Relax Please: FB page daily Posts |
- ஒரு கணவனும் மனைவியும் பல இடங்களுக்கு புனித யாத்திரை செல்கிறார்கள். அப்படி செல்ல...
- பசுமை எழில்
- க்யூட் <3
- :) Relaxplzz
- Breaking சிகரெட் இனிமேல் பக்கெட்டாக தான் வாங்க முடியும் !! - உதிரியாக விற்பனை செ...
- அழகான பெண்ணை காதலிக்க எம்ஜிஆர் மாதிரி வந்தால் நம்பியார் மாதிரி வில்லன் ஒருத்தன்...
- உதவிகள் பெற்றுக்கொளும்போது கிடைப்பதை விட, அதை பிறருக்கு செய்யும்போது கிடைக்கும்...
- தமிழ் தேசிய தலைவர் அண்ணன் பிரபாகரன் பற்றிய - 25 குறிப்புகள் தம்பி எனத் தமிழர்கள...
- கொத்து பரோட்டா பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- ஒரு டீ கடைக்கு வந்தால் டீ வாங்கி கொடுக்குகிற சமூகம் , ஒரு பேங்கிற்கு வரும் போது...
- :) Relaxplzz
- :P :P
- Pls pls share.... தயவு செய்து காணாமல் போன இந்த சிறுவனை கண்டுபிடிக்க இதை பகிர்ந்...
- :) Relaxplzz
- இளையராஜாவின் இசையில் வெளியான படங்களில் பிடித்த 3- படங்களை சொல்லுங்க...
- :) Relaxplzz
- உணர்ந்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- ஏடிஎம் மையத்திற்கு 'இசெட் டபுள் பிளஸ்' பாதுகாப்பு!!?? Dog security for ATM
- நீங்கள் உங்கள் குடும்பத்தை மிகவும் நேசிப்பவரா, அப்படியானால் இதை அவசியம் படியுங்க...
- லாபம் கொழிக்கும் டீ காப்பி கடை தொழில். (தமிழர்களுக்கு தெரியல.. கேரளா நாயர்களுக்க...
- :P :P Relaxplzz
- ரஜினியின் தொந்தரவு பொறுக்க முடியாமல் கடவுள் நேரில் வர வாய்ப்புள்ளது... #நீ அரசி...
- உங்கள் பள்ளிப்பருவ புகைப்படத்தை பார்க்க ஆசையா இருக்கா?? இதோ அதற்கான இணையதளம்....
- (y) Relaxplzz
- தெரிந்து கொள்வோம்
- படித்ததில் பிடித்தது: 1. ஒரு நாளைக்கு ஐந்து ட்ரெஸ் மாற்றவேண்டுமென்றால், பணக்கார...
- அப்பா <3 என் ஒவ்வொரு பருக்கை சோறும் சொல்லும் அதற்குபின் ஒளிந்திருக்கும் என் தந்...
- அருமையான வேலைப்பாடு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- தங்கள் தோற்றத்தினால் மட்டுமல்ல நடத்தையினாலும் தங்கள் அழகுக்கு மெருகூட்டுபவர்களே...
- :) Relaxplzz
Posted: 25 Nov 2014 09:47 AM PST ஒரு கணவனும் மனைவியும் பல இடங்களுக்கு புனித யாத்திரை செல்கிறார்கள். அப்படி செல்லும் போது ஜெருசலேமில் எதிர்பாராத விதமாக திடீரென மனைவி இறந்து விடுகிறார். அங்குள்ள போலிஸ்காரர் சொல்கிறார், "இங்கேயே புதைக்க வேண்டுமென்றால் 10,000 ரூபாய் தான் ஆகும். உங்கள் ஊருக்கு அனுப்பி அங்கு நீங்கள் புதைக்க வேண்டுமென்றால் 2,00,000 ரூபாய் ஆகும்". அதற்கு கணவன் சொல்கிறார், "இங்கு புதைக்க வேண்டாம். 2,00,000 ரூபாய் தருகிறேன். ஊருக்கு அனுப்பி விடுங்கள்" போலிஸ்காரருக்கு ஆச்சரியம். "உங்களுக்கு உங்கள் மனைவி மீது அவ்வளவு பிரியமா" என்று கேட்கிறார். அதற்கு கணவன் பதில் சொல்கிறார், "2000 வருடங்களுக்கு முன்னர் இங்கு ஒருவரை புதைத்தார்கள். அவர் திரும்ப வந்து விட்டார். நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை".!!! Rajamani Subramani. @ Relaxplzz |
பசுமை எழில் Posted: 25 Nov 2014 09:41 AM PST |
க்யூட் <3 Posted: 25 Nov 2014 09:35 AM PST |
Posted: 25 Nov 2014 09:30 AM PST |
Posted: 25 Nov 2014 09:24 AM PST |
Posted: 25 Nov 2014 09:12 AM PST அழகான பெண்ணை காதலிக்க எம்ஜிஆர் மாதிரி வந்தால் நம்பியார் மாதிரி வில்லன் ஒருத்தன் வந்திருதான்... ரஜினி மாதிரி வந்தால் ரகுவரன் மாதிரி வில்லன் ஒருத்தன் வந்திருதான்.. விக்ரம் மாதிரி வந்தால் பிரகாஷ் ராஜ் மாதிரி வில்லன் ஒருத்தன் வந்திருதான்.. சூா்யா மாதிரி இருந்தால் டாங்லீ மாதிரி வில்லன் குறுக்க வந்து விடுகிறான் //॥இதுக்கு நான் வில்லனாக மாறி இருந்திருந்தால் கல்யாணம் ஆவது நடந்து இருக்கும்.. - Rockét Märéés @ Relaxplzz |
Posted: 25 Nov 2014 09:08 AM PST உதவிகள் பெற்றுக்கொளும்போது கிடைப்பதை விட, அதை பிறருக்கு செய்யும்போது கிடைக்கும் ஆனந்தம் அளவிட முடியாதது. ![]() அன்பியல் - 1 |
Posted: 25 Nov 2014 09:00 AM PST தமிழ் தேசிய தலைவர் அண்ணன் பிரபாகரன் பற்றிய - 25 குறிப்புகள் தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வந்த புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்! 01. அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா! 02.வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், 'தம்பி' என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்! 03.பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். "போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்" என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, "எடுத்தால் எங்கே வைப்பது" என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க... அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்! 04.பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் - அலெக்ஸ் ஹேவியின் 'ஏழு தலைமுறைகள்'. அதில் 'இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்' என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்! 05.மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது! 06."ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?" என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, "யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்." 07."பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை" என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்! 08.அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை! 09.எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. 'தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது' என்பது அவரது அறிவுரை! 10.ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்! 11.'இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி' என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்! 12.போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், 'பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு' என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்! 13.ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்! 14.பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்! 15.பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். "தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்" என்பார்! 16.தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்! 17.பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்! 18.அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்! 19.உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்' என்றார் பிரபாகரன்! 20.பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்! 21.பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்! 22.தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், "நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!" 23."ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?" என்றுஅடக்க மாகச் சொல்வார்! 24.மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்! 25.'தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்' என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர். நன்றி ராவணன் தமிழன் Relaxplzz ![]() |
Posted: 25 Nov 2014 08:56 AM PST |
Posted: 25 Nov 2014 08:52 AM PST ஒரு டீ கடைக்கு வந்தால் டீ வாங்கி கொடுக்குகிற சமூகம் , ஒரு பேங்கிற்கு வரும் போது நமது அக்கவுண்ட்யில் பணம் போடுவது இல்லை // இப்படி இருந்தா இந்தியா எப்படி வல்லரசாக மாறும் டல் அரசாகத்தான் மாறும் :P :P - Rockét Märéés @ Relaxplzz |
Posted: 25 Nov 2014 08:49 AM PST |
Posted: 25 Nov 2014 08:45 AM PST |
Posted: 25 Nov 2014 08:42 AM PST Pls pls share.... தயவு செய்து காணாமல் போன இந்த சிறுவனை கண்டுபிடிக்க இதை பகிர்ந்து உதவுங்கள் இந்த படத்தில் உள்ள சிறுவனை( Arabath(alias) assam) நேற்று இரவில் இருந்து காணவில்லை புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி தாலுகா செட்டித்தெரு இதை அதிகமதிகமாக Share. செய்யுங்கள் சகோதரர்களே தொடர்புக்கு:- 86 08 972707(Sheik) Relaxplzz ![]() |
Posted: 25 Nov 2014 08:39 AM PST |
Posted: 25 Nov 2014 08:34 AM PST |
Posted: 25 Nov 2014 08:30 AM PST |
Posted: 25 Nov 2014 08:24 AM PST |
Posted: 25 Nov 2014 08:19 AM PST |
Posted: 25 Nov 2014 08:10 AM PST நீங்கள் உங்கள் குடும்பத்தை மிகவும் நேசிப்பவரா, அப்படியானால் இதை அவசியம் படியுங்கள்... ஒரு பெரிய வணிக அங்காடியில் ஒரு ஐந்து வயது மதிக்கத் தக்க சிறுவன் பணம் செலுத்துபவரிடம் உரையாடிக் கொண்டிருந்தான் பணம் பெறுபவர், உன்னிடம் இந்த பொம்மை வாங்குவதற்கு தேவையான பணம் இல்லை என்று சொன்னார். அந்த சிறுவன் இந்த பணம் போதாதா என்று வினவினான். அவர் மீண்டும் பணத்தை எண்ணி விட்டு இல்லடா செல்லம் குறைவாக உள்ளது என்றார். அந்த சிறுவன் அந்த பொம்மையை கையிலேயே பிடித்திருந்தான். நான் அந்த சிறுவனிடம் அந்த பொம்மை யாருக்கு தர போகிறாய் என்று கேட்டேன். அதற்க்கு அந்த சிறுவன் அது தன் தங்கைக்கு ரொம்ப பிடித்ததாகவும் அவள் பிறந்தநாள் அன்று அவளுக்கு பரிசளிக்க போவதாகவும் கூறினான் மேலும் அவன் பேச தொடர்ந்தபோது என் இதயம் நின்று விட்டது போல் உணர்தேன். அவன் கூறியது "இந்த பொம்மையை என் அம்மாவிடம் கொடுத்தால் அவர்கள் என் தங்கையிடம் கொடுத்து விடுவார்கள், என் தங்கை கடவுளிடம் சென்று விட்டால், என் அம்மாவும் கடவுளிடம் செல்ல இருக்கிறார். நான் என் தந்தையிடம் இந்த பொம்மை வாங்கி வரும் வரை அம்மா கடவுளிடம் செல்ல வேண்டாம் என்று கூறி விட்டு வந்தேன். எனக்கு என் தங்கையும் அம்மாவும் ரொம்ப பிடிக்கும். அம்மா கடவுளிடம் செல்ல வேண்டாம் என்று அப்பாவிடம் கேட்டேன், அனால் அம்மா கடவுளிடம் செல்லும் நேரம் வந்துவிட்டதாக கூறினார். மேலும் அவன் கையில் அவனுடைய புகைப்படம் ஒன்றை வைத்து இருந்தான் அதை தன் அம்மாவிடம் கொடுத்தால் அவர்கள் தன் தங்கையிடம் அதை கொடுப்பார்கள், அதனால் அவள் தன்னை மறக்காமல் இருப்பாள் என்றும் கூறினான். நான் என்னிடம் இருந்த பணத்தை அவனுக்கு தெரியாமல் அவன் வைத்திருந்த பணத்துடன் சேர்த்து, மீண்டும் எண்ணி பார்க்கலாம் என்று சொன்னேன். அவனும் இசைந்தான், நாங்கள் எண்ணிய போது போதிய பணத்திற்கு மேல் இருந்தது அவன் கடவுளுக்கு நன்றி கூறினான். நான் கனத்த மனதுடன் அங்கிருந்து நகர்ந்தேன் பின்னர் உள்ளூர் தினசரி பத்திரிக்கை ஒன்றில் படித்தது என் நினைவிற்கு வந்தது, மகிழ்வுந்தில்(car) பயணம் செய்த அம்மா மற்றும் மகள் மீது ஒரு திறந்த சரக்கு வண்டி(truck) மோதி விபத்துக்குள்ளா னது என்றும் அதன் ஓட்டுனர் குடித்து இருந்ததாலேயே விபத்து நிகழ்ந்தது என்றும் வந்த அந்த செய்தி மேலும் மகள் சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும் தாய் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார் என்றும் அவர் சயித்திய (coma) நிலையில் உள்ளார் என்றும் வந்த அந்த செய்தி இந்த சிறுவன் அவர்கள் மகனா? இரண்டு நாள் கழித்து தினசரி பத்திரிக்கையில் அந்த செய்தி விபதுக்குள்ளான பெண் இறந்து விட்டால் என்று. நான் அவரது இறுதி சடங்கிற்கு சென்றேன் அச் சிறுவனின் அம்மா சடலமாக கிடந்தாள் கையில் சிறுவனின் புகைப்படமும் அந்த பொம்மையும் இருந்தது. அங்கிருத்து கனத்த இதயத்துடன் திரும்பினேன் அந்த சிறுவனின் தன் அம்மாவிடமும் தங்கையிடம் வைத்திருந்த அன்பும் பாசமும் அப்படியே உள்ளது. அனால் ஒரு குடிகாரன் குடி போதையில் வாகனம் ஒட்டியதால் ஒரு நொடியில் அந்த குடும்பம் சிதைந்து விட்டது தயவு செய்து மது அருந்தி விட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் உங்கள் இதயத்தை இது தைத்திருந்தால் பகிருங்கள் ... Relaxplzz |
Posted: 25 Nov 2014 08:02 AM PST லாபம் கொழிக்கும் டீ காப்பி கடை தொழில். (தமிழர்களுக்கு தெரியல.. கேரளா நாயர்களுக்கு தெரிந்து இருக்கிறது) பால் விலை உயர்வின் காரணமாக தமிழ்நாட்டில் டீ காப்பி விலை குவளைக்கு ரூ.1 - ரூ. 2 வரை உயர்கிறது. இதனால் சாதாரண தெருவோர டீ/காப்பி கடைகளில் ரூபாய் 9 க்கு ஒரு குவளை டீ .........ரூபாய் 11 க்கு காப்பியும் விற்கப்போவதாக அறிவிப்பு. இதன் அடிபடையில் ஒரு புறம் சாதாரண மக்களின் பசி ஆற்றும் டீ இப்போது ஆடம்பர பானமாக மாறும் அவலம் ஏற்படதான் போகுது. மறுப்பக்கம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூபாய் 38 க்கு விற்கப்படுவது..அன்றாடம் வீட்டில் டீ காப்பி குடிக்கும் குடும்பத்தாருக்கு டீ காப்பி என்றால் வயிற்றில் புலியை கரைப்பதாக ஆகும். ஆவின் பாலை நம்பி பிள்ளையை பெற்ற பெண்களுக்கு..இந்த விலை உயர்வு தாய்பாலை பீச்சி புட்டி பாலாக குழந்தைக்கு விட்டு தன் அலுவலங்களுக்கு செல்லும் அவளாமாக மாறும். தாய் பால் நின்றுபோன பெண்களின் நிலையை உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகிறேன். இந்த விலை உயர்வு ரோடோரம் டீ காப்பி கடை நடத்துபவர்களுக்கு ஒரு விதத்தில் லாபமாக அமையலாம். ரூபாய் 9 x குறைந்தது 500 டீ = ரூபாய் 4500 ஒரு நாள் வருமானம் ரூபாய் 4500 x 30 = ரூபாய் 1,35,000 ஒரு மாத வருமானம் மாத செலவுகள்: கடை வாடகை, ஆட்கள் கூலி, பால், இதறன எல்லாம் சேர்த்து அதிகபட்சம் ரூபாய் 75,000 ஆனாலும்...மாத லாபம் குறைந்தது ரூபாய் 60,000 எட்டும். இன்று பன்னாட்டு சாப்ட்வேர் கம்பனிகளில் கூட இந்த சம்பளம் கிடைப்பது அரிதே. ஹ்ம்ம்ம். Relaxplzz ![]() "தொழில்" |
Posted: 25 Nov 2014 07:50 AM PST |
Posted: 25 Nov 2014 07:45 AM PST ரஜினியின் தொந்தரவு பொறுக்க முடியாமல் கடவுள் நேரில் வர வாய்ப்புள்ளது... #நீ அரசியலுக்கு வா, வராதே..ஆனால் என் பெயரை ஏன்யா இழுக்க' என்று சொல்ல... :P :P Kalimuthu @ Relaxplzz |
Posted: 25 Nov 2014 07:40 AM PST உங்கள் பள்ளிப்பருவ புகைப்படத்தை பார்க்க ஆசையா இருக்கா?? இதோ அதற்கான இணையதளம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். http://worldschoolphotographs.com/pages/wsp/info.php என்ற இந்த இணையதளத்திற்குப் போங்க... அங்கு போய் உங்களைப் பற்றிய தகவல்களைக் கொடுங்க.. கொஞ்ச நேரம் காத்திருங்க.. எஸ்.. இப்போது உங்களது 'பள்ளிக் கூடத் தோழர்களுடன்' நீங்கள் இருக்கும் 'குரூப்' போட்டோ வந்திருக்கும்.. பாருங்க.. Relaxplzz World School Photographs www.worldschoolphotographs.com World School Photographs have the largest School Photograph Database in the World, Find your photograph in 3 easy steps, Its all FREE!! |
Posted: 25 Nov 2014 07:30 AM PST |
Posted: 25 Nov 2014 07:20 AM PST |
Posted: 25 Nov 2014 07:10 AM PST படித்ததில் பிடித்தது: 1. ஒரு நாளைக்கு ஐந்து ட்ரெஸ் மாற்றவேண்டுமென்றால், பணக்காரனாக இருக்கவேண்டிய அவசியமில்லை.. கைக்குழந்தையாக இருந்தாலே போதும் ! 2. நேர்மையாக இருந்து என்ன சாதித்தாய் என எவரேனும் கேட்டால், நேர்மையாக இருப்பதே இங்கு சாதனை தான் என சொல்ல வேண்டியுள்ளது.. 3. பெண்களுடைய தைரியங்களுக்கு ஆண்கள் "அகராதி" யில் திமிர் எனப் பெயருண்டு.. 4. ஸ்பென்சர் பிலாசா ல 1998ரூ பில்லுக்கு 2000ரூபாய் தருகிர நாம், பிச்சைகாரனுக்கு 1 ரூபாய் தர தயங்குகிரோம். 5. மெசேஜ் அனுப்பினா உடனே ரிப்ளை அனுப்புறது கஸ்டமர்கேர் மட்டும் தான்.. 6. காதலித்து பார்… கழிவறையில் கவிதை வரும்… காதலிக்காமல் இருந்து பார்… அங்கே வர வேண்டியது நிம்மதியாக வரும்…!! 7. இலங்கையில் எண்ணை கிணறு இருந்து இருந்தால் இன்று ராஜ பக்சே தூக்கில் போடபட்டு இருப்பார் அமெரிக்காவால்..! 8. இலவசத்தை நம்பி ஒட்டு போடும் மக்களுக்கு விலை ஏற்றத்தில் ரோஷம் வருவது என்பது பிச்சைகாரன் சுடுசோற்றை எதிர்பார்ப்பது போல….. Relaxplzz |
Posted: 25 Nov 2014 07:06 AM PST அப்பா ♥ என் ஒவ்வொரு பருக்கை சோறும் சொல்லும் அதற்குபின் ஒளிந்திருக்கும் என் தந்தையின் ஓயாத உழைப்பை நான் பொய் சொல்லி பணம் கேட்கும்போது உருத்தவில்லை, ஆனால் நான் கேட்டதற்கு அதிகமாக நீ கொடுத்தபோது வலித்து உன் தோள்களில் என்னோடு சேர்த்து எவ்வளவு பாறம் இருந்தாலும் நீ சோர்வுற்றதில்லை நீ என்னை பற்றி அதிகமாகவே மற்றவர்களிடம் புகழும்போதுதான் தெரிந்தது என் மீது நீ கொண்ட நம்பிக்கை மோசமாக சண்டையிட்டு கோபித்து பேசாமல் இருந்தாலும், நான் சாப்பிடேனா என்று வாய் தவறி கேட்டுவிடும் குழந்தைதான் என் அப்பா! பலர் நாத்திகன் ஆனதற்கு இரண்டு காரணங்கள்! ஒன்று கடவுள் இல்லையென்பது இரண்டு தன் தந்தை இருக்கிறார் என்று... Relaxplzz ![]() "மனம் தொட்ட வரிகள்" - 1 |
Posted: 25 Nov 2014 06:51 AM PST |
Posted: 25 Nov 2014 06:41 AM PST தங்கள் தோற்றத்தினால் மட்டுமல்ல நடத்தையினாலும் தங்கள் அழகுக்கு மெருகூட்டுபவர்களே பேரழகு .....! அன்பு ♥ ♥ ![]() அன்பியல் - 2 |
Posted: 25 Nov 2014 06:30 AM PST |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment