Relax Please: FB page daily Posts |
- அழகு.
- (y) Relaxplzz
- கையில் அழகிய ஓவியம்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- இந்த பசுமையை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- வேலை தேடும் நண்பர்களுக்காக உதவும்!!! வேலை தேடும் நண்பர்களுக்கு ஓர் தகவல் !! வேல...
- பேஸ்புக்கில் லைக் வாங்க நினைத்து கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் இளைஞர்! பேஸ்புக்...
- :) Relaxplzz
- #கண்டக்டருக்கும் #டிரைவருக்கும் என்ன வித்தியாசம்? . . . . . . . . . . . . . . ....
- ரயில் பயணிகளின் பாதுகாப்புக்காக புதிய தொலைபேசி எண் அறிமுகம் சென்னை: வெளி மாநிலம...
- இவற்றின் சுவை உணர்ந்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- இனி கோழி முதல்ல வந்ததா முட்டை முதல்ல வந்ததான்னு கேட்காதீங்க.. டைனோசர் தான் முதல்...
- ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் சிந்தனை துளிகள்.... 01. எனக்கென தனித் திறமைகள் எதுவும் கிட...
- " பத்து, இருபது தடவ கீழே விழுந்தேன். கையில ஒரு தடியை வெச்சு கீழே ஊனி நடந்து பாத்...
- மக்கள் முதல்வர் என்ற வார்த்தை டெல்லிக்கு பொருந்தும்., தமிழ் நாட்டுக்கு பொருந்தாத...
- மைக்கு கிடைச்சா எதையாவது ஒலறுவது #அரசியல்வாதி Like க்குகாக எதையாது ஒலறுவது #முக...
- கவுண்டமணியின் இந்த நகைச்சுவையை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- :D :D Relaxplzz
- லாஸ்ட் பெஞ்ச் Vs பர்ஸ்ட் பெஞ்ச் 1. முதல் பெஞ்ச்ல உட்கார்ந்து நீங்க நோட்ஸ் எடுப்...
- பெருகிக்கொண்டிருக்கும் அடுக்கு மாடி குடியுருப்புகளால் நாம் நமக்கே தெரியாமல் இழந்...
- அழகும் அசிங்கமும் அவரவர் மனநிலையை பொருத்தே நிர்ணயிக்கப்படுகிறது....
- லெட் மீ டேக் எ செல்பி புள்ள....
- ஆயிரம் படங்களை கடந்த இசைஞானி இளையராஜாவை கவுரவிக்கும் விதமாக மும்பையில் நடைபெற்ற...
- :) Relaxplzz
- ஆம்லெட்டும் கணவன் மனைவியும்….. ஆம்லெட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண...
- மலச்சிக்கல் ஏற்படுவது ஏன்? காலையில் எழுந்ததும் மலம் போகாவிட்டால், பலருக்கு அ...
