Tuesday, 11 November 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


உன் கண்ணில் தூசியை ஊதி விட்ட தருணம் நாம் பிரிந்த தருணம்... இவ்வளவு அருகருகே பார...

Posted: 11 Nov 2014 09:05 AM PST

உன் கண்ணில்
தூசியை ஊதி விட்ட
தருணம் நாம் பிரிந்த
தருணம்...

இவ்வளவு அருகருகே பார்த்திருக்கக்
கூடாது நாம்.

பாவி மவளே "மெட்ராஸ் ஐ" யாடி உனக்கு

@களவாணி பய

Posted: 11 Nov 2014 08:58 AM PST


பாஸ்போர்ட் வெரிபிகேஷனுக்காக மகள் வர்ஷிணியுடன் போலீஸ் ஸ்டேஷன் கிளம்பினான் சூரியா....

Posted: 11 Nov 2014 04:12 AM PST

பாஸ்போர்ட் வெரிபிகேஷனுக்காக மகள் வர்ஷிணியுடன் போலீஸ் ஸ்டேஷன் கிளம்பினான் சூரியா. ஸ்டேஷனில் ஐநூறு ரூபாயும் கையெழுத்தும் வாங்கிக்கொண்டு அனுப்பினார் எஸ்.ஐ.
எஸ்.ஐ. அங்கிள் என் பிரெண்டோட அப்பா தான் ஏம்ப்பா அவருக்கு பணம் கொடுத்தீங்க.
அதை கொடுத்தா தான் அவங்க நமக்கு பாஸ்போர்ட் தருவாங்க.
இது தான் லஞ்சமாப்பா. கண்கள் விரிய கேட்டாள்.
அடுத்த நாள் பள்ளிக்கூடத்திலிருந்து அழுது கொண்டே வரும் தன் மகள் ஸ்வேதாவை ஆதரவாக தூக்கிய எஸ்.ஐ. காரணம் கேட்க.
நேத்து நீங்க என் பிரெண்டு வர்ஷினியோட அப்பாகிட்ட லஞ்சம் வாங்கினீங்களாம் பேட் அங்கிளோட பொண்ணும் பேட் பொண்ணுதான்னு சொல்லி என் கூட பேசமாட்டேன்னு சொல்லிட்டா என்றாள் அழுதபடி.
ஒரு கணம் திடுக்கிட்டு போன எஸ்.ஐ. மனதுக்குள் நினைத்து கொண்டார். இனிமேல்
.
.
.
.
...
.
..
.
,
.
.
.
.
எது வாங்கினாலும் யாருக்கும் தெரியாமல் தான் வாங்க வேண்டும் என....

Posted: 11 Nov 2014 01:17 AM PST


சமற்கிருதம் போன்ற அந்நிய மொழிகளில் தங்கள் பிள்ளைகளுக்கு பெயர் வைத்து விட்டு தமிழ...

Posted: 10 Nov 2014 11:42 PM PST

சமற்கிருதம் போன்ற அந்நிய மொழிகளில் தங்கள் பிள்ளைகளுக்கு பெயர் வைத்து விட்டு தமிழர்கள் கூறும் காரண்ங்களை சகிக்க முடியவில்லை......

"சூரியன் போல் வெளிச்சம் தருபவன்" என்று பொருள் தருவதால் இந்த பெயரை என் மகனுக்கு வைத்தேன்.

"இசையை போல் இன்பமானவள்" என்று பொருள் தருவதால்
இந்த பெயரை என் மகளுக்கு வைத்தேன்"

என்று ஆளுக்கு ஒரு காரணம் கூறுகிறார்கள்.உண்மையில் இவர்களுக்கு தமிழில் பெயர் வைக்க விருப்பமில்லை என்பதே உண்மை.

"சூரியன்",பகலவன்,இசைப்ரியா,இசையரசி,இசைசெல்வி,
இளம்பிறை,இசையரசன்,தமிழ்செல்வன்,தமிழரசன்,
முழுநிலவன்,கோவேந்தன் என்று தமிழில் இல்லாத பெயர்களா....? மற்ற மொழிகளில் இருக்கப் போகிறது.

இன்று நூற்றுக்குத் தொண்ணூறு பேர் பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுவதில்லை. "நவீனத்தை நோக்கி நகர வேண்டாமா...?, பழைமையிலேயே ஊறிக்கிடப்பதா....?" என்று இளைஞர்கள் கேட்கின்றனர்.

சமற்கிருதப் பெயர்கள் ஒன்றும் புதுமையானவை அல்ல. அந்த மொழியும், தமிழைப் போலப் பழைமையானதுதான். அந்த மொழி யாருக்குத் தாய்மொழியோ, அவர்கள் அம்மொழியில் பெயர்சூட்டிக் கொள்ளட்டும்.

தமிழர்களே தங்கள் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டவில்லையென்றால், ஜப்பானியர்களா தமிழ்ப் பெயர் சூட்டுவார்கள்....? நம் மொழியை நாம் மறப்பது, நம் முகத்தை நாமே சிதைத்துக் கொள்வது போலத்தான்!

இதற்கெல்லாம், 'மொழி வெறி' என்றும், 'குறுகிய மனப்பான்மை' என்றும், 'பழைமை வாதம்' என்றும் இலவசப் பட்டம் வழங்கும் இளைஞர்களின் ஒரு பகுதியினரை நோக்கி நாம் உரத்துச் சொல்ல வேண்டிய சில செய்திகள் உள்ளன.

தன் தாயை நேசிப்பது 'தாய்வெறி' அன்று. தன் தாயிடம் அன்பு காட்டுவதால், பிற தாய்களையெல்லாம் வெறுக்கிறோம் என்றும் பொருள் இல்லை.

இது தாய்க்கும் பொருந்தும், தாய்மொழிக்கும் பொருந்தும்.

நாம் எந்த மொழியையும் வெறுக்கவில்லை. மொழியில் உயர்வு, தாழ்வை நாம் கற்பிக்கவில்லை. அவரவர் தாய்மொழி, அவரவர்க்கு உயர்வான ஒன்றே....!

ஆதலால், தாய் மொழி பேணுதல் அனைவர்க்கும் அழகு......!


0 comments:

Post a Comment