Thursday, 13 November 2014

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


+++++மரணிக்காது மரணித்த நண்பனுக்காக+++++ இருபது வருடங்கள் வகுப்பறை, புத்தகம், ஆ...

Posted: 13 Nov 2014 05:30 AM PST

+++++மரணிக்காது மரணித்த நண்பனுக்காக+++++

இருபது வருடங்கள் வகுப்பறை, புத்தகம், ஆசிரியன், நட்பு, பகைமை, குடும்பம், சமுகம், கற்றுத்தராத பாடங்களை இரண்டே வருடத்தில் சேலைன், ஊசி, ரத்தம், Abiraterone,Cytoxen,Keoxifene எனக்கு கற்றுத்தந்தது.

நான் ஒன்றும் அவ்வளவு பெரிய தைரியசாலியில்லை இரவில் வெளிக்கு போவதற்கு கூட அம்மாவை எழுப்பும் ஜாதி, இன்று மலையை புரட்டும் மன தைரியத்தை உணர்கிறேன்.

நோயை உறுதிப்படுத்திய அந்நாள் குருவிக்கூட்டில் இடிவிழுந்த நாள், அன்றிலிருந்து அம்மாவின் விழியோரம் ஈரமில்லாமல் நான் கண்டதில்லை, அன்றுவரை தங்கையின் இதழோரம் சிரிப்பில்லாமல் நான் கண்டதில்லை.

எனது வீட்டை நான் பார்த்து மாதங்களாச்சு, வீட்டுக்கு போகனும் என்று நான் கேட்கும் போதல்லாம் கிடைக்கும் பதில் கவலை படாதீங்க சீக்கிரமே போயிடுவீங்க, அர்த்தம் புரியாமலா என்ன.

படிக்கும் மேசையில் பங்கு கேட்டழுத தம்பிக்கு இனி அழ வேண்டியிருக்காது முழுதுமே அவனுக்கு தான்.

அலுமாரியின் இடுக்கில் 500 ரூபாய் நோட்டும் கடிதம் ஒன்றும் இருக்கும், பணத்தில் தங்கைக்கு சிவப்பு ரோஜா இட்ட கைப்பை ஒன்று வாங்கிக்கொடுங்கள், அவள் என்னிடம் ஆசைப்பட்டு கேட்டது.
கடிதம்! நண்பனுக்கு கிடைத்த காதல் கடிதம் அவனிடம் பறித்துக்கொண்டது, அதை திருப்பிக்கொடுத்துவிடுங்கள் அவனே மறந்திருப்பான்.

கனவுகள் கருகிய வாலிபனாய் நான் இன்னும் பலர் என்னுடன் யார் முந்தப்போகிறோம் என்ற ஓட்டத்துடன்,
கட்டில் காலியாகும் வரை பார்த்திருக்கும் ஒரு கூட்டம், அதிசயம் நிகழும் என காத்திருக்கும் ஒரு கூட்டம்.

இடக்கையில் குத்திய ஊசியை விட இலக்கத்தை சுற்றும் ஊசி வலிக்கிறது,
பெயர் கூப்பிடும் வரை காத்திருக்கிறேன் ..............!!

நன்றி:- ஷகீக் அஹ்மத்


தமிழன் ! விடியற்காலை, பயிரிடும் பெண்மணிகள் ஒருபுறம் இருக்க ... ஏர் பூட்டி உழுத...

Posted: 13 Nov 2014 02:30 AM PST

தமிழன் !

விடியற்காலை,
பயிரிடும் பெண்மணிகள் ஒருபுறம் இருக்க ...
ஏர் பூட்டி உழுது வரும் உழவன்
நல்ல தமிழனடா

விழாக்காலங்களில்,
பொங்கல் வச்சு படைக்க,
பெண்மணிகள் ஒருபுறம் இருக்க ...
காப்பு கட்டி, மஞ்சள் வேட்டி கட்டி
கோயில் வேலைகளை எடுத்து செய்பவன் நல்ல தமிழனடா

மஞ்சு விரட்டன்று
கண்ணாடி வளையல், வெள்ளி கொலுசு, மல்லிகை பூ, காதுல ஜிமிக்கி, கழுத்தில் முத்துமாலை, தாவணி அணிந்து,
காத்திருக்கும் கன்னி பெண்கள் இருக்க ...
காளைகளை அடக்கி வீரத்திருமகனாக வருபவர் நல்ல தமிழனடா

வீட்டிர்க்கு வருகின்ற அனைவருக்கும்
சுவையான சமையல் செய்து,
வாழை இலையில்
பரிமாறி, நவரசமாக பேசும் பெண்மணிகள் இருக்க ...
கறைப்படாத வெள்ள வேட்டி கட்டி
அன்பு மழை காட்டி வருபவர் நல்ல தமிழனடா

- கண்ணன்


சமீபத்தில் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படத்தில் ஒரு கிராம மக்கள் தங்கள் நிலத்தடி நீ...

Posted: 13 Nov 2014 12:07 AM PST

சமீபத்தில் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படத்தில் ஒரு கிராம மக்கள் தங்கள் நிலத்தடி நீரை காக்க ஒரு நிறுவனத்தை எதிர்த்து போராடி வென்ற கதையை பார்த்து நம்மில் பலர் உணர்வுபூர்ணமாக அந்த படத்தின் இயக்குனரை பாராட்டினோம். அதை போன்ற ஒரு போராட்டம் தமிழகத்தில் திருச்சியை சேர்ந்த சூரியூரில் நடந்து கொண்டு இருப்பதை நம்மில் பலர் அறிந்து இருக்க மாட்டோம். ஆம், நம் உடல் நலத்தை கெடுக்கும் பெப்சி குளிர்பானம் தயாரிக்க சூரியூர் தண்ணீர் வளம் காணாமல் போய்க் கொண்டு இருக்கிறது. இந்த தொழிற்சாலை எந்த வித அனுமதியும் இன்றி செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதை எதிர்த்து கிராம மக்கள் போராடினால் வழக்கம் போல தவறு செய்த தொழிற்சாலையை காப்பாற்ற பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் அனைவரையும் காவல்துறை கைது செய்துள்ளது. தற்பொழுது மாவட்ட ஆட்சியர் அந்த மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டு இருக்கிறார்.

இவர்கள் அனைவரும் தற்பொழுது திருவெரும்பூர், ஏ.எஸ். மஹாலில் (சாந்தி தியேட்டர் அருகில்) அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த பதிவை அனைவரும் முடிந்த அளவு பகிரும்படிகேட்டுக் கொள்கிறோம். இயக்கத்தில் இருந்து அவர்களிடம் தொடர்பில் உள்ளோம். வேண்டிய உதவிகள் அனைத்தும் செய்ய தயாராக உள்ளோம். மேலும் அவர்களுக்கு உதவ விரும்புவோர் 8190849055, 9629093144, 9791702630, 9976163444, 9715940745, 9500189319 ஆகிய எண்களில் போராட ஒருங்கிப்பாளர்களை தொடர்பு கொள்ளலாம்.

via சட்ட பஞ்சாயத்து இயக்கம்
நன்றி:- Raja Ilaya Marudhu


Posted: 12 Nov 2014 11:47 PM PST


0 comments:

Post a Comment