- 'பார்த்துகிட்டே இருந்த எப்படி?.... கொஞ்சம் உதவிக்கு வரது?!!' ;-)
- இதெல்லாம் திருடனை கோவ படுத்துர மாதிரியே இருக்கு.... :)
Posted: 24 Feb 2015 09:53 AM PST |
Posted: 24 Feb 2015 09:45 AM PST |
Posted: 24 Feb 2015 09:38 AM PST |
Posted: 24 Feb 2015 09:30 AM PST |
Posted: 24 Feb 2015 09:20 AM PST |
Posted: 24 Feb 2015 09:10 AM PST வேலை தேடும் நண்பர்களுக்காக உதவும்!!! வேலை தேடும் நண்பர்களுக்கு ஓர் தகவல் !! வேலை தேடுவதற்கு உதவும் இணையதளங்களை கொடுத்துள்ளோம். இந்த தளங்களில் உங்கள் தகவல்களை பதிவு செய்து உங்கள் தகுதிக்கும் திறமைக்கும் உரிய வேலையை பெற்று வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகள்.... www.careerbuilder.co.in www.clickjobs.com www.placementpoint.com www.careerpointplacement.com www.glassdoor.co.in www.indtherightjob.com www.employmentguide.com www.JOBSTREET.com www.JOBSDB.COM www.AE.TIMESJOBS.COM www.NAUKRIGULF.COM www.NAUKRI.COM www.GULFTALENT.COM www.BAYAT.COM www.MONSTER.COM www.VELAI.NET www.CAREESMA.COM www.SHINE.COM www.fresherslive.com www.jobsahead.com www.BABAJOBS.com www.WISDOM.COM www.indeed.co.in www.sarkarinaukriblog.com www.jobsindubai.com www.jobswitch.in www.jobs.oneindia.com www.freshersworld.com www.freejobalert.com www.recruitmentnews.in www.firstnaukri.com www.freshnaukri.com www.mysarkarinaukri.com www.freshindiajobs.com www.freshersopenings.in www.freshersrecruitment.in www.chennaifreshersjobs.com அரசு வேலைகள் பற்றி அறிந்துகொள்ள:: www.govtjobs.allindiajobs.in www.timesjobs.com www.naukri.com www.tngovernmentjobs.in www.sarkariexam.co.in www.govtjobs.net.in www.indgovtjobs.in இந்த பதிவை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள்...நன்றி இணைய நண்பர்களுக்கு . Relaxplzz |
Posted: 24 Feb 2015 09:00 AM PST பேஸ்புக்கில் லைக் வாங்க நினைத்து கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் இளைஞர்! பேஸ்புக் மோகமும், அதிக லைக் வாங்க வேண்டும் என்று வேகமும் இளைஞர்களையும், இளைஞிகளையும் படாதபாடு படுத்துகிறது. பேஸ்புக்கில் அதிக லைக்குகளை வாங்கி சாதனை படைக்க நினைத்த ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அங்குள்ள நேரு உயிரியல் பூங்காவுக்குள் சென்று, அங்கிருந்த 80 வயதான ஆண் ஆமை மீது ஏறி நின்று போட்டோ எடுத்துக் கொண்டார். மிகக் கம்பீரமாக ஆமை மீது ஏறி நின்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றினார். லைக்குகள் குவிந்ததோ இல்லையோ, அவரது வீட்டுக்கு போலிஸ் வந்து குவிந்தது. விலங்குகளை துன்புறுத்திய குற்றத்துக்காக அவரை பஹதுர்புரா காவல்துறையினர் கைது செய்து சிறையில் தள்ளினர். Relaxplzz ![]() |
