Wednesday, 11 March 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


மனித உறவுகள் மேம்பட.....!!! 1. தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங...

Posted: 11 Mar 2015 09:02 AM PDT

மனித உறவுகள் மேம்பட.....!!!

1. தானே பெரியவன்,தானே சிறந்தவன்
என்ற அகந்தையை விடுங்கள்.

2. அர்த்தமில்லாமிலும்,தேவையில்லாமிலும் பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.

3. எந்த விடயத்தையும் பிரச்சனையும் நாசூக்காகக் கையாளுங்கள்.

4. விட்டுகொடுங்கள்.

5. சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துதான் ஆகவேண்டும் என்று உணருங்கள்.

6. நீங்கள் சொன்னதே சரி செய்வதே சரி என்று கடைசிவரை வாதாடதீர்கள்.

7. குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.

8. உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.

9. மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வபடாதீர்கள்.

10. அளவுக்கு அதிகமாய்,தேவைக்கு அதிகமாய் ஆசைப்படாதீர்கள்.

11. எல்லோரிடத்திலும் எல்லா விடயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

12. கேள்விப்படுகிற எல்லா விடயங்களையும் நம்பிவிடாதீர்கள்.

13. அற்ப விஷயங்களையும் பெரிதுபடுத்தாதீர்கள்.

14. உங்கள் கருத்துகளில் உடும்புப்பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.

15. மற்றவர் கருத்துக்களை, செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.

16. மற்றவர்களுக்கு உரிய மரியாதையைக் காட்டவும், இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் தவறாதீர்கள்.

17. புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரமில்லாதது போல நடந்து கொள்ளாதீர்கள்.

18. பேச்சிலும், நடத்தையிலும் திமிர்த்தனத்தையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும், பண்பாட்டையும் காட்டுங்கள்.

19. பிணக்கு ஏற்படும்போது, அடுத்தவர் முதலில் இறங்கி
வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவக்க முன் வாருங்கள்.

20. தேவையான இடங்களில் நன்றியையும், பாராட்டையும் சொல்ல மறக்காதீர்கள். பாராட்டுக்கு மயங்காத மனிதனே இல்லை. அதுவே உங்களுக்கு வெற்றியாக அமையும்...

@relaxplz


வாழ்வியல்

இந்த பெண் B.E படிக்கும் மாணவி ஆனால் வறுமையின் கரணமாக படித்துக்கொண்டே ஆட்டோ ஓட்ட...

Posted: 11 Mar 2015 08:50 AM PDT

இந்த பெண் B.E படிக்கும் மாணவி
ஆனால் வறுமையின் கரணமாக
படித்துக்கொண்டே ஆட்டோ ஓட்டுகிறார் ....

முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை

வாழ்த்துக்கள் சாகோதரி. (Y) (y)


ஊரே பத்தி எரிஞ்சாலும் அது கிடக்குது நீங்க வாங்க விளையாடலாம்னு கூப்பிடற கேன்டிகிர...

Posted: 11 Mar 2015 08:45 AM PDT

ஊரே பத்தி எரிஞ்சாலும் அது கிடக்குது நீங்க வாங்க விளையாடலாம்னு கூப்பிடற கேன்டிகிரஷ்ஷர்களின் ஜென் நிலையை வியக்கேன்.

- Shan Karuppusamy

சிறு வயதில் இதை வாங்கி தர அடம் பிடித்த அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 11 Mar 2015 08:40 AM PDT

சிறு வயதில் இதை வாங்கி தர அடம் பிடித்த அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 11 Mar 2015 08:30 AM PDT

உண்மை :)

Posted: 11 Mar 2015 08:20 AM PDT

உண்மை :)


#ஷப்பா_முடியல... :O :O #என்னதான் நெருப்புக் கோழியா இருந்தாலும்.... அதனால் அவிச்...

Posted: 11 Mar 2015 08:10 AM PDT

#ஷப்பா_முடியல... :O :O

#என்னதான் நெருப்புக் கோழியா இருந்தாலும்.... அதனால் அவிச்ச முட்டை போட முடியாது.

#என்னதான் நீ மாடா உழைச்சாலும் உனக்கு கொம்பு முளைக்காது.

#என்னதான் இட்லி மல்லிகைப்பூ மாதிரி இருந்தாலும் அதை தலையில் வச்சிக்க முடியாது...

#ஒரு பெண் எவ்வளவு சிவப்பாக இருந்தாலும், அவங்க நிழல் கருப்பாகத்தான் இருக்கும்.

#பிளேன் என்னதான் உயர உயர பறந்தாலும்.... பெட்ரோல் போட கீழே வந்துதான் ஆகணும்.....

#என்னதான் அரசியல்வாதிங்க கட்சி தாவினாலும்.... அவங்களுக்கு வால் முளைக்காது....

#என்னதான் ஒருத்தருக்குத் தலைகனம் இருந்தாலும்.... அது எத்தனை கிலோனு எடைபோட்டு பார்க்க முடியாது...
.
#கோழிக்கு கோடி கணக்குல தீனி வாங்கி போட்டாலும் அது முட்டைதான் போடும்... நூத்துக்கு நூறு எல்லாம் போடாது...

#அதிக மார்க் வாங்கி மாநிலத்திலேயே முதல் மாணவனா வந்தாலும், ஆம்லெட் சாப்பிடணும்னு ஆசைப்பட்டால் முட்டை வாங்கித்தான் ஆகணும்....

#பொங்கலுக்கு மட்டும் தான் அரசு விடுமுறை. ஆனால் இட்லி தோசைக்கு எல்லாம் விடுமுறை விடுவதில்லையே ஏன்....?

#குச்சி மிட்டாய்ல குச்சி இருக்கும். பல்லி மிட்டாய்ல பல்லி இருக்காதுப்பா....

#வாழ்க்கைக்கும் வழுக்கைக்கும் ஒரு வித்தியாசம்.... ஒன்னுமே இல்லாத வாழ்க்கை போர் அடிக்கும்.... ஒன்னுமே இல்லாத வழுக்கை கிளார் அடிக்கும்.

#சும்மா இருக்கிறவன், சும்மா இல்லாம, சும்மா இருக்கிறவங்கள, சும்மா சும்மா கிண்டல் பண்ணா.... சும்மா இருக்கிறவங்க, சும்மா சும்மா கிண்டல் பண்றவன, சும்மா விடமாட்டாங்கன்னு சும்மா சொல்றேன்.....

:O :O

Relaxplzz

ஒருவன் தனது மனைவியிடம் சொல்லும் வார்த்தைகளை அப்படியே எடுத்துக் கொள்ள முடியாது. அ...

Posted: 11 Mar 2015 08:03 AM PDT

ஒருவன் தனது மனைவியிடம் சொல்லும் வார்த்தைகளை அப்படியே எடுத்துக் கொள்ள முடியாது. அதற்கு ஒரு உள்ளர்த்தம் நிச்சயமாக இருக்கும். சில உதாரணங்களைப் பார்க்கலாமா?

* உனக்காக என் உயிரைக் கொடுப்பேன் கண்ணே!
(எப்படியும் அதை நீ எடுக்கத்தானே போகிறாய்)

* இந்தப் புடைவை உனக்கு ரொம்ப அழகாயிருக்கு, ஹி!ஹி!
(கவனி… புடைவைதான் அழகாயிருக்கு.)

* கொஞ்ச நாள் பிறந்த வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடு, டியர்!
(கொஞ்ச நாள் நான் ரெஸ்ட் எடுக்கிறேன்)

* நமக்குக் கல்யாணம் ஆகி 25 வருஷமாகியும் அன்னிக்கு இருந்த மாதிரியே இன்னிக்கும் இருக்கே.
(எந்த விஷயத்திலேயும் முன்னேற்றமே இல்லை!)

* உன்னைப் பார்த்தா 45 வயசுன்னு யாருமே நம்ப மாட்டாங்க.
( 60 வயசு இருக்கம்னு அடிச்சு சொல்லுவாங்க)

* நீ ஒரு பத்து நாள் ஊருக்கப் போறதா சொல்றியே. பிற்பாடு எனக்குச் சாப்பாடு விஷயத்துல பெரிய பிரச்னையாயிடுமே!)

(நல்ல சாப்பாடு சாப்பிட்டுப் பழகியாச்சுன்னா மறுபடி உன் சாப்பாடு சாப்பிட முடியாதே!)

* உன்னால எப்படி ஓய்வு ஒழிச்சல் இல்லாம வேலை செய்ய முடியுது?
( உன்னால எப்படி என்னை ஓய்வு ஒழிச்சல் இல்லாம கண்காணிக்க முடியுது?)

Relaxplzz


குசும்பு... 2

:P Relaxplzz

Posted: 11 Mar 2015 07:56 AM PDT

திருவண்ணாமலை உச்சியில் இருந்து கோபுர தரிசனம் ...

Posted: 11 Mar 2015 07:50 AM PDT

திருவண்ணாமலை உச்சியில் இருந்து கோபுர தரிசனம் ...


"அழகு தமிழ்நாடு"

ஒரு கிலோ கஞ்சா வச்சுருந்தா ஆறு மாசம் தான் ஜெயிலு! ஒரு ப்ளேட் பீஃப் பிரியாணிக்க...

Posted: 11 Mar 2015 07:45 AM PDT

ஒரு கிலோ கஞ்சா வச்சுருந்தா ஆறு மாசம் தான் ஜெயிலு!

ஒரு ப்ளேட் பீஃப் பிரியாணிக்கு ஆசைப்பட்டா அஞ்சு வருசம் ஜெயிலு! :P

#இந்தியா

- Dhivya Dharshini

வெளிநாட்டில் இருந்தாலும்... நானும் தமிழ் பெண்ணுதாங்க.... சேலை கட்டுன என்னை பி...

Posted: 11 Mar 2015 07:40 AM PDT

வெளிநாட்டில் இருந்தாலும்... நானும் தமிழ் பெண்ணுதாங்க....

சேலை கட்டுன என்னை பிடிக்குமா உங்களுக்கு? :)


உண்மை :)

Posted: 11 Mar 2015 07:30 AM PDT

உண்மை :)


;-) Relaxplzz

Posted: 11 Mar 2015 07:20 AM PDT

:) Relaxplzz

Posted: 11 Mar 2015 07:13 AM PDT

1. வணிகவியல்பேராசிரியர்: ஒரு தொழில் ஆரம்பிப்பதற்கு பைனான்ஸ் கிடைக்கும் இடங்களி...

Posted: 11 Mar 2015 07:10 AM PDT

1.

வணிகவியல்பேராசிரியர்: ஒரு தொழில் ஆரம்பிப்பதற்கு பைனான்ஸ் கிடைக்கும் இடங்களில் அதிமுக்கியமான ஒன்றைக் கூறு.

மாணவன் : "மாமனார்…!"

2.

ஆசிரியர்: நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது,
அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழுந்தது. அவர் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது?

மாணவன்: இப்படி வகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு
புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருந்தா ஒன்னும் கண்டுபிடிக்க
முடியாதுன்னு தெரியுது!

3.

Son : அப்பா…. நான் கணக்குல 100 மார்க் வாங்கினா நீங்க என்னசொல்வீங்க?

Father : அப்படியா.. நீ மட்டும் அப்படி வாங்கிட்ட, சந்தோஷத்துல
எனக்கு ஹார்ட் அட்டாக் வந்தாலும் வந்துடும்.

Son : நல்லவேளை நான் உங்க உயிரை காப்பாத்திட்டேன்.
கணக்குல 30 மார்க் தான் எடுத்தேன்!

:P :P

Relaxplzz

முகப் பரு - கரும் புள்ளி -தழும்புகள் நீங்க : ஆண்களுக்கும் !!! உடம்பில் உஷ்ணம் ஏ...

Posted: 11 Mar 2015 07:00 AM PDT

முகப் பரு - கரும் புள்ளி -தழும்புகள் நீங்க : ஆண்களுக்கும் !!!

உடம்பில் உஷ்ணம் ஏறி..அதனால், முகத்தில் உஷ்ண கட்டி வந்து பிறகு அது பழுத்து உடைந்த பிறகு, கட்டியின் தழும்பு மட்டும் தென்படுமே.. அந்த தழும்பு மறைய என்ன செய்யலாம்?

முகத்தில் பரு வந்தால் அதனைக் கிள்ளக் கூடாது
நகம் படக்கூடாது ஏனென்றால் அதுவே பரு மறைந்த
பிறகு கருப்பு தழும்பாக மாறி விடும் .இதே போல்

அம்மை நோய்,மற்றும் சூட்டுக் கொப்புளங்கள் முகத்
தில் வந்தாலும் சிலருக்கு முகத்தில் தழும்பு நீண்ட
நாட்களுக்கும் அப்படியே இருக்கும்.

இதற்கான சித்த மருத்துவ முறை தீர்வுகள் :

முகப் பருவைக் கிள்ளுவதால் ஏற்படும் கரும்புள்ளி
யைப் போக்க ஜாதிக்காய் ஒன்றை எடுத்து தேங்காய்ப்
பால் சிறிது விட்டு அரைத்து இரவில் கரும் புள்ளியின்
மேல் போட்டு வரவும் .

தினமும் இது போல் செய்து வர சில நாட்களில் கரும்
புள்ளி மறைந்து விடும்.

முகப் பரு - கரும் புள்ளி -தழும்புகள் நீங்க :

1 - கோபி சந்தனம் - ஒரு டீ ஸ்பூன் அளவு
2 - பாதாம் பருப்பு - மூன்று (நீரில் ஊற வைத்தது)
3 - தயிர் - 2 - டீ ஸ்பூன்
4 - எலுமிச்சை சாறு - 2 - டீ ஸ்பூன்
இவைகளை அரைத்து எடுத்து முகம்,கழுத்து பகுதி
களில் பூசி ஒருமணி நேரம் கழித்து கழுவவும்.

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வர முகப்
பரு ,கரும்புள்ளி ,தழும்புகள் நீங்கி முகம் அழகு
பெரும்.

முகத்தில் தழும்புகள் - தீப்புண் தழும்புகள் மறைய :
அரச மர பழுப்பு இலைகளை சேகரித்து எரித்து கரி
யாக்கி தூள் செய்து தேங்கா எண்ணையில் விட்டு
குழப்பி வைத்துக் கொள்ளவும்.

இதனை இரவில் தழும்பு உள்ள இடங்களில் தடவி
வர தழும்புகள் படிப்படியாக மறையும்.

Relaxplzz


"நலமுடன் வாழ" - 3

"யேய்.... ஒழுக்கா ரோட்ட பார்த்து ஓட்டுடீ. ".... "கொண்ணுடுவேன்.... நீ மொதல்ல ஒழ...

Posted: 11 Mar 2015 06:50 AM PDT

"யேய்.... ஒழுக்கா ரோட்ட பார்த்து ஓட்டுடீ. "....

"கொண்ணுடுவேன்.... நீ மொதல்ல ஒழுங்கா சொல்லி கொடு'ண்ணா"...

''ஐயோ... என் பைக்கு டீ..... மண்டு.... மண்டு.... பார்க்க.. மெதுவா போடீ"...

"ஆ.... ஏன்டா கிள்ளுரே!!!! வலிக்குது'ண்ணா.... ஸ்ஸ்... தோபார்.... உன் பைக்கு மட்டும் இல்ல... இப்போ உன் உயிரும்... என் கையில் தான்... ஜாக்கிரதை!!! "....

"அடிங்ங்ங்ங்"....

என்றுமே.. அண்ணகளின் 'அசடு'.. தங்கைகள் தான்.. ♥ ♥

"அண்ணன் தங்கை உறவு ஒரு கவிதை"

- Kasturi Thilagem

Relaxplzz


"மனம் தொட்ட வரிகள்" - 2

படிச்ச பொண்ணுககிட்ட உனக்கு எப்படிப்பட்ட கணவன் வேணும்னு கேட்டா 'Make Me Laugh'னு...

Posted: 11 Mar 2015 06:45 AM PDT

படிச்ச பொண்ணுககிட்ட உனக்கு எப்படிப்பட்ட கணவன் வேணும்னு கேட்டா 'Make Me Laugh'னு சொல்வாங்க. இதன் தமிழாக்கம் "கோமாளித்தனமான புருஷன் வேண்டும்' அப்படீன்னு இருக்குமோ :P :P

- Sureshkumar Madurasi M

இது ஒரு ஓவ்யம் என்றல் நம்ப சற்று கஷ்டமே.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 11 Mar 2015 06:42 AM PDT

இது ஒரு ஓவ்யம் என்றல் நம்ப சற்று கஷ்டமே..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 11 Mar 2015 06:31 AM PDT

பெரிய விசயங்களை விட வாழ்கையில் எப்பவும் சின்ன விஷயங்கள் தான் வேதனை தரும்..!! உத...

Posted: 11 Mar 2015 06:20 AM PDT

பெரிய விசயங்களை விட வாழ்கையில்
எப்பவும் சின்ன விஷயங்கள் தான்
வேதனை தரும்..!!

உதாரணத்துக்கு
-
-
-
-
-
-
-
--
-
-
-
-
-
-
-
-
-
-
குதிரை மேல உட்காரலாம்..!!
ஆனா, குண்டூசி மேல உட்கார முடியுமா..?!

:P :P

Relaxplzz

:P Relaxplzz

Posted: 11 Mar 2015 06:11 AM PDT

ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரைய...

Posted: 11 Mar 2015 06:00 AM PDT

ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத்
தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும்,
வகுப்பில் உள்ள மற்ற மாணவர்கள் அனைவரின் பெயரையும் அதில் எழுதச் சொன்னார்.

ஒரு பெயருக்கும், அடுத்த பெயருக்கும் இடையே சிறிது
இடைவெளியுடன் !

மாணவர்கள் எழுதி முடித்தவுடன், டீச்சர் சொல்கிறார் -

"ஒவ்வொரு பெயருக்கும் எதிரே, அவர்களிடம் நீங்கள்
காணும் – உங்களுக்கு பிடித்த நல்ல விஷயம்
ஒன்றைப்பற்றி எழுதுங்கள்."

மாணவர்கள் ஒவ்வொருவரும், யோசித்து, தங்களுக்கு
தோன்றியதை எல்லாம் எழுதிக் கொடுத்தனர்.

வாரக்கடைசி – டீச்சர் ஒவ்வொரு மாணவனின் பெயரிலும்
ஒரு தாள் தயார் செய்து, அதில் மற்ற மாணவர்கள்

அவனைப்பற்றி எழுதியிருந்த உயர்வான
வார்த்தைகளை வரிசையாகத் தொகுத்து எழுதி
கீழே தன் கையெழுத்தையும் போட்டு,

மாணவர்கள் ஒவ்வொருவராக அழைத்து
அவர்களின் பெயரிட்ட தாளைக் கொடுத்தார்.

மாணவர்கள் அவரவர் இடத்திற்கு சென்று
அமர்ந்து படிக்கிறார்கள்.

10 நிமிடங்கள் – வகுப்பறையே
சந்தோஷக்கடலில் மிதக்கிறது.

"நான் இவ்வளவு சிறப்பானவனா..?
என்னைப் பற்றி மற்றவர்கள் இவ்வளவு நல்ல
அபிப்பிராயம் வைத்திருக்கிறார்களா ?" –

அத்தனை மாணவர்களும் ஆனந்தத்தில் திளைக்கிறார்கள் !

அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள
குணாதிசயங்களை மேலும் மேலும்
வளர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்.

தன்னைப்பற்றி உயர்வாகச் சொன்னதற்காக, ஒவ்வொரு மாணவனுக்கும்,சக மாணவர்கள் மேல் அன்பு அதிகரிக்கிறது.
பல வருடங்கள் கழிகின்றன.

அந்த வகுப்பில் படித்த
மாணவன் ஒருவன் வளர்ந்த பிறகு ராணுவத்தில்
சேர்கிறான். பிறகு போர் ஒன்றில் வீர சாகசம் புரிந்து,
மரணம் அடைகிறான்.

அவன் உடல் ராணுவ மரியாதையுடன்
சொந்த ஊர் கொண்டு வரப்படுகிறது.

இறுதிச் சடங்கில்,

கலந்து கொள்ள அந்த டீச்சரும் செல்கிறார்.

மிடுக்கான ராணுவ உடையில் -
நாட்டின் தேசியக்கொடு போர்த்தப்பட்டு,
சவப்பெட்டியிலும் கம்பீரத்துடன் காணப்பட்ட அந்த
மாணவனைக் கண்டு பெருமிதத்துடன் கண் கலங்குகிறார்.

ஒவ்வொருவராக வரிசையில் வந்து இறுதி மரியாதை
செலுத்துகின்றனர். டீச்சர் கடைசியாகச் செல்கிறார்.
பின்னர், பக்கத்திலேயே நிற்கிறார்.

உடலைத் தாங்கி வந்த, ராணுவ சக வீரர்கள்
அருகிலேயே நின்றிருந்தனர்.

ஒரு வீரர் கேட்கிறார் -"நீங்கள் சரவணனின் 10ஆம் வகுப்பு
டீச்சரா ?" என்று. டீச்சர் ஆம் என்று தலையசைக்கிறார்.

பின்னர் அந்த ராணுவ வீரன் சொல்கிறான் "டீச்சர் -
எனக்கு உங்களைத் தெரியும். சரவணன் உங்களைப்பற்றி
எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பான்"

சடங்குகள் முடிந்த பின்னர், சரவணனின் பழைய வகுப்புத்
தோழர்கள் அங்கு டீச்சருடன் ஒன்றாக நின்றிருந்தனர்.

அங்கு சரவணனின் தாயும் தந்தையும் வருகின்றனர்.

அந்த சோகத்திலும் தந்தை டீச்சரிடம் கூறுகிறார் -

"டீச்சர் நான் உங்களுக்கு ஒன்றைக் காட்ட வேண்டும்.
இது சரவணன் போரில் கொல்லப்பட்டபோது, அவனது
பாக்கெட்டிலிருந்து இறுதியாக கண்டெடுக்கப்பட்டது".

அவர் காட்டியது, பெரிய பர்ஸ் ஒன்றில் பத்திரமாக -
பல முறை மடிக்கப்பட்டு, மடிப்புகள் எல்லாம் டேப் போட்டு ஒட்டப்பட்டு பத்திரமாக பாதுகாக்கப்பட்ட ஒரு தாள்.

ஆமாம் – பல வருடங்களுக்கு
முன்னர் அந்த டீச்சர் சரவணனைப் பற்றிய நல்ல
குணங்களை வரிசைப்படுத்தி தொகுத்து எழுதிக் கொடுத்திருந்த அதே காகிதம் தான் !

கண்ணீர்ப் பெருக்குடன் சரவணனின் தாய் கூறுகிறார் -

"ரொம்ப நன்றி டீச்சர் – உங்கள் கடிதத்தை அவன்
உயிரையும்விட மேலாக விரும்பினான்.

இத்தனை வருடங்களும்
அதை அவ்வளவு பத்திரமாக பாதுகாத்து வந்தான்.

அவனுக்கு வாழ்க்கையில் மிகுந்த தன்னம்பிக்கையும்,
பிடிப்பும் ஏற்பட இந்த காகிதம் தான் உதவியது."

டீச்சரும் மற்ற மாணவர்களும் சரவணனை நினைத்து
கதறி அழுகின்றனர்..,

ஆம்,என் இனிய நண்பர்களே.,

இந்த வாழ்க்கைப் பாதை கரடு முரடானது.

எங்கே துவங்கும் – எப்படி இருக்கும் -எப்போது,
எப்படி முடியும் ? யாருக்கும் தெரியாது.

இருக்கின்ற காலத்தில் – நம்முடன் இருப்பவர்களை
அவர்களின் நல்ல இயல்புகளுக்காக நேசிப்போம்.

நல்லதும் கெட்டதும் கலந்தது தான் மனித குணம்.

ஒருவர் விரும்பத்தகாத குணத்தைக் கொண்டிருந்தால்,
நாம் அதை விரும்பவில்லை என்பதை எரிச்சல் காரணமாக,
அநேகமாக உடனேயே வெளிப்படுத்தி விடுகிறோம்.

ஆனால், ஒருவரிடம் உள்ள நற்பண்புகளை, குணங்களை -
அநேகமாக – நாம் வெளிப்படையாக பாராட்டத்
தவறி விடுகிறோம்.

கூடாது என்றல்ல. அதன் அவசியம் நமக்குத்
தெரிவதில்லை.

சாம்பாரில் சற்று உப்பு அதிகமாக இருந்தால் கூட உடனடியாக
மனைவியிடம் அதைக்கூறும் கணவர்கள், அந்த சமையல்
நன்றாக இருக்கும்போது – பாராட்டுவது இல்லை !

பாராட்ட வேண்டும் என்று தோன்றுவதில்லை !

இந்த உலகில் அனைத்து உயிர்களுமே,
பாராட்டுதலை எதிர்பார்க்கிறது.

கிடைத்தால் சந்தோஷப்படுகிறது !

நீங்களோ, நானோ -
யாருமே அதற்கு விதிவிலக்கல்ல.

வெளிப்படையான பாராட்டுதல் -
அவர்களிடையே தன்னம்பிக்கையை கொடுக்கும்.

நல்ல குணங்கள் மேலும் மேம்பட உதவும்.

தோழமை உணர்வு அதிகப்பட உதவும்.

மனிதர்களை மேலும் நல்லவர்களாக
உருவாக்க இது உதவும்..,

Relaxplzz


# படித்ததில் பிடித்தது # - 4

இன்னைக்கு ஆயிரங்களையும் லட்சங்களையும் நாம சம்பாதிச்சாலும் அன்னைக்கு கல்லூரி காலத...

Posted: 11 Mar 2015 05:52 AM PDT

இன்னைக்கு ஆயிரங்களையும் லட்சங்களையும் நாம சம்பாதிச்சாலும் அன்னைக்கு கல்லூரி காலத்துல அப்பாவுக்கு தெரியாம அம்மா குடுத்த பத்து ரூபாய பார்த்த சந்தோஷம் இனி எப்ப கிடைக்கும் .....


"நினைவுகள்"

Drunk and drive-க்கு பணிஸ்மெண்ட் கொடுக்குற மாதிரி, இந்த Drunk and walk-க்கும் ஏத...

Posted: 11 Mar 2015 05:45 AM PDT

Drunk and drive-க்கு பணிஸ்மெண்ட் கொடுக்குற மாதிரி, இந்த Drunk and walk-க்கும் ஏதாவது பணிஸ்மெண்ட் கொடுத்தா நல்லாயிருக்கும்.. மேல விழுற மாதிரியே நடந்து வர்றானுங்க..

- Ambuja Simi

வேக வைத்த corn பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 11 Mar 2015 05:40 AM PDT

வேக வைத்த corn பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 11 Mar 2015 05:32 AM PDT

அடங்கப்பா :O

Posted: 11 Mar 2015 05:30 AM PDT

Doctor: உங்களுக்கு 2 பல்லு எப்படி உடைஞ்சது? கணவர்: என் மனைவி செய்த முறுக்கு சாப...

Posted: 11 Mar 2015 05:24 AM PDT

Doctor: உங்களுக்கு 2 பல்லு எப்படி உடைஞ்சது?

கணவர்: என் மனைவி செய்த முறுக்கு சாப்பிட்டேன்...

Doctor: முறுக்கு வேண்டாமென சொல்லிருக்கலாமே?

கணவர்: அட நீங்க வேற டாக்டர் வேணாம்னு சொல்லிருந்தா, என் முப்பத்திரெண்டு பல்லும் போயிருக்கும்.. :O :O

Relaxplzz


குசும்பு... 5

0 comments:

Post a Comment