Friday, 31 October 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


மாதம் 5 முறைக்கு மேல் ஏடிஎம் பயன்படுத்தினால் ரூ20 கட்டணம் #தினம் இரண்டு முறைக்க...

Posted: 31 Oct 2014 09:25 PM PDT

மாதம் 5
முறைக்கு மேல் ஏடிஎம்
பயன்படுத்தினால் ரூ20
கட்டணம்

#தினம்
இரண்டு முறைக்கு மேல்
ஏடிஎம் பயன்படுத்துபவர்
கள் வெளியூரில்
தங்கி படிக்கும்
மாணவர்களும்,
மேன்சனில்
தங்கி வேலைக்கு போபவர்களும்
தான். பணம்
திருட்டு போய்விட
கூடாது எனும்
நோக்கத்தில் தினம்
தேவைக்கு எடுத்து கொள்வார்கள்

#அதுக்கும்
வேட்டு வெச்சிட்டாயங்களா.

@பிரபின் ராஜ்.

#திருக்குறள் குறள் பால்: #பொருட்பால் - குறள் இயல்: #நட்பியல் - அதிகாரம்: #வரைவின...

Posted: 31 Oct 2014 06:54 PM PDT

#திருக்குறள்
குறள் பால்: #பொருட்பால் - குறள் இயல்: #நட்பியல் - அதிகாரம்: #வரைவின்மகளிர்

#உரை:
அன்பே இல்லாமல் பொருள் திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட பொதுமகளிர் இனிமையாகப் பேசுவதை நம்பி ஏமாறுகிறவர்களுக்கு இறுதியில் துன்பமே வந்து சேரும்.

#Translation:
Those that choice armlets wear who seek not thee with love,
But seek thy wealth, their pleasant words will ruin prove.

#Explanation:
The sweet words of elegant braceleted (prostitutes) who desire (a man) not from affection but from avarice, will cause sorrow.

@Puducherry * புதுச்சேரி * Pondichéry


பிள்ளைகளுக்கு கஷ்டங்களே தெரியாமல் வளர்ப்பவர்கள்.... "நல்ல பெற்றோர்கள்"... பிள்ள...

Posted: 31 Oct 2014 12:55 PM PDT

பிள்ளைகளுக்கு
கஷ்டங்களே தெரியாமல்
வளர்ப்பவர்கள்....
"நல்ல பெற்றோர்கள்"...

பிள்ளைகளுக்கு
கஷ்டங்களை சந்திக்க
விட்டு,
எதிர்கொள்ள
துணை நிற்பவர்கள்...."சிறந்த பெற்றோர்கள்"..

இதுவரை எந்த இலங்கை மீனவனையும் இந்திய கடற்படை சுட்டு கொன்ற ஆதாரம் இல்லை. எல்லை த...

Posted: 31 Oct 2014 12:51 PM PDT

இதுவரை எந்த
இலங்கை மீனவனையும்
இந்திய கடற்படை சுட்டு கொன்ற ஆதாரம்
இல்லை.

எல்லை தாண்டிய
மீனவர்கள் காவலில்
வைத்து விசாரிக்கப்பட்டு அவர்கள்
பொருட்களுடன்
திருப்பி அனுப்பப்
படுவர்.

ஐந்து தமிழக மீனவர்களுக்கு தூக்கு விதித்தது இலங்கை!!

Posted: 31 Oct 2014 12:35 PM PDT

ஐந்து தமிழக
மீனவர்களுக்கு
தூக்கு விதித்தது
இலங்கை!!


மாரியம்மன் தெப்பக்குளம்- மதுரை. @குணா அமுதன்

Posted: 31 Oct 2014 11:10 AM PDT

மாரியம்மன் தெப்பக்குளம்-
மதுரை.

@குணா அமுதன்


இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் மாவீரன் பண்டார வன்னியனின் 211 ஆவது நினைவுநாள் இ...

Posted: 31 Oct 2014 10:49 AM PDT

இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் மாவீரன்
பண்டார வன்னியனின்
211
ஆவது நினைவுநாள் இன்று.


ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயம், யாழ்ப்பாணம்!

Posted: 31 Oct 2014 08:58 AM PDT

ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயம், யாழ்ப்பாணம்!


Indus-like inscription on South Indian pottery from Thailand A fragmentary pott...

Posted: 31 Oct 2014 06:29 AM PDT

Indus-like inscription on South Indian pottery from Thailand

A fragmentary pottery inscription was found during excavations conducted by the Thai Fine Arts at Phu Khao Thong in Thailand about three years ago. (Dr. Berenice Bellina of the Centre National de la Recherche Scientifique, France, sent me a photograph of the object: Figure 1)

The discovery of a Tamil-Brahmi pottery inscription of about the second century CE at the same site was reported earlier ( The Hindu, July 16, 2006). One can presume that the present inscription is also from the Tamil country and belongs approximately to the same period. The two characters incised on the pottery now reported are not in the Brahmi script. They appear to be graffiti symbols of the type seen on the South Indian megalithic pottery of the Iron Age-Early Historical Period (second century BCE to third century CE).

What makes the discovery exciting is that the two symbols on the pottery resemble the Indus script, and even the sequence of the pair can be found in the Indus texts, especially those from Harappa.

The symbol looking vaguely like an 'N' appears to be the same as the Indus signs 47 or 48 (in Figure 3). Professor B.B. Lal, former Director-General of the Archaeological Survey of India, showed that these Indus signs have a remarkable resemblance to the megalithic symbol occurring at Sanur, near Tindivanam, and elsewhere in Tamil Nadu (Figure 2). More recently, the same symbol has turned up on two pottery fragments from Pattanam in Kerala (probably the same as Musiri of the Sangam Age). I have compared the symbols with the Indus signs depicting a seated anthropomorphic deity.

The symbol on the Thai pottery resembles a diamond. It occurs in the Indus script in diamond or oval forms (Signs 261 and 373 in Figure 3).

What is extraordinary about the present find is the occurrence of the two symbols on the pottery in the same sequence as found in the Indus texts (see for example texts 4589 and 5265 from Harappa, Figure 3). The Thai pottery has only two symbols. Another symbol might have been lost owing to the fragmentary state of the pottery.

Sequences such as this on the Thai pottery and those reported on the inscribed Neolithic stone axe from Sembiyan Kandiyur and on megalithic pottery from Sulur (near Coimbatore in Tamil Nadu) provide evidence for the survival of the Indus script in South India during the megalithic age, and for the possibility that the languages of the Indus Civilisation and South India belong to the same family, namely Dravidian.

(The sign and text numbers are cited from The Indus Script: Texts, Concordance and Tables, by Iravatham Mahadevan (1977). The author is Honorary Consultant of the Indus Research Centre at Roja Muthiah Research Library in Chennai.)

http://www.thehindu.com/todays-paper/article746147.ece


ஐந்து தமிழக மீனவர்களுக்கு தூக்குவிதித்தது இலங்கை!! இந்தியா- இலங்கை கிரிக்கெட் த...

Posted: 31 Oct 2014 06:24 AM PDT

ஐந்து தமிழக
மீனவர்களுக்கு
தூக்குவிதித்தது
இலங்கை!!

இந்தியா-
இலங்கை கிரிக்கெட்
தொடர்
ஞாயிற்றுகிழமை தொடக்கம்!!

திரையுலகினரின் பாதுகாவலர் விஷால். தமிழ் திரையுலகினர் விஷாலை தங்களின் வீடியோ பைர...

Posted: 31 Oct 2014 02:24 AM PDT

திரையுலகினரின் பாதுகாவலர் விஷால்.

தமிழ் திரையுலகினர் விஷாலை தங்களின் வீடியோ பைரசி பாதுகாவலராக நியமித்து உள்ளார்கள் போல் இருக்கிறது.

ஊர் ஊராக போய் வீடியோ கடைகளில் நுழைந்து போராடி கத்தி மற்றும் பூஜை திருட்டு சி.டி.களை கைப்பற்றி வருக்கிறார்.

விஷால்

தியேட்டரில் கள்ள மார்க்கெட்டில் டிக்கெட் விற்பவர்கள்.

வெளியில் இருந்து தியேட்டருக்கு குழந்தைகளோடு வருபவர்கள் புட்டி பாலை கூட உள்ளே செல்ல அனுமதிக்காத தியேட்டர்கள்.

சேரன் டைரக்ட் ஹோம் டி.வி.டி.விடறாரு, அதையும் கள்ள டி.வி.டி.ன்னு நினைச்சிட போறீங்க.

அது நல்ல டி.வி.டி.

அப்படியே இந்த முருகதாசையும் மிரட்டி அந்த கதாசிரியருக்கு துட்டும் டைட்டில் கார்டுல பெயரும் வாங்கி கொடுங்க.

அப்புறம் இந்த சாலமன் ஐ லேண்ட் லிருந்து நெட்டுல தமிழ தெலுங்கு படங்களை அப்‌லோட் பண்றாங்களாம். மத்தவங்க சார்ப்பா அங்கயும் போய் மிரட்டி சர்வரை பறிமுதல் பண்ணிட்டு வாங்க.

இது மாதிரி அமெரிக்க கட்டுப் பாட்டில் உள்ள குட்டி குட்டி தீவுகளில் இருந்து தான் எல்லாம் நடக்குதாம்.

அப்படியே ஒரு விசிட் எல்லா தீவுகளுக்கும் போயிட்டு வாங்க.

வாழ்த்துக்கள்.

@Suprajaa Sridaran

போபால் விச வாய்வினால் 20,000+ மக்கள் இறப்பிற்கும் 5லட்சம்+ மக்கள் பாதிப்பிற்கும்...

Posted: 31 Oct 2014 01:17 AM PDT

போபால் விச
வாய்வினால் 20,000+
மக்கள் இறப்பிற்கும்
5லட்சம்+ மக்கள்
பாதிப்பிற்கும்
உள்ளானதற்கு காரணக்கர்த்தாவான யூனியன்
கார்பைடின் ஆண்டர்சன்
அமெரிக்காவில் மரணம்.

தப்பு செய்பவர்களை கடவுள் தண்டிக்கத் தொடங்கினால் காசு தருபவர்களை மட்டும் ஸ்பெஷலாக...

Posted: 31 Oct 2014 12:50 AM PDT

தப்பு செய்பவர்களை கடவுள்
தண்டிக்கத் தொடங்கினால்
காசு தருபவர்களை மட்டும்
ஸ்பெஷலாக கவனிக்கும்
பூசாரியிடமிருந்து தான் தொடங்க
வேண்டும்!!!

@காளிமுத்து

தமிழக காங்கிரசு கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ஞானதேசிகன் - செய்தி. #இது...

Posted: 31 Oct 2014 12:02 AM PDT

தமிழக
காங்கிரசு கட்சி தலைவர்
பதவியை ராஜினாமா செய்தார்
ஞானதேசிகன் - செய்தி.

#இது_பெரிய_கவர்ன்மெண்ட்_ஜாப்_ரிசைண்_பண்ணிட்டு_போறாருடோய்

@இளையராஜா

நவாபுக் கோட்டை என உள்ளூர் மக்களால் அழைக்கப்பட்டாலும், இது முன்பே 'நம்மவரால்' கட்...

Posted: 30 Oct 2014 10:58 PM PDT

நவாபுக் கோட்டை என உள்ளூர் மக்களால் அழைக்கப்பட்டாலும், இது முன்பே 'நம்மவரால்' கட்டப்பட்டதுதான் என்பதற்குச் சான்றாய் இக்கோட்டைக் கட்டுமானமே விளங்குகிறது...

பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து வரும் V.களத்தூர் அருகே உள்ளே ரஞ்சன்குடி கோட்டை மதில் சுவர்களில் ஆல, அரசமர கன்றுகள் ஊடுருவி ஆக்கிரமித்துள்ளன.

பெரம்பலூர் மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்கும் சுற்றுலாத் தலங்களில் முக்கிய இடத்தை வகிப்பது ரஞ்சன்குடி கோட்டை. பெரம்பலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் 18 கி.மீட்டர் தொலைவில் மங்களமேடு கிராமத்தை ஒட்டியுள்ள ரஞ்சன் குடியில் அமைந்துள்ளது. தூங்கானை என்றழைக்கப்படும் ரஞ்சன்குடி கிராமத்தில் 16ம் நூற்றாண்டின் இறுதியில் குன்றின்மீது அமைக்கப்பட்ட இந்த கோட்டைக்கான கட்டுமான பணி, நவாப்புகளின் கட்டுப்பாட்டிலிருந்த தூங்கானைமறவன் என்ற குறுநில மன்னரால் துவங்கப்பட்டது. இறுதிவரை இதன் கட்டுமான பணிகள் முற்றுப்பெறாத நிலையிலேயே உள்ளது.

இந்த கோட்டைக்கு ஆற்காடு நவாப்கோட்டை, ரஞ்சன்குடி கோட்டை, குன்றின் மீது கட்டப்பட்டதால் துருவத்துக்கோட்டை என பலபெயர்கள் உள்ளன. 1751ம் ஆண்டு சந்தாசாஹிப், பிரெஞ்சு கூட்டுப்படைக்கும், முகமது அலி, ஆங்கிலேயர் கூட்டுப்படைக்கும் இடையே நடந்த, வால்கொண்டா போரில் முக்கிய பங்குவகித்தது என வரலாற்று ஆதாரங்கள் கூறுகின்றன.

வரலாற்று சிறப்பும், தொல்பொருள் ஆதாரங்களையும் கொண்ட இந்த கோட்டையில் இன்னமும் அறிய வேண்டிய ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன. கோட்டையில் இன்றவும் அழியாத நிலையில் பீரங்கிமேடை, கொடிமேடை, தண்டனை கிணறு, வெடிமருந்து கிடங்கு, புறவழி சுரங்கப்பாதை, மழைநீர் சேகரிப்பு தொட்டி, பிற்கால பாண்டியர்கள் பிடியில் இருந்தபோது கட்டப்பட்ட மண்டபம், முகம தியர்கள் ஆண்டபோது அமைக்கப்பட்ட மசூதிகள், கோட்டையை சுற்றியமைக்கப்பட்ட அகழி, இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படாத சுற்றுச்சுவர் என அழியாத நினைவு சின்னங்களாக பலவும் காட்சி தருகின்றன. மாவட்ட நிர்வாகத்தால் போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய இந்த கோட்டை தற்போது அழிவுப்பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

சுற்றுலா தலமாக இருந்தும் சுற்றுலா பயணிகளை கவருவதற்கான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, தங்குமிடம், உணவு வசதி போன்ற அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் அரண்மனையைபோல இருக்க வேண்டிய கோட்டை அனாதைபோல் காட்சியளிக்கிறது. இந்த கோட்டையின் அகழி உள்ளூர் மக்களின் பொதுகழிப்பறையாக மாறிவிட்டது.

மேலும் கல்லூரி காதலர்கள் கொஞ்சி மகிழும் இடமாகவும், கள்ளக்காதலர்கள் உல்லாசமாக இருக்கவும், , தடையற்ற டாஸ்மாக் பாராகவும் மாறிவிட்டது. இதுபோன்ற வக்கிரங்களால் வரலாற்று சிறப்பு மிக்க கோட்டையின் சிறப்புகள் மங்க தொடங்கிய அதேநேரம் சுற்றுச்சுவர்களில் முளைக்கும் மரங்களால் மதில் சுவர்கள் மண்ணோடு சரியும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இதனை முறையாகப் பராமரிக்காவிட்டால், குடிகாரர்களின் கூடாரமாகவும், காதலர்களின் சொர்க்கபுரியாகவும், பொதுமக்களின் கழிப்பறையாகவும் விரைவில் மாறிவிடும்.

@புலி வம்சம்


#படிச்சதும்பிடிச்சதும் .... இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் வேலை செய்யும்...

Posted: 30 Oct 2014 10:33 PM PDT

#படிச்சதும்பிடிச்சதும் ....

இறைச்சி பதப்படுத்தும்
தொழிற்சாலையில்
வேலை செய்யும்
ஒருவர்,ஒரு நாள்
மாலை வேலை முடியும்
தருவாயில்
இறைச்சி பதப்படுத்தும்
Freezer அறைக்குள்
எதோ வேலையாக இருந்த
போது எதிர்பாராதவிதமாய்
அதன்
தானியங்கி கதவு பூட்டிக்கொண்டுவ
ிட்டது.
உடனே பெரும்
கூச்சலிட்டாலும் அவர்
எழுப்பிய
ஓசை வெளியே யாருக்கும்
கேட்கவில்லை மேலும்
பெரும்பாலானோர்
வேலை முடிந்து கிளம்பிவிட்டனர்
...இன்னும் சிறிது நேரத்தில்
ஐஸில்
உறைந்து இறக்கப்போகிறோம்
என்று எண்ணி கவலை அடைந்தார்
அவர்.
அப்போது கதவு திறக்கும்
சத்தம் கேட்டது. உயிர்
வந்தவனாய்
வெளியே ஓடி .வந்தார்.
தொழிற்சாலை காவலாளி நின்று கொண்டிருந்தான்.
சந்தோஷத்தில்
அவனை கட்டி தழுவிக்கொண்டார்
. அவனிடம் "நான்
உள்ளே இருப்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது?"
என்று கேட்டார்.
"சார். நான் இங்க 10
வருசமா வேலை செய்றேன்...நீங்
க ஒருத்தர் மட்டும் தான்
என்னையும்
ஒரு மனுசனா மதிச்சு காலைல
வணக்கமும் சாயங்காலம்
குட் பை ரெண்டும்
சொல்றவர்.
இன்னிக்கி காலைல
வணக்கம்
சொன்னீங்க ..ஆனா சாயங்காலம்
உங்களோட குட் பை என்
காதில்
விழவில்லை.உடனே சந்தேகம்
வந்து உள்ள
வந்து ஒவ்வொரு இடமா தேடினேன்...அப்ப
ோதான் உங்கள்
கண்டு பிடிச்சேன் ..."
என்றான்
ஒருவருக்கொருவர்
மற்றவர்களை தரக்குறைவாக
எண்ணாமல் பரஸ்பரம்
மரியாதை செலுத்திக்கொள்வ
து எப்போதுமே நன்மை பயக்கும்.

இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு ! 300 இந்திய வம்சாவழித் தமிழர்கள் பலி!...

Posted: 30 Oct 2014 10:19 PM PDT

இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு ! 300 இந்திய வம்சாவழித் தமிழர்கள் பலி! 20 சடலங்கள் மீட்பு!

மிகவும் வருந்தத்தக்க செய்தி இது. தமிழர்களுக்கு தொடர்ந்து இன்னல் நேர்ந்து கொண்டே இருக்கிறது. பலியானவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் இந்திய வம்சாவழித் தமிழர்கள். நியாயப்படி தமிழக அரசுக்கு இதற்கு உதவி செய்ய வேண்டும்.

மலையகத் தமிழர்கள் தமிழினம் என்ற நேரடி உறவு தமிழக அரசுக்கு இருக்குமே என்றால் தமிழக அரசின் சார்பாக உதவிகளை வழங்க அரசு முன்வர வேண்டும். ஈழத் தமிழர்களுக்குத் தான் எந்த உதவியும் சேர முடியாதவாறு அப்போதைய தமிழக அரசு பார்த்துக் கொண்டது. மலையகத் தமிழர்களுக்காவது ஏதாவது உதவியை வழங்கட்டும் தமிழக அரசு. தமிழக மக்களாகிய நாம் பாதிக்கப்பட்ட மலையக தமிழர்களுக்கு உதவ இந்த நேரத்தில் ஆதரவு குரல் கொடுப்போம்.

@இராச்குமார் பழனிசாமி

இந்திய துணைக் கண்டத்தின் பல்வேறு தேசிய இனங்களை "படை பலம்" கொண்டு இந்தியத்தின் கீ...

Posted: 30 Oct 2014 09:41 PM PDT

இந்திய துணைக்
கண்டத்தின்
பல்வேறு தேசிய
இனங்களை "படை பலம்"
கொண்டு இந்தியத்தின்
கீழ் அடிமையாக்கிய
குஜராத்தி வல்லபாய்
பட்டேலின் பெயரில்
தேசிய ஒற்றுமை.

#நகை_முரண்.

@சரவணன்

0 comments:

Post a Comment