Sunday, 26 October 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


இவனுங்க கொடுக்கிற சம்பளத்து இவ்வளவு வேலை பார்த்தா போதும்னு நினைக்கிறவனுங்க எவ்வள...

Posted: 26 Oct 2014 12:04 PM PDT

இவனுங்க கொடுக்கிற
சம்பளத்து இவ்வளவு வேலை பார்த்தா போதும்னு நினைக்கிறவனுங்க
எவ்வளவு சம்பளம்
கொடுத்தாலும்
அப்படியே தான்
வேலை செய்வானுங்க..!

@விவிகா சுரேஷ்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வானொலியில் இன்றுமுதல் (26.10.2014) இந்தி நிகழ்ச்சி...

Posted: 26 Oct 2014 11:55 AM PDT

தமிழ்நாடு மற்றும்
புதுச்சேரி வானொலியில்
இன்றுமுதல் (26.10.2014)
இந்தி நிகழ்ச்சிகளை எட்டு மணிநேரம்
கட்டாயம்
ஒலிபரப்பவேண்டும் - மத்திய அரசு

நடிப்பது அவனது தொழில் நன்றாகவே நடிக்கிறான் நிஜத்திலும் நாம்தான் ரசிப்பதோடு நிற்க...

Posted: 26 Oct 2014 11:02 AM PDT

நடிப்பது அவனது தொழில்
நன்றாகவே நடிக்கிறான்
நிஜத்திலும்
நாம்தான்
ரசிப்பதோடு நிற்காமல்
நடிகனுக்காக
அடித்து கொள்கிறோம்

நம்முள்ளான ரசிகர்
சண்டை
நாளை அவனுக்கு வியாபாரம்.

அன்பே...! அ.தி.மு.க அமைச்சர் பாலில் தண்ணீர் கலந்தது போல... நான் உன்னில் கலந்தேன்...

Posted: 26 Oct 2014 10:46 AM PDT

அன்பே...!
அ.தி.மு.க அமைச்சர்
பாலில் தண்ணீர்
கலந்தது போல...
நான் உன்னில்
கலந்தேன்..!!!

ஊழலை கண்டுபிடித்தது போல...
நம் காதலையும்
கண்டுபிடித்துவிட்டார்கள்...!!!

ஆனாலும் அசராமல்
காதலித்ததால்
இன்று உயர்ந்துவிட்ட
பால் விலை போல...
நம் காதலும்
உயர்ந்துவிட்டதே..!!!

#கவித_கவித

@சபரி

இந்திய திரைத் துறைக்கு புது வரவு ஹீரோயின் 'சிறுமி' ஷ்ரியா ஷர்மா. ஆமாங்க மேஜர் ஆக...

Posted: 26 Oct 2014 04:10 AM PDT

இந்திய திரைத் துறைக்கு புது வரவு ஹீரோயின் 'சிறுமி' ஷ்ரியா ஷர்மா. ஆமாங்க மேஜர் ஆகாத பெண்ணை சிறுமி என்று அழைப்பது தானே முறை.

'சில்லுனு ஒரு காதல்', ரோபோ போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமா நடிச்ச சிறுமி. இப்ப கொஞ்சம் வளர்ந்துட்டதால ஹீரோயின். போன மாசம் தான் 17 வது பிறந்த நாளைக் கொண்டாடுனாங்க...

கதாநாயகிகளே கிடைக்காத 1960 கால கட்டத்தில் திருமணமான பெண்கள் கதாநாயகிகளாக நடித்தனர்.

1980 களில் 'இளம்' ஹீரோயின்களின் படையெடுப்பு... அதாவது திருமணம் ஆகாதவர்கள். திருமணம் ஆகி விட்டால் மார்க்கெட் இல்லாத கதாநாயகி.

தற்போது 'இளம்' என்பதற்கு அடுத்த கட்டத்தை அடைய வேண்டும் அல்லவா. பதின்ம வயது சிறுமிகள். அதாவது
பூப்படைந்து இருந்தால் போதும் நீ கதாநாயகி. 16-17 வயதில் காதல், டூயட் பாட்டு பாட வந்து விடுகிறார்கள்.

இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

இளம் ஹீரோயின்... இளம் ஹீரோயின்... என்று உங்களின் அடுத்த இலக்கு பால்யம் மாறாத பச்சிளம் குழந்தையாகத் தான் இருக்கும்.

முதல் படத்தில் விரசம் இல்லா காட்சிகளுடன் நடிக்கத் துவங்குகிறார்கள்.
அடுத்த படத்தில் பெரும் பட்ஜெட் படம். பெரிய நடிகர். அதனால் வியாபாரத்திற்காக கொஞ்சம் கிளாமர் சேர்ப்பார்கள்.

மூன்றாவது படங்களில் "கதைக்குத் தேவை" என்று டைரக்டர் சொல்லுவார். 2 பீஸ் அணிய, லிப் லாக் முத்தக் காட்சி வேண்டும் என.

18 வயசு ஆகாத பொண்ணு எந்த முடிவையும் எடுக்க தகுதி இல்லாதவங்கன்னு சட்டம் சொல்லுது.
18 வயசு ஆகாத சிறுவர்கள் வேலை செய்யக் கூடாதுன்னு 'குழந்தைத் தொழிலாளர்' சட்டம் சொல்லுது.

"சின்னப் பொண்ணு சார், இப்ப தான் ஸ்கூல் போறா... அதுக்குள்ள அவளுக்கு லவ் கேட்குதா... அவ வாழ்க்கை என்ன ஆகுறது" என ஒரு டைரக்டர் கண் கலங்க பத்திரிக்கைக்கு பேட்டி குடுக்குறார்.

இன்னொரு டைரக்டர் 15-16 வயசு பொண்ணை வச்சு லவ் சீன் எடுக்குறார்.

திரைப் படத்தின் தாக்கம் கொஞ்சம் கூட நம்ம வீட்டிலும் நம்ம பிள்ளைகளிடமும் நம்மளிடமும் நம்ம சுத்தி இருப்பவர்களிடமும் இல்லைன்னு நீங்க சொல்றிங்கன்னா நீங்க வேற்றுகிரக வாசியா இருக்கணும்.

ஜீன்ஸ்க்கு ஷோல்டரை வெறப்பா வச்சுக்கிட்டு பேசுற பெண் ஈய வாதிகள் சிறுமிகளை 2 பீஸ்ல நடிக்க வைக்கும் கலைத் துறையைப் பற்றி எதுவும் வாய் திறப்பதில்லை. மொத்தத்தில் உங்களுக்கு தான் செய்யிற செயலை, உடுத்துற உடையை யாரும் குறை சொல்லிறக் கூடாது என்ற சுயநலம் தான். அதுக்கு இந்த ஈயம் ஒரு போர்வை.

"திரைப்படம் பொழுது போக்கு தம்பி... பார்த்துட்டு அப்படியே மறந்திரனும்" என்பவர்களுக்கு திரையில் பார்க்கும் போது சிரிப்பா தான் இருக்கும். நாளைக்கு பக்கத்து வீட்டிலும் நம்ம வீட்டிலும் இவை எல்லாம் நடக்கும் போது பார்த்துட்டு மறந்துருங்க...

குய்யோ... முய்யோன்னு கத்த கூடாது..

- சதீஷ் குமார் தேவகோட்டை


இங்கிலாந்தில் இருந்த பொழுது நடந்த சம்பவம். அன்றும் அலுவலகம் முடிந்து வழக்கம் போ...

Posted: 26 Oct 2014 01:40 AM PDT

இங்கிலாந்தில் இருந்த பொழுது நடந்த சம்பவம்.

அன்றும் அலுவலகம் முடிந்து வழக்கம் போல் திரும்பிக் கொண்டிருந்தேன்.நகரத்தின் மையப்பகுதியில்-சாலையின் ஓரத்தில் இரு மருங்கிலும் பள்ளிக் குழந்தைகள் நின்று கொண்டு,அச்சாலையில் செல்லும் வாகனங்களைப் பார்த்து உற்சாகமாகக் கையசைத்துக் கொண்டிருந்தனர்.அதாவது சிறு வயதில் ரயில் நம்மைக் கடந்து செல்லும் போது கையசைப்போமே அந்த மாதிரி.அங்கு நடப்பவற்றை,அக்குழந்தைகளின் ஆசிரியர் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார்.பொதுவாகப் பள்ளிக் குழந்தைகள் அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டு நான் பார்த்ததில்லை.இதில் ஏதோ ஒரு விசயம் உள்ளது என்றெண்ணி,அந்த ஆசிரியரிடம் சென்று கேட்டேன்.அவர் விவரித்த காரணம் உள்ளபடியே "அட" போட வைத்தது.

"இதுவா,இதன் பெயர் "தோல்வியை-அவமானத்தை கையாள்வது எப்படி? " என்ற செய்முறை வகுப்பு.இதில் குழந்தைகளுக்கு,அவமானத்தை,தோல்வியை எதிர்கொள்வது எப்படி,கையாள்வது எப்படி என்று செய்முறை விளக்கமாக கற்றுக் கொடுப்போம்.அதன் முதல் படியாகவே இந்த வாகனங்களை நோக்கி கையசைத்தல்.எத்தனை பேர் திரும்பக் கையசைக்கிறார்களோ-அது வெற்றி.அது தேவையில்லை.கண்டும் காணாமல் செல்பவர்கள்,தருவது தோல்வி,அவமானம்.ஒருவர் அவ்வாறு சென்றால்-மனமுடையாது அடுத்து வருபவரை நோக்கி கையசைக்க வேண்டும்.இப்படி தொடர்ச்சியாகச் செய்யச் செய்ய-வாய்ப்புகள் என்பது ஒரு முறை வருவதல்ல,ஒன்று போனால் மற்றொன்று கன்டிப்பாக வரும்,நாம் முயற்சியை மட்டும் எக்காரணம் கொண்டும் கைவிடக்கூடாது,என்பது குழந்தைகளுக்குத் தானாகவே புரிந்து விடும்.அதற்காகவே இந்த செய்முறைப் பயிற்சி.இது அவர்கள் வளர வளர பல்வேறு தோல்வி,அவமானச் சூழ்நிலைகளை திறமையாகக் கையாளப் பயன்படும்" என்றார் உற்சாகமாக!!!

- துரை மோகன்


என்னோட எதிர்காலம் என்னனு எனக்கே தெரியாதப்ப கிளிக்கு மட்டும் எப்படி தெரியும். @ச...

Posted: 25 Oct 2014 10:34 PM PDT

என்னோட எதிர்காலம்
என்னனு
எனக்கே தெரியாதப்ப
கிளிக்கு
மட்டும்
எப்படி தெரியும்.

@செந்தில் ஜி

0 comments:

Post a Comment