Monday, 3 November 2014

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


கண்ணாடி மீன்

Posted: 03 Nov 2014 09:20 AM PST

கண்ணாடி மீன்


சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்:...

Posted: 03 Nov 2014 09:10 AM PST

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்:

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்:

வரக்கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால கிலோ

தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

(வரக்கொத்தமால்லி என்பது மளிகைக்கடையில் மிளகாய் மல்லி என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்தமல்லியே. இது புரிந்துகொள்வதற்காக).

கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.

இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும் (குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.

Relaxplzz

குழந்தை நலம்: 'கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள்!!' எனது நண்பரி...

Posted: 03 Nov 2014 09:00 AM PST

குழந்தை நலம்: 'கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள்!!'

எனது நண்பரின் நண்பர் மகனுக்கு நடந்தது. இதனால், அவரது வாழ்க்கை கடந்த முப்பது நாட்களாக 'ரோலர்கோஸ்டர்' போல மாறிவிட்டிருந்தது. என்ன நடந்தது என்று அவரே சொல்கிறார் இதோ கேளுங்கள்:

"வீட்டில் சாமி போட்டோவிற்கு முன் கற்பூரம் வைத்திருந்தோம். அதை 'கல்கண்டு' என்று நினைத்து மூடிவைத்திருந்ததை எப்படியோ திறந்து ஒரே ஒரு துண்டு கற்பூரத்தை கடித்து தின்றுவிட்டான். அதை உடனடியாக பார்த்த நான் கடித்திருந்த பாதியை வாயில் இருந்து எடுத்துவிட்டேன். www.puradsifm.com

'கற்பூரம் சாப்பிட்டால் என்ன ஆகும்?'- என்று மனைவி கூகுளில் பார்த்து தெரிவித்த அடுத்த நிமிடமே, என் மகனுக்கு இழுப்பு வந்துவிட்டது. அது நான்கு நிமிடம் நீடித்தது. உடனே ஆம்புலன்ஸ் 911 உதவிக் கேட்டேன். அவர்கள் வந்தபோது, இழுப்பு சரியாகிவிட்டது. முதலுதவிக்கு வந்தவர்கள் குழந்தை தூங்கினால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னார்கள்.

ஆனால், மீண்டும் கண்கள் செருக ஆரம்பித்துவிட்டன. உடனே 'எமர்ஜென்ஸி' பிரிவுக்கு குழந்தையை எடுத்துச் சென்றோம்.

கற்பூரத்திலிருக்கும் 'கேம்பர்' (Camphor) என்ற கொடிய நச்சுப் பொருள் கடுமையான பாதிப்புகளை உருவாக்கக் கூடியது – என்று 'நச்சுத் தடுப்பு' துறையினர் (பாய்ஸன் கண்ட்ரோல்) மூலம் அறிந்த எமர்ஜென்ஸி மருத்துவர்கள், உடனே அதற்கு தகுந்த சிகிச்சையில் இறங்கினார்கள்.

அதற்காக 'சலைன்' (டிரிப்) ஏற்ற ஊசி குத்தும் போது குழந்தை எந்த விதமான எதிர்ப்பையும் காட்டாதது எங்களுக்கு அடிவயிற்றைக் கலக்கியது. அதாவது அவன் சுயநினைவு இழந்த 'டிப்ரெஷன் மோடு'க்கு சென்றுவிட்டிருந்தான்.

உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் 'டாலஸ் மெடிக்கல் சென்டரின்' குழந்தை நல அவசர சிகிச்சைப் பிரிவுக்கு (சில்ரண்ஸ் ஐசியூக்கு) மாற்றப்பட்டான்.

ஆம்புலன்ஸில் இருந்து இறங்கும்போது "அப்பா!" – என்று ஈனஸ்வரத்தில் அவன் அழைத்தாலும் அது எனக்குத் தெம்பூட்ட தைரியமானேன்.

கேம்பர் என்னும் அந்த கொடிய நச்சுப் பொருளின் மூன்றாம் நிலை கோமாவுக்கு கொண்டு சென்றுவிடும். அதை என் மகன் குறைந்த அளவு சாப்பிட்டதால் கோமா நிலைக்கு செல்லாமல் தப்பித்துவிட்டான்.

இது ஒருவிதமான அதிஷ்டமேயானாலும் அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. தகுந்த நேரத்தில் கண்டதாலும், உடனே சிகிச்சைக்கு கொண்டு சென்றதாலும் இறையருளால் எங்கள் கண்மணியை எங்களால் காக்க முடிந்தது. அதுவும் கிட்டத்தட்ட 16 மணி நேர மருத்துவப் போராட்டத்துக்குப் பின்தான் அதுவும் சாத்தியமாயிற்று!"

கேட்டீர்களா... விபரீதத்தை?

அதனால், கற்பூரம் என்னும் கொடிய விஷப் பொருளை வீட்டில் வைப்பதை தவிருங்கள். குழந்தைகளுக்கு எட்டாமல் பாதுகாப்பாக வையுங்கள். அப்படி குழந்தைகள் ஏதாவது சாப்பிட்டதாக சந்தேகம் வந்தால்.. உடனே தாமதிக்காமல் தகுந்த மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள்.

Relaxplzz


"கொஞ்சமா பேசு...! அதிகமா கேள்...!" அப்படின்னு பெரியவங்க ஏன் சொன்னாங்க தெரியுமா.....

Posted: 03 Nov 2014 08:49 AM PST

"கொஞ்சமா பேசு...!
அதிகமா கேள்...!" அப்படின்னு
பெரியவங்க ஏன் சொன்னாங்க தெரியுமா..?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..

"in coming free.... out giong kaasu"....
அதனால தான்...

:P :P

Relaxplzz

மூளைக்கொரு வேலை

Posted: 03 Nov 2014 08:40 AM PST

மூளைக்கொரு வேலை


:)

Posted: 03 Nov 2014 08:30 AM PST

:)


மன்னர்: யாரங்கே!! அமைச்சர்: சொல்லுங்கள் மன்னா.... மன்: இதுவரை நான் கண்டிறாத பழ...

Posted: 03 Nov 2014 08:15 AM PST

மன்னர்: யாரங்கே!!

அமைச்சர்: சொல்லுங்கள் மன்னா....

மன்: இதுவரை நான் கண்டிறாத பழங்களை உன்ன விருப்பம் எனக்கு,, விரைவில் ஏற்பாடுசெய்யுங்கள்...

அமைச்: உத்தரவு...

சபைகூடுகிறது!!!

மன்னா இதோ இங்குள்ளவர்கள் ஒவ்வொருவரும் விதவிதமான கணிகளை கொன்டுவந்துள்ளனர்.

மன்: நான் உண்ட கனி இருக்குமெனில் அதை கொண்டுவந்தவனை விழுங்கச்செய்துவிடுவேன் என எச்சரியுங்கள்.... வரச்சொல்லுங்கள்,,,...

முதலில் வாழைபழத்தோடு வருகிறான் ஒருவன்..

மன்: இது நான் உண்டு இரசித்த கனியாதலால் நீரே விழுங்கிவிடு....

உத்தரவு...

மற்றொருவன்: மன்னா இதோ மாங்கணி...

மன்: யாம் இதையும் உண்டுவிட்டோம்.. நீயே விழுங்கு..

உத்தரவு....

இன்னொருவன் அண்ணாச்சி பழத்தோடு வருகிறான்..

மன்: இதையும் யாம் உண்டுவிட்டோம் ... அப்படியே விழுங்கு...

இவனும் விழுங்குகிறான்... வாயெல்லாம் இரத்தம் வழிகிறது.. இருந்தும் சிரித்தவாறே விழுங்குகிறான்...

மன்: என்ன?இரத்தம்வழிகிறது என்வாயில்... இருப்பினும் ஏன்இந்த சிரிப்பு.. சொல்லிவிட்டு விழுங்கு...

அது வேறொன்றும் இல்லை மன்னா.... எனக்குபின்னால் ஒருவன்பலாபழத்துடன் நிற்கிறான்.. அவன்நிலையை நினேத்துப்பார்த்தேன்.. அதான் சிரிப்பை அடக்கமுடியவில்லை... அதான் ஹாஹாஹாஹாஹா...

(மன்னன் தன் தவறை உணர்கிறார்)

:P :P

Relaxplzz

அம்மா சொன்ன 'சுரீர்' வார்த்தை? அவன் அன்றைக்கும் குடித்து விட்டுத்தான் வீட்டுக்க...

Posted: 03 Nov 2014 08:00 AM PST

அம்மா சொன்ன 'சுரீர்' வார்த்தை?

அவன் அன்றைக்கும் குடித்து விட்டுத்தான் வீட்டுக்கு வந்தான். ஆனால் வழக்கமாக இல்லாமல் நிரம்ப குடித்திருந்தான்.
இரண்டு கண்களும் சிவந்து, உடம்பு முழுக்க வியர்வை வழிய, வாயின் இரண்டு ஓரங்களிலும் வாந்தி எடுத்த தடத்துடன், கொஞ்சம் தள்ளாடி தள்ளாடி இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தான். வாயிலிருந்து வெளிப்பட்ட குப்பென்ற மதுவாடை மதுவை விரும்பி குடித்த அவனுக்கே பிடிக்கவில்லை தான் போலும்...

அந்த வாடை அவனுக்கு கொஞ்சம் கோபத்தையும், எரிச்சலையும் தந்தது.
வீட்டு கதவை தொட்டு தடவி வலது பக்கத்தில் இருந்த காலிங்பெல்லை வேகமாக அழுத்தினான்.

வீட்டுக்குள் விளக்கு எரிந்தது. கதவை திறந்து கொண்டு அவனுடைய வயதான அம்மா நின்று கொண்டிருந்தாள்.
"ஏம்பா...இவ்ளோ லேட்டு..?" என்று வீட்டின் முன்பக்கத்தில் இருந்த கடிகாரத்தை பார்த்தபடியே மகனை உள்ளே கூட்டிக்கொண்டு போனாள்.
கடிகாரம் மணி நள்ளிரவு பனிரெண்டரை என்று காட்டியது.

இல்லமா...கொஞ்சம் வேலை அதிகம் என்று அவன் சொல்லி சமாளித்தாலும் அவன் கூடவே சேர்ந்து வரும் மதுவின் வாடை அவன் தாமதமாக வந்த காரணத்தை அவளுக்கு உணர்த்தியது. அவள் எதையும் அவனிடம் கேட்டுக்கொள்ளவில்லை.
அவன் கைப்பையை வாங்கி ஒரு மூலையில் வைத்து விட்டு அவனை கிணற்றடிக்கு அழைத்து சென்று அவன் ஆடைகளை களைந்து விட்டு, அவன் உடல் முழுவதுமாய் நனையும் படி தண்ணீரை வாரி இரைத்து ஊற்றினாள். நடு இரவு என்பதால் நீர் வழக்கத்தை விட அதிகமாக குளிரும் தான். ஆனால் அவன் இருக்கும் மனநிலையில் அதை அவனால் உணர முடியவில்லை.

மகனை வீட்டுக்குள் கூட்டிச்சென்று நாற்காலியில் உட்கார வைத்து ஈரம் படிந்த அவன் தலையை நன்றாக துடைத்தெடுத்து அதிகபட்ச வேகத்தில் மின்விசிறியை ஓட விட்டு அவனுக்கு வேறு உடை மாற்றி விட்டாள்.

அவன் சாப்பிடுவதற்கு சாப்பாடு எடுத்து வந்து அவனை சாப்பிடச் செய்தாள். கூடவே எப்போதும் இரவில் மகனுடன் சேர்ந்து சாப்பிடும் அவள் அவனுடன் சேர்ந்து சாபிட்டாள்.

பின்பு மகனை ஒரு கட்டிலில் படுக்க வைத்து, உடம்பை முழுவதுமாக மூடும்படி உள்ள ஒரு போர்வையை அவன் மேல் போர்த்தி விட்டு அந்த கட்டிலின் பக்கத்தில் விரிக்கப்பட்டிருந்த தனக்கான பாயில் படுத்துக்கொண்டாள்.

காலை விடிந்தது...

அம்மா வாசலில் மாட்டுசாணம் தெளிப்பது, கோலம் போடுவது, குடிப்பதற்கு தண்ணீர் எடுப்பது, காலை சிற்றுண்டி தயாரிப்பது என்று அவளுடைய வழக்கமான வேலைகளை செய்து கொண்டிருந்தாள்..

இவன் பல் துலக்குவது, காபி குடிப்பது, பேப்பர் படிப்பது, சிறுது தூரம் நடைபயிற்சி பழகுவது என்று வழக்கமான தனது வேலைகளை செய்து கொண்டிருந்தான்.

இவற்றையெல்லாம் முடித்து விட்டு குளித்து வேலைக்கு கிளம்ப தயாராகும் தன் மகனுக்கு உணவை ஒரு கிண்ணத்தில் அடைத்து தயாராக வைத்திருந்த அம்மாவிடம் அதை வாங்கிக்கொண்டு தனது இரண்டு சக்கர வாகனத்தை உதைத்து கிளம்பும் போது "அம்மா நான் போயிட்டு வர்றேன்" என்று அவன் விடைபெற,

அதற்கு அம்மா "சரிப்பா பத்திரமா போயிட்டு வா... ஆனா நேத்து நைட்டு வந்த மாதிரி வராதப்பா... அத அம்மாவால தாங்கிக்க முடியாதுப்பா" என்று சொன்னாள்.

"நாகரீகம்" என்று வார்த்தையைகூட எழுத தெரியாத அம்மாவின் அந்த ஒரு வார்த்தை அவனுக்கு "சுரீர்" என்றிருந்தது.

ஆங்கிலத்தில் ரிலாக்ஸ் ப்ளீஸ் Relaxplzz


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் தேவையற்ற ஒன்றிற்கு கிடைக்கும் மாலையும் மரியாதையும், தேவையான ஒ...

Posted: 03 Nov 2014 07:50 AM PST

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

தேவையற்ற ஒன்றிற்கு கிடைக்கும் மாலையும் மரியாதையும், தேவையான ஒன்றிற்கு கிடைப்பதில்லை

உழைப்பே உயர்வு தரும் என்பது உண்மையாயிருந்தால்.... உலகிலுள்ள விவசாயிகள் அனைவரும்...

Posted: 03 Nov 2014 07:40 AM PST

உழைப்பே உயர்வு தரும் என்பது உண்மையாயிருந்தால்....

உலகிலுள்ள விவசாயிகள் அனைவரும் எட்டாத உயரத்திற்குமேல் அல்லவா உயர்ந்திருக்க வேண்டும் !!!

- Kalimuthu


:)

Posted: 03 Nov 2014 07:30 AM PST

:)


எங்கேயோ கேட்டது பிறந்த குழந்தை ஏன் அழுகிறது உண்மையான காரணம் இதுதான்...! இன்றோ...

Posted: 03 Nov 2014 07:15 AM PST

எங்கேயோ கேட்டது

பிறந்த குழந்தை ஏன் அழுகிறது உண்மையான காரணம் இதுதான்...!

இன்றோ அல்லது நேற்றோ பிறந்த குழந்தை சில நேரங்களில் தொடர்ச்சியாக அழுதுகொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கலாம்.

இந்த குழந்தைகள் எதற்காக அழுகிறது என்று கேட்டால் பலருக்கு காரணங்கள் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.

சரி அப்படி எதற்குத்தான் இந்த குழந்தைகள் அழுகிறது காரணங்கள் என்ன?

இதோ தெரிந்துகொள்ளுங்கள்.

ஒவ்வொரு குழந்தையும் தனது தாயின் கருவறையில் இருக்கும்பொழுது தனது தாயின் இதயத்துடிப்பை பத்து மாதங்கள் கேட்டு கேட்டு மெய்மறந்து, அந்த இதயத்துடிப்பின் இசையில் பத்து மாதங்கள் உறங்கிக் கொண்டிருக்குமாம்.

இந்த பத்து மாதங்கள் கேட்டு ரசித்த இதயத் துடிப்பு தீடிரென கேட்காமல் போவதால்தான்
குழந்தைகள் பிறந்தவுடனே அழத் தொடங்கி விடுகின்றனவாம்.

அது மட்டும் அல்லாது அழுகின்றக் குழந்தையை தூக்கி நெஞ்சில் வைத்துக்கொள்ளும் பொழுது குழந்தை மீண்டும் அந்த இதயத் துடிப்பை உணரத் தொடங்குவதால், தனது அழுகையை நிறுத்தி விடுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்..

Relaxplzz

மனைவியை முரட்டுத்தனமா அடிப்பவரா.. நீங்கள்...? தொட்டதுக்கெல்லாம் மனைவியைத் திடுப...

Posted: 03 Nov 2014 07:00 AM PST

மனைவியை முரட்டுத்தனமா அடிப்பவரா.. நீங்கள்...?

தொட்டதுக்கெல்லாம் மனைவியைத் திடுபவரா நீங்கள்...?

சுகத்துக்காகத் தான் குடும்ப வாழ்க்கை என்று எண்ணுபவரா... நீங்கள்...?

வீட்டில் உள்ள பொறுப்புக்கள் அனைத்தும் மனைவி மட்டும்தான் பார்க்க வேண்டும் என்ற சிந்தனையில் உள்ளபவரா... நீங்கள்..?

அப்படியானால்...
*
*
*
*
*
*
*

ஒருமுறை உங்கள் மனைவியின் பிரசவத்தின் போது அவள் பக்கம் நீங்கள் அவசியம் இருக்க வேண்டும்...

"நீங்கள் மனுஷனா மாற அதைவிட சிறந்த சந்தர்ப்பம் வேறில்லை"

ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்திலும் Relaxplzz


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் களங்கம் இல்லா காதலும் கூட ஒரு விதத்தில் தாய்மையே. <3

Posted: 03 Nov 2014 06:50 AM PST

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

களங்கம் இல்லா காதலும் கூட
ஒரு விதத்தில் தாய்மையே. ♥

ஆயிரம் துயரங்களுடன் ... வீடு வரும் போது .... அத்தனையும் காற்றோடு பறந்துவிடும் அன...

Posted: 03 Nov 2014 06:40 AM PST

ஆயிரம் துயரங்களுடன் ...
வீடு வரும் போது ....
அத்தனையும் காற்றோடு
பறந்துவிடும் அன்பு
குழந்தையின் சிரிப்பால்... ...

அது சிரிப்பல்ல ....
இறைவனின் வரம் ....!!!


:)

Posted: 03 Nov 2014 06:30 AM PST

:)


தாய் வயலில் வேலை செய்து கொண்டிருந்தாள். அவள் குழந்தை பக்கத்தில் மரத்தடியில் விளை...

Posted: 03 Nov 2014 06:15 AM PST

தாய் வயலில் வேலை செய்து கொண்டிருந்தாள். அவள் குழந்தை பக்கத்தில் மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தது.

வேலை மும்மரத்தில் தாய் சிறிதுநேரம் குழந்தையைக் கவனிக்க வில்லை. திடீரென ஞாபகம் வந்து பார்த்தபோது குழந்தை கைபிடியில்லாத ஒரு கிணற்றின் விளிம்பருகே நின்று கொண்டிருந்ததைக் கவனித்தாள்.

அடுத்து ஒரு அடி எடுத்து வைத்தாலும் குழந்தை கிணற்றுக்குள் விழுந்துவிடும்.கூட இருந்தவர்கள் பதைபதைத்தார்கள்.

தாய் சிறிது கூட யோசிக்காமல் கொஞ்ச தூரம் மெதுவாக நடந்துசென்று,குழந்தையைப் பார்த்து,''பாப்பா,அம்மா வீட்டுக்குக் கிளம்பி விட்டேன் .நீ வருகிறாயா, இல்லையா?''என்று சப்தம் போட்டு சொன்னாள்.அடுத்த நிமிடம் குழந்தை திரும்பிதாயைப் பார்த்து ஓடி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டது.

தாயன்பு தானே அந்த இக்கட்டான நேரத்தில் சமயோசிதமாக சிந்திக்க வைத்தது.

Relaxplzz

மூடநம்பிக்கையா? முழுநம்பிக்கையா? நீங்கள் ஒரு முக்கியமான வேலைக்காக வீட்டிலிருந்த...

Posted: 03 Nov 2014 06:00 AM PST

மூடநம்பிக்கையா? முழுநம்பிக்கையா?

நீங்கள் ஒரு முக்கியமான வேலைக்காக வீட்டிலிருந்து அவசர அவசரமாக புறப்படுகிறீர்கள்.

வாசற்படியிலோ அல்லது கீழே கிடக்கும் ஏதாவது பொருளிலோ இடித்துக்கொள்கிறீர்கள்.

இந்த நேரம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள், "புறப்படும்போதே சகுனம் சரியில்ல. கொஞ்ச நேரம் உட்கார்ந்து தண்ணீர் குடித்து விட்டுப் போ" என்பார்கள்.

"போயா இன்னும் அந்த காலத்திலியே இருக்க" என்று ஏளனம் செய்ய வேண்டாம்.

இதல் மூடநம்பிக்கை என எதுவுமே இல்லை.

நீங்கள் அவசரமாக புறப்படும் போதே நீங்கள் நிதானத்தில் இல்லை என தெளிவாகிறது.
நிதானத்தோடு புறப்பட்டு இருந்தால் இடித்து கொள்ள மாட்டீர்கள்தானே?

அப்படி நிதானம் இல்லாமல் செய்யப்போகும் காரியமும் வெற்றி பெறாது.அந்த நேரத்தில் நமது மூளையும் சரியாக சிந்திக்காது.

அதனால்தான் சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு தண்ணீர் குடித்தால் மூளை அமைதி பெறும். பிறகு நம் சிந்தனையும் சரியான விதத்தில் செயல்படும்.

எதிலும் நிதானத்தை கடைபிடியுங்கள்..

Relaxplzz


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் உங்கள் ரகசியங்களை யாரோடும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களாலேய...

Posted: 03 Nov 2014 05:50 AM PST

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

உங்கள் ரகசியங்களை யாரோடும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களாலேயே அதை ரகசியமாக வைக்க முடியாத போது மற்றவர்களாலும் முடியாது.....

சோகங்களை புன்னகையால் மறைக்க தெரிந்த நாம் அனைவரும் சிறந்த நடிகர்களே..! ;-)

Posted: 03 Nov 2014 05:40 AM PST

சோகங்களை புன்னகையால்
மறைக்க தெரிந்த நாம் அனைவரும் சிறந்த நடிகர்களே..! ;-)


(y)

Posted: 03 Nov 2014 05:30 AM PST

(y)


நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது...

Posted: 03 Nov 2014 05:15 AM PST

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது ...எப்படி

சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்றால் இப்பொழுது இந்தியா மட்டும் இல்ல, உலகமே சந்தேகம் கண் கொண்டு பாக்க ஆரம்பிச்சுருச்சு …பால் பவுடர் பிரச்சனை,சீன பொம்மைகள் என்று எல்லாத்துலயும் நச்சு பொருட்கள் இருபதாக சொல்ல படுகிறது,சிலர் சீன பொருட்கள் விலை குறைவாக கிடைகிறது என்று தேடி போய் சீன பொருட்களை வாங்குவார்கள் அவர்களுக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.

(தவிர்பதற்கும் சரி வாங்குவதற்கும் சரி ),சரி நம்ம எப்படி சீன,தைவான் பொருட்களை தான் நாம வாங்குகிறோமா என்று சரி பார்ப்பது……இப்பொழுது எல்லா பொருட்களுக்கும் பார்கோடு பயன்பாட்டில் உள்ளது என்று உங்களுக்கு தெரியும்,பார் கோடு
என்பது machine readble format யில் இருக்கும்.

அதில் முதல் மூன்று எண்கள் 690.691,692 என்றால் அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று அர்த்தம் ,471 என்றால் தைவானில் தயாரிக்கப்பட்ட பொருள் ஆகும்.

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டிலிருந்து வருகிறது என்று இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம்.போலி மருந்துகள் மாதிரி expiry date யை,இதனை அச்சடிக்க முடியாது என்பதும் நமக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது.இனிமேல் பார்கோடை பார்த்து வாங்குங்க .

மற்ற நாடுகளின் முதல் எண்கள்
00-13: USA & Canada
20-29: In-Store Functions
30-37: France
40-44: Germany
45: Japan (also 49)
46: Russian Federation
471: Taiwan
474: Estonia
475: Latvia
477: Lithuania
479: Sri Lanka
480: Philippines
482: Ukraine
484: Moldova
485: Armenia
486: Georgia
487: Kazakhstan
489: Hong Kong
49: Japan (JAN-13)
50: United Kingdom
520: Greece
528: Lebanon
529: Cyprus
531: Macedonia
535: Malta
539: Ireland
54: Belgium & Luxembourg
560: Portugal
569: Iceland
57: Denmark
590: Poland
594: Romania
599: Hungary
600 & 601: South Africa
609: Mauritius
611: Morocco
613: Algeria
619: Tunisia
622: Egypt
625: Jordan
626: Iran
64: Finland
690-692: China
70: Norway
729: Israel
73: Sweden
740: Guatemala
741: El Salvador
742: Honduras
743: Nicaragua
744: Costa Rica
746: Dominican Republic
750: Mexico
759: Venezuela
76: Switzerland
770: Colombia
773: Uruguay
775: Peru
777: Bolivia
779: Argentina
780: Chile
784: Paraguay
785: Peru
786: Ecuador
789: Brazil
80 – 83: Italy
84: Spain
850: Cuba
858: Slovakia
859: Czech OneRepublic
860: Yugoslavia
869: Turkey
87: Netherlands
880: South Korea
885: Thailand
888: Singapore
890: India
893: Vietnam
899: Indonesia
90 & 91: Austria
93: Australia
94: New Zealand
955: Malaysia
977: International Standard Serial Number for Periodicals (ISSN)
978: International Standard Book Numbering (ISBN)
979: International Standard Music Number (ISMN)
980: Refund receipts
981 & 982: Common Currency Coupons
99: Coupons

Relaxplzz

#மனம்_தொட்ட_கதை மதிப்புக்குரிய முதலாளிக்கு வணக்கம். என் பக்கத்து வீட்டுக்காரர்...

Posted: 03 Nov 2014 05:00 AM PST

#மனம்_தொட்ட_கதை

மதிப்புக்குரிய முதலாளிக்கு வணக்கம்.

என் பக்கத்து வீட்டுக்காரர்கள், எதிர் வீட்டுக்காரர்கள் பைக், ஸ்கூட்டரில்தான் ஆபீஸ் போகிறார்கள். இன்னும் நான் சைக்கிளில்தான். இது எனக்கு உறுத்தவில்லை.

அதனால் உங்களிடம் நான் சம்பள உயர்வு கேட்கவில்லை.

என் அருகாமை வீட்டுப் பெண்களில் பலர், விசேஷ நாட்களில் பட்டுப்புடவைதான் கட்டுகிறார்கள். என் மனைவியோ நூல் சேலையில்தான். அவள் புலம்பவில்லை.

அதனால் உங்களிடம் நான் சம்பள உயர்வு கேட்கவில்லை.

இப்போது கேட்கிறேன் - எனக்குச் சம்பள உயர்வு வேண்டுமென்று. ஏன் தெரியுமா?

அக்கம் பக்கத்து வீட்டுக குழந்தைகள் மூன்று வேளையும் சாப்பிடுவதை என் குழந்தைகள் கண்டு பிடித்து விட்டன.

தங்கள் கீழ்ப்படிந்துள்ள,
கோவிந்தசாமி.

Relaxplzz


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் மனம் போல் வாழ்வு என்பது உண்மையே! #மனதை எப்போதும் சுத்தமாக வைத...

Posted: 03 Nov 2014 04:50 AM PST

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

மனம் போல் வாழ்வு என்பது உண்மையே! #மனதை எப்போதும் சுத்தமாக வைத்திருந்தால் உன் வாழ்க்கை என்றுமே அழகாகத் தான் இருக்கும்!

அழகு

Posted: 03 Nov 2014 04:40 AM PST

அழகு


:)

Posted: 03 Nov 2014 04:30 AM PST

:)


தத்துவஞானி சாக்ரடீஸிடம் ஒரு முறை, ''எது அழகு?'' என்று கேட்கப்பட்டது. இந்தக் கேள...

Posted: 03 Nov 2014 04:15 AM PST

தத்துவஞானி சாக்ரடீஸிடம் ஒரு முறை, ''எது அழகு?'' என்று கேட்கப்பட்டது.

இந்தக் கேள்விக்கு சாக்ரடீஸ் தந்த பதில்: ''பானையில் உணவு இருக்கிறது. அதை எடுக்க உதவுவது எது? தங்கக் கரண்டியா... மர அகப்பையா?"

"எது பயனுள்ளதாக இருக்கிறதோ, அதுவே அழகு!'' என்றார்.

# பயனுள்ளதாக வாழும் வாழ்க்கையே அழகானது. அமைதி தரவல்லது.

Relaxplzz

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க இலகுவான வழி ....!!!! தற்பொழ...

Posted: 03 Nov 2014 04:00 AM PST

வைரஸ் தாக்கிய 'பென்ட்ரைவ்' இலிருந்து பைல்களை மீட்க இலகுவான வழி ....!!!!

தற்பொழுது தகவல்களை சேமிக்க
பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.

இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டு விடும். கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது.

பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை. உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.

3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.

◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும் —

உபயோகமான தகவல் என்று நினைத்தால், நண்பர்களுடன் பகிருங்கள்.

Relaxplzz


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் தன்னம்பிக்கை இல்லாமல் பயத்துடன் வாழும் வாழ்க்கையும், உயிருடன்...

Posted: 03 Nov 2014 03:50 AM PST

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

தன்னம்பிக்கை இல்லாமல் பயத்துடன் வாழும் வாழ்க்கையும், உயிருடன் கல்லறையில் உறங்குவதும், ஒன்றே!!!

நியாபகம் வருதே......... நண்பர்களே இந்த நான்கில் எதாவது ஒன்று சிறு வயது முதல் நமக...

Posted: 03 Nov 2014 03:40 AM PST

நியாபகம் வருதே.........
நண்பர்களே இந்த நான்கில் எதாவது ஒன்று சிறு வயது முதல் நமக்கு பிடித்தமானதாக இருந்திருக்கும்..
அப்படி இருந்தால் லைக் பண்ணுங்கள்...

அப்படி இந்த நான்கில் உங்களுக்கு பிடித்தமானது எது..?


0 comments:

Post a Comment