Saturday, 18 October 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


அடையார் டிப்போ வரைக்கும் கப்பலையே வரலாம் போல.. சென்னை மிதக்கிறது.. @நிக்கோலஸ...

Posted: 18 Oct 2014 08:40 PM PDT

அடையார்
டிப்போ வரைக்கும்
கப்பலையே வரலாம் போல..

சென்னை மிதக்கிறது..

@நிக்கோலஸ்
கோபர்நிக்கஸ்

வித்தியாசமா கூவறான்டா இவன்....

Posted: 18 Oct 2014 11:51 AM PDT

வித்தியாசமா கூவறான்டா இவன்....


விடுதலை புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமான போரின்போது, ஒருசார்பான நிலைப்பாட்டை இந்...

Posted: 18 Oct 2014 11:23 AM PDT

விடுதலை புலிகளுக்கும்
இலங்கை அரசுக்குமான
போரின்போது,
ஒருசார்பான
நிலைப்பாட்டை இந்தியா எடுத்து இருந்தது.
அதனால் இந்தியாவின்
தகவல்களை நம்பகத்தன்மை கொண்டவையாக
கருத முடியாது. -----
ஐரோப்பிய ஒன்றிய
நீதிமன்றம

Posted: 18 Oct 2014 11:13 AM PDT


நீலகிரியில் வனத்துறை மற்றும் தேயிலைத் தோட்டங்கள் தவிர மற்ற பகுதிகளை இரண்டு பிரிவ...

Posted: 18 Oct 2014 08:40 AM PDT

நீலகிரியில் வனத்துறை மற்றும் தேயிலைத் தோட்டங்கள் தவிர மற்ற பகுதிகளை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம்.

ஒன்று ஏற்கனவே காங்கிரீட் குப்பைகளாகவும் காங்க்ரீட் மலைகளாகவும் மாறிப்போன பகுதிகள்!

இரண்டாவது, அத்தகைய காங்கிரீட் குப்பைகளாக மாற்றுபவர்களிடம் நல்ல விலையை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் அல்லது என்றைக்கிருந்தாலும் நல்ல காசு பார்க்கலாம் என்று ஒரு சொத்தாக வைத்திருப்பவர்கள்.

ஆனால் நீலகிரியைக் காக்கும் எண்ணம் சில நல்லவர்களைத் தவிர மற்ற யாரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை!....

நீலகிரி மிஞ்சுமா?...

@சுபாஷ் கிருஷ்ணசாமி


சிற்பியின் முழு அற்பணிப்பு - ஆயிரம் கால் மண்டபம் மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோ...

Posted: 18 Oct 2014 06:05 AM PDT

சிற்பியின் முழு அற்பணிப்பு - ஆயிரம் கால் மண்டபம் மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆயிரம் கால் மாண்டபத்தில் உள்ள தூண் சிற்பம்.இந்த பெண் சிற்பத்தில் மூன்று குழந்தைகளை தாங்கி கொண்டு நடக்கிறது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது, சிற்பியின் கற்பனை திறமையா? இல்லை தெருகூத்தடிகளின் வாழ்க்கை முறையா என்பது தெரிவில்லை, அவள் கையில் ஒரு பனை ஓலையில் செய்யப்பட்ட கூடை போன்று வைத்துள்ளாள் அதில் அந்த கூடையை எங்கள் ஊரில் கடகா பெட்டி என்று பேச்சு வழக்கில் சொல்லுவார்கள், அதில் பனைஓலையின் வடிவம் செதுக்கப்பட்ட விதம் சிற்பியின் பொறுமையை என்னவென்று பாராட்டுவது வார்த்தைகளே இல்லை, அந்த அளவுக்கு நுணுக்க வேலைப்பாடு நீங்க அதை நேரில் சென்று பார்த்தல் நிஜமானதாகவே தோற்றம் அளிக்கும் அப்படி ஒரு தத்துருவமாக வடித்துள்ளார்,

அவள் மூன்று குழந்தைகளை தாயானவள் போலும், ஒரு குழந்தையை தான் தோள்பட்டையில் சுமந்து கொண்டும் மற்றொரு கைகுழந்தையை நெஞ்சில் தன் துணியால் தொட்டில் போன்று கட்டி பாதுகாப்பாக வைத்துள்ளாள் இந்த வழக்க முறைகளை நான் குறவன் குறத்திகள் வாழ்கை முறையில் பார்த்துள்ளேன், இது செதுக்கப்பட்ட ஆண்டு 17 ஆம் நுற்றாண்டில் . ஆனால் இன்று நகரப்புறங்களில், வெளிநாடுகளில் இதை கொஞ்சம் நவீனபடுதில் பெல்ட் போன்ற அமைப்பில் வடிவமைக்கப்பட்டு குழந்தைகளை கொண்டுசெல்கின்றனர், அந்த குழந்தை அவளின் மார்பில் பால்குடிப்பது போன்று உள்ளது, வெகுதூரம் நடக்கும்போது குழந்தை பசியால் அழாமல் இருக்க இப்படி யுத்தியை வைத்துள்ளாள் போல?

மூன்றாவது குழந்தை இன்னொருகையின் அரவணைப்பில் நடப்பது போன்று உள்ளது.இரண்டு குழந்தைகளுமே எதோ ஒன்றோ கைகளில் வைத்து சாப்பிடுகின்றனர் , மறுபக்கம் பனைஒலைபெட்டி தன முழங்கையால் இருக்கபற்றிகொண்டும், கைவிரலகால் அந்த குழந்தையையும் பாதுகாத்து கூட்டிசெல்கிறாள்.

முன்பெல்லாம் சந்தை போன்ற அமைப்பு உண்டு வாரத்தில் ஒருநாள் அனைத்துவிதமான பொருள்களும் அங்கு விற்பனைக்கு வரும்.கிராமங்களில் மக்கள் எல்லோரும் வீட்டுக்கு தேவையானதை அன்றைக்கு வந்து வாங்கி செல்வர்கள், அப்போது தன் குழந்தைகளை கூட்டிகிட்டு வருவார்கள். குழந்தைக்கு தேவையானதை வாங்கிகொடுத்துவிட்டு அவன் அவன் வெகுதூரம் நடக்கவேண்டு அழாமலும் இருக்கவேணும் என்பதற்காக அவனுக்கு பிடித்தமானதை வாங்கித்தருவார்கள் முட்டாய் அல்லது ரொட்டி எதோ ஒரு தீன் பண்டத்தை கொடுத்து வீடுவரைக்கும் நடந்து வருவார்கள், இதை போன்று கூட அந்த சிற்பம் சித்தரிக்கப்ட்டு வடிவமைக்கப்பட்டு இருக்கலாம். .

அன்பு மிகுந்த தாயின் வெளிபாடு சிற்பியின் உளிபட்டு இப்படி ஒரு உயிர் தோன்றல் இதுவும் ஒரு வகை பிரசவிப்பு தானே. சிற்பியின் மனதுக்குள் இருப்பதை கற்பனை கருவை மனசால் சுமந்து அதை ஒரு பாறையில் இருந்து பிரசவிக்கிறான் அது முழுமையடையும் பொது அதை அவன் பார்த்து எப்படி ஒரு பூரித்து போயிருப்பன். கற்பனை பண்ணிபார்தல் கூட நம் கண்களில் ஆனந்த கண்ணீர் தான் வரும்.

தூண்களை எல்லாம் தூக்கி நிறுத்திய பிறகே இந்த வேலையை தொடங்குவார்கள். சாரம் கட்டி எத்துனை நாள் பசியை மறந்தும் கூட இதை வடித்திருப்பான். நிலைநிறுத்திய பிறகு சிற்பங்கக் செதுக்கும் பொது சேதம் ஆனாலும் தூணை அப்புறபடுத்துவது என்பது இயலாத காரியம்.சிற்பியின் முழு அற்பணிப்பும் இதுலையே அடங்கும் இதை முடித்த பிறகு கூட அவன் பெயரை கூட அதில் பொறிக்கவில்லை அப்படி பட்ட சிற்பிகள் நம் தமிழ் நாட்டில் வாழ்ந்திருகிறார்கள். இந்த சிற்பங்கள், கலைகள் எல்லாம் நம் தலைமுறை வந்திருக்கிறது என்ற நினைக்கும் பெருமையாக இருக்கிறது.

இப்படி பட்ட ஒரு வேலைபாட்டை, நாம் பாதுகாக்கவேண்டும்.நம் முன்னோர்களின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவேண்டும் அதை எடுத்துசொல்ல நாம் என்றும் மறக்ககூடாது. இன்னும் ஆயிரம் தலைமுறைக்கும் நம் மண்ணின் பெருமையும்,திறமையும் அற்பனிப்பையும் சொல்லவேண்டும் . சிற்பங்களை நாம் பாதுக்கவேண்டும், அதில் வண்ணம் பூசுவது, திருநீர் கொட்டுவது ,குங்குமம் கொட்டுவது, பரிட்சை எண்களை எழுதவது காதல் சின்னங்களை பொரிப்பது கூடாது. அப்படி நம் கண்முன்னாடி இது போல நடந்தாலும் அதை உடனே தட்டிகேட்கவேண்டும் அவர்களிடம் நம் பெருமையை எடுத்துசொல்லவெண்டும் .

- பா விவேக்


சனிக்கிழமை சாயங்காலம் ஆனாலே பேஸ்புக்கில் சரக்கு,சைட் டிஷ்,மட்டை போன்ற வார்த்தைகள...

Posted: 18 Oct 2014 03:45 AM PDT

சனிக்கிழமை சாயங்காலம் ஆனாலே பேஸ்புக்கில் சரக்கு,சைட் டிஷ்,மட்டை போன்ற வார்த்தைகள் அடங்கிய இளைஞர்களின் ஸ்டேட்டஸ்கள் நிறைய பதிவாகிறது.இந்த இளைஞர்கள் எல்லாம் பொறுப்பில்லாதவர்களா என ஆராய்ந்தால் அவர்கள் அவ்வாறான நபர்களாகவும் இல்லை.ஒரு ஆறு,ஏழு மணி நேரம் போதை தருகின்ற விஷயத்தை மிகவும் பெருமையாக பதிவிடுவது வேதனை.எவ்வளவோ ஆதரவற்ற குழந்தைகள் ஒருவேளை உணவிற்கு வழியின்றி தவிக்கும் நம் நாட்டில் மது போதைக்காக செலவு செய்வது மிக பெரிய பாவம் என கருதுகிறேன்.அந்த மதுவுக்காக நீங்கள் செலவழிக்கும் பணத்தைப் பத்திரப்படுத்தி மாதமொரு முறை இயலாதவர்களுக்கும்,ஆதரவற்றக் குழந்தைகளுக்கும் உணவளியுங்கள்...உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறும்...!

@விஜய் சிவானந்தம்

25 வருடங்களுக்கு முன் செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம் ஆணியில் மாட்ட...

Posted: 18 Oct 2014 01:40 AM PDT

25 வருடங்களுக்கு முன்
செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்
ஆணியில் மாட்டி கிழிந்த துணியை டானிங்க் செய்தது உடுத்தி கொண்டோம்.
முதல் நாள் கூட்டு பொறியல் ரசம் சாம்பாரை சுருண்ட செய்து பழங்கஞ்சியுடன் பருகினோம்.
எல்லா கல்யாணத்திலும் மத்திய உணவு பிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன்.
ரயில் பயணத்திற்கு புளியன்சாதமும் எலுமிச்சை சாதமும் கட்டி சென்றோம்.
பெரும்பாலும் பேருந்தில் தான் போனோம்.
பள்ளி மாணவர்கள் குழந்தைகளாக இருந்தனர்.
இளையராஜா தான் எங்கும் ஒலித்தார்.
பாடல்களின் வரிகள் புரிந்தன.
காதலிப்பதற்கும் உறவுகளுக்கும் கடிதங்கள் எழுதினோம்.
ரஜினி கமல் பொங்கல் தீபாவளி க்ரீடிங்க்ஸ் கிடைத்தது.
உண்டு களித்து தீபாவளிக்கு சினிமா பார்த்தோம்.
காணும் பொங்கலுக்கு உறுவுகளை பார்த்தோம்.
திருடனை பிடிக்க ஊரே ஓடியது.
பாம்படிக்க பக்கத்து வீட்டு மாமா வந்தார்.
பக்கத்து வீட்டு பெரியவர்களுக்கு பயந்தோம்.
கல்யாணத்திற்கு உறவுகள் இரண்டு நாள் முன்னரே வந்தனர்.
எல்லாவற்றையும் விட காலை பொழுதுகள் ரம்மியமாக இருந்தது,
சுவாசிக்கவும் யோசிக்கவும்.

@ஜான்சி

கண்டிஷன் பெயிலை கொடநாடு பக்கம் கொடுத்து இருக்கலாம் #ஓபிஎஸ் மைண்ட் வாய்ஸ்! @பிர...

Posted: 17 Oct 2014 11:38 PM PDT

கண்டிஷன்
பெயிலை கொடநாடு பக்கம்
கொடுத்து இருக்கலாம்

#ஓபிஎஸ் மைண்ட் வாய்ஸ்!

@பிரபின் ராஜ்

அழகு தமிழ்நாடு! இடம் : கடுக்கரை, குமரி மாவட்டம்

Posted: 17 Oct 2014 11:08 PM PDT

அழகு தமிழ்நாடு!

இடம் : கடுக்கரை,
குமரி மாவட்டம்


எதையாவது சமநிலையில் விட்டு வைக்கிறோமா? எதுவுமே அமைதியாக இருந்துவிடக் கூடாது. தஞ்...

Posted: 17 Oct 2014 10:55 PM PDT

எதையாவது சமநிலையில் விட்டு வைக்கிறோமா? எதுவுமே அமைதியாக இருந்துவிடக் கூடாது. தஞ்சாவூர் ஜில்லா அமைதியாக இருக்கிறதா? மீத்தேன் வாயு இருக்கிறது என்போம். கிருஷ்ணகிரி அமைதியாக இருக்கிறதா? கிரானைட் இருக்கிறதென மலைகளுக்கெல்லாம் வெடி வைப்போம். இப்படி எதையும் விட்டு வைப்பதில்லை. நமது அசுரப்பசிக்கு எதை வேண்டுமானாலும் அசைத்துப் பார்க்கிறோம். எங்கு வேண்டுமானாலும் சலனம் உண்டாக்குகிறோம். எத்தனை நாளைக்குத்தான் இந்த வானமும் பூமியும் கொக்குவைப் போல தியானத்தில் இருக்கும்? மொத்த மரமும் நடுங்கப் போகிறது.

@வா. மணிகண்டன்

0 comments:

Post a Comment