Relax Please: FB page daily Posts |
- ஜில்லுன்னு ஒரு காதல்!.. ஐஸ் கட்டியில் செய்த சிலை.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க....
- உற்பத்தி குறைவால் விண்ணைத்தொடும் அளவுக்கு கருப்பட்டி விலை உயர்ந்துள்ளது. இந்த சீ...
- (Y) Relaxplzz
- கணவன் – "இதோபாரு.... நம்ம வீட்டுல சினிமாச் செலவு ரொம்ப அதிகமாயிட்டு வருது.... இ...
- உலககோப்பை கிரிக்கெட் காய்ச்சல் :P
- இன்னுமாடா இந்த ஊரு உன்ன நம்பிட்டு இருக்கு.... :(
- அழகிய குடும்பம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- :( Relaxplzz
- இந்த மாதிரி இடத்தில் ஒரு வீடு இருந்தால் நல்லாத்தான் இருக்கும். :)
- க்கூல் டியூட்... என்னோட பதினைந்தாவது வயதில் நான் அமெரிக்காவில் குடியேற போகிறதா...
- தன்னுடைய வாத்து நண்பனை காப்பாற்ற தீப்பிடித்த வீட்டுக்குள் நுழைந்த குரங்கு.... #...
- உழைப்பே உயர்வு தரும் என்பது உண்மையாயிருந்தால்.... உலகிலுள்ள விவசாயிகள் அனைவரும்...
- என்னப்பா பஸ் ஓடும் போது அந்த ஆளு டிரைவர்கிட்ட போய் கலாட்டா பண்ணறாரு?" அது ஒன்னும...
- இது போன்ற அனுபவம் உங்களுக்கு இருந்திருந்தால் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- Rofl :P எனக்கு கராத்தே தெரியும் - H ராஜா அது கராத்தேக்கு தெரியுமா!! - Nandha
- ;-) Relaxplzz
- "மிகக் கடினமானவை மூன்றுண்டு" மிகக் கடினமானவை மூன்றுண்டு 1. இரகசியத்தை காப்பது....
- :) Relaxplzz
- வெந்நீர் அருந்துங்கள் என்றும் இளமையாக இருக்கலாம்!!! என்றென்றும் இளமையாக இருக...
- கண்களில் நீரை வர வைத்தது இந்த காட்சி. ஐந்து அறிவு உள்ள இந்த நாயிக்கு உள்ள பாசம்...
- How are You ன்னா ஈசியா எடுத்துக்கிறாங்க உடம்பு எப்பிடி இருக்குன்னா முறைக்கிறாங...
- என்ன ஒரு கண்டுபிடிப்பு ;-)
- இந்த சுட்டி குழந்தையின் முக பாவனைகள் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)
- :) Relaxplzz
- கொஞ்சம் சிரிங்க பாஸ்... :P :P கணவன்: “என்னடி சாம்பார்ல ஒரே சில்லறைக் காசா கிடக...
- :) Relaxplzz
- சமீபத்தில் இணையத்தில் நாம் கண்ட ‘பளார்’ பதிவு இது. நம்மை ரொம்பவே சிந்திக்க வைத்த...
- <3 Relaxplzz
Posted: 13 Mar 2015 10:10 AM PDT |
Posted: 13 Mar 2015 10:00 AM PDT உற்பத்தி குறைவால் விண்ணைத்தொடும் அளவுக்கு கருப்பட்டி விலை உயர்ந்துள்ளது. இந்த சீசனிலாவது கூடுதலாக பதநீர் இறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் //படித்து பகிருங்கள்// பனை மரம். தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களிலும், வேலூர், சேலம் உள்ளிட்ட வடமாவட்டங்களிலும் கருப்பட்டி தயாரிப்பு முக்கிய குடிசை தொழிலாக இருந்தது. காபி தயாரிக்க மட்டுமல்லாது, பல வகையான சத்தான இனிப்பு வகைகள் தயாரிக்கவும் கருப்பட்டி பயன்படுத்தப்பட்டது. பதநீர் தயாரிப்பு எப்படி? ஒரு வருடத்தில் 6 மாதங்களுக்கு பனை மரங்களில் இருந்து பதநீர் கிடைக்கும். அதாவது மார்ச் மாதம் முதல் பதநீர் சீசன் தொடங்கும். பனை மரங்களில் உள்ள இளம் பாளைகளை அரிவாளால் சீவினால், அதில் இருந்து சொட்டு சொட்டாக நீர் வடியும். அந்த நீரை சுண்ணாம்பு தடவிய மண் கலயத்தில் பிடிக்கும் போது அவை தித்திக்கும் பதநீராக நமக்கு கிடைக்கிறது. இந்த பதநீரை சேகரித்து, பெரிய அலுமினிய பாத்திரத்தில் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். நன்றாக கொதி வந்ததும், பனை மட்டையை கொண்டு கிளறிக்கொண்டே இருந்தால், பாகு கிடைக்கும். இந்த பாகை ஆறவைத்து குழிபோன்ற அச்சுகளில் (இட்லி தட்டில் உள்ளது போன்று) ஊற்றினால், ½ மணி நேரத்தில் அவை உறைந்துவிடும். பின்னர், அவற்றை எடுத்து வெயிலில் உலர வைத்தால், இனிக்கும் கருப்பட்டி தயார். ரூ.200–க்கு விற்பனை 750 லிட்டர் பதநீரில் இருந்து 100 கிலோ கருப்பட்டி தயாரிக்க முடியும். 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை, சர்க்கரையை (சீனி) விட கருப்பட்டியின் விலை குறைவாகத்தான் இருந்தது. கிராமத்தில் உள்ளவர்களும், கருப்பட்டி காபியைத்தான் விரும்பி குடித்து வந்தனர். ஆனால், காலப்போக்கில் பனை மரம் ஏறுவதற்கு போதிய ஆட்கள் இல்லாமல் போனது, கருப்பட்டி தொழிலையே நலிவடைய செய்தது. குறைவான அளவில் கருப்பட்டி உற்பத்தி செய்யப்பட்டதால், விலையும் அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த ஆண்டு ரூ.160–க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கருப்பட்டி இன்று ரூ.200–ஐ தாண்டிவிட்டது. மருத்துவ குணம் இயற்கையான முறையில் தயாரிக்கப்படுவதால் கருப்பட்டிக்கு அதிக மருத்துவ குணம் உண்டு. அதாவது, பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியுடன் உளுந்தம் மாவை சேர்த்து களி செய்து கொடுத்தால், இடுப்பு வலுப்பெறுவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும் என்று இயற்கை மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், சுண்ணாம்பு சத்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட கருப்பட்டியில் தயாரிக்கப்பட்ட காபியை சர்க்கரை நோயாளிகள் கூட குடிக்கலாம். அவர்களின் உடலில் சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் இருக்குமாம். போலிகள் நடமாட்டம் ஆனால், இன்று சென்னை போன்ற பெருநகரங்களில் கருப்பட்டியை தேடி அலைந்தால், எங்கேயாவது ஒரு சில கடைகளில் மட்டுமே அவை கிடைக்கிறது. அப்படியே கிடைத்தாலும் அவை சுத்தமான கருப்பட்டிதானா? என்று சோதித்து பார்க்க வேண்டியுள்ளது. அந்த அளவுக்கு தேவையை கருதி, சர்க்கரை மூலம் தயாரிக்கப்படும் போலி கருப்பட்டிகள் மார்க்கெட்டுக்கு வரத் தொடங்கிவிட்டன. தமிழ்நாட்டில் 4 கோடியே 10 லட்சம் பனை மரங்கள் இருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. இதில், 80 லட்சம் பனை மரங்கள் தான் பயன்பாட்டில் உள்ளன. அரசு நடவடிக்கை? பனை பொருட்கள் தயாரிப்பை ஊக்கப்படுத்த தமிழக அரசு சார்பில், தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியம் உள்ளது. இந்த வாரியத்தின் மூலம் பனை தொழிலாளர்களுக்கு பதநீர் இறக்க, விற்க, கருப்பட்டி தயாரிக்க உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக உள்ள கூட்டுறவு சங்கங்கள் மூலம் 2013–2014–ம் ஆண்டில் 11 கோடியே 85 லட்சம் ரூபாய் அளவுக்கு பனை பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன. என்றாலும், பனை மரங்களுக்கும், பதநீர் இறக்கும் தொழிலுக்கும் தமிழக அரசு முக்கியத்துவம் கொடுத்து, பயன்பாட்டில் இல்லாத 3 கோடியே 30 லட்சம் பனை மரங்களில் இருந்தும் பதநீர் இறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. "அரசு என்ன முக்கியத்துவம் குடுக்கணும் , நாமதான் முக்கியத்துவம் குடுக்கணும் . பனை ஏறுவது நம் குலத்தொழில்னு பெருமையா ஒரு சிலர் சொல்லிகிட்டாலும் அவங்க பனை ஏறுதாங்களான்னு பார்த்தா ,இல்லை. சும்மா நாம வாயில்தான் வடசுடுறோம். நிறையப்பேர் பனை ஏறுவதை கேவலமா நினைகாங்க. நம்ம ஆட்களே வறுமைல பலபேர் இருக்காங்க அவங்க எல்லோரும் பனை ஏற ஆரம்பிச்சா போதும் ,அவங்களும் நல்லா இருக்கலாம். மக்களும் நல்லா இருக்கலாம். பனையேறுனா உடல் வலிமை பெரும் ,பத்துபேர் வந்தாலும் பதறாம அடிக்கலாம். பனைதான் ஒரு காலத்துல நமக்கு வாழ்வாதரமா இருந்துதுன்னு யாரும் மறந்துடாதீங்க. நீங்க இல்லனாலும் முடிஞ்சவங்களுக்காவது சொல்லுங்க பனையேற சொல்லி. Relaxplzz ![]() |
Posted: 13 Mar 2015 09:55 AM PDT |
Posted: 13 Mar 2015 09:50 AM PDT கணவன் – "இதோபாரு.... நம்ம வீட்டுல சினிமாச் செலவு ரொம்ப அதிகமாயிட்டு வருது.... இதைப் பாதியா குறைக்கணும். சரியா"?.. மனைவி – "சரிங்க.... இனிமே நான் மட்டும் சினிமாவுக்குப் போறேன்"..!! |
Posted: 13 Mar 2015 09:45 AM PDT |
Posted: 13 Mar 2015 09:40 AM PDT |
Posted: 13 Mar 2015 09:35 AM PDT |
Posted: 13 Mar 2015 09:30 AM PDT |
Posted: 13 Mar 2015 09:22 AM PDT |
Posted: 13 Mar 2015 09:17 AM PDT |
Posted: 13 Mar 2015 09:10 AM PDT க்கூல் டியூட்... என்னோட பதினைந்தாவது வயதில் நான் அமெரிக்காவில் குடியேற போகிறதா சொன்னேன் எல்லோரும் சிரிச்சாங்க … ஆனா நான் அமெரிக்கால குடியேறினேன்.! . என்னோட 18 வது வயதுல நான் உலக ஆணழகன் ஆகப்போறதாக சொன்னேன். எல்லோரும் சிரிச்சாங்க … நான் பலமுறை அந்த டைட்டிலை வென்றேன்.! . அதன்பிறகு நான் சினிமாவில் பெரிய ஹீரோவா ஆகப்போறேனு சொன்னேன் எல்லாரும் சிரிச்சாங்க … நான் ஹாலிவுட்ல ஹீரோவாக ஆனேன்.! . சினிமால பெரிய வீழ்ச்சி வந்தபோது இவன் இனி அவ்வளவுதான் அப்படினு சொல்லி சிரிச்சாங்க … நான் மீண்டும் மீண்டு வந்தேன்.! . என்னோட 50 வயசுல நான் கலிபோர்னியா கவர்னர் ஆகப்போறதா சொன்னேன் எல்லோரும் என்னைப் பார்த்து சிரிச்சாங்க … நான் கவர்னர் ஆனேன்.! . இப்ப என்னைப் பார்த்து சிரிச்சவங்களை நான் திரும்பி பார்த்து சிரிக்கிறேன் … அவர்கள் எல்லாம் அதே இடத்துல தான் இருக்காங்க… . தன்னம்பிக்கையாலும், என்னோட கடின உழைப்பாலும், நான் நினைச்சதெல்லாம் சாதிக்க முடிந்தது.! . எதையுமே சாதிக்கனும்னு நினைக்கிறவங்க சுத்தி இருக்கிறவங்க கேலியை பொருட்படுத்த கூடாது.! அது அவர்களின் வியாதி! . நம்மை பற்றியும், தன்னபிக்கையின் ஆற்றலை பற்றியும் அவர்களுக்கு எதுவும் தெரியாது.! . by Arnold_Schwarzenegger Relaxplzz |
Posted: 13 Mar 2015 09:00 AM PDT தன்னுடைய வாத்து நண்பனை காப்பாற்ற தீப்பிடித்த வீட்டுக்குள் நுழைந்த குரங்கு.... #குரங்கும் வாத்துடன் சேர்ந்து உயிரைவிட்ட பரிதாபம் ... தாய்லாந்தில் நடந்த உருக்கமான சம்பவம் ... #தாய்லாந்து நாட்டில் வசித்து வரும் 44 வயதான சோம்சக் என்பவரின் வீட்டில் வளர்ந்து வந்த "சம்லி" என்ற வாத்தும் ,"மைகேல்" என்ற குரங்கும் நீண்ட நாள் நண்பர்கள்,நேற்றைக்கு சோம்சக் வீட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது ,குரங்கு எப்பொழுதும் அவர்கள் வீட்டின் தென்னைமரத்தில் இருக்கும் வாத்து அவர்கள் வீட்டினுள் இருக்கும், இந்த திடீர் தீயை பார்த்த குரங்கு மளமளவென்று கீழே இறங்கி தன் நண்பனை காப்பாற்ற உள்ளே சென்று தீயில் மாட்டி வாத்து,குரங்கு இரண்டும் இறந்துவிட்டது ... #இறந்து போன வாத்தையும் குரங்கையும் அதனுடைய விளையாட்டு இடமான தென்னைமரத்துக்கு கீழ் புதைத்துள்ளார் ... #சில விசயங்கள் மனசை பாதிக்கும் ... அதே போல சம்பவம் தான் இது ,,,, Relaxplzz ![]() |
Posted: 13 Mar 2015 08:50 AM PDT |
Posted: 13 Mar 2015 08:45 AM PDT என்னப்பா பஸ் ஓடும் போது அந்த ஆளு டிரைவர்கிட்ட போய் கலாட்டா பண்ணறாரு?" அது ஒன்னுமில்லீங்க ஹோட்டல்ல சாப்டுட்டு காசு இல்லைனா அந்த ஆளு மாவாட்டி கொடுத்துட்டு வந்துருவாராம்... இப்ப டிக்கட் எடுக்கலையாம் காசு ...இல்லையாம்...! கொஞ்ச நேரம் பஸ்ஸை ஓட்டிக்கறன்னு டிரைவர்கிட்ட தகறாரு பண்ணறாரு...! ..........அதான :P :P Relaxplzz |
Posted: 13 Mar 2015 08:40 AM PDT |
Posted: 13 Mar 2015 08:30 AM PDT |
Posted: 13 Mar 2015 08:25 AM PDT |
Posted: 13 Mar 2015 08:20 AM PDT |
Posted: 13 Mar 2015 08:10 AM PDT "மிகக் கடினமானவை மூன்றுண்டு" மிகக் கடினமானவை மூன்றுண்டு 1. இரகசியத்தை காப்பது. 2. இழைக்கப்பட்ட தீங்கை மறப்பது. 3. ஓய்வு நேரத்தை உயர்ந்த வழியில் பயன்படுத்துவது. நன்றி காட்டுவது மூன்று வகையிலாகும் 1. இதயத்தால் உணர்தல். 2. சொற்களால் தெரிவித்தல். 3. பதிலுக்கு உதவி செய்தல். பெண்மையை காக்க மூன்றுண்டு 1. அடக்கம். 2. உண்மை. 3. கற்பு. மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரியவை மூன்றுண்டு 1. சென்றதை மறப்பது. 2. நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது. 3. வருங்காலத்தைப் பற்றிச் சிந்திப்பது. இழப்பு மூன்று வகையிலுண்டு 1. சமையல் அமையாவிட்டால் ஒருநாள் இழப்பு. 2. அறுவடை சிறக்காவிடில் ஓராண்டு இழப்பு. 3. திருமணம் பொருந்தாவிட்டால் வாழ்நாள் முழுவதும் இழப்பு. உயர்ந்த மனிதனின் வாழ்வு மூன்று வகையில் இருக்கும் 1. அவன் ஒழுக்கத்தோடிருப்பதால் கவலையற்றிருப்பான். 2. அவன் அறிவாளியாயிருப்பதால் குழப்பங்களற்றிருப்பான். 3. அவன் துணிவாக இருப்பதால் அச்சமின்றியிருப்பான் Relaxplzz |
Posted: 13 Mar 2015 08:04 AM PDT |
Posted: 13 Mar 2015 07:58 AM PDT வெந்நீர் அருந்துங்கள் என்றும் இளமையாக இருக்கலாம்!!! என்றென்றும் இளமையாக இருக்க தண்ணீரை அதிகளவில் உட்கொள்வது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என பெரியவர்கள் முதல் மருத்துவர்கள் வரை சொல்லக்கேட்டிருப்போம். ஆனால் மிதமான நீரை பருகுவதை விட வெந்நீரை குடிப்பதால் அதிகளவில் நன்மைகள் உண்டு என்பது நம்மில் பலருக்கும் தெரியுமா என்பதே சந்தேகம் தான். தினமும் வெந்நீரை காலையில் அருந்துவது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது என கூறுகின்றனர். உடலை சுத்தம் செய்யும் இந்த வெந்நீர் வேகமாக வயதாவதையும் குறைத்து இளமையை தக்க வைத்து கொள்ள உதவும். கடும் குளிர்காலத்தில் ஏற்படும் மூக்கடைப்பு தொண்டைகட்டிற்கு வெந்நீரை குடிப்பது நலம் தரும். வெந்நீருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து கொண்டால் இன்னும் சிறந்தது. டீன் ஏஜ் பெண்கள் மற்றும் ஆண்களை தொல்லை செய்யும் முகப்பருக்களும் வெந்நீர் பருகுவதால் சுத்தமாக அகன்றுவிடும். அடிக்கடி வெந்நீர் குடிப்பதால் முடிகள் நன்றாக வளர்வதுடன் முடிகளின் வேர்களும் சுறுசுறுப்பாகி நல்ல வளர்ச்சி அடையும். வெந்நீரால் இரத்த ஓட்டம் சீராவது மட்டுமின்றி நரம்பு மண்டலத்தின் ஒரத்தில் உள்ள கொழுப்புகளும் குறைந்துவிடும். மாதவிடாய் ஏற்படும் நாட்களில் பெண்கள் பெரிதும் அவதிபடுவார்கள். அந்த சமயத்தில் சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால் மாதவிடாயினால் ஏற்படும் வலி வெகுவாகக் குறையும். உடற்பயிற்சி மையத்திற்கு சென்று போராடாமல் எளிதில் உடல் எடையை குறைக்க சிறந்த வழி வெந்நீர் குடிப்பது தான். மதியநேர சாப்பாட்டிற்கு பின் சிறிது வெந்நீர் பருகினால் இதயத்தில் சேரக்கூடிய தேவையற்ற கொழுப்புக்களை அகற்றிவிடும் ஆற்றல் கொண்டது. காலை வேளையில் மலம் எளிதில் வரவில்லையா ஒரு தம்ளர் வெந்நீர் குடித்தால் எல்லாம் சரியாகிவிடும்... Relaxplzz ![]() "நலமுடன் வாழ" - 3 |
Posted: 13 Mar 2015 07:50 AM PDT |
Posted: 13 Mar 2015 07:45 AM PDT How are You ன்னா ஈசியா எடுத்துக்கிறாங்க உடம்பு எப்பிடி இருக்குன்னா முறைக்கிறாங்க!! :O :O - இளந்தென்றல் |
Posted: 13 Mar 2015 07:44 AM PDT |
Posted: 13 Mar 2015 07:40 AM PDT |
Posted: 13 Mar 2015 07:31 AM PDT |
Posted: 13 Mar 2015 07:21 AM PDT கொஞ்சம் சிரிங்க பாஸ்... :P :P கணவன்: "என்னடி சாம்பார்ல ஒரே சில்லறைக் காசா கிடக்குது?" மனைவி: "நீங்கதானே சாம்பார்ல கொஞ்சம் சேஞ்ச் வேணும்னு சொன்னீங்க!" +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ திருடன் 1: "ஒரு வீட்டுல திருடும்போது தூங்கிட்டு இருந்தவர் காலை தெரியாமல் மிதிச்சிட்டேன்" திருடன் 2: "திருடன்-னு அலறியிருப்பாரே?" திருடன் 1: " 'கால் வலிக்கு இதமா இருக்கு; ஒரு அரை மணி நேரம் மிதிச்சிட்டு அப்புறம் திருடு'ன்னு சொல்லிட்டார்" +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ஒருவர் : "உங்க மனைவி எடுத்தெறிஞ்சி பேசுவாங்கன்னு சொல்றீங்களே… அந்த சமயத்தில நீங்க என்ன பண்ணுவீங்க?" மற்றவர்: "எரிகிற பாத்திரங்களை கேட்ச பிடித்து அவளை வெறுப்பேத்துவேன்." +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ உங்க வீட்டு முகவரியைக் கண்டுபிடிக்கிறதுக்குள்ளே நாயா அலைஞ்சுட்டேன். சரி உள்ளே வாங்க, என்ன சாப்பிடறீங்க, பொறையா, பிஸ்கட்டா ? ---------------------------------------------------------- பள்ளிக்கூட திறப்பு விழாவுக்கு நம்ம தலைவரைக் கூப்பிட்டது ரொம்பத் தப்பா போச்சு. எதனால? வகுப்பு அறைகளைப் பார்த்துட்டு, இதென்ன ரூம், ரூமா கட்டியிருக்கு, லாட்ஜா? -னு கேட்கிறார். ------------------------------------------------------------- உங்க பையன் ரொம்ப அதிகப்பிரசங்கித்தனமாக பேசுறான்… அப்படி என்ன பேசினான்: வெங்காயத்தை உரிச்சா கண்ணில தண்ணீர் வரும்ன்னு சொன்னிங்க, பெருங்காயத்தை உரிச்சா என்ன வரும்னு கேட்கிறான்? --------------------------------------------------------- நிதி வசூலிப்பவர்:" flood donation" நிதி கேட்டா ஒரு பாட்டில் தண்ணீர் தர்றீங்களே… என்னை என்ன கேனப் பயன்னு நினைச்சிங்களா…. "blood donation" என்று வந்திங்க ஒரு பாட்டில் ரத்தம் கேட்டிங்க கொடுத்தேன், இப்போ "flood donation" கேட்கிறீங்க அதான் சரியா ஒரு பாட்டில் தண்ணீர் கொடுத்தேன்! :O :O Relaxplzz ![]() நகைச்சுவை துணுக்ஸ் |
Posted: 13 Mar 2015 07:10 AM PDT |
Posted: 13 Mar 2015 07:01 AM PDT சமீபத்தில் இணையத்தில் நாம் கண்ட 'பளார்' பதிவு இது. நம்மை ரொம்பவே சிந்திக்க வைத்தது. பதிவை எழுதியவரை தொடர்புகொண்டு உரிய அனுமதி பெற்று நமது தளத்தில் அளித்திருக்கிறோம். படியுங்கள்… நமது கருத்துக்களை இறுதியில் தந்திருக்கிறோம். ரயிலில் கிடைத்த பாடம்! கன்னியாகுமரியில் இருந்து மும்பை செல்லும் அதி விரைவு புகை வண்டி, சராசரி மக்களுக்கு கூட்ட நெரிசல் நரகத்தையும், நடுத்தர வர்க்கத்திற்கு பாலைவன வெப்பத்தையும் , மேல்தட்ட மக்களுக்கு மெல்லிய குளிருடன் சின்னதொரு மிதப்பையும் கொடுத்து கொண்டு சென்று கொண்டிருந்தது. இரண்டாவது வகுப்பு குளிரூட்டப்பட்ட போகியில் அமர்ந்து கொண்டு, கைக்கணிணியில் வரவு செலவு கணக்கை பார்த்து கொண்டிருந்தேன். மாதம் ஒரு முறை மும்பை பயணம் வாடிக்கையாகி போனது எனக்கு, தென் மாவட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கும் , பட்டாசு தயாரிப்பாளர்களுக்கும் , குஜராத்தில் உள்ள சில மெட்டலர்ஜி நிறுவனங்களுக்கும் சிவப்பு பாஸ்பரஸ் விற்பனையை கவனித்துக்கொள்ளும் உத்தியோகம். நல்ல சம்பளம், அதை விட ராஜ மரியாதை, கேட்ட உதவிகள் கேட்பதற்கு முன் வழங்கும் நிறுவனம் , பார்த்தவுடன் அடையாளம் தெரிந்து கொள்ளுமளவிற்கு பெயர் சம்பாதித்துக்கொண்ட, லாபத்தில் கொழிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் அடையாள அட்டை என ஒரு பெருமிதத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தேன். வழக்கமாக இதே ரயிலில் வருவதால் வேலை செய்யும் பேன்ட்ரி ஆர்டர்லிகளுடன் ஒரு சிநேகிதம் இருக்கத்தான் செய்தது .தேவையான இடத்தில் தேவையானவற்றை அவர்கள் தருவதும், புகை பிடிக்க பேன்ட்ரி கார் செல்வதும் எனக்கு பழக்கமாகிபோனது அப்படி புகைப்பிடிக்க சென்ற போதுதான் அவரை பார்த்தேன். ஆனந்தம் நல்லெண்ணெய் விளம்பரம் போட்ட கை வைக்காத பனியன் ,கிருதா வழியாக வழியும் எண்ணை, கால்சட்டை தெரியுமளவிற்கு தூக்கிகட்டிய லுங்கி , சரியாக சவரம் செய்யாத உலர்ந்த கன்னம், நட்புடன் பார்க்கும் விழிகள். இவரை எங்கேயோ பார்த்திருக்கோமே என்று தோணியது , வேறு எங்கே , மளிகைக்கடையில் மடித்து கொடுக்கும் மக்கள் இதே போல் தானே இருக்கிறார்கள் . சரி , இவருக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி அருகே என்ன வேலை , இந்த கோலத்தில் இருக்கும் இந்த ஆள் கண்டிப்பாக ஏ சி டிக்கெட் வாங்க வாய்ப்பே இல்லை , ஆனால் நெடு நேரமாக இங்கு தான் இருக்கிறார் என்ற போது ஒரு சிறிய சந்தேகம் எட்டி பார்த்தது . இருந்தாலும் வெளியே வேடிக்கை பார்ப்பது போல் கதவருகே நின்றுகொண்டே சிகரெட் ஒன்றை பற்ற வைத்தேன் , இன்னும் அந்த ஓட்ட வைத்த புன்னகை அவரிடமிருந்தது . ரயில் ஈரோடு ரயில் நிலையத்தை நெருங்கியபோது அவரிடம் ஒரு சின்ன பதட்டத்தை காண முடிந்தது , அப்போதுதான் கவனித்தேன் அவர் அருகில் இருக்கும் ஒரு சாக்கு மூட்டையை , எனக்கு இப்போது தெளிவாக புரிந்தது , குப்பை பொறுக்கும் ஆள் தான் அவர் . உடன் ஒரு சின்ன கோபமும் வந்தது , இப்படி இவர்களை ஏ சி பெட்டிகளில் அனுமதித்தால் , ஏதேனும் களவு போய் விட வாய்ப்புகள் அதிகமாயிற்றே , வரட்டும் அந்த டி டி ஆர் என்ற நினைத்துக்கொண்டே மீண்டும் அவரை நோட்டமிட ஆரம்பித்தேன் . இது எனக்கு தேவையில்லாத வேலை தான் என்றாலும், அவர் முகத்தில் தெரிந்த அந்த அம்மாஞ்சி களையும், கண்களில் இருந்த சிநேக பார்வையும் எண்ணை அவரிடம் பேச சொல்லி தூண்டியது. "என்னங்க ! ஈரோட்டுல இறங்குறீங்களா?" "இல்ல சார், நான் பாம்பே வரைக்கும் வர்றேன், இங்க இறங்கி சில்ர வேலைகளே முடிச்சிறனும்!" "ஒ ,அப்ப பாம்பே வர்றீங்களா !" "ஆமா சார் ! நீங்க பம்பாய் தான் போறீகளா !" பாமரத்தனமாக கேட்டார் "ஆமாங்க !" என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போது ரயில், நிலையத்தை அடைந்தது உடன் அவர் இறங்கி கொண்டார் , சாக்கு மூட்டையை தோளில் போட்டுகொண்டு ஒரு கையால் இன்னொரு முனையை பிடித்துக்கொண்டார் . அது அவர் தோளில் தொய்வாகவும் குப்பைகளை போடுவதற்கு ஏதுவாக திறந்த நிலையிலும் இருந்தது. சட சட வென பொறுக்க ஆரம்பித்தார்., ரயில் நின்ற பத்து நிமிடங்களில் அவர் ஓட்டமும் நடையுமாக மொத்த பிளாட்பாரத்தையும் அலசிவிட்டு மறுபடியும் நான் இருந்த பெட்டிக்கே வந்து நின்றுகொண்டார். வண்டி கிளம்பியது. இம்முறை நான் கேட்டுவிடுவது என்று தீர்மானித்து கொண்டேன் . இம்மாதிரி கேள்விகளை ஆரம்பிப்பதில் கொஞ்சம் சிரமம் இருக்கத்தான் செய்கிறது "நீங்க ஏன் ஏ.சி.ல ஏறுறீங்க, ஜெனரல் கம்பார்ட்மெண்டுல வரலாமில்ல " "இல்ல சார் , அங்க இருந்த நமக்கு தேவையான ஐட்டம் கிடைக்காது, அதனால தான் இங்க இருக்கேன். ஆனா டிக்கெட் வச்சிருக்கேன். எனக்கு சீட் சிலிப்பர் கிளாஸ்ல இருக்கு" என்று கொஞ்சம் படபடப்புடன் பேசினார் "சாரு பாங்க்ல வேல செய்திகளோ " கேள்வி கேட்டார் சற்று எதிர்பார்ப்புடன், "இல்ல ,ஏன் கேக்குறீங்க " என்றேன் "ஒரு சின்ன விஷயம் கேக்கணும், இந்த டாக்ஸ் எப்பிடி கட்டுறதுன்னு கேக்கலாம்னு தான் கேட்டேன் " சிரிப்பு வந்தது எனக்கு. "டாக்ஸ் கட்டுறதுக்கு ஆடிட்டர பாக்கணும் , பேங்க்ல வேலை செய்றவங்களுக்கும் டாக்ஸ்க்கும் சம்பந்தமில்ல" என்ன ஒரு அப்பாவியாக இருக்கிறார் , இது தான் இந்திய மக்களின் நிலைமை என்ற அளவிற்கு என் சிந்தனை சென்று கொண்டிருந்த போது தான் என் ஆறாம் அறிவு டக் என விழித்து அந்த சந்தேகத்தை இடி போல் இறக்கியது "குப்பை பொறுக்கும் ஒருவன் எதற்காக டாக்ஸ் கட்டவேண்டும் என்கிறான்" என்ற எண்ணம் தான் முன்னதாக நான் ஏய்த ஏளனத்தில் கொஞ்சம் வருத்தமாகி அவர் நகர்ந்து கொண்டிருந்த வேளையில் நான் அழைத்தேன். "அண்ணே, ஒரு நிமிஷம்" என் வாய் தானா அவரை அண்ணா என்றது. எல்லாம் காசு பண்ணும் இல்லை இல்லை டாக்ஸ் பண்ணும் வேலை . திரும்ப அருகில் வந்தவரிடம் "யாருக்கு டாக்ஸ் கட்டனும்" என்றேன் "எனக்குதான் சார் , அதில்லாம நான் பேங்க் பத்தி கேட்டது டாக்ஸ் கொறைக்க என்ன முதலீடு செய்யலாம்னு கேக்கதான் சார் " என்று சொல்லும்போதே என் தலை சுற்ற ஆரம்பித்தது , ரயில் இரைச்சலின் நடுவேயும் என் உள் மணம் என்னை அசிங்கமாக திட்டியது தெளிவாக கேட்டது .இந்த நேரத்தில் நான் என்ன பேசினாலும் உளறுவது போலத்தான் இருக்கும் ,எனவே சற்று நேரம் மௌனம் சாதித்தேன் "அண்ணே , டாக்ஸ் கட்டுற அளவுக்கு என்ன தொழில் பண்றீங்க " அவர் செய்யும் வேலையை இப்போதுதான் பார்த்தேன் , என்றாலும் குப்பை பொறுக்குற நீங்க ஏன் டாக்ஸ் கட்டுறீங்க என்று கேட்பது என் உள் மன பொறாமையையும் வஞ்சத்தையும் காட்டிவிடும் என்று அப்படி ஒரு கேள்வியை கேட்டேன் . அண்ணன், ஒரு முதலாளி, அவரிடம் மொத்தம் ஏழு தொழிலாளிகள் உண்டு, அவர்களுக்கு இவர் டிக்கெட் எடுத்து, சாப்பிட பணம் கொடுத்து விடுவார், வேலை என்னவென்றால் கன்னியா குமரியில் இருந்து ரயிலில் ஏறி , முதல் வகுப்பு பெட்டியருகே நின்று கொள்ள வேண்டும் , வண்டி எந்த சிக்னலுக்காக நின்றாலும் இறங்கி அலுமினியம் பாயில் தாளை மட்டும் பொறுக்க வேண்டும் , முதல் வகுப்பில் தான் குப்பை போடுவதற்கு வசதியாக குப்பைதொட்டி உள்ளது, ஆனால் மற்ற வகுப்பு பயணிகள் சாப்பிட்டு விட்டு எறிந்து விடுவார்கள் , எனவே தான் முதல் வகுப்பு முன் நின்றே பயணம் செய்கிறார்கள் . இவர்களின் இலக்கு ஒரு ரயில் போய் வருவதற்குள் நூறு கிலோ அலுமினியம் பாயில் திரட்டுவது ,அதாவது நான்கு நாட்கள் (போக, வர) பயணத்தில் ஒரு வேலை ஆள் மூலம் கிடைக்கும் லாபம் ரூபாய் நாலாயிரம், எட்டு பேரின் சம்பாத்தியம் முப்பத்தி ரெண்டாயிரம், மாத சம்பாத்தியம் ரூபாய் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் ,செலவு நாப்பதாயிரம் , வருமானம் இரண்டு லட்சம் , வருட வருமானம் இருபத்திநாலு லட்சம் .இது கன்யாகுமரி – பம்பாய் வழித்தடத்தில் மட்டும் , இன்னும் இது போல் மூன்று வழித்தடங்கள் உள்ளன . மலைத்து நின்றேன். கார்பொரேட் நிறுவனத்தில் அஞ்சுக்கும் பத்துக்கும் கை கட்டி அடிமை போல் வேலை செய்யும் நான் ஏ சி பெட்டியில் சென்று கொண்டு எகத்தாளமிட்டு கொண்டிருக்கிறேன். ஆனால் சின்ன ஒரு விஷயத்தை தெளிவாக யோசித்து , கௌரவம் பார்க்காமல், கர்வமில்லாமல் உழைத்து என்னை விட பல மடங்கு லாபம் பார்ப்பவர் பெட்டிக்கு வெளியே பாத்ரூம் அருகே சம்மணமிட்டு உட்கார்ந்து வருகிறார். அன்று நான் இருந்த ஏ சி பெட்டி கொதிக்கும் நெருப்பை கொட்டுவது போல் இருந்தது. எந்த தொழில் செய்கிறோம் என்பது அல்ல விஷயம், அதை எவ்வளவு அக்கறையுடன் செய்கிறோம் என்பது தான் முக்கியம் என்பதற்கு இவர் ஒரு உதாரணம். "சார் ! எனக்கு தெரிஞ்ச நண்பரோட போன் நம்பர் இது ,இவரு முதலீடு செய்றத பத்தி உங்களுக்கு உதவி செய்வாரு சார் " என்று கூறி விடைபெற்றேன். இம்முறை என்னையும் அறியாமல் அவரை சார் என்று அழைத்தேன். ==================================================================== பதிவை படித்ததும் அதை உடனடியாக நமது வாசகர்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்பினோம். பதிவாசிரியர் திரு.பார்த்தசாரதிக்கு மின்னஞ்சல் செய்தோம். இரண்டு நாட்களில் நம்மை அலைபேசியில் தொடர்பு கொண்டார். முதலில் அவருக்கு நமது பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டோம். பின்னர் மேற்படி பதிவை நமது தளத்தில் வெளியிட அனுமதி கேட்டோம். மகிழ்ச்சியுடன் இசைந்தார். மேற்படி பதிவும் அதில் வரும் சம்பவமும் உண்மையா அல்லது கற்பனையா என்கிற நமது சந்தேகத்தை கேட்டோம். உண்மையாக தனக்கு நிகழ்ந்த அனுபவம் தான் என்று தெரிவித்தார். அவரது எழுத்துக்கள் நன்றாக இருப்பதாகவும் தொடர்ந்து எழுதவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு, நன்றி கூறி விடைபெற்றோம். மேற்படி பதிவு உணர்த்தும் நீதியை பற்றி குறிப்பிடவேண்டுமானால்… ஒன்று : உருவு கண்டு எள்ளாமை வேண்டும். இரண்டு : திருடுவது, பொய் சொல்வது இரண்டும் இல்லாத எந்த தொழிலும் இந்த உலகில் கேவலமில்லை. ஒரு தொழிலில் இந்த இரண்டில் ஒன்று இருந்தால் கூட அதை விட கேவலமான தொழில் இந்த உலகில் இல்லை. மூன்று : எந்த தொழில் செய்கிறோம் என்பது முக்கியமல்ல. அதை எவ்வளவு அக்கறையுடன் செய்கிறோம் என்பதே முக்கியம். வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் ஆழக் கடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்திவா பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் பார்த்து நடந்தால் பயணம் தொடரும் பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் கதவு திறந்தால் காட்சி கிடைக்கும் காட்சி கிடைத்தால் கவலை தீரும் கவலை தீர்ந்தால் வாழலாம்! .நன்றி பார்த்தசாரதி, Relaxplzz ![]() நெகிழ வைத்த நிஜங்கள் - 2 |
Posted: 13 Mar 2015 06:56 AM PDT |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment