரிசல் விழுந்த முட்டையைக் கூட சமைக்கலாம்.

* முட்டைக்கோசை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.

* உருளைக் கிழங்குகளை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வைக்கக்கூடாது. ஏனெனில் அதிலுள்ள ஈரத்தன்மையால் கிழங்கு அழுகி விடும் வாய்ப்பு இருக்கிறது.

Relaxplzz

# படித்ததில் பிடித்தது # எப்போ வருமாம் .......................... தெரியலப்பா ....

Posted: 01 Dec 2014 06:00 AM PST

# படித்ததில் பிடித்தது #

எப்போ வருமாம் ..........................

தெரியலப்பா .......ஆளாளுக்கு ஓவ்வொன்னு சொல்லுறாங்க.

பெரியசாமி .....உம்மவன்கிட்ட கேக்கவேண்டியது தானே...அவனுக்கு தெரிஞ்சு இருக்குமே ...................

அவனுக்கும் தெரியாதாம் ..........ஆனா வருவாங்க அது மட்டும் உறுதின்னு சொன்னான்.

என்னடே ........எம்புட்டு நேரம் தான் காத்திருக்கிறது ......இவ்வளவு தானா உங்க தெறம........யாருகிட்டயாவதுகேக்கிறது....நாங்களா இருந்தா டான்னு சொல்லிருவோம் .......

அதான் ........யாருக்கும் தெரியலைன்னு சொல்லுறாங்களே ....அப்புறம் என்ன டான்னு ..........டூன்னு .......

ஏல.......வா நாம அந்த போலீஸ்கிட்ட கேக்கலாம் ......

அண்ணாச்சி வணக்கம் .......

என்ன ...

எப்போ வருவாங்களாம்

தெரியாது ........போ .........போ ...........ஓரமா ..தள்ளி நில்லு

யே......அவருக்கும் தெரியாதாம் பா ....வா ஒரு டீ ய போட்டு வருவோம் ....

( ஊரின் பிரதான சாலையை போகும் வண்டியை ....அதில் இருந்து கை அசைக்கும் எதற்குமே பிரயோஜன படாத நன்றி கேட்ட உளுத்து போன கேடுகெட்ட அரசியல் தலைவர்களை காண கடும் வெயிலில் பாதையில் காத்திருக்கும் இந்த பழக்கத்தை நம்மக்களுக்கு யார் கற்று தந்தது ......)

Thanks Yaseen ptn

Relaxplzz


நடப்பையும், மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக்க.... அருகில் இருப்பவருக்கு கொடுத்து விட...

Posted: 01 Dec 2014 05:50 AM PST

நடப்பையும், மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக்க....
அருகில் இருப்பவருக்கு கொடுத்து விடுங்கள்....!!


அழகான பொண்ணுங்கள பார்த்தா, பசங்க: வாவ்..சூப்பர்.. தாறு மாறு...சும்மா அள்ளுது.....

Posted: 01 Dec 2014 05:45 AM PST

அழகான பொண்ணுங்கள பார்த்தா,

பசங்க: வாவ்..சூப்பர்.. தாறு மாறு...சும்மா அள்ளுது..
பொண்ணுங்க: ம்ம்க்கும்..இதுலாம் ஒரு அழகாக்கும்.

அழகான பசங்கள பார்த்தா..

பொண்ணுங்க : ஏ..நல்லா இருக்கான் ல.
பசங்க: எவன் டா அது எங்க ஏரியாவுல புதுசா..

- ஆதிரா @ Relaxplzz

0 comments:

Post a Comment