Saturday, 18 October 2014

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


"மம்மி" சொல்லு,, என்று அடிக்கிறாள் அன்னை.. "அம்மா" என்றே அழுகிறது குழந்தை.....

Posted: 18 Oct 2014 07:30 AM PDT

"மம்மி" சொல்லு,,
என்று அடிக்கிறாள்
அன்னை..

"அம்மா" என்றே
அழுகிறது குழந்தை..

அதானே தாய் மொழி...


" தமிழ் மொழியின் சிறப்பு " தற்பொழுது நாம் பயன்படுத்தி வரும் எண்கள் இந்து-அரேபிக...

Posted: 18 Oct 2014 05:12 AM PDT

" தமிழ் மொழியின் சிறப்பு "

தற்பொழுது நாம் பயன்படுத்தி வரும் எண்கள் இந்து-அரேபிக்(INDO-ARABIC) எண்கள். ஆனால் உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியில் சிறப்பு எழுத்துக்களால் எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்று முதல் பத்து வரை மட்டுமின்றி நூறு, ஆயிரம் ஆகியவற்றுக்கும் தனி எழுத்துகள் பயன்பட்டிருந்தன.

இந்து-அரேபிக்(INDO-ARABIC), ரோமன்(ROMAN) எண்களை பற்றி சொல்லிக் கொடுத்த நம் கல்வி, தமிழ் எண்களை பற்றி சொல்லிக் கொடுக்க தவறிவிட்டது...

இப்பதிவை அனைவரிடத்திலும் பகிர்ந்துக்கொள்ளுங்கள்....
தமிழின் சிறப்பை உலகறிய செய்யுங்கள்...


ஊர்த் திருவிழாக்கள் எங்கு பார்த்தாலும் ஒரே இளைஞர்கள் கூட்டம்... வெளியூரிலிருந...

Posted: 17 Oct 2014 07:48 PM PDT

ஊர்த் திருவிழாக்கள்

எங்கு பார்த்தாலும் ஒரே இளைஞர்கள் கூட்டம்...

வெளியூரிலிருந்து வந்திருந்து கடைசி நாளில் தென்படும் தலைகள் பலர்....

சண்டையில் இருந்து சமாதானமாக மாறும் சில குடும்பங்கள்.....

சமாதானத்திலிருந்து சண்டை போடும் சில குடும்பங்கள்...

நினைத்ததை முடித்த கடவுளுக்கு கைமாறு செய்யும் வகையில் நேத்திக்கடன்கள்........

பத்து நாட்களில் ஊரையே புரட்டி போடும் இரவு நேர கலைநிகழ்ச்சிகள்....

சொந்தங்களின் வருகையால் குதுகலிக்கும் குழந்தைகள்....

வீடு முழுவதும் நிறைந்திருக்கும் ஆட்கள்....

படித்தவர்கள், படிக்காதவர்கள், சொந்தங்கள், என யார் பார்க்கிறார்கள் என்ற கவலையில்லாமல் நடுத்தெருவில் போடும் ஆட்டம்.......

ஒவ்வொரு முறை அவளின் வீட்டை கடந்து செல்லும் போதும் வெளியே வருவாளா என்ற ஏக்கம்.......

கடைசி நாள் விரதம் முடிக்கும் ஆட்டுக்கறி.......

அனைத்தும் இன்றுடன் முடியும் என எண்ணும் போது வருகின்ற வருத்தம்.....

இவையனைத்தும் கிராமத்து வாசிகளுக்கே கிடைக்கும் மகிழ்ச்சி.....

கிராமத்துவாசி : பா விவேக்


0 comments:

Post a Comment