Saturday, 9 August 2014

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


தண்ணி அடிச்சா பசங்க சொல்லும் எட்டு பஞ்ச் வசனங்கள்.... 1.மச்சி நான் full steady...

Posted: 09 Aug 2014 09:15 AM PDT

தண்ணி அடிச்சா பசங்க சொல்லும் எட்டு பஞ்ச் வசனங்கள்....

1.மச்சி நான் full steady டா....

2.பைக் ஐ நானே ஓட்டுறேன்டா....

3.நான் போதையில உளறுரேன்னு மட்டும்
நினைக்காதடா....

4.எனக்கு எவ்வுளவு அடிச்சாலும் ஏறாது மச்சி ....

5.இன்னொரு பெக் அடிச்சா செமையா இருக்கும்.....

6.நான் உனக்காக உயிரையும் கொடுப்பேன்டா....

7.மச்சி நாளையில இருந்து குடிக்க மாட்டேண்டா....

(Last but Not least....பசங்க சொல்லும் மெகா தத்துவம்.....)

8.மச்சி இந்த பொண்ணுங்களை நம்பவே கூடாதுடா....!

:P

ஆங்கிலத்தில் ரிலாக்ஸ் ப்ளீஸ் Relaxplzz

எச்சரிக்கைச் செய்தி ..அதிகம் பகிரவும்.. எங்கள் சகோதரிகளுக்காக... தயவுசெய்து மற்...

Posted: 09 Aug 2014 09:00 AM PDT

எச்சரிக்கைச் செய்தி ..அதிகம் பகிரவும்..
எங்கள் சகோதரிகளுக்காக...

தயவுசெய்து மற்றவர்களுக்கும் பகிருங்கள்..

இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி கண்டிப்பாக படிக்கவும் ....எச்சரிக்கைச் செய்தி.

Internetல் Photo editing தவறான முறையில் பயன்படுத்துவதால் சமுக வலைத்தளங்கள் சமுகத்தின் மத்தியில் தலைகுனிந்து காணப்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்..

Facebookல் வைத்திருக்கும் Profile picture...ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் அப் புகைப்படங்களை Download செய்து தவறான முறையில் அப்புகைப்படங்களை பயன்படுத்துவது வேதனை தரும் விடயமாகும்..

இறுதியில் Internetல் சில தவறான தளங்களுக்கு செல்பவர்கள்..அதனை பார்வையிட்டு குறித்த நபருக்கு கூறும் போது மன வேதனை சில நேரங்களில் உயிரை பறிக்கலாம்..

சில சமயங்களில் Chatting மூலம் தவறாகவும் பயன்படுத்தலாம்(பிளாக் மெயில் செய்யலாம்)..
இத்தகைய செயற்பாடுகள் கூட சமுக உணர்வுள்ள மக்கள் சமுக வலைத்தளங்களை வெறுக்க காரணமாகவும் அமைகிறது..

இந்த Facebook இன்றைய இளைய சமுதாயத்தில் எவ்வளவு ஆழமாக வேரூன்றிவிட்டதென்று எல்லோருக்கும் தெரியும்..

முகம் தெரியாத நபர்கள் 'நட்பிற்கான விடுகையைத் தரும்போது'
(friendship request),
அவற்றை எக்காரணங்கொண்டும் ஏற்றுக்கொள்ளவேண்டாம்..
ஏனெனில், உங்களது படத்தை எடுப்பதற்கான பெரும் வாய்ப்பை அவர்களுக்கு நீங்களே அளிக்கிறீர்கள்..

ஆனால் சில நபர்கள் Facebookல் உள்ளூர் நண்பர்கள் தேவையில்லை என்று கூறுவதுண்டு..ஏற்க்க கூடிய விடயம் தான்..
judgments about that person ("good" or "bad")..
தெரிவு :- உங்கள் கையில் ...
பகுப்பாய்வு :- உங்கள் மனதில்...
முடிவு:- உங்களை சார்ந்து..

தவறான தெரிவுகளை தவிர்ப்போம்..friendship requestலும் மட்டுமல்ல வாழ்விலும் தான்..
இருந்தாலும் கூட # Facebookல் தன்னுடைய பதிவுகளை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்பதும் பிரச்சினை தான் . .இதனை தடுப்பதற்கும் சில நுட்பமுறைகளை அறியாமையும் குற்றம் தான்.. Facebook தொடர்பில் நன்கு தெரிந்தநபர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வதும் நல்ல விடயமாகும்..

settingsயை கையால்வதும் சிறந்தது... புகைப்படங்களை Tag செய்வதும் நல்ல விடயமாகும்..

"நம் மூளையில் சராசரியாக 10% தான் நாம் உபயோகப்படுத்துகிறோம்....
அப்போ 90% எப்படி பயன்படுதுவது என்பது நமக்கு தெரியவில்லை என்பதுதான் உண்மை...

அது எப்படி சாத்தியமாகும்.... நாம்தான் நமக்கு தெரிந்த வரை பயன்படுத்துகிறோமே்"....
ஒரு iPhone 5 வாங்கி எங்க பாட்டிகிட்ட கொடுத்தா.. அதிக பட்சமாக... பாட்டிக்கு கால் பன்னுறதும், மிஞ்சி மிஞ்சிபோனா பாட்டு கேட்கவும்தான் தெரியும்....
அதில் இருக்கும் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த தெரியாது..... அப்படிதான் இதுவும்...

நம்ம மூளையை பொருத்தவரை நாமும் பாட்டிதான்!புரிந்து செயல்படுவோம் நண்பர்களே . .

பொழுதுபோக்கிற்காக உலாவ வரும் பெரும்பாலோனோருக்கு,
இங்கே பல கயவர்களும் உலாவுகின்றனர் என்பதை எச்சரிக்கவே இதை எழுதியுள்ளோம் . . .

இது பெண்களுக்கு மட்டுமல்ல..

எல்லா ஆண்களும் இதனைப் படித்து தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் விளக்கமாக எடுத்துரையுங்கள்..

தயவுசெய்து மற்றவர்களுக்கும் பகிருங்கள்..

நன்றி -
(சொல்வது எங்கள் கடமை - தீர்மானிப்பது உங்கள் கையில்)
இப்போதே இந்த மாற்றங்களைச் செய்யுங்கள்..

இது சரியா தவறா என்ற விவாதஞ்செய்யாமல்,
இதுபோன்ற மோசமான நபர்களும், தளங்களும் உலாவும் # இணையஉலகில் நம்மை நாமே
காத்துக்கொள்ளவேண்டும்..

••||••••அனைவரையும் விரும்பு...
சிலரை நம்பு ...
ஒருவரை பின்பற்று...
பலரிடம் கருத்துக்கேள்..
ஆனால்...
முடிவை நீதான் எடு ...!••••||••

உங்கள் நண்பன் :-தர்சன்..


யோவ் டிரைவர் வண்டிய சாய்க்காம ஓட்டுயா சட்னி சிந்துது. :P

Posted: 09 Aug 2014 08:50 AM PDT

யோவ் டிரைவர்
வண்டிய சாய்க்காம ஓட்டுயா
சட்னி சிந்துது. :P


அலைகள் அடியில் எடுக்கப்பட்ட புகைப்படம்

Posted: 09 Aug 2014 08:40 AM PDT

அலைகள் அடியில் எடுக்கப்பட்ட
புகைப்படம்


:)

Posted: 09 Aug 2014 08:30 AM PDT

:)


ஒரு பொண்ணும் பையனும் லவ் பண்ணினார்கள்.இருவர் வீட்டிலும் கடும் எதிர்ப்பு. இறுதியி...

Posted: 09 Aug 2014 08:15 AM PDT

ஒரு பொண்ணும் பையனும் லவ் பண்ணினார்கள்.இருவர் வீட்டிலும் கடும் எதிர்ப்பு. இறுதியில் ஒரு வழியாக பெண்ணின் அப்பா சமாதானமாகி காதலனைப் பார்க்க வேண்டும் என்றார். மகள் தன் காதலனை வீட்டிற்கு கூட்டி வந்தாள்.பொண்ணோட அப்பாவும் அவனும் பேச ஆரம்பித்தார்கள்.

"என்னப்பா உன் எதிர்காலத் திட்டம் என்ன?"பெண்ணின் அப்பா அவனிடம் கேட்டார் .

பையன் யோசிக்காமல் பதில் சொன்னான். "அதெல்லாம் கடவுள் பாத்துப்பார் சார் .

"சரிப்பா காலேஜ் முடிச்சதும் என்ன பண்ணலாம்னு இருக்க?" அடுத்த கேள்வியை கேட்டார்.

" அதெல்லாம் கடவுள் பாத்துப்பார் சார்" மீண்டும் அதே பதிலை சொன்னான்.

"கல்யாணம் பண்ணினா குடும்பம் நடத்த..., குழந்த குட்டி... பணத்துக்கு என்ன பண்ணுவ?" மூன்றாவது கேள்வியை கேட்டார்.

" அதெல்லாம் கடவுள் பாத்துப்பார் சார்". அதே பதிலை சொன்னான்.

பெண்ணின் அப்பா சொன்னார் "தம்பி உன்னை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. உன்னை மருமகனா ஏத்துக்க சம்மதம்"

பொண்ணு ஒடிவந்து சந்தோஷாத்துடன் கேட்டாள், "பையன் எப்படிப்பா?

அவளின் அப்பா பெருமையோடு சொன்னார் "ஓ தங்கமான பையன்! என்னை கடவுளா நினைக்கிறான்..!!"

:P :P

ஆங்கிலத்தில் ரிலாக்ஸ் ப்ளீஸ் Relaxplzz

மின்னஞ்சலை (Email) கண்டுபிடித்தவர் யார் ? ஒரு தமிழன் மின்னஞ்சலை (Email) கண்டுபி...

Posted: 09 Aug 2014 08:00 AM PDT

மின்னஞ்சலை (Email) கண்டுபிடித்தவர் யார் ? ஒரு தமிழன்

மின்னஞ்சலை (Email) கண்டுபிடித்தவர் யார் ? யாராவது வெளிநாட்டுக்காரர்தான் என்றுநினைத்திருப்பீர்கள். நீங்கள் நினைத்தது உண்மைதான். அவர் வெளிநாட்டில் வசிக்கும் ஒரு தமிழர். அதுவும் தனது 14வயதில் (Email) லை கண்டுபிடித்துச் சாதனை செய்தவர் ஒரு தமிழன் சிவா அய்யாதுரை. இப்போது அவருக்கு வயது 48.

ஒரு வீடியோ, போட்டோ, கடிதமாகா, இருக்கட்டும் உடனே ஒருவருக்கு அனுப்ப வேண்டும் என்றால் உடனே (Email) லில் அனுப்பினால் அனுப்பிய மறு நிமிடம் உங்களுக்குக் கிடைத்துவிடும்

மின்சாரம் இல்லாத மனிதனுடைய வாழ்க்கையை எப்படிக் கற்பனை செய்ய முடியாதோ, அதைப் போலவே (Email) இல்லாத மனித வாழ்க்கையை இனி நினைத்துப் பார்க்கவும் முடியாது. தனிநபர்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றமாகட்டும், நிறுவனங்களுக் கிடையிலான தகவல் பரிமாற்றமாக இருக்கட்டும் இப்போது (Email) சரணம் என்ற நிலை உருவாகிவிட்டது.

இந்த இ-மெயிலைக் கண்டுபிடித்த சிவா அய்யாதுரையை பற்றி அவரே கூரி இருந்தார்

அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள நெவார்க் என்ற ஊரைச் சேர்ந்தவர்.

அவருடைய அம்மா மீனாட்சிக்குச் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பரமன்குறிச்சி. எனது தாத்தா அரசுத்துறையில் சிவில் என்ஜினியர். அப்பாவுக்குச் சொந்த ஊர் ராஜபாளையம் அருகேயுள்ள முகவூர். அம்மா அந்தக் காலத்திலேயே எம்எஸ்ஸி படித்தவர். மாநில அளவில் தங்கப் பதக்கம் வென்றவர். அப்பா யுனிலீவர் போன்ற பெரிய நிறுவனங்களில் உற்பத்தித்துறைத் தலைவராக இருந்தவர். எனது சிறிய வயதிலேயே நாங்கள் மும்பைக்குச் சென்றுவிட்டோம்.

நான் நன்றாகப் படிப்பதைத் தெரிந்து கொண்ட என் பெற்றோர், என்னை மேலும் நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக 1970 இல் அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தார்கள். அப்போது எனக்கு வயது ஏழு. அமெரிக்காவில் நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள பேட்டர்சன் டவுனுக்குப் போனோம். அம்மா கணிதவியல் நிபுணராகவும், ஸிஸ்டம் அனலிஸ்ட்டாகவும் இருந்தார்.

எனக்குச் சிறுவயதிலேயே படிப்பிலும் விளையாட்டிலும் அதிக ஆர்வம். எனது சிறுவயதில் நான் இருவேறு உலகங்களில் வாழ்ந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். வீட்டில் இந்தியனாகவும், வெளியே அமெரிக்கனாகவும் வாழ்ந்தேன்.

பள்ளியில் படிக்கும்போது கோடை விடுமுறையில் நியூயார்க் பல்கலைக் கழகத்தில் FORTRAN, COBOL, PL/1, SNOBOL, BASIC ஆகிய ஐந்து வித்தியாசமான கம்ப்யூட்டர் மொழிகளைப் படித்தேன். உலகம் முழுவதிலும் இருந்து 40 பேரைத் தேர்ந்து எடுத்து அந்தப் பல்கலைக் கழகத்தில் சொல்லித் தந்தார்கள். அதில் நானும் ஒருவன். கம்ப்யூட்டர் புரோகிராம் என்றால் என்ன என்று யாருக்கும் தெரியாத அந்த நாளில் நான் அங்கே கற்றுக் கொண்டது பெரிய விஷயமாக இருந்தது.

இந்தப் பின்னணியில்தான், 1978 இல் நியூஜெர்ஸி மாகாணத்தில் நெவார்க்கில் உள்ள "யுனிவர்சிட்டி ஆஃப் மெடிஸின் அண்ட் டென்ஸ்ட்ரி'யில் கம்ப்யூட்டர் புரோகிராம் பணிக்காகச் சேர்ந்தேன். பின்னாளில் உலகம் முழுவதும் பயன்படுத்தப் போகும் ஒரு கம்ப்யூட்டர் மென்பொருளை நான் அங்கே வடிவமைப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை.

அப்போது அங்கே உள்ள அலுவலகத்தில் உள்ள எல்லா தகவல் பரிமாற்றங்களும் காகிதத்தில் எழுதப்பட்டு அதன் மூலமே நடந்தன. இது மனித உழைப்பையும், நேரத்தையும் அதிகமாக எடுத்துக் கொண்டதால், இந்தத் தகவல் தொடர்பு பணியைக் கம்ப்யூட்டர்மயமாக்க முடியுமா? என்று என்னைக் கேட்டார்கள். அப்போது எனக்கு 14 வயது.

தொடர்ந்து பலநாட்கள் தூக்கம் இல்லாமல், கடுமையாக உழைத்து தகவல் தொடர்புக்கான கம்ப்யூட்டர் புரோகிராமை உருவாக்கினேன். அதன் Code ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வரிகளை உடையதாக இருந்தது. அதை E MAIL என்று அழைத்தேன்.

நான் இந்த E MAIL-ஐக் கண்டுபிடிப்பதற்கு முன்பு கம்ப்யூட்டரின் மூலம் செய்திகளை அனுப்புவது இருந்ததா? என்றால் இருந்தது. ஆனால் ஒரு கம்ப்யூட்டருக்கும் இன்னொரு கம்ப்யூட்டருக்கும் இருந்த நேரடி இணைப்பின் மூலமாக இருந்தது. அப்படி அனுப்பியதும் வெறும் டெக்ஸ்ட் மெசேஜ்ஜாக மட்டுமே இருந்தது.

நான்தான் முதன்முதலில் கம்ப்யூட்டர் மூலம் செய்திகளை அனுப்புவதற்கு புரோகிராமை உருவாக்கியவன். FORTRAN IV என்ற programming language -ஐப் பயன்படுத்தி அதை உருவாக்கினேன். இது DATABASE, LAN(LOCAL AREA NETWORK) உடன் தொடர்புடையதாக இருந்தது. இ மெயில் என்பது டெக்ஸ்ட் மெசேஜ் அல்ல. அது ஒரு ஸிஸ்டம். இ – மெயிலில் உள்ள INBOX, OUTBOX, FROM, TO, SUBJECT, CC, BCC, DATA, BODY, FORWARD, REPLY எல்லாம் நான் உருவாக்கியவை.

அதற்குப் பிறகு "மசாசூùஸட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி'யில் (MIT) மேற்படிப்புக்காகச் சென்றேன். மிக அதிகமான திறமையுள்ள, கண்டுபிடிப்புகள் செய்யும் மாணவர்களை அந்தக் கல்லூரி ஆண்டுதோறும் அடையாளம் காட்டிச் சிறப்பிக்கும். 1980 இல் 1040 மாணவர்கள் படித்தனர். இ – மெயிலைக் கண்டுபிடித்தற்காக, அப்படி அடையாளம் காட்டிச் சிறப்பிக்கப்பட்ட நான்கு மாணவர்களில் நானும் ஒருவன்.

எனது கண்டுபிடிப்புக்கான காப்புரிமையை வாங்க 1982 இல் அமெரிக்காவின் காப்புரிமை அலுவலகத்தை அணுகினேன். அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது எப்படி என்று ஆலோசனை கூறக் கூட அப்போது யாரும் இல்லை. எனக்கு அப்போது 19 வயது. 1982 ஆகஸ்ட் 30 இல் இ-மெயிலைக் கண்டுபிடித்ததற்காக எனக்கு காப்புரிமை கிடைத்தது.

ஆனால் பலர் தாங்கள்தாம் இ – மெயில் கண்டுபிடித்ததாகக் கூறிக் கொள்கின்றனர். ஆனால் நான் இ-மெயில் கண்டுபிடிக்க செய்த முயற்சிகளைப் பார்த்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் உலக அளவில் புகழ்பெற்ற மொழியியல், தத்துவத்துறைப் பேராசிரியர் நோம் சாவ்ஸ்கி. நான்தான் இ மெயில் கண்டுபிடித்தேன் என்று அவர் பகிரங்கமாக அறிவித்து வருகிறார். நான் கண்டுபிடிப்பதற்கு முன்பு இ மெயில் என்ற சொல் உலகத்தில் எந்த அகராதியிலும் இல்லை.

இ-மெயிலை நான் கண்டுபிடிக்கவில்லை என்று சிலர் கூறுவதற்குக் காரணம்,

1. நான் ஓர் இந்தியன், 2. தமிழன், இவற்றைத் தவிர வேறு எந்தக் காரணமும் எனக்குத் தெரியவில்லை...


எப்படிலாம் பாதுகாகுறாங்க பாருங்கையா! ! :P

Posted: 09 Aug 2014 07:45 AM PDT

எப்படிலாம் பாதுகாகுறாங்க பாருங்கையா! ! :P


:)

Posted: 09 Aug 2014 07:30 AM PDT

:)


ஆண்களின்கவனத்திற்கு: ஒரு பெண் விரும்புவது உங்களுடைய காரையோ, பர்ஸையோ, பரிசுப் பொ...

Posted: 09 Aug 2014 07:15 AM PDT

ஆண்களின்கவனத்திற்கு:

ஒரு பெண் விரும்புவது உங்களுடைய காரையோ, பர்ஸையோ,
பரிசுப் பொருட்களையோ அல்ல.

அவளுக்கு தேவைப்படுவதெல்லாம்
உங்களுடைய நேரம்
உங்கள் புன்னகை
உங்கள் நேர்மை
உங்கள் புரிதல்
மற்றும்
உங்களுடைய முதல் சாய்ஸாக அவள் இருக்க வேண்டும்
என்பதைத்தான்.!

பெண்ணிற்கும் உண்டு காதல் தோல்வி . . .
ஆனாலும் ,
இவள் ஆறுதல் தேடியதில்லை மதுவிலோ போதையிலோ . . . !
இவள் பரிதாபம் எதிர்பார்த்ததில்லை மாப்ள-
மச்சான் நண்பர்களிடத்தில் . . . !
இவள் சோகத்தை மறந்ததில்லை கானா மெட்டுக்கள்
பாடி . . . !

இவள் பழி சுமத்தியதில்லை ஒட்டு மொத்த
ஆண்கள் வர்க்கமே மோசமென்று !
இவள் கவனிக்கத் தவறியதில்லை கேட்கக்கூசும்
விமர்சனங்களை . . . !

இவளுக்கு தெரிந்தது, முடிந்தது, அனுமதிக்கப்பட்டது
எல்லாம் வெறும்
"தலையணை நனைத்தலும் யாருக்கும் தெரியாமல்
தன்னை வருத்துவது'' மட்டுமே . . . ! ! !

சில பெண்களின் காதலையும் மதிப்போம்.

Relaxplzz

அது ஒரு அழகிய மொபைல் காலம் -- * ஒரு வாரம் ஆனாலும் சார்ஜ் தீரும் என்கிற கவலை இரு...

Posted: 09 Aug 2014 07:00 AM PDT

அது ஒரு அழகிய மொபைல் காலம் --

* ஒரு வாரம் ஆனாலும் சார்ஜ் தீரும் என்கிற கவலை இருந்ததே இல்லை!

* காவேரி ஆற்றில் மூழ்கி எடுத்தும் , தண்டவாளத்தில் தவறி விழுந்தும்,உடைத்தே தீரவேண்டுமென சண்டை ஒன்றில் போட்டு உடைத்தும் கூட, கை குலுக்கியபடி சிரிக்கும் மொபைல் அது !

* கீ போர்டே தேய்ந்து போகும் அளவிற்கு மெசேஜ் அனுப்பிய மொபைல் அது !

* எழுந்து யாரையாவது அடிக்க தோன்றும் அளவுக்கு அலறும் அலாரம் அது !

* குட் மார்னிங் தொடங்கி குட் நைட் வரை எல்லாவற்றிற்கும் குரூப் மெசேஜ் அனுப்பியே கொல்ல உதவிய மொபைல் அது !

*பந்து போல கூட பயன்படுத்தி இருக்கிறொம் ; ஆனால் பந்தாவாக யாரும் அதைப் பயன்படுத்தியதில்லை

#ஆன்ட்ராய்டுகளும் ஆப்பிள்களும் வந்தாலும் எங்களுக்கு அதுதான் அழகிய மொபைல் காலம் !

Relaxplzz


கருவுற்றால், ஒரு குழந்தைக்கு மட்டும் தான் 'அன்னையாக' முடியும்..... ஆனால்........

Posted: 09 Aug 2014 06:45 AM PDT

கருவுற்றால், ஒரு குழந்தைக்கு மட்டும் தான் 'அன்னையாக' முடியும்.....

ஆனால்.....

கருணையுற்றால் ஆயிரம் 'குழந்தைகளுக்கு கூட "அன்னையாக" முடியும்"


:)

Posted: 09 Aug 2014 06:30 AM PDT

:)


ஒரு முயல் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தாம். ஆம் முயல் என்ன செய்யும் பாவம்!!...

Posted: 09 Aug 2014 06:15 AM PDT

ஒரு முயல் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தாம்.

ஆம் முயல் என்ன செய்யும் பாவம்!!

ஒருபக்கம் வேடன் விரட்டுகிறான்.
இன்னொரு பக்கம் நாய்....
மறுபக்கம் புலி..
என எந்தப்பக்கம் திரும்பினாலும் எதிரிகள்.

சரி நாம் வாழத்தகுதியற்ற விலங்கு என்று முடிவெடுத்தது.
எப்படியெல்லாம் தற்கொலை செய்யலாம்
என்று சிந்தித்துப்பார்த்தது.

இறுதியாக..
குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொள்வோம்
என்று சென்றது முயல்.

அப்போது முயலின்
வருகைக்கு அஞ்சி அங்கு குளத்தின் கரையில்
இருந்த தவளைகள் குளத்துக்குள் தாவின.

முயல் சிந்தித்தது...
அட!! நம்மையும் பார்த்து பயப்பட இந்த உலகில்
உயிரினங்கள் உள்ளனவா??
என்று தன் தற்கொலை முடிவை மாற்றிக்கொண்டு தன்னம்பிக்கையோடு வாழ்ந்ததாம்.....

"தற்கொலை செய்துகொள்வதற்கு
வலிமையான மனம் வேண்டும்,
அவ்வளவு வலிமையான மனமிருந்தால் நீ ஏன் சாகிறாய்?
வாழ்ந்துதான் பாரேன்.."

(y) (y)

பனையை வெட்டினால்.... நதிகள் வறண்டு போகும்...! ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்ப...

Posted: 09 Aug 2014 06:00 AM PDT

பனையை வெட்டினால்.... நதிகள் வறண்டு போகும்...!

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர். அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும்,

ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்.

இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும். அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும். இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல் நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்...

இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டேவரும் என்பது மட்டும் உண்மை... நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்.

குறைந்தபட்சம் உங்கள் நண்பர்களுடனாவது பகிர்ந்துகொள்ளுங்கள்.


:P :P :P

Posted: 09 Aug 2014 05:50 AM PDT

:P :P :P


பெற்றால் தான் பிள்ளையா..? என்பதை இந்த பசு உணர்ந்ததை... மனிதன் எப்போது உணரப் போகி...

Posted: 09 Aug 2014 05:40 AM PDT

பெற்றால் தான் பிள்ளையா..? என்பதை இந்த பசு உணர்ந்ததை...
மனிதன் எப்போது உணரப் போகிறான்..?


:)

Posted: 09 Aug 2014 05:30 AM PDT

:)


சிறிய தவளைகள் சேர்ந்து தங்களுக்குள்ளே ஒரு ஓட்டப்பந்தயத்தை வைத்துக் கொள்ள ஏற்பாடு...

Posted: 09 Aug 2014 05:15 AM PDT

சிறிய தவளைகள் சேர்ந்து தங்களுக்குள்ளே ஒரு ஓட்டப்பந்தயத்தை வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்து கொண்டன.ஓட்டப்பந்தயத்திற்கான நாளும் நெருங்கி வந்தது. தவளைகளின் ஓட்டப்பந்தயத்தை காண பலரும் கூடி இருந்தார்கள்.

ஓட்டப்பந்தயத்தில் தவளைகள் ஓடி, அருகில உள்ள ஒரு உயரமான கோபுரத்தை தொட வேண்டும். அது தான் போட்டி விதி. முதலில் தொடுபவர் வெற்றியாளர்.போட்டியும் ஆரம்பமானது. கூட்டமாய் கூடி இருந்தோர்கள் பலரும் இது சுலபமான போட்டி இல்லை. உங்களால் அந்தப் கோபுரத்தை அடைய முடியாது என்று தவளைகளை நோக்கி கத்திக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் "இந்தத் தவளைகளால் இந்தக் கோபுரத்தில் உச்சியைதொடவே முடியாது! — சாத்தியமே கிடையாது!" என கூறினார்கூட்டத்திலிருந்து இப்படியாக கோசங்கள் வந்த வண்ணமே இருந்தன.மெல்ல ஒவ்வொரு தவளைகளாக, தங்களால் முடியாது என்ற வகையில் சோர்ந்து போட்டியிலிருந்து நீங்கி கொண்டன"இதில எந்தத் தவளையும் அந்த உச்சிய தொடப்போவதில்லை . அது ரொம்ப கடினமானது" — கூடியிருந்தோர் தங்கள் கோசங்களை தொடர்ந்து கொண்டேயிருந்தனர்.

இப்படியிருக்க, பல தவளைகளும் களைப்படைந்து, போட்டியிலிருந்து நீங்கிக் கொண்டது. ஆனால், ஒரேயொரு தவளை மட்டும் மேலே மேலே முன்னேறிக் கொண்டிருந்தது.எல்லாத் தவளைகளும் கோபுர உச்சியைத் தொடுவது சாத்தியமற்றது என எண்ணி இடையிலேயே போட்டியிலிருந்து விலகிக் கொள்ள, ஒரு சின்னஞ் சிறிய தவளை மட்டும் உச்சியை நோக்கி முன்னேறிக்கொண்டு இருந்ததுசில வினாடிகளில் உச்சியை தொட்டு வெற்றியும் கண்டது..

அனைவரும் வியந்து பொய் எப்படி அந்த சிறிய தவளையினால் மட்டும் முடிந்தது என வினாவினார்கள்அப்போது தான் தெரிந்தது, கோபுர உச்சியைத் தொட்ட அந்தத் தவளைக்கு காது கேட்காது என்று."

முடியாதவர்கள், அவர்களால் முடியாததை உன்னாலும் முடியாது என்று சொல்லுவார்கள்.சொல்லுபவர்கள் சொல்லட்டும். அவர்களிடம் நீ,செவிடாக இருப்பதே சில நேரங்களில் பொருத்தமானது,"உன் காதில் சங்கே ஊதினாலும் உன் வழி செல் |

வெற்றி உனக்கே (y)

எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு ..!! உலகில் எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெற...

Posted: 09 Aug 2014 05:00 AM PDT

எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு ..!!

உலகில் எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு ஒன்று உண்டா என்பதில் அனைவருக்கும் சந்தேகம் வருவது உண்மை, ஆனால் எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாது நாடு ஒன்று உண்டு. அதை தான் இப்போ பார்க்க போகிறோம்.

* 1951-ல் உலகின் மிக ஏழை நாடாக இருந்தது லிபியா.

* நேட்டோ படைகளின் தாக்குதலுக்கு முன்பு வரை மிகவும் வசதியான சூழலில் வாழும் மக்களை கொண்ட ஒரே ஆப்ரிக்க நாடு லிபியா.

* லிபியாவில் வீடு ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள உரிமையாக கருதப்பட்டது.

* மின்சாரம் அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.

* மருத்துவமும் கல்வியும் இலவசமாக வழங்கப் பட்டது.

* மக்கள் தாங்கள் விரும்பும் கல்வியோ மருத்துவமோ லிபியாவில் கிடைக்காத பட்சத்தில் வெளிநாடு சென்று பெறுவதற்கு அரசே பொருளுதவி செய்தது.

* வங்கிகளில் கடன் கோருபவர்களுக்கு வட்டியில்லா கடன்களாக மட்டுமே கொடுக்கப்பட்டது.

* விவசாயம் செய்ய விரும்புபவர்களுக்கு இலவசமாக நிலமும் மற்றும் எல்லா உதவிகளும் இலவசமாக அரசே செய்தது.

* உலகில் எவனுக்கும் கடன் படாத நாடு லிபியா!


பைனாப்பிள் மரம்

Posted: 09 Aug 2014 04:51 AM PDT

பைனாப்பிள் மரம்


சும்மா... சும்மா... 5

வரலாற்று சிறப்பு மிக்க புகைப்படம் அம்மாவும் குனிந்து கும்பிடுகிறார் பாருங்கள்.....

Posted: 09 Aug 2014 04:40 AM PDT

வரலாற்று சிறப்பு மிக்க புகைப்படம்

அம்மாவும் குனிந்து கும்பிடுகிறார் பாருங்கள்.... :P


:)

Posted: 09 Aug 2014 04:30 AM PDT

:)


Face bookஐ தமிழில் மாற்றினால்... facebook - மூஞ்சி புத்தகம் home - வூடு statu...

Posted: 09 Aug 2014 04:15 AM PDT

Face bookஐ தமிழில் மாற்றினால்...

facebook - மூஞ்சி புத்தகம்

home - வூடு

status - வாய்க்கு வந்தத உளறு...

post - தபால் டப்பா

comment - காரித்துப்பு

reply - திருப்பித் துப்பு

angry bird - கவட்ட விளாட்டு

people you may know - தெரிஞ்ச மொகரயா பாரு...

warning - மரியாதை கெட்டுபோகும் நாயி நாயி

search - மாதா கோயிலு (யோவ் அது church யா)

you are blocked for 30 days - 30 நாளைக்கு மூடிட்டு இரு

friend request- மச்சி என்ன சேர்த்துக்கோ

chat- கடலை

like- புடிச்சா அமுக்கி போடு

settings- எதயாவது மாத்து

fake id- ஊரை ஏமாத்து

poke- மூஞ்சில குத்து

notifications- எவனோ என்னமோ அனுப்பிகீறான்

criminal case- குற்றம் நடந்தது என்ன

farm ville - கம்பியூட்டர் விவசாயம்

developer - அடிமை

follow - பின்னாலே போ

inbox - உள்ளே போ

update info- மேல சொல்லு மேல சொல்லு

groups- குட்டி செவுரு

wall- பெரிய செவுரு

recent activity- கொஞ்சம் மின்னாடி இன்னா பண்ணினு இருந்த

logout - வெளிய போடா அயோக்கிய ராஸ்கலு...

“காலம் கடந்தாலும் அன்பு அழிவதில்லை" --------------------------------------------...

Posted: 09 Aug 2014 04:00 AM PDT

"காலம் கடந்தாலும் அன்பு அழிவதில்லை"
--------------------------------------------------------------

வயதான பெரியவர் ஒருவர் காலை 8.30 மணிக்கு மருத்துவமனைக்கு வந்திருந்தார். அவர் மணி பார்ப்பதும் பிறகு அவர் கையில் இருக்கும் டோக்கனையும் அடிக்கடி பார்த்து கொண்டே இருந்தார்.

நோயாளிகள் ஒவ்வொருவராக பார்த்தபின் அவர் டோக்கன் எடுத்து கொண்டு உள்ளே வந்தார். என்ன பெரியவரே ஏதாவது அவசர வேலை இருக்கா அடிக்கடி மணி பார்த்துகிட்டே இருக்கீங்க என்றேன். ஆமாம் டாக்டர் என் மனைவிக்கு நான் போய் தான் சாப்பாடு குடுக்கனும் என்றார்.

ஏன் அவங்களுக்கு உடம்பு சுகம் இல்லையா என்று கேட்டேன். ஆமாம் டாக்டர் கடந்த மூன்று வருடமா அவளுக்கு நியாபக மறதி வந்து விட்டது. என்னையே கடந்த மூன்று வருடமா அவளுக்கு யார் என்று தெரிவதில்லை என்றார்.

கடந்த மூன்று வருடமா உங்களை யாருன்னே தெரியாமலே அவங்களுக்கு நீங்க தான் சாப்பாடு கொடுக்கறீங்களா...என்று கேட்டேன்.

நியாபக மறதி நோய் அவளுக்கு தான் டாக்டர்.
"என்னை யார் என்று அவளுக்குத்தான் தெரியாது, ஆனால் எனக்கு அவள் யார் என்ன உறவு என்பது நன்றாக தெரியும் என்றார்."

அவர் சொன்ன வார்த்தை என் கண்களை கலங்க செய்து விட்டது. இது தான் உன்மையன பாசம். சீக்கிரம் அவருக்கு சிகிச்சை அளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

"காலம் கடந்தாலும் காதல் அழிவதில்லை" ♥

- Ilayaraja Dentist


:)

Posted: 09 Aug 2014 03:52 AM PDT

தனது முதல் மாத சம்பளத்தில் ஏழை குழந்தைகளுக்கு Treat குடுத்திருக்கார் இந்த இளைஞர்...

Posted: 09 Aug 2014 03:40 AM PDT

தனது முதல் மாத சம்பளத்தில் ஏழை குழந்தைகளுக்கு Treat குடுத்திருக்கார் இந்த இளைஞர் ....

வாழ்த்துக்கள் (y)


வீட்டில் கடவுள் இருக்க தெருக்களில் தேடி என்ன பயன்...

Posted: 09 Aug 2014 03:30 AM PDT

வீட்டில் கடவுள் இருக்க தெருக்களில் தேடி என்ன பயன்...


ரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க. ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான்...

Posted: 09 Aug 2014 03:16 AM PDT

ரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க.

ஒருத்தர் சொன்னாரு, 'என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள்' னு. மறுத்த அடுத்தவர், 'வாய்ப்பே இல்ல, என் வேலைக்காரனப் பத்தி தெரியாம சொல்றீங்க' ன்னாரு.

சரி சோதிச்சு பாத்துடுவோம்னு சொல்லி, மொத ஆளு தன்னோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.
பத்து பைசாவை கொடுத்து 'கடைக்கு போய், நல்லா பாத்து இன்னோவா கார் ஒன்னு வாங்கிட்டு வா' ன்னாரு.

'சரிங்க அய்யா' ன்னு பவ்வியமா வாங்கிட்டு போயிட்டான்.
'பாத்திங்களா, என் ஆளு எப்படி, என்ன வாங்க சொன்னேன்னும் தெரியாது, பத்து பைசா செல்லுமான்னும் தெரியாது, ஆனா சொன்ன உடனே வாங்க கிளம்பிட்டான் பாருங்க' ன்னாரு.

'கொஞ்சம் பொறுங்க' ன்னு சொல்லி அடுத்தவர் அவரோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.
அவன் இன்னும் மொத ஆளவிட அதிகமான பவ்யமா வந்தான்.
'சொல்லுங்கைய்யா என்ன செய்யனும்' னான்.
'அவசரமான விஷயம், வீட்டுல போயி நான் இருக்கிறேனான்னு பாத்துட்டு வா' ன்னாரு.

'உடனே பாத்துட்டு வர்றேன்' னு அவனும் கிளம்பிட,
'பாத்திங்களா, என் ஆள' ன்னாரு. மொத ஆளு 'எப்பா உன் ஆளுதான் அருமை ' னு தோல்விய ஒத்துகிட்டாரு.

அதே நேரம், வேலைக்காரங்க ரெண்டு பேரும் வழியில சந்திச்சிட்டாங்க. ஏற்கனவே பாத்துகிட்டதனால, ஒருத்தன் சிரிச்சுகிட்டே இன்னொருத்தன் கிட்ட,
'என் மொதலாளிய மாதிரி முட்டாள் இந்த உலகத்திலேயே இல்ல' ன்னான்.

'எப்படி சொல்றே' ன்னான் அடுத்தவன்.
'பத்து பைசாவ கொடுத்து என்னமோ வாங்கிகிட்டு வர்ற சொல்றானே?, இன்னிக்கு ஞாயித்து கிழமை, கடை இருக்குமா' ன்னான்.

'அட அதாவது பரவால்ல, மறந்து போயி சொல்லியிருக்கலாம், ஆனா எங்க ஆளு போயி அவரு இருக்காரான்னு வீட்டுல போயி பாத்துட்டு வரனுமாம்.

அவருகிட்டதான் செல் போன் இருக்குல்ல, போன் பண்ணி தெரிஞ்சுக்கலாம்ல' ன்னான்.

:P :P


குசும்பு... 3

ராணுவ வீரருக்காக சமர்ப்பணம்... சென்ற மாதம் மணம் முடித்து இந்த மாதம் செல்கின்ற...

Posted: 09 Aug 2014 03:00 AM PDT

ராணுவ வீரருக்காக சமர்ப்பணம்...

சென்ற மாதம் மணம் முடித்து
இந்த மாதம் செல்கின்றேன்..

தோட்டாக்கள் பிடித்த என் கையில்
என் தோட்டத்தில் புத்தம் புது பூ நீ.,

பிரிவதர்க்கு மனமும் இல்லை,
மறப்பதற்கு வழியும் இல்லை.

கற்பு கொண்ட என்னவளின்
கண்களில் ஏனோ நீரின் தொல்லை..

வடக்கு நோக்கி செல்கின்றேன்,
வந்திடுவேன் உனை காக்க..

வருவதற்கு நட்களானால்
வருத்தம் நீயும் கொள்ளாதே..

நீ மட்டும் அழகு என்றேன்,
நின்னை மட்டும் என்னில் கொண்டேன்...
என்னை உன்னில் தந்து சென்று
நம்மில் ஒன்றாய் வந்து சேர்வேன்..

ஒரு வேளை வரும்பாதை மறந்து விட்டால்,
நம்மகனை அனுப்பிவிடு.
இறப்பதற்கு பயமும் இல்லை,
இறந்தாலும் மகன் வருவான்..

கலங்காதே கண்மணியே,
கடல் போல கண்ணீர் ஏனோ.

கம்பீரம் கொண்டனுப்பு...

தந்தைக்கும் தாய்க்கும் உன்னை
தம்மகளாய் தந்து செல்ல,
எம்மிடத்தில் நீ இருந்து
எம் பணியை செய்துவைப்பாய்...

எனக்காக சிரிக்காவிடினும்
உனக்காக சிரிக்கின்றேன்...

சிவக்க வேண்டாம் உன் கண்ணும்
தவிக்க வேண்டாம் உன் மனமும்.

பச்சைக்கொடி காட்டி அனுப்பு,
பாசத்தால் நானும் செல்வேன்.

தாய்கொடி பிடித்தேன்.
வந்தாலும்
தேசிய கொடியுடன் வர்வேன்.
மறைந்தாலும்
தேசிய கொடியுடன் வர்வேன்.

நான் மறைந்தாலும் நீ விதவை அல்ல,
"""தேசத்தின் மருமகள்""

- ஷாகுல்


0 comments:

Post a Comment