Tuesday, 18 November 2014

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


பெரம்பலூர்: பெரம்பலூர் தனலெட்சுமி மெடிக்கல் கல்லூரியை ஓ.எல்.எக்ஸ். மூலம் விற்க...

Posted: 18 Nov 2014 08:23 AM PST

பெரம்பலூர்:
பெரம்பலூர் தனலெட்சுமி மெடிக்கல் கல்லூரியை
ஓ.எல்.எக்ஸ். மூலம் விற்க முயன்ற 3 பேரை காவல்துறை கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

உங்க வீட்டுல இருக்கிற பழைய பொருட்களை விற்க ஓ.எல்.எக்ஸ் இருக்கு அப்லோட் பண்ணுங்க என அடிக்கடி டிவியில் விளம்பரம் ஒளிபரபப்படுகிறது.

இந்த ஓ.எல்.எக்ஸ் மூலம் ஒரு மருத்துவ கல்லூரியையே விற்க முயன்றுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்திலேயே மிகப்பெரிய கல்வி நிறுவனமாக விளங்கும் தனலெட்சுமி கல்வி நிறுவனம், திருச்சி, பெரம்பலூர், சென்னை என 16க்கும் மேற்பட்ட பொறியியல், மருத்துவக்கல்லூரிகள், கலை மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள், பள்ளிக்கூடங்களை நடத்தி வருகிறது.

இதில் தனலெட்சுமி மருத்துவக் கல்லூரியை 700 கோடிக்கு விற்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் இணையதளத்தில் விளம்பரம் வந்தது.

இதனால் கல்லூரிக்கு எண்ணற்ற விசாரணைகள் வரவே இது தொடர்பாக தனலெட்சுமி மருத்துவக்கல்லூரி நிர்வாகம் சார்பில் பெரம்பலூர் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சென்னை முகலிவாக்கத்தைச் சேர்ந்த முருகன், கதிரவன் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர்.


மது அருந்தும் தந்தை களுக்கு சமர்ப்பணம் !!!! மருத்துவமனைகளை இடித்து விட்டு மருத...

Posted: 18 Nov 2014 05:08 AM PST

மது அருந்தும் தந்தை களுக்கு சமர்ப்பணம் !!!!

மருத்துவமனைகளை இடித்து விட்டு மருத்துவர்களை எல்லாம் வீட்டிற்கு அனுப்பி விடுவோம் !!

நீங்கள் கூறுவது போல் உடம்புவலிக்குத் தீர்வு
" மெக்டவல்ஸ் " தான் என்றால் !!...

தியான இல்லங்களை கோவில்களை எல்லாம் இடித்து விடலாம் மன அமைதியை
" நெப்போலியன் "
தருவது
உண்மையானால் !!..

மனக்காயங்களை ஆற்ற குடிப்பதாகச் சொல்லிக் கொள்ளும்
தந்தையர்களே !!.

உங்களை விடவும் இன்றைய கல்விமுறையால் மனகாயங்கள் எங்களுக்கு தான் அதிகம் !!

யோசிக்க நேரமில்லை எங்களுக்கும் ஒரு பெக் ஊற்றுங்கள் ..!!!

இந்த கவிதையால் யாருடைய மனது புன்படுமானால் என்னை மன்னிக்கவும் ...

இனிய இரவு வணக்கம் நண்பர்களே ..

இவண்
- கமல்


பெண் பாவம் பொல்லாத்து !! பெண் தியாகத் திருவுருவம் . எரியும் மெழுகு எப்போதும்...

Posted: 18 Nov 2014 04:51 AM PST

பெண் பாவம்
பொல்லாத்து !!

பெண் தியாகத் திருவுருவம் .

எரியும் மெழுகு எப்போதும் தனக்கின்றி ஏற்றியவர்க்கே
உருகும் ;
ஒளி தந்து மருகும் .

பெண்ணும் அப்படியே ...

சமைக்கின்றவள் அவள் ;
சுமக்கின்றவள் அவள் ;
அழுகின்றவள் அவள் ;
தொழுகின்றவள் அவள் ..

நமக்காக தன் முகவரியை மாற்றிக் கொண்டாள் ;
முன்னெழுத்தை மாற்றிக் கொண்டாள் ..

சைவம் உண்டவள்
அசைவம் சாப்பிட்டாள் ;
அசைவப் பிரியை
சைவத்திற்கு மாறினாள் ..

பச்சை இலையவளை பந்திக்கு வைத்து எச்சில் இலையாக்கி இன்பம் அடைந்தோம் ...

அன்றுமுதல் இன்றுவரை அவளை குற்றவாளியாக்கி அழகு பார்க்கிறோம் .

ஆதாம் ஆப்பிள் தின்று ஏவாளை குற்றவாளியாக்கி தொடங்கி வைத்த பாவம் தொடர்கிறது இன்றும் .

அவளுக்குத்தான் எத்தனை எத்தனை பெயர்களைச் சூட்டி சூழ்நிலைக் கைதியாக்கினோம் .

அம்மா என்றழைத்து அவள் பாசத்தை பங்கு போட்டோம் .

அத்தை என்றழைத்து அவள் மகளுக்கு விண்ணப்பம்
போட்டோம் ..

மனைவி என்றழைத்து மஞ்சத்தில் இடம் போட்டோம் .

மலடி என்றழைத்து மங்கையவளை களங்கப் படுத்தினோம் .

பாட்டி என்றழைத்து பத்திரங்களை பத்திரப் படுத்தினோம் .

நாம் புணர்ந்துவிட்டு அவளை விபச்சாரியாக்கினோம் .

ருசியையும் பசியையும் நாம் போக்கி கொண்டதற்கு அவளுக்கு " வேசி " பட்டம் வழங்கினோம் .

பூக்களைக் பரிசளித்து கூந்தலை பிடுங்கிக் கொண்டோம் .

உணவை பரிசளித்து கைகளை கட்டி
விட்டோம் .

நாம் இறந்துவிட்டு அவளை விதவையாக்கினோம்.

அவளுக்கு சேலை பரிசளித்தோம் - நாமே துச்சாதனர்களாய் துகிலுரித்தோம் .

அவளுக்கு மட்டும் கற்பு வைத்தோம் ;
நம் கற்பை அடகு வைத்தோம் .

நம்மீது அட்சதை தூவப்பட தட்சணையை அவளிடம் வாங்கி கொண்டோம் .

நாம் பசியாற அவளை அடுப்பில் வேகும் அரிசிகளாக்கினோம் ;
கவிதையில் மட்டும் அரசிகளாக்கினோம் ;
நாம் சிற்பிகளாக அவளை நிர்வாணப்படுத்தி காட்சிப் பொருளாக்கினோம் .

நாம் ஒவியர்களாக அவளழகை ஆதாரமாக்கினோம் ;
அவள் தனங்களில் பாலையல்ல ரத்தத்தையே உறிஞ்சினோம் .

போதும் ஆண்வர்க்கமே போதும் ...

அவள் கண்ணீர்க் கடலில் நாம் மூழ்கும் முன் நமக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை இதுதான் -பெண் பாவம் பொல்லாதது !!!

இனிய மாலை வணக்கம் நண்பர்களே ..

இவண்
- கமல்


நம் வெளிச்சத்தில்தான் இத்தனை கொடூரங்களா ? இம்மானுட உலகில் இனி உலகம் இருண்டு போக...

Posted: 18 Nov 2014 01:01 AM PST

நம் வெளிச்சத்தில்தான் இத்தனை கொடூரங்களா ?

இம்மானுட உலகில் இனி உலகம் இருண்டு போகட்டும் !!..

இத்துணை பாவங்களுக்கும் நாமும் ஒரு காரணமா ?

என்று வேதனைப்பட்டது சூரியன் ...

இவண்
- கமல்


வணக்கம் நண்பர்களே !!! முகநூல் நண்பர்களின் சாதனை ..! 29 / 10 / 2014 அன்று kaviy...

Posted: 17 Nov 2014 09:29 PM PST

வணக்கம் நண்பர்களே !!!

முகநூல் நண்பர்களின் சாதனை ..!

29 / 10 / 2014 அன்று kaviyasri என்ற குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய பணம் இல்லாமல் தத்தழித்து வந்தனர்..

இந்த தகவல் நமது TNS social service க்கு தெரிவிக்கப்பட்டது. உடனே அந்த ஏழ்மை நிலையை பற்றி பேஸ்புக் தமிழ் பேசும் மக்கள் சங்கத்தில் ஒரு பதிவு போடப்பட்டது ..

அந்த பதிவை கிட்டத்தட்ட 1,26,820 . நண்பர்கள் share செய்து அதன் மூலம் அந்த குழந்தை மருத்துவ செலவுக்கு தேவையான ரூபாய் ; 16 லட்சம் வசூல் செய்து அந்த குழந்தைக்கு வழங்கப்பட்டது ..

தற்போது மருத்துவர்கள் குழந்தையின் உடல் நலம் நன்றாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர் ..

அந்த பதிவை share செய்த நண்பர்களுக்கும் , நேரில் சென்றும் ,வங்கி மூலமாக உதவிய நண்பர்களுக்கும் ..

குழந்தைக்காக பிரத்தனை செய்த நண்பர்களுக்கும் ..

கோடி நன்றிகள் !!!

ஒரு உயிர் உங்களால் காப்பாற்றப்பட்டது ...

வாழ்க !!! வளமுடன் !!


உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் .. கண்டிப்பாக படிக்கவும்.. share பன்னவும்...

Posted: 17 Nov 2014 10:06 AM PST

உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் ..

கண்டிப்பாக படிக்கவும்..
share பன்னவும் ....

அன்பு நண்பர்களே.!
தருமபுரி மாவட்டம்
ஊத்தங்கரை எனும்
ஊரில்.,
தீமைக்கும் நன்மை செய்
அன்பு இல்லம் தொடங்கப்பட்டுள்ளது.

இங்கு
குழந்தைகளும்
முதியவர்களும்
தத்து எடுக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு
உங்கள் வீட்டில்
இருக்கும் பயன்படுத்தாத
பழைய துணிகள்
பள்ளிக் குழந்தைகளுக்கு
பாட புத்தகங்கள்
மீதமாகும் விழாக்கால உணவுகள்
வயிராற உணவருந்திடவும்
சில அடிப்படை வசதியின்றி
சிரமப்படும் ஆசிரமத்திற்கு
உதவுங்கள்.

நம் கண்முன்னே
பசியாலும் வறுமையிலும்
உயிர்கள் துடிக்கிறது
நாம் ஏதேனும் உதவலாமே.

ரூ.500 இருந்தால் போதும்
ஒரு வேளை வயிராற உணவு உண்பார்கள்..!

நம் முன்
ஆதவரற்று அனாதையாய்
நிற்கின்றனர்.
மனித நேயம் அழியவில்லை என்று
உணர்த்துவோம் உலகிற்கு,

அன்புக் கரம் நீட்டி
அரவணைப்போம் நம்
சொந்தங்களை.

உங்களால் முடிந்த பண உதவியோ அல்லது பொருளாகவோ,
நேரிலோ ,வங்கி முலமாகவோ உதவுங்கள் .

சக உயிர்கள் உணவின்றி தவிக்கிறது இதை படித்து பகிருங்கள் உலகம் அறியட்டும் உதவும் எண்ணம் கொண்டோருக்கு போய் சேர வேண்டுகிறோம்..

நண்பர்களே இணையுங்கள் இந்த ஆசரமத்தை காப்போம் ...

இவர்களுக்கு ஏதேனும் உதவ விரும்பினால் ..

## முகவரி ...##

C.sivakumar 26/35 bharathipuram uthangarai krishnagiri Dt
635207.

# bank account ; #

C.sivakumar
Ac no ; 708380125.
IFSC CODE ; IDIB000U005.
MICR CODE ; 635019094 UTHANGARAI BRANCH INDIAN BANK

TNS social service
நிர்வாக இயக்குனர்கள் ;
1 ) C . சிவக்குமார்
்cell ; 9894229155..

2 ) கமல்
7639532370..

3) ராம்
9629429139

வாழ்க. !!! வளமுடன் !!!


நண்பனே !!! இனிய வானிலையே இரக்கத்தின் மறுவுருவே சூரியப் பிரகாசமே நெஞ்சத்து நினைவே...

Posted: 17 Nov 2014 09:28 AM PST

நண்பனே !!!
இனிய வானிலையே இரக்கத்தின் மறுவுருவே சூரியப் பிரகாசமே நெஞ்சத்து நினைவே மாலை வெயிலே மனதின் இதமே !!

என் நம்பிக்கையின் உருவம் நீ !!
கடவுள் எனக்களித்த
கறைப்படாத வரம் நீ !!

என் கரங்களின்
விரல்கள் நீ !!
என் தோளின்
வலிமை நீ !!

என் மகிழ்ச்சியின் பிரதிபலிப்பு நீ !!
என் சோகத்தின்
கண்ணீர் நீ !!

நான் கண்டெடுத்த
புதயல் நீ !!
என் அந்தரங்க விஷ்யங்களை அணுவணுவாய்
அறிந்தவன் நீ !!

நமக்குள் ரகசியங்கள் எதுவுமில்லை ..

முடிக்காமல் படிக்க
வேண்டிய புத்தகம் நீ !!

சிநேகிதனே உற்சாக
பானம் நீ !!
நான் ஒடிய தூரம் பாதி ;
நீ ஓடவைத்த தூரம் மீதி .

கடினமான காலங்களில் கரங்களைப் பிடித்து தோள்களைப் பற்றி ஆறுதல் தந்தவனும் தேறுதல் தந்தவனும் நீ தான் ..

மகிழ்ச்சியிலும் இகழ்ச்சியிலும் பக்கத்தில் இருந்தவன் பகிர்ந்து கொண்டவன் நீயே தான் !!.

உன்குரல் சோர்வகற்றும் தேவகானம் ..

ஒப்பனை இல்லா ஒப்பற்ற அழகு நம் நட்பு !.

ஒற்றைத் தலையணை பகிர்ந்து கொண்டோம் !
ஒற்றைத் தட்டில் பகிர்ந்து உண்டோம் !
ஒற்றை ஆடையை இருவரும் உடுத்தினோம் !!

உண்மை சொல்லட்டுமா ?.

உன் அழுக்கு ஆடைக்கு நிகரான அழகான ஆடையை இதுவரை உடுத்தியதில்லை என் தேகம் !!!

திகட்டாத அன்பு உன் அன்பு ;
தித்திக்கும் நட்பு
உன் நட்பு ..

வார்த்தைகள் சோர்ந்து போயின நம் உரையாடலின் நீளத்தில் ..

நேரங்கள் தீர்ந்து போயின நம் நேசிப்பின் ஆழத்தில் ..

துன்பத்தில் அழுவதற்கு தோள் தந்தவனே !!
என் கண்கள் உப்புகாய்ச்சிய போதெல்லாம் தடைபோட்டன உன் கைகள் ...

நீயில்லாத நாட்கள் நிஜத்தில் முட்கள் ;
நிழலல்ல நீ நிஜம் ..

நம் தூரங்களை தொலைபேசி தூக்கி தூரப்போட்டு விடுகிறது ..

நலவிசாரிப்புகள் இன்றி நம் நாட்கள் நகருவதேயில்லை ;
சில நாட்கள் நலவிசாரிப்புகளுக்காகவே
நகர்ந்து விடுகின்றன ..

என் கனவுகளை உன் இதயத்தில்தான் சேமிக்கிறேன் ..

சுயநலமில்லா அரவணைப்பு சொல்லப்படாத அன்பு நொடி நேரப் பார்வை மென்மையான புன்னகை கனநேர கைகோர்ப்பு இவைதான் நீ நிதமும் நல்கும் அன்பளிப்புகள் ;
நட்பின் அடையாளங்கள் ..

பாசக்காரா பட்டாம்பூச்சியின் சிறகுகள் கடன்வாங்கி பாருலகம் பவனிவருவோம் வா !!..

சூரிய வெயிலோடு சுற்றித் திரிகிறோம் ;
கனமழையில் கைகோர்த்து காலாற நடக்கிறோம் ...

என் பெற்றோரின் பாசத்தை நீயும் !!
உன் பெற்றோரின் பாசத்தை
நானும் !..
பரஸ்பரம் பங்கிட்டுக்
கொள்கிறோம் ....

உன் சட்டைப் பை சில்லரையையும் என் சட்டைப் பை சில்லரையையும்
சேர்த்து கேண்டீனில் சமோசா தேநீர் பருகுகிறோம் ...

தினமும் சேர்த்து நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கிறோம் ..
தேர்வறையிலும் " பேனா " மாற்றுமுறை செய்கிறோம் !..

நமக்கான நட்பின் நினைவுகளை இப்படித்தான் சேமிக்கிறோம் !!

உனக்கான என் பாசம் இதழோரம் அல்ல இதயமோரம் இருக்கிறது !!

உன் கடந்தகாலக் காயங்களின் மருந்தாக !
நிகழ்கால பாதைக்கு ஒளியாக !!
எதிர்காலப் பயணத்திற்கு வழியாக !!
நான் நிச்சயம் இருப்பேன் !!..

ஒன்று சொல்லட்டுமா ?..
நீயில்லாத என் நாட்கள் நாட்குறிப்பில் கூட முற்று பெறுவதில்லை ......

இனிய இரவு வணக்கம்
நண்பர்களே!

இவண்
- கமல்


0 comments:

Post a Comment