Relax Please: FB page daily Posts |
- ஆபிரஹாம் லிங்கன் முதன் முதலாகத் தேர்தலை சந்தித்து, தோல்வியடைந்த நேரத்தில், பிரா...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் வியர்வை சிந்தாத உன்னாலும் மை சிந்தாத பேனாவாலும் எதையும் சாத...
- பிறர் அறிய பகிருங்கள்
- :)
- கொஞ்சம் சிரிங்க பாஸ்... :P கணவன் : நம்ம வீட்டுக்கு வந்த திருடன புடுச்சு அடிச்ச...
- இந்தியனின் தன்மானத்தை உலகுக்கு பறை சாற்றிய மன்னன்.. - ஒரு இந்திய தந்திரம்..! ஒர...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் என் பைக்ல ஒரு பொண்ணு ஸ்கூட்டிய வச்சு மோதிருச்சு...செம கோவம்.....
- தமிழ் பாசம் ! மறைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேயின் மகள் பிரீதம் முண்டே எம...
- :)
- ஓர் அழகான பெண்ணை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே பாதையில் நடந்து சென்ற ஓர் இளை...
- சென்னை அண்ணா நகரில் டீ கடையில் நின்றுகொண்டு இருந்தேன் கடைக்கு பசியுடன் வந்த ஒரு...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் ஒரு மாசம் உழைச்சா எவ்வளவு வருமானம் வரும்னு கரெக்ட்டா தெரிஞ்ச...
- ஆசையும் ஏக்கமும் செல்வத்தைச் சேர்க்காது உழைப்பே செல்வத்தைத் தரும் (y) (y)
- :)
- ஒரு கணவனின் புலம்பல் : கடவுளே இதென்ன மாயை? இதென்ன மோகம்? நம்ம குழந்தை அழுதால் இ...
- பிரசவம் என்பது.... அதை உடல் வலுவுடனும், மன வலுவுடனும் தாங்க வேண்டும் என்பதற்காக...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் ஏசி தியேட்டர்களில் 50ரூபாயும் மற்ற தியேட்டர்களில் 30 ரூபாயும்...
- இது ஒரு ஓவியனின் கை வண்ணம் என்றால் , நம்ப மனம் மறுக்கவே செய்கிறது, அத்தனை யதார்த...
- :)
- தயவு செய்து பகிரவும் அநேகம் பேருக்கு உபயோகமாக இருக்கும்.. FORD MOTORS hiring ca...
- கீழே விழுந்துவிட்டஐம்பது பைசாவை குனிந்து எடுத்த நொடியில்... என் உள்ளாடையில் படி...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் துணிக்கடைகளில் பல மனிதர்களால் நிராகக்கப்பட்ட ஓர் ஆடை யாரோ ஒரு...
- அருமையான 3D மணல் ஓவியம்
- :)
- போன் ரிங் அடிக்கும் போது நம் மக்கள்.. பொதுமக்கள் : ஹலோ .. காதலி : டேய் சொல்லுட...
- பெற்ற தாய்க்கு கூட சலுகை காட்டாத தங்கத் தலைவர்..! காமராஜர் முதல்வராக இருந்தப் ப...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் சுயநலத்திற்காக சொர்க்கம்புகுவதைவிட அடுத்தவர்நலனுக்காக நரகம்போ...
- நாங்களும் யோசிப்போம்ல...... :P
- :)
Posted: 25 Oct 2014 09:03 AM PDT ஆபிரஹாம் லிங்கன் முதன் முதலாகத் தேர்தலை சந்தித்து, தோல்வியடைந்த நேரத்தில், பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார் ஆபிரஹாம் லிங்கன். கூட்டம் முடிந்ததும், "உங்களில் சொர்க்கத்துக்குச் செல்ல விரும்புவர்கள் மட்டும் கையை உயர்த்துங்கள்" என்றார் பாதிரியார். எல்லோரும் கையைத் தூக்க, ஆபிரஹாம் லிங்கன் மட்டும் பேசாமல் நின்றார். "ஆபிரஹாம்! நீ எங்கே போவதாக உத்தேசம்?" என பாதிரியார் கேட்க, தோல்வி அடைந்திருந்த அந்த மன நிலையிலும், "நான் செனட் உறுப்பினராகப் போகிறேன்" என்று உறுதியான குரலில் சொன்னார் அபிரஹாம். "நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்" என புன்னகையுடன் ஆசி வழங்கினார் பாதிரியார். 1809ம் வருடம் அமெரிக்காவின் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்த லிங்கனை, "தோல்விகளின் செல்லக் குழந்தை" என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தொடர் தோல்விகள் அவரைத் துரத்திக் கொண்டே இருந்தன. பிறந்த சில வருடங்களிலேயே தாயை இழந்தார். ஒரு கடையில் எடுபிடி வேலை பார்த்துக் கொண்டே இரவு நேரங்களில் மட்டும் பள்ளிப் பாடத்தை ஆர்வத்துடன் படித்தார். இளைஞனாகி, பக்கத்து நகருக்குப் போனபோது, அங்கே அடிமைகளை வியாபாரம் செய்யும் மனிதச் சந்தையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கறுப்பர்களின் அடிமை வாழ்க்கையைப் பற்றி அவர் கேள்விப்பட்டு இருந்தாலும் காய்கறி போல மனிதர்கள் விற்கப்படுவதை நேரில் கண்டதும் ரத்தம் சூடேற, லிங்கனுக்கு ஒரு புது லட்சியம் பிறந்தது. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் தான் இந்த அவலத்தை அகற்ற முடியும் என்று தெரிந்தும், அவசரமாக தனது 22வது வயதில் ஒரு நகராட்சி தேர்தல் வேட்பாளராக களம் இறங்கி, படுதோல்வி அடைந்தார். இந்த நேரத்தில், சொந்தமாகத் தொழில் தொடங்கி, அதில் பெரும் கடனாளியாக மாறியிருந்தார். சோர்ந்து போயிருந்த லிங்கனை ஒரு போராளியாக மாற்றியது, அவரது வளர்ப்புத் தாய் சாராபுஷ். 'ஆட்சிப் பொறுப்புக்கு வரவேண்டும் என்றால், ஆசைப்படுவதைப் பெறுவதற்கான தகுதிகளை முதலில் வளர்த்துக்கொள்'. "நீ எதுவாக விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்!" என்றார் சாரா புஷ். பாதிரியார் சொன்ன அதே வார்த்தைகள்! இப்போது லிங்கனுக்குத் தன் இலக்குப் புரிந்தது. மனதில் தெளிவு பிறந்தது. அடிமை வியாபாரத்தை சட்டம் போட்டுத்தானே ஒழிக்க முடியும்? எனவே, முழுமூச்சுடன் சட்டம் படிக்கத் தொடங்கினார் லிங்கன். மக்கள் மனதை மாற்றினால் மட்டுமே சட்டத்தை சுலபமாக அமல்படுத்த முடியும் என்பதால், சட்டப்படிப்புடன் பேச்சுத் திறமையையும் வளர்த்துக் கொண்டார். அடிமை ஒழிப்பைப் பற்றி ஊர் ஊராகக் கூட்டம் போட்டுப் பேசினார். ஒரு தலைவருக்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டு, 1834ல் நடந்த நகராட்சி உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அதன்பின் நகராட்சித் தலைவர், மாமன்ற உறுப்பினர், செனட் உறுப்பினர், உபஜனாதிபதி, எனப் பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட்டு சில வெற்றிகளையும், பல தோல்விகளையும் சந்தித்து 1860ம் வருடம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். ஆம், எதுவாக மாற நினைத்தாரோ, அதுவாகவே ஆனார் லிங்கன்!. இல்வாழ்விலும் அவருக்குத் தோல்விகள்தான்! 1835ல் அவரின் காதலி 'ஆனி' விஷக் காய்ச்சலால் மரணம் அடைந்தார். 33வது வயதில் மேரியுடன் திருமணம் முடிந்து நான்கு குழந்தைகள் பிறந்தன. மூன்று குழந்தைகள் சிறுவயதிலேயே மரணமடைந்தார்கள். மனைவிக்கு மனநோய் இருந்தது. இத்தனைத் தோல்விகளையும் மன உறுதியோடு எதிர்கொண்டதால் தான், லிங்கன் வெற்றி பெற முடிந்தது. அமெரிக்க ஜனாதிபதி ஆனதும், அதிரடி நடவடிக்கை எடுத்து அடிமை அவலத்தை ஒழித்து, மாகாணங்களை ஒன்று சேர்த்து, அமெரிக்காவைத் தலை நிமிரவைத்தார் லிங்கன். அந்தச் சாதனையால்தான், அடுத்த முறையும் அவரே மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1865ல் நாடகம் பார்த்துக் கொண்டு இருந்தபோது ஒரு நிறவெறியனால் சுடப்பட்டு மரணம் அடைந்தார் லிங்கன். மணவாழ்க்கை பற்றி லிங்கன் கூறியது - மணவாழ்க்கை லிங்கனுக்கு அவ்வளவு உவப்பாக இல்லை. பிற்காலத்தில் தம் இல்லற வாழ்க்கை பற்றி குறிப்பிடும் போது "மண வாழ்க்கை மலர்ப் படுக்கை அல்ல; போர்க்களம்" என்று குறிப்பிட்டார். "நீ எதுவாக மாற விரும்புகிறாயோ அதுவாக மாறுவாய்" என்பது ஆபிரஹாம் லிங்கனுக்கு மட்டுமல்ல… நம்பிக்கையைத் தளரவிடாமல், லட்சியத்துக்காக விடாப்பிடியாக போராடும் நம்மைப்போன்ற ஒவ்வொருவருக்கும் அது வெற்றி திருமந்திரம். (y) (y) Relaxplzz ![]() "தலைவர்கள் - முன்னோடிகள்" |
Posted: 25 Oct 2014 08:50 AM PDT #ரிலாக்ஸ்_நறுக்ஸ் வியர்வை சிந்தாத உன்னாலும் மை சிந்தாத பேனாவாலும் எதையும் சாதித்திட முடியாது. - திவ்ய தர்ஷினி |
Posted: 25 Oct 2014 08:40 AM PDT |
Posted: 25 Oct 2014 08:30 AM PDT |
Posted: 25 Oct 2014 08:17 AM PDT கொஞ்சம் சிரிங்க பாஸ்... :P கணவன் : நம்ம வீட்டுக்கு வந்த திருடன புடுச்சு அடிச்சு, உதச்சு அவன் கை காலெல்லாம் முறிச்சியே, எங்கேந்து வந்தது உனக்கு இவ்ளோ தைரியம் மனைவி : நான் திருடன்னு நினைச்சு அடிக்கலீங்க, நீங்க தான் குடிச்சுட்டு வந்திருக்கீங்கன்னு நினைச்சுதான்.. கணவன் : ?!?!?! :O :O #### நீதிபதி : நீங்கள் உங்கள் மனைவியை 10 வருடமாக அடித்து வதைத்து சித்திரவதை செய்துள்ளீர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளீர்கள் குற்றவாளி : ஆனால் கணம் நீதிபதி அவர்களே ... நீதிபதி : ஆனால் எப்படி உங்களால் சாத்தியமாயிற்று என்று தெரிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறேன். ;-) ;-) #### ஜட்ஜ்: நீ கொலை செஞ்சதைப் பார்த்த சாட்சிகள் 12 பேர் இருக்காங்க. கைதி: யுவர் ஆனர் அதைப் பார்க்காதவங்க 21 பேர் இருக்காங்க. 12 பெரிசா? 21 பெரிசா? :P :P #### தற்கொலை செஞ்சுக்கிற அளவுக்கு உன் கணவரிடம். என்ன சொன்ன ? ஏழு ஜென்மத்திற்க்கும் நீங்க தான் என் கணவர்ன்னு சொன்னேன்.. :D:D #### கணவன் : எப்போதெல்லாம் நீ மனவருத்தத்துடன் இருக்கிறாயோ அப்போதெல்லாம் கண்ணாடி முன்னால் போய் நின்று கொண்டு, நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய். என்னால் நம்பவே முடியவில்லை என்று சொல். உனக்குள் ஒரு உற்சாகம் பிறக்கும். மனைவி : நிஜமாகவா... கணவன் : ஆனால் இதை அடிக்கடி செய்ய வேண்டாம். பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது. :P :P #### மனைவி : ஏங்க டி.வில படத்தைப் பார்த்து ஏங்க அழுகிறீங்க? கணவன் : அடியே, அது படமல்ல, நான் வாழ்க்கையில் கடைசியாய் சந்தோஷமாய் இருந்த நாள், அதாண்டி நம்ம கல்யாண சிடி...... மனைவி : அதுக்கு என்ன இப்போ? கணவன் : எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேனே என்று நினைத்து அழுகின்றேன்..... ;-) ;-) #### கணவன் : நாம் வாழ்ந்த இந்த 2 வருஷத்துல நீ இவ்வளவு சந்தோஷமா இருந்து நான் பார்த்ததேயில்லை! மனைவி : பின்ன இருக்காதா . . . நீங்கதான் இன்னிக்கு வெளிநாட்டுக்கு கிளம்புறீங்களே! கணவன் : ?!?!? :O :O #### விட்டுக்கு பல்பு வாங்குன ஆண்களவிட வீட்டுக்காரிட்ட பல்பு வாங்குன ஆண்கள்தான் அதிகம் இப்படிக்கு பல்புகூட வாங்க முடியாமல் தவிக்கும் சங்கம். :P சிரிக்க மட்டும் ;-) Relaxplzz ![]() நகைச்சுவை துணுக்ஸ் |
Posted: 25 Oct 2014 08:03 AM PDT இந்தியனின் தன்மானத்தை உலகுக்கு பறை சாற்றிய மன்னன்.. - ஒரு இந்திய தந்திரம்..! ஒரு நாள் லண்டனுக்கு வருகை தந்த ஜெய் சிங் மஹாராஜ், அங்குள்ள தெருக்களில் சாதாரண உடையில் உலா வந்தார். அங்கே ரோல்ஸ் ராய்ஸ் வாகன விற்பனை கண்காட்சியகத்தை பார்த்தார். உள்ளே சென்று அந்த வாகனத்தின் விலை மற்றும் தனித் திறமைகளை அறிந்து கொள்ள விரும்பினார். ஆனால் அங்குள்ள நபர், இவர் ஒரு ஏழை இந்தியக் குடிமகன் என்று எண்ணி, வெளியே போக சொல்லிவிட்டார். மனமுடைந்த ஜெய் சிங் மஹாராஜ், தன் விடுதி அறைக்கு வந்து, தன் வேலை ஆட்களை காட்சியகத்திற்கு சென்று, ஆழ்வார் நகரத்து ராஜா உங்கள் வாகனத்தை வாங்க விருப்பம் தெரிவித்தார் என்று கூறி வரச் செய்தார். சிறிது நேரம் கழித்து, தன் ராஜ உடையில், கம்பீரமான நடையுடன் ரோல்ஸ் ராய்ஸ் காட்சியகத்திற்கு வந்தார், அங்கே அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு பெரும் மரியாதையுடன் நடந்தது. அங்குள்ள அனைவரும் பணிந்து மன்னரை வரவேற்றனர். அங்குள்ள ஆறு கார்களையும் மன்னர் உடனடியாக பணம் செலுத்தி பெற்றுக்கொண்டார். மன்னர் பின்பு இந்தியா வந்தடைந்ததும், அந்த ஆறு கார்களையும் மாநகராட்சி துறைக்கு அனுப்பி, இந்த கார்களை ஊரை சுத்தம் படுத்துவதற்கும், குப்பைகளை ஏற்றுவதற்கும் பயன்படுத்துமாறு உத்தரவிட்டார். இந்த செய்தி உலகம் முழுவதும் பரவியது. ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் மதிப்பு குறைய ஆரம்பித்தது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் அந்த கார்களை பயன்படுத்துபவர்களை ஏளனமாக பார்க்க ஆரம்பித்தனர். "இந்தியாவில் குப்பை அள்ள பயன்படுத்தும் காரை தான் நீ வைத்திருக்காயா" என்று கிண்டல் செய்தனர். இதனால் அந்த நிறுவனத்தின் விற்பனை குறையத் தொடங்கியது. மேலும் அவர்களது வருமானம் பெரிதும் சரிந்தது. உடனே அந்த நிறுவனம், மன்னிப்பு கோரியும், தவறை உணர்ந்ததாகவும்,குப்பை அள்ளுவதை நிறுத்தும் படியும், மன்னருக்கு தந்தி அனுப்பியது. அது மட்டுமில்லாமல், மன்னருக்கு ஆறு கார்கள் பணம் பெற்றுக் கொள்ளாமல் அனுப்பப்பட்டது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் பாடம் கற்றுகொண்டதை அறிந்த மன்னர், உடனடியாக ரோல்ஸ் ராய்ஸ்கார்களின் மூலம் குப்பை அள்ளுவதை நிறுத்திக் கொள்ளுமாறு உத்தரவிட்டார். இந்தியனின் தன்மானத்தை உலகுக்கு பறை சாற்றினார். Relaxplzz ![]() "வரலாற்றுப் பதிவுகள்" |
Posted: 25 Oct 2014 07:50 AM PDT #ரிலாக்ஸ்_நறுக்ஸ் என் பைக்ல ஒரு பொண்ணு ஸ்கூட்டிய வச்சு மோதிருச்சு...செம கோவம்...அப்பறம் சரி நாம தான் ஒன்னும் செய்யல பைக்காவது சந்தோசமா இருக்கட்டுமேன்னு மன்னிச்சு விட்டுட்டேன்... - Boopathy Murugesh |
Posted: 25 Oct 2014 07:40 AM PDT |
Posted: 25 Oct 2014 07:29 AM PDT |
Posted: 25 Oct 2014 07:15 AM PDT ஓர் அழகான பெண்ணை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே பாதையில் நடந்து சென்ற ஓர் இளைஞன் கால் இடறி ஓர் கழுதையின் காலில் போய் விழுந்தான் இதைப்பார்த்து கொண்டிருந்த அந்த பெண் "என்ன தம்பி உங்க அண்ணன் இடம் ஆசீர்வாதம் வாங்குறீங்களா?"என்றாள் அதற்கு அந்த இளைஞன் "ஆமாங்க அண்ணி" என்றான்..... :P :P #தேவையா_இது ;-) Relaxplzz |
Posted: 25 Oct 2014 07:00 AM PDT சென்னை அண்ணா நகரில் டீ கடையில் நின்றுகொண்டு இருந்தேன் கடைக்கு பசியுடன் வந்த ஒரு வயதான பாட்டி உடுத்திருந்த கிழிஞ்ச சேலையின் முந்தானையில் இருந்து சில்லரையை பொறிக்கி எடுத்து ஒரு டீ பிஸ்கட் வாங்கினார்கள்.... ராசா இங்க வா டா ,, மதியம் சாப்டியா , இந்தா இந்த டீயை குடி ,.......!!! சாப்பாடு கிடைக்கமா இப்படி இலச்சிபோய்டியே இந்தா இந்த பிஸ்கட்யை சாப்டு !!!!!!! பாட்டி ஏதோ குழந்தையை கொஞ்சிகிரார்கள் என்று பார்த்தால் பாட்டி பாசமாக பேசியது தன்னை சுற்றி வந்த நாய் குட்டியை .கையில் தன் பசிக்காக வைத்திருந்த அனைத்தையும் நாய் குட்டிக்கு பாசமாக கொடுத்தார்.. பாட்டி நாயிடம் காட்டிய பாசம் தாய் தன் பெற்றகுழந்தயை கொஞ்சுவது போல என் மனக்கண்முன் வந்தது ..அப்படியே பாட்டிட உங்க வீடு ஏங்க பாட்டி என்று கேட்டேன் ..நாலு புள்ளைய பெத்த நானும் தெருவுலதான் ! இந்த நாயும் தெருவுலதான் ! ராசா ....பாட்டி சொன்னா பதில்... என் உடலில் மின்சாரம் பாய்ந்த நிகழ்வு ... பாட்டிக்கு உதவி செய்ய பேச்சு கொடுத்தேன் .. பாட்டி வேண்டாம் ராசா நான் நல்லா சந்தோசமா இருக்கேன் ..நீ உன் அப்பா அம்மாவ நல்லா பாத்துக்கோ ராசா அது போதும் இந்த கிளவிக்கு................ (பாட்டி 5 நிமிடத்தில் வாழ்க்யை பாடத்தை சொல்லி கொடுத்து எனக்கு மட்டும் அல்ல உங்களுக்கும்தான் ) - ரத்னம் .k Relaxplzz ![]() "நெகிழ வைத்த நிஜங்கள்" |
Posted: 25 Oct 2014 06:50 AM PDT #ரிலாக்ஸ்_நறுக்ஸ் ஒரு மாசம் உழைச்சா எவ்வளவு வருமானம் வரும்னு கரெக்ட்டா தெரிஞ்ச நாம கவலைப்படுறோம்... ஆனா இது தெரியாத பிச்சைக்காரன் ஜாலியா இருக்கான்!.. - Kali Muthu |
Posted: 25 Oct 2014 06:40 AM PDT |
Posted: 25 Oct 2014 06:30 AM PDT |
Posted: 25 Oct 2014 06:14 AM PDT ஒரு கணவனின் புலம்பல் : கடவுளே இதென்ன மாயை? இதென்ன மோகம்? நம்ம குழந்தை அழுதால் இதயம் வலிக்குது..!! பக்கத்து வீட்டு குழந்தை அழுதால் மண்டைய பொளக்குது..!!?? . .. . . . . . . . . . . . .. நம்ம மனைவி அழுதால் தலைவலிக்குது?!! பக்கத்து வீட்டு மனைவி அழுதால் இதயமே நொறுங்கி வெடிக்குது!!? :P :P Relaxplzz |
Posted: 25 Oct 2014 05:59 AM PDT பிரசவம் என்பது.... அதை உடல் வலுவுடனும், மன வலுவுடனும் தாங்க வேண்டும் என்பதற்காகவே நம் இந்திய பாரம்பரியத்தில் எத்தனயோ விஷயங்களைப் பார்த்து பார்த்து செய்து வைத்திருக்கின்றார்கள். அவை ஆச்சரியமானவை மட்டுமல்ல... விஞ்ஞான ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டவை என்பதுதான் இன்னும் அதிசயமானவை என்று சொல்ல வேண்டும். மனதுக்கான நல்ல விஷயங்களும் நம்முடைய பாரம்பரியத்தில் நிறைய அடங்கியிருக்கின்றன. முக்கியமாக, பிரசவத்துக்கு முன்பு வளைகாப்பு நடத்துகிற விஷயத்தையே சொல்லலாம். வளைகாப்புக்கு நிறைய பெண்கள் கூடி, கர்ப்பவதிக்கு மூத்த சுமங்கலிகள் வளையல் போடுவார்கள். இதற்கான காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், "எங்களை எல்லாம் பார்... நாங்கள் எத்தனை பிள்ளைகளைப் பெற்று உன் முன் நிற்கிறோம்?! நீயும் உன் பிரசவத்தை சுலபமாக கடப்பாய்... தைரியமாக இரு!" என்பதை இங்கு நாம் எடுத்துக் கொள்ளலாம். இந்தச் சடங்கில் ஒரு சுவாரஸ்யமான ஒற்றுமையையும் கவனிக்கலாம். வளையல் இடும் பெண்ணின் கையை கர்ப்பப்பைக்கு ஒப்பிட்டுப் பாருங்கள். கை விரல்களை கூப்பி, வளையல்களை உள்ள செலுத்தும்போது சற்று சுலபமாக இருக்கும். வளையலை மணிக்கட்டுப் பகுதிக்குச் செலுத்தும்போது சற்று கடினமாகி, அந்த வலியைச் சற்றே சற்று பொறுத்துக் கொண்டால்...அடுத்த நிமிடமே கரங்களில் வளையல் ஏறிவிடும். இப்படித்தான் பிரசவமும்! இந்த வளையல்கள் ஏற்படுத்தும் அதிர்வு ஓசை, கருவில் வளரும் குழந்தைக்கு நல்ல தாலாட்டு. நம் தாய் நம்முடன் இருக்கிறாள் என்று குழந்தைக்கு அது கொடுக்கும் பாதுகாப்பு உணர்வு, அழகானது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. அந்தக் காலத்தில் வீடு என்பது பெரியதாக இருந்தது. பிரசவத்துக்கு முன்பு அடிக்கடி உறக்கம் கலைந்து, அந்தப் பெண்ணுக்கு சிறுநீர் கழிக்க வேண்டியதிருக்கும். இரவு நேரத்தில் கர்ப்பமான பெண் அறையைக் கடந்து, கூடத்தைக் கடந்து, பின்புறமிருக்கும் கழிவறைக்குப் போகும்போது அந்த வளையல் சப்தம் அந்த பெண் எங்கே செல்கிறாள் என்பதை சட்டென்று சுட்டிக்காட்டும். "ஏன்டி, என்னை எழுப்பக்கூடாதா... இரு நானும் வர்றேன்" என்று உதவிக்குச் செல்வார்கள் வீட்டில் இருக்கும் பெண்கள். வளையல் போட்ட 'கையோடு' கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக தாய் வீட்டுக்குச் செல்வதிலும் அடங்கி இருக்கின்றன அவர்களின் மனநலம் சம்பந்தப்பட்ட நுணுக்கங்கள். இந்திய நாட்டில் மட்டுமின்றி, ஆசிய நாடுகளில் எல்லாம் பிரசவம் என்று வந்தாலே அந்தப் பெண் தாய் வீட்டுக்குச் சென்று விடுவது வழக்கமாக இருக்கிறது. ஆம்... பிரசவமாகும் பெண்ணின் உடல்நலம் மட்டுமல்ல, மனநலத்தையும் பாதுகாக்கிற பணி, தாய் வீட்டுக்குத்தான் என்று பார்த்துப் பார்த்து இந்த ஏற்பாட்டை செய்து வைத்துள்ளனர் நம் முன்னோர்கள். நம் அம்மா, அப்பா, கணவர், சொந்தங்கள் எல்லாம் நம்மைப் பிரசவம் எனும் அந்த பெருநிகழ்வில் இருந்து பத்திரமாக மீட்பார்கள்...' என்ற நம்பிக்கைதானே அன்று அட்டவணைகள் இல்லாமல், செக்கப்புகள் இல்லாமல், மருந்து - மாத்திரைகள் இல்லாமல் எல்லா பிரசவங்களையும் சுகப்பிரசவமாக்கின?! அந்த நம்பிக்கையை கர்ப்பிணிகளின் மனதில், அவளைச் சுற்றியுள்ளவர்களே ஆழமாக விதைக்கலாம். அதையெல்லாம் செய்து பாருங்கள்... இரண்டு, நான்கு, ஆறு... என்று மாதங்கள். அவர்களுக்குத் தெரியாமலே சுகப்பிரசவத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும். ஒவ்வொரு பிரசவமும் சுகமாக, வீடுகளிலேயே நடக்கும்... இந்த சிறு தொகுப்பு விரைவில் போஸ்டு செய்யவிருக்கும் "இறைவழியில் இனிய சுகப்பிரசவம்" புத்தகத்துக்கு ஒரு முன்னோட்டமே...! நன்றி : குட்டி, M Shivas Shivas ![]() "பெண்கள் பக்கம்" |
Posted: 25 Oct 2014 05:50 AM PDT #ரிலாக்ஸ்_நறுக்ஸ் ஏசி தியேட்டர்களில் 50ரூபாயும் மற்ற தியேட்டர்களில் 30 ரூபாயும் மட்டுமே டிக்கெட் கட்டணம் வசூலிக்கவேண்டும் என்கிற அரசின் உத்தரவை சினிமாக்காரங்க மதிக்காதபோது, திருட்டு விசிடி பார்க்காதீங்க என்கிற அவர்களின் வேண்டுகோளை மட்டும் நாம் ஏன் மதிக்கணும் |
Posted: 25 Oct 2014 05:40 AM PDT |
Posted: 25 Oct 2014 05:30 AM PDT |
Posted: 25 Oct 2014 05:15 AM PDT தயவு செய்து பகிரவும் அநேகம் பேருக்கு உபயோகமாக இருக்கும்.. FORD MOTORS hiring candidates for various post to its new plant: Free cab for pick up and drop, no agreement, permanent job. 10th, 12th - job: commercial checking, 2months training, first two month 10,000/-, from third month 12,000/-. Any diploma - job: operator, one month training, first month 13,000/-, from second month 14,000/-. B.Sc (C.S), BCA - job: information forwarding, computer operating, one month training, first month 15,000/-, from second month 16,000/-. B.Com, BBA - job: Accounts and financial assistance, one month training, first month 15,500/-, from second month 17,000/-. MBA - job: financial management, house keeping management, one month training, first month 19,000/-, from second month 22,000/-. MCA - job: document maintenance, program editing, one month training, first month 18,000/-, from second month 21,000/-. Contact: 90 42 233969, 81 48 597135, 99 44 104830. Contact soon and avail your perfect job. Forward to your all friends👬 and give them your best help. TCS Finance team is hiring B.Com. graduates. If u know anyone, ask them to send CV to amol2.anekar@tcs.com. Exp: 0 to 3 yrs. Please forward asap Vacancy in Mahindra Tech Accounts Receivables. & Payable Graduates & MBA fresher can apply with good knowledge of accounts. Fixed Shift 12.30 to 10.00 pm. pick drop facility. 2 days off. salary 20-25 k. Min exp 6 months. please forwrd it to ur frnds who r in search of job. contact Rohit Patil @ 9833010043 Essar having below openings 1. Job Title - Production Supervisor Experience - 5 to 7 years Qualification - DME / B.E Mechanical CTC- 4 to 7 lac 2. Job Title- Team Leader Machine Shop Qualification - DME / B.E Mechanical Experience - 3 to 4 years CTC - 2 to 3 lac 3. Job Title- Machine Shop In charge Qualification - DME / B.E Mechanical Experience - 5 above CTC - 4 to 5 lac 4. Job Title - Jr Officer Stores Qualification - B. Com Experience - 1 & above CTC - 1.2 & above 5. Job Title - Engineer Design & Devpt Qualification - DME / B.E Mechanical Experience - 1 to 2 years CTC- 2.5 lac 6. Job Title - Engineer Projects Qualification - DME / B.E Mechanical Experience - 3 & Above CTC- 3 to 4 lac 7. Job Title - Trainee Engineer Production Qualification - DME / B.E Mechanical Number of opening - 5 Experience - Fresher CTC- as per company policy 8. Job Title - Trainee Metallurgy Qualification - Diploma Metallurgy / Bsc - chemistry Experience - Fresher CTC- as per company policy 9.Job Title - Officer Finance Qualification - MBA/ B.com Experience - 2 years & above CTC- 2.5 lac 10. Job Title - Trainee Vendor Development Qualification - DME / B.E Mechanical Experience - Fresher CTC- as per company policy 11. Job Title - CNC Operator Qualification - DME / ITI Number of Opening - 05 Experience - 1 to 2 years CTC- 1.5 to 2 lac Interedted candidates can send resumes on jaimin.vyas@essar.com If it is not useful to you... Share this in your circle, this create someone's career. Relaxplzz |
Posted: 25 Oct 2014 04:59 AM PDT கீழே விழுந்துவிட்டஐம்பது பைசாவை குனிந்து எடுத்த நொடியில்... என் உள்ளாடையில் படிந்துவிட்டிரு ந்தன சில பார்வைகள்... கம்பியை எட்டிப்பிடித்த தருணத்தில் எங்கோ ஒளிந்திருந்த உங்கள் தாயிடமும் சகோதரியிடம் உள்ளதை தேடிக் கொண்டிருந்தன சில பார்வைகள்... கை வைத்து மறைப்பதைக் கூட அவமானப்பட்டுச் செய்கிறேன் "முன்னாலே போமா" என்று பின்னாலே தடவிவிட்டு போகும் நடத்துனர் கூசிய பதட்டத்தோடு திரும்பிப் பார்த்தால் மகளிர் இருக்கையின்இடுக்குகளில் கூனிக்குறுகி என்னைப் போலவே சில திரௌபதிகள்... ஒவ்வொரு நிறுத்தத்திலும் மரணித்து நிமிர்கிறது வாழ்க்கை... ஆண்டவா! எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்க ிறோம் ஆனால் அடுத்த பிறவியில் ஆண்களுக்கு வைத்துவிடு மார்பகத்தை…! # படித்ததில் பிடித்தது # ஆங்கிலத்தில் ரிலாக்ஸ் ப்ளீஸ் Relaxplzz ![]() "மனம் தொட்ட வரிகள்" - 1 |
Posted: 25 Oct 2014 04:50 AM PDT #ரிலாக்ஸ்_நறுக்ஸ் துணிக்கடைகளில் பல மனிதர்களால் நிராகக்கப்பட்ட ஓர் ஆடை யாரோ ஒருவரால் விரும்பி அணியப்படுகிறது.. |
Posted: 25 Oct 2014 04:42 AM PDT |
Posted: 25 Oct 2014 04:30 AM PDT |
Posted: 25 Oct 2014 04:15 AM PDT போன் ரிங் அடிக்கும் போது நம் மக்கள்.. பொதுமக்கள் : ஹலோ .. காதலி : டேய் சொல்லுடா.... காதலன் : அடியே என்னடீ பண்ற.... எத்தன டைம் கூப்பிட்றது? பையன் : என்னப்பா சொல்லுப்பா... வியாபாரி: சொல்லுங்கண்ணே... குடும்பத்தலைவி: யாருங்க.... குடும்பத்தலைவன் : சொல்லுக்கா.. சொல்லுமா... சொல்லுண்ணே.. என்னப்பா.. நண்பன்: என்ன மச்சி.. மச்சான். சொல்டா... எதிரி : எத்தன மிஸ்ஸுடு கால் வந்தாலும் முறைச்சு முறைச்சு பார்ப்பது... கடன்காரன் : ரிங் அடிக்கும் போதே பேட்டரியை உருவுவது.. :P :P Relaxplzz ![]() குசும்பு... 3 |
Posted: 25 Oct 2014 03:59 AM PDT பெற்ற தாய்க்கு கூட சலுகை காட்டாத தங்கத் தலைவர்..! காமராஜர் முதல்வராக இருந்தப் பொழுது , அவரது அமைச்சரவையில் பங்கு பெற்ற முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன், ஒரு முறை விருதுநகரில் இருந்த காமராஜரின் வீட்டிற்கு கோடை காலத்தின் பொழுது சென்றிருந்தார் . அப்பொழுது அங்கு காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாள் பனை ஓலை விசிறியால் விசிறிக் கொண்டிருந்தார். உடனே தன்னுடைய சொந்த செலவில் ஒரு மின் விசிறியை வாங்கி வந்து, அதை இயக்குவதைப் பற்றி அவரிடம் சொல்லிக் கொடுத்து விட்டுப் போனார். பிறகொரு சமயம் வீட்டிற்குப் போன போது மின் விசிறியைப் பார்த்து விட்டு விசாரித்த காமராஜர், எத்தனையோ தாய்மார்கள்பனை ஓலை விசிறியால் தான் விசிறிக் கொள்ளும் பொழுது , உனக்கு மட்டும் வெங்கட்ராமன் மின் விசிறி ஏன் வாங்கித் தந்தார் ? முதல் அமைச்சரின் அம்மா என்பதால் தானே. இது கூட சலுகை, லஞ்சம் மாதிரி தான் என்று சொல்லி விட்டு அந்த மின்விசிறியை விருது நகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு எடுத்துக் கொண்டு போகச் சொல்லிவிட்டார் . மற்றொரு சமயம்....! தன்னுடைய பெயரை பயன் படுத்தி தனது குடும்பத்தினர் எந்த தவறான காரியத்திலும் ஈடு படக் கூடாது என்று காமராஜர் மிகவும் கண்டிப்பாக இருப்பார். இதனாலேயே தனது தாயாரை தான் முதல்வரான பிறகும் விருது நகரிலேயே தங்க .வைத்தார். ஒரு முறை ஒரு காங்கிரஸ் பிரமுகர், காமராஜரின் தாய் சிவகாமி அம்மாள் அவர்களை விருது நகரில் சந்தித்த பொழுது, அவர் மிகவும் வருத்ததுடன் சொன்னது : " என்னை எதுக்காக இங்கயே விட்டு வச்சிருக்கான்னே தெரியல. என்னையும் மெட்ராசுக்கு அழைச்சிக்கிட்டா நான் ஒரு மூலையில் ஒன்டிக்கப் போறேன் " என்று சொல்ல, அதை அந்த பிரமுகர் காமராஜரிடம் தெரிவிக்க, அதற்கு காமராஜர் சொன்ன பதில் : "அடப்போப்பா, எனக்கு தெரியாதா அம்மாவை அப்படியே கூட்டிட்டு வந்தாலும் தனியாவா வருவாங்க? அவங்க கூட நாலு பேரு வருவான். அப்புறமா அம்மாவை பாக்க, ஆத்தாவை பார்க்கன்னு பத்து பேரு வருவாங்க. இங்கேயே டேரா போடுவான் . இங்க இருக்குற டெலிபோனை யூஸ் பண்ணுவான். முதலமைச்சர் வீட்டிலிருந்து பேசறேன்னு சொல்லி அதிகாரம் பண்ணுவான். எதுக்கு வம்புன்னு தான் அவங்களை விருது நகர்லயே விட்டு வச்சிருக்கேன்." என்றார். ஒருமுறை... காமராஜரின் தாயார், தன் மகனுக்குக் கடிதம் எழுதினார். அதில், 'மாதா மாதம் நீ அனுப்பும் 50 ரூபாய் எனக்குப் போதவில்லை. விலைவாசி ஏறிக் கிடப்பதால், இன்னும் 10 ரூபாய் சேர்த்து அனுப்பு' என்று குறிப்பிட்டிருந்தார். இதைப் படித்த காமராஜர் இப்படி பதில் எழுதினார்: 'உங்களுக்கு 10 ரூபாய் அதிகமாக அனுப்ப வேண்டும் என்றால், பாலமந்திரில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு நான் அனுப்பும் பணத்தில் 10 ரூபாயைக் குறைக்க வேண்டியிருக்கும். அது கூடாது. எனவே நீங்கள், 50 ரூபாய்க்குள் சமாளித்துக் கொள்ளுங்கள்!' Relaxplzz ![]() "காமராஜர் ஒரு சகாப்தம்" |
Posted: 25 Oct 2014 03:50 AM PDT #ரிலாக்ஸ்_நறுக்ஸ் சுயநலத்திற்காக சொர்க்கம்புகுவதைவிட அடுத்தவர்நலனுக்காக நரகம்போகலாம். #யாரோ |
Posted: 25 Oct 2014 03:44 AM PDT |
Posted: 25 Oct 2014 03:30 AM PDT |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment