Sunday, 23 November 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


Posted: 23 Nov 2014 05:54 PM PST


நூறு கிலோமீட்டர் நிக்காமா ஓடியதுக்கு சமம். வீட்டுக்காரிகிட்ட ஒரு பொய் சொல்லிட்டு...

Posted: 23 Nov 2014 08:14 AM PST

நூறு கிலோமீட்டர்
நிக்காமா
ஓடியதுக்கு சமம்.
வீட்டுக்காரிகிட்ட
ஒரு பொய்
சொல்லிட்டு
அத மெயின்டன் பண்ரது.

@செந்தில் ஜி

மீண்டும் 14 மீனவர்களை இலங்கை ராணுவம் பிடித்துச்சென்றது # குஜராத் மீனவர்களை பாகி...

Posted: 23 Nov 2014 08:07 AM PST

மீண்டும் 14
மீனவர்களை இலங்கை ராணுவம்
பிடித்துச்சென்றது

# குஜராத்
மீனவர்களை பாகிஸ்தான்
ராணுவம்
பிடித்துச்சென்ற
போதெல்லாம்
மன்மோகன் சிங்
அரசை பார்த்து 'புடவையை பரிசாக
அனுப்பட்டுமா?' என
கேட்டவர்தான்
தற்போது பிரதமராக
இருக்கிறார்.

தற்போது தமிழக
முதல்வர் பன்னீர்
செல்வம்
பிரதமருக்கு துப்பட்டா இல்லாத
சுடிதாரை பரிசாக
அனுப்பி வைத்தால்
எப்படி இருக்கும்?

@நம்பிக்கை ராஜ்

கெளதம் அதானிக்கு ஐம்பத்து சொச்சம் வயதுதான் ஆகிறது. குஜராத்தி ஜெயின். அதானியின் அ...

Posted: 23 Nov 2014 07:42 AM PST

கெளதம் அதானிக்கு ஐம்பத்து சொச்சம் வயதுதான் ஆகிறது. குஜராத்தி ஜெயின். அதானியின் அப்பா பெரிய பிஸினஸ் புள்ளி எல்லாம் இல்லை. சாதாரணக் குடும்பம். அதானியின் கதையைப் படித்தால் ஏதோ அண்ணாமலை ரஜினி தொடையைத் தட்டி பணக்காரன் ஆனது போல இருக்கிறது. பதினெட்டு வயதில் பம்பாய்க்கு சில நூறு ரூபாய்களோடு வேலைக்குச் சென்றிருக்கிறார். வைரத்தை தரம் பிரிக்கும் வேலை. அடுத்த வருடத்திலேயே தொழிலைக் கற்றுக் கொண்டு சொந்தமாகத் தொழில் ஆரம்பித்திருக்கிறார். ஒரே வருடம்தான். இருபது வயதில் பல லட்ச ரூபாய்களை கொழித்துவிட்டார். அது எப்படி சாத்தியம் என்றெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது.

- வா மணிகண்டன்

அழகு மாமல்லபுரம்! @நா.வசந்தகுமார்

Posted: 23 Nov 2014 05:03 AM PST

அழகு மாமல்லபுரம்!

@நா.வசந்தகுமார்


வட துருவ நாடான பின்லாந்தின் பின்னிஸ் போக்குவரத்து துறையால் தமிழில் இயக்கப்படும்...

Posted: 23 Nov 2014 03:03 AM PST

வட
துருவ நாடான
பின்லாந்தின் பின்னிஸ்
போக்குவரத்து துறையால் தமிழில்
இயக்கப்படும் பேருந்து....


கேரளா காரன் தண்ணி தராம வம்பு பண்ற மாதிரி நாளைக்கு ஆந்திராக் காரன் அரிசி தர மாட்...

Posted: 23 Nov 2014 02:51 AM PST

கேரளா காரன் தண்ணி தராம வம்பு பண்ற மாதிரி நாளைக்கு

ஆந்திராக் காரன் அரிசி தர மாட்டேன்னு சொல்லிருவான்னு

பயமுடுத்தினால் ஒரு வேளை மற்ற மாவட்ட மக்கள்

சோற்றுக்குப் பயந்து மீத்தேன் திட்டத்தை எதிர்த்துப்

போராடுவாங்கன்னு நினைக்கிறேன்.

-தஞ்சை மக்களின் பிரச்சனைன்னு நாம எல்லாம் ஒதுங்கி இருந்தா ஒரு நாள் ஆந்திராவிடம் தான் அரிசிக்கு கை ஏந்தி நிற்கனும்.

@சதீஷ் குமார் தேவகோட்டை

சோழ அரசை தனது உழைப்பால் பேரரசாக மாற்றிய மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழனின் காலத்தி...

Posted: 23 Nov 2014 02:41 AM PST

சோழ அரசை தனது உழைப்பால் பேரரசாக மாற்றிய மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழனின் காலத்திய தங்க நாணயம். இது 8.00 கிராம் எடை கொண்டதாகும்.


Ambedkar had close affinity with Tamil as it was he who first said that Tamil w...

Posted: 22 Nov 2014 11:01 PM PST

Ambedkar had close affinity with Tamil as it was he who first said that

Tamil was spoken once from Kanyakumari to Kashmir

Ancient language of whole of India was Tamil

http://www.ambedkar.org/Tirupati/Chap22.htm

http://www.ambedkar.org/ambcd/39A.Untouchables%20who%20were%20they_why%20they%20became%20PART%20I.htm

http://www.ambedkar.org/brahmanism/BRAHMANISM_CONTROLLED_MASSES_THROUGH_LANGUAGE.htm

http://hinducasteracism.blogspot.in/2011/11/babasaheb-dr-ambedkar-states-that.html

India was land of Nagas and its language Tamil

http://www.ambedkar.org/Tirupati/Chap22.htm

Tributes to Ambedkar

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/tributes-
to-ambedkar/article3338132.ece

Reconstructing Indian population history

India has been underrepresented in genome-wide surveys of human variation. We analyse 25 diverse groups in India to provide strong evidence for two ancient populations, genetically divergent, that are ancestral to most Indians today. One, the 'Ancestral North Indians' (ANI), is genetically close to Middle Easterners, Central Asians, and Europeans, whereas the other, the 'Ancestral South Indians' (ASI), is as distinct from ANI and East Asians as they are from each other. By introducing methods that can estimate ancestry without accurate ancestral populations, we show that ANI ancestry ranges from 39–71% in most Indian groups, and is higher in traditionally upper caste and Indo-European speakers. Groups with only ASI ancestry may no longer exist in mainland India. However, the indigenous Andaman Islanders are unique in being ASI-related groups without ANI ancestry. Allele frequency differences between groups in India are larger than in Europe, reflecting strong founder effects whose signatures have been maintained for thousands of years owing to endogamy. We therefore predict that there will be an excess of recessive diseases in India, which should be possible to screen and map genetically.

http://www.nature.com/nature/journal/v461/n7263/abs/nature08365.html

http://www.ias.ac.in/jbiosci/nov2012/911.pdf

http://sathyas.in/blog/india-was-land-of-nagas-and-its-language-tamil/

டாக்டர் அம்பேத்கர் - தீண்டப்படாதவர்கள் யார்? தமிழ் மொழிபெயர்ப்பு பக்கம் - 94.

திராவிடர்கள் என்ற சொல் தென்இந்தியாவில் தமிழ்பேசும் மக்களை மட்டும் ஏன் குறிப்பிடுகிறது என்பது பற்றி அம்பேத்கர் எழுதி இருப் பது அப்படியே கீழே தரப்படுகிறது:

http://www.viduthalai.in/page-1/2804.html

இந்தியாவின் பூர்வீக குடிகள் தமிழர்களே!

இந்த ஆய்வின் முடிவுகளை ஐதராபாத் மையத்தின் முன்னாள் இயக்குநரும், இந்த ஆய்வறிக்கையின் ஆசிரியருமான லால்ஜி சிங் என்பவரும் அதே மையத்தின் மூத்த அறிவியலாளர் குமாரசாமி தங்கராஜன் என்பவரும் மேற்கண்ட வகையில் ஆராய்ச்சி உண்மையை அறிவித்துள்ளனர்.

இவர்களின் ஆய்வின்படி, இந்தியாவின் தொன்மை இனங்களாக வட இந்தியரும் தென் இந்தியரும் (தமிழரும்) தான் என்பது தெளிவாகிறது. ஆனால், இந்த இரு தொன்மையான இந்தியர்களில், வடவர்கள் தற்போதைய மேற்கு ஆசிய மக்களிடனும் ஐரோப்பிய மக்களுடனும் மரபியல் அடிப்படையில் 40 முதல் 80 விழுக்காடு வரை ஒத்து இருக்கிறார்கள். அதாவது, அன்னியர்களின் மரபியல் கூறுகளோடு அதிகம் ஒத்துப் போகிறார்கள்.

அனால், தென்னவர்கள் உலகின் எந்த இன மக்களோடும் மரபியல் அடிப்படையில் தொடர்பு அற்றவர்களாக இருக்கிறார்கள். அதாவது, அன்னியரின் கலப்படம் அறவே இல்லாமல் (தூய்மையாக) இருக்கிறார்கள். இதன்மூலம், தென்னக மக்கள்தான், இந்திய நாட்டின் ஆதிமக்கள் அல்லது முதல் குடிமக்கள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.
இந்திய நாட்டின் தொன்மையான இனம் எது? என்பது மீதான ஆய்விக் கிடைக்கப் பெற்றிருக்கும் இந்தப் புதிய முடிவுகள் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. காரணம், இதுவரை எழுதப்பட்டுள்ள வரலாற்றை மாற்றி எழுதக்கூடிய அளவுக்குச் சான்றுகள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்த ஆய்வு முக்கியமான ஒன்றாகவும் அறிஞர்களின் விவாதத்திற்குரிய ஆய்வுப் பொருளாகவும் ஆகியிருக்கிறது.

http://www.nature.com/nature/journal/v461/n7263/abs/nature08365.html

http://www.ias.ac.in/jbiosci/nov2012/911.pdf

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே பரவியிருந்தது. அசோக மாமன்னன் தமிழ் மொழியிடம் கடன் பெற்றுத்தான் அவனது கல் வெட்டுக்களைப் பொறித்திருக்கிறான். தமிழனின் தொன்மையான வரலாற்றை மறைக்க சதி நடக்கிறது என்று கூறி அதிர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கிறார், ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அதிகாரி ஒருவர்.

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே!

நெல்லை பாளையங்கோட்டையில், மத்திய செம்மொழி தமிழாய்வு மையமும், சென்னையிலுள்ள பெரியார் ஈ.வெ.ராமசாமி நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய 'தமிழ்நாட்டுத் தொல்லியல் ஆய்வுகள் மற்றும் ஆதிச்சநல்லூர் சிறப்பும், எதிர்காலத்திட்டங்களும் என்கிற தலைப்பிலான தேசிய கருத்தரங்கில்தான் இப்படிப் பேசி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் அவர். நடன காசிநாதனை நாம் சந்தித்துப் பேசினோம்.

''1989-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை தமிழ்நாடு தொல்லியல்துறை இயக்குநராக நான் பணியாற்றிய போதுதான் தமிழ்நாட்டில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடந்தன என்று ஆரம்பித்தார் அவர்.
''குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை ஆறு கடலோடு கலக்கும் அழகன்குளம், ஈரோடு மாவட்டம் கொடுமணல், நாகை மாவட்டம் பூம்புகார் ஆகிய இடங்களில் நிலம் மற்றும் கடல் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டன. அழகன்குளத்தில் கொத்துக் கொத்தாய் ரோமானிய காசுகள், இடுப்பில் குழந்தையுடன் கூடிய மரத்தால் ஆனதாய் சிற்பம், கண்ணாடி கைப்பிடியை வைத்திருக்கும் மூன்று தாய்மார்களின் சிற்பம் போன்றவையும் கண்டுபிடிக்கப்பட்டன. கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த அந்தப் பொருட்கள் மூலம் பழங்காலத் தமிழன் ரோமானியர்களுடன் வணிகம் புரிந்திருக்கிறான் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.

கொடுமணலில் சாம்பிராணிப் புகை போடப் பயன்படும் செப்புப் பாத்திரம், இரும்பு ஈட்டிகள், தவிர ராஜஸ்தானிலிருந்து தருவிக்கப்பட்ட கார்னிலியன் கல்மணிகள் கண்டெடுக்கப்பட்டன. மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் சங்ககால படகுத்துறை, நீர்த்தேக்கம், புத்தவிகாரை போன்றவை கிடைத்தன. தமிழக தொல்லியல்துறை சார்பில் நாங்கள் செய்த அகழ்வாராய்ச்சியில், கிழார்வெளி என்கிற இடத்தில் 2400 ஆண்டுகளுக்கு முந்தைய இன்னொரு படகுத்துறை, படகுகளைக் கட்டும் இலுப்பை மரம், எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகளைக் கண்டுபிடித்தோம்.

அதேபோல் கோவா கடல் ஆய்வு நிறுவனத்துடன் சேர்ந்து நாங்கள் நடத்திய ஆய்விலிருந்து, கடல் தற்போது 5 கி.மீ. தூரம் முன்னேறி ஊருக்குள் வந்திருப்பதைக் கண்டறிந்தோம். தவிர, 'சைட் ஸ்கேன் சோனார் என்கிற நவீன தொழில்நுட்ப முறையின் மூலம் கடலுக்குள் 21 அடி ஆழத்தில் 5 கட்டடங்கள் இருப்பதையும் கண்டுபிடித்தோம். அவை செம்புரான் கல்லினால் கட்டப்பட்ட கோயில்கள் அல்லது புத்த விகாரைகளாக இருக்கலாம்.

அதுபோல பூம்புகார் அருகே வானகிரி பகுதியில் கடலுக்குள், 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு டேனிஷ் கப்பல்மூழ்கிக் கிடப்பதைக் கண்டுபிடித்தோம். அது டென்மார்க் அல்லது இங்கிலாந்திலிருந்து வந்த கப்பலாக இருக்கலாம். அதிலிருந்த ஈயக்கட்டிகள் சிலவற்றை எடுத்து கடல் அகழ் வைப்பகத்தில் வைத்தோம். நான் பதவியிலிருந்த காலத்தில்தான் இவை அனைத்தும் நடந்தன என்றவர், அடுத்ததாக...
''தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணிக் கரையிலுள்ள ஆதிச்சநல்லூரை 'தமிழகத்தின் ஹரப்பா என்றே சொல்லலாம். அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல்களம் அது. கடந்த 2004-2005-ம் ஆண்டில் மத்திய தொல்லியல் அகழாய்வு இயக்குநர் எஸ்.டி.சத்தியமூர்த்தி தலைமையில் அங்கே நீண்டநாட்களாக நடந்த அகழாய்வுகளில் 150 -க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. அதில் ஒரு தாழி, 3000 ஆண்டுகள் பழைமையானது. அதியற்புதமான அந்தத் தாழியில் 'அப்ளிக்யூ முறையில் ஒரு பெண், மான், வாழை மரம், ஆற்றில் இரண்டு முதலைகள் இருப்பது மாதிரியான உருவங்கள் வரையப்பட்டிருந்தன.
அந்தப்பானைகளின் ஓட்டில் இருந்த சில குறியீடுகள் ஹரப்பா கால உருவ எழுத்தை ஒத்திருந்தன. அது மூவாயிரம் முதல் ஐயாயிரம் ஆண்டுகள் பழைமையானது. தவிர, அங்கு கிடைத்த செப்புப் பொருட்கள் குஜராத் டைமமாபாத்தில் கிடைத்தது போன்ற ஹரப்பா காலப் பொருட்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எல்லாவற்றுக்கும்மேலாக ஒரு தாழியின் உட் பகுதியில் பழந்தமிழ் எழுத்துக்கள் இருந்தன. அதைப் பார்த்த சத்தியமூர்த்தி உடனடியாக கல்வெட்டுத்துறை இயக்குநர் எம்.டி.சம்பத்தை அழைத்து வந்து, அந்தக் கல்வெட்டை வாசிக்கச் சொன்னார். அதில் 'கரி அரவ நாதன் என்று எழுதப்பட்டிருந்ததாக சம்பத் சொல்லியிருக்கிறார் 'கதிரவன் மகன் ஆதன் என்று அதற்குப் பொருள். ஆதனைப் புதைத்த தாழிதான் அது. கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் போன்றோரும் அந்தத் தாழியை அபூர்வமானது, அந்தப் பழந்தமிழ் எழுத்துக்கள் ஹரப்பா கால உருவ எழுத்துக்களைப் போல இருப்பதாக கருத்துச் சொன்னார்கள். அந்தத் தகவல்கள் கடந்த 01.07.05-ம் தேதி ஃப்ரண்ட்லைன் ஆங்கில இதழில் வெளிவந்தன.

http://www.frontline.in/static/html/fl2213/stories/20050701000307000.htm

http://www.thehindu.com/2005/02/17/stories/2005021704471300.htm

ஆனால் அதன்பிறகு அவர்களுக்கு என்ன நெருக்கடி வந்ததோ? தற்போது தாழியில் கல்வெட்டே இல்லை என்று சொல்கிறார்கள். 'அது அபூர்வமான தாழி என்று சொன்ன ஐராவதம் மகாதேவன், இப்போது, 'அது ஹரப்பா கால எழுத்தல்ல என்கிறார். தாழியைக் கண்டுபிடித்த சத்தியமூர்த்தியும், சம்பத்தும் கூட இப்போது அதுபற்றி வாய்திறக்க மறுக்கிறார்கள். அவர்கள் இருந்த பல மேடைகளில் நான் இதுபற்றிப் பேசியும் அவர்கள் பதில் சொன்னதில்லை. இதையெல்லாம் நான் எழுதிய "தமிழகம் அரப்பன் நாகரிக தாயகம்" என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறேன்.

'வடநாட்டில் அசோகர் கால கல்வெட்டுக்கள் தான் முதன்மையானவை, பழைமையானவை, அதன் காலம் கி.மு. 2300 ஆண்டுகள் என்பதுதான் இதுவரை சொல்லப்பட்ட வரலாறு. ஆனால், ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியிலிருந்த பழந்தமிழ் எழுத்துக்கள் கி.மு. 2500 ஆண்டுகளுக்கு முந்தையவை. அதாவது அசோகர் கல்வெட்டை விட 200 ஆண்டுகள் பழைமையானவை.

அப்படியானால் தமிழ்மொழியில் இருந்து கடன்பெற்றுத்தான் அசோகர் அவரது கல்வெட்டுகளைப் பொறித்திருக்கிறார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. இதுவரை வடக்கிலிருந்துதான் எழுத்துக்கள் வந்தன என்கிற வாதம் இதனால் தவிடுபொடியாகிறது. 'தமிழன் அந்தக் காலத்திலேயே கற்றறிந்தவனாக இருந்திருக்கிறான். அவன் பயன்படுத்திய தமிழ் மொழியில்தான் இந்திய மக்கள் அனைவரும் எழுதியிருக்கிறார்கள் என்பதும் உறுதியாகிறது.

இந்த வரலாற்று உண்மைகள் வெளியே வந்து தமிழனுக்குப் பெருமை சேர்ந்து விடக்கூடாது என்பதாலேயே சிலர் வரலாற்றை மறைக்கப் பார்க்கிறார்கள். ஆய்வு முடிந்து ஆறு ஆண்டுகள் ஆன பின்னரும் ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கை வெளியிடப்படாததற்கு இதுவே காரணம்.

http://tamilkacheri.blogspot.in/2014/10/blog-post_349.html


0 comments:

Post a Comment