Posted: 24 Feb 2015 08:55 AM PST |
Posted: 24 Feb 2015 08:50 AM PST #கண்டக்டருக்கும் #டிரைவருக்கும் என்ன வித்தியாசம்? . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . #தனி_தனியா டிக்கட் கொடுத்தா கண்டக்டர்... #மொத்தமா கொடுத்தா டிரைவர்!!! :D :D |
Posted: 24 Feb 2015 08:45 AM PST ரயில் பயணிகளின் பாதுகாப்புக்காக புதிய தொலைபேசி எண் அறிமுகம் சென்னை: வெளி மாநிலம் மற்றும் நீண்ட தூரம் செல்லும் ரயில்களில் சமீபகாலமாக குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்காக ரயில்வே துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதிகரிக்கும் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காகவும், பயணிகள் அச்சமின்றி பயணம் செய்ய ஏதுவாகவும் 1512 என்ற புதிய தொலைபேசி எண் நேற்று சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. Relaxplzz ![]() |
Posted: 24 Feb 2015 08:38 AM PST |
Posted: 24 Feb 2015 08:30 AM PST |
Posted: 24 Feb 2015 08:20 AM PST |
Posted: 24 Feb 2015 08:10 AM PST ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் சிந்தனை துளிகள்.... 01. எனக்கென தனித் திறமைகள் எதுவும் கிடையாதப்பா. ஆனால் எதையோ ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கின்றேன் என மட்டும் எனக்குத் தெரியும். 02. அவ்வப்போது என்னை பைத்தியம் பிடிக்க வைக்கும் ஒரே கேள்வி. நான் பைத்தியமா? இல்லை மற்றவர்களா? 03. அறிவியல் அற்புதமானது தான். ஆனால் அதுவே பிழைப்பாய் இருக்காதவரை. 04. ரொம்ப முக்கியமானது என்னவென்றால் கேள்வி கேட்பதை நிறுத்த கூடாது. 05. கடவுள் முன் நாம் எல்லாரும் சம அளவு அறிவாளிகள்,சம அளவு முட்டாள்கள். 06. கற்பனாவளம் அறிவைவிட மிக முக்கியமானதாக்கும். 07. A-யை வெற்றி யென நான் கொண்டால் என் சூத்திரம் A = X + Y + Z அதாவது இங்கு X உழைப்பையும் Y விளையாட்டையும் Z வாயை மூடிக்கொண்டு கம்னு இருத்தலையும் குறிக்கும். 08. ஒரே நேரத்தில் யாரும் போருக்கும் சமாதானத்துக்கும் தயாராக முடியாது. 09. மூன்றாவது உலகப்போரில் எந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படுமென எனக்கு தெரியாது.ஆனால் நான்காம் உலகப்போரில் கம்புகளும் கல்லுகளும் தான் பயன்படுத்தப்படும். 10. ஆகாயமண்டலத்துக்கும் மனிதனின் முட்டாள் தனத்துக்கும் முடிவே இல்லை. முன்னதுக்கு முடிவிருந்தாலும் இருக்கலாம். 11. தவறே செய்திராதவர்கள் புதுசாய் எதையும் முயலாதவர்கள். 12. காதலில் விழுதலுக்கெல்லாம் புவி ஈர்ப்புவிசை காரணமாகாதையா. 13. உலகிலேயே புரிந்து கொள்ள முடியாத ரொம்ப கஷ்டமான ஒன்று இன்கம்டாக்ஸ். 14. சிலவை எளிதாயிருக்க வேண்டும் தான். ஆனால் ரொம்ப ரொம்ப எளிதாய் அல்ல. 15. கடவுள் என்ன நெனைப்பில் இருக்கிறார்னு விளங்கிக்கனும், மற்றவையெல்லாம் விளக்கமாயுள்ளன. 16. நேரம் என ஒன்றிருக்க காரணம், எல்லாம் ஒரே சமயத்தில் நடக்காததால் தான். 17. சூடேறிப்போயிருக்கும் ஓர் அடுப்பில் நீங்கள் ஒரு நிமிடமே கையை வைத்தாலும் அது ஒரு மணிநேரம் போல் தோன்றும். ஆனால் அழகான பெண்ணோடு ஒரு மணிநேரமாய் பேசினாலும் அது ஒரு நிமிடமாய் தான் தோன்றும். அதான் ரிலேடிவிட்டி. 18. உலகை புரிஞ்சிக்கவே முடியாத காரணம் அதை புரிந்துகொள்ள முடிவதுதான். 19. கடவுள் உலகை படைத்த போது அவருக்கு வேறு எதாவது தெரிவு இருந்ததாவென அறிய ஆவல். 20. வெற்றிகரமான மனிதனாவதைவிட மதிப்பிற்குரிய மனிதனாதல் வேண்டும். 21. உதாரணமாய் வாழ்ந்து மற்றவர்களுக்கு வழிகாட்டவேண்டும். அதுவே வழிகாட்ட சிறந்த வழி. 22. நான் கற்றுக்கொள்ள அதிகம் தொல்லை கொடுப்பது என் கல்வியே. 23. நிஜம் ஒரு மாயை. ஆனால் பாருங்கள் அதுதான் நிலைத்திருக்கின்றது. 24. எதிர்காலத்தை பற்றி ரொம்ப யோசிப்பதில்லை. அது சீக்கிரமாய் வந்துவிடுகின்றதே. Relaxplzz |
Posted: 24 Feb 2015 07:57 AM PST " பத்து, இருபது தடவ கீழே விழுந்தேன். கையில ஒரு தடியை வெச்சு கீழே ஊனி நடந்து பாத்தேன். கொஞ்சம் கொஞ்சமா நடந்தேன்." ஒவ்வொருவரும் விவசாயத்தை நோக்கி வருவதற்கு ஒவ்வொரு கதை இருக்கும். ஆனால், இந்த விவசாயியின் கதை உங்கள் உள்ளத்தை உருக்கும் ஓர் உணர்ச்சி அனுபவமாக இருக்கும். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் இருந்து களக்காடு செல்லும் சாலையில் உள்ளது கலுங்கடி கிராமம். இந்த கிராமத்திலுள்ள முருகன் என்பவர் தன்னுடைய இரு கால்களையும் இழந்தும் விவசாயம் செய்து வருகிறார். அவருடைய நம்பிக்கை கதையை அவரே சொல்கிறார். ''என் பேரு முருகன். அப்பா வேதமாணிக்கம், அம்மா செல்வமணி, தம்பி சின்னத்துரை மூளை வளர்ச்சி குறைந்த மாற்றுத்திறனாளி. இவங்களோட சொர்ணகிளின்னு ஒரு தங்கச்சி. நான் அஞ்சாப்பு வரைதான் படிச்சேன். அதுக்கு மேல படிக்க வைக்க வசதி இல்ல. அப்பாக் கூட சேர்ந்து எங்களுக்கு சொந்தமான தோட்டத்துலயே நெல், வாழை, வெள்ளரி, தக்காளியெல்லாம் போட்டு விவசாயம் செய்துட்டு இருந்தோம். வாழ்க்கையும் சுமாரா போய்க்கிட்டுருந்தது. ஒரு கட்டத்துல குடும்ப செலவுக்கு வாங்குன கடனை கொடுக்க முடியாம, தோட்டம் அடமானத்துக்குப் போயிடுச்சு. கடனும் அதிகமா ஆயிட்டதால வெளியூருக்கு எங்கயாவது வேலைக்குப் போகலான்னு யோசிச்சேன். தெரிஞ்ச நண்பர் மூலமா 2005ல் மும்பைக்கு போனேன். தாராவி பகுதியில் தங்கிகிட்டு கிடைச்ச வேலைகளையெல்லாம் செஞ்சிட்டு இருந்தேன். அப்பதான் கலர் மீன்களை கண்ணாடி தொட்டியில் போட்டு வீடு, அலுவலகங்களில் வளர்ப்பதில் மும்பை மக்களுக்கு அதிக ஆர்வம் இருந்ததைப் பாத்தேன். கண்ணாடித் தொட்டிகளில் வளக்குற மீன்களுக்கு இரையாக ஒருவித புழுவைப் போடுவார்கள். இந்தப் புழுக்களைப் பிடிச்சு விக்குறதுல போட்டி அதிகமா இருக்கும். இதுக்காக மும்பையில் இருந்து சுமார் 160 கி.மீ தூரத்தில் இருக்கும் புனேவுக்கு செல்வோம். அங்குள்ள ஆறுகளில் இந்த புழுக்கள் அதிகமாகக் கிடைக்கும். இரவு 1 மணிக்கு மும்பையில் இருந்து ரயில் ஏறுனா விடிய காலை 6 மணிக்கு புனே போயிருவோம். விடியற்காலையிலயும், வெயில் இல்லாத நேரத்துல மட்டும்தான் இந்த புழுக்களைப் அதிகமா பிடிக்க முடியும். ஒரு நாளைக்கு சராசரியா 4 கிலோ புழுக்கள பிடிப்பேன். சராசரியா 700 ரூபாவை ஒருநாள்ல சம்பாதிச்சிடுவேன். கிடைச்ச பணத்த குருவி சேக்குற மாதிரி கொஞ்ச கொஞ்சமா சேத்து 2006ல எங்க குலசாமியான தோட்டத்தை அடமானத்துல இருந்து மீட்டேன். 'தோட்டத்தைத்தான் மீட்டுட்ட, கல்யாணம் முடிச்சிடலா'ன்னு வீட்டுல சொன்னாங்க. ரெண்டு வருஷம் போட்டும், இன்னும் சம்பாதிச்சு கூடுதலா தோட்டம் தொரவு வாங்கிடுறேன்னு சொல்லிட்டு மும்பைக்குப் கிளம்பிட்டேன். வழக்கம் போல புழுக்களப் பிடிச்சுட்டு வந்து, வித்திட்டு இருந்தேன். ஒருநாள் நல்ல காய்ச்சல், கை, கால் உடம்பு வலி ரயில்ல அசந்து தூங்கிட்டேன். அதிகாலை 3 மணி இருக்கும். புனே ரயில் நிலைய பிளாட்பாரத்துல ரயில் நின்னது. கூட வந்தவங்க எல்லாரும், இறங்கிட்டாங்க. அசந்து தூங்கிக்கிட்டுருந்த என்னை எழுப்ப கொஞ்சம் தாமதமாயிடுச்சு. ரயிலும் நகரத் தொடங்கிடுச்சு. கண் முழிச்சி அவசர, அவசரமா ரயில் பெட்டியோட கதவுப்பக்கம் வந்து பிளாட்பாரத்துல எகிறி குதிச்சேன். பிளாட்பாரத்தை விரிவுபடுத்த ஜல்லி கற்கள் போட்டிருந்தது எனக்குத் தெரியல. அவசரத்துல ஜல்லி மேல குதிச்சதும் கால் சறுக்கி பிளாட்பாரத்துக்கும், ரெயிலுக்கும் இடையிலே விழுந்துட்டேன். கண்ணை மூடி முழிக்கிறதுக்குள்ள ரெண்டு கால்களும் கரும்புச்சக்கை மாதிரி நசுங்கி போயிடுச்சி. விபத்தில் சிதைஞ்சு போன கால்களை அகற்றுவதைத் தவிர வேறு வழியில்லைனு டாக்டர் சொன்னதும், இனிமேல் விவசாயக் கனவு என்னவாகும்னுதான் யோசிச்சேன். சம்பாதிச்ச பணமும் ஆபரேஷனுக்கு சரியாப்போச்சு. எனக்கு மருந்து, மாத்திரை கொடுத்து கவனிக்கக்கூட யாரும் இல்லை. தூத்துக்குடியைச் சேர்ந்த மும்பையில் வசிக்கும் ராஜூ என்ற தமிழர், நான் இருந்த ஆஸ்பத்திரிக்கு இன்னொரு நோயாளியைப் பாக்க வந்தார். நான் தமிழ் பேசுறதைப் பாத்துட்டு, விபத்து நடந்ததைப் பத்தி கேட்டார். அவர் உதவியால 4 மாசம் ஆஸ்பத்திரியில் இருந்தேன். ஆஸ்பத்திரிக்கான எழுபதாயிரத்தோடு தினமும் சாப்பாடு கொடுத்து கவனிச்சுக்கிட்டாரு.. அவர் பெரிய கோடீஸ்வரர் இல்ல.. சாதாரண சாப்பாட்டுக்கடை நடத்தி வருபவர்தான். 4 மாசம் சிகிச்சை முடிஞ்சதும் 2 செயற்கை கால்களும் வாங்கி கொடுத்தார். கால்ல இருந்த காயங்களும் நல்லா ஆறிடுச்சு. டாக்டர்கள் வீட்டுக்குப் போகலாம்ன்னு சொன்னாங்க. இனியும் ராஜூவுக்கு செலவு வைக்கக்கூடாதுன்னு கலுங்கடி கிராமத்துக்கே வந்துட்டேன். கிராமத்துக்கு வந்ததும் எல்லாரும் என்னை பரிதாபமா பாத்தாங்க. என்னால் எந்த வேலையும் செய்ய முடியாதுன்னு நினைச்சாங்க. அவங்க பாவப்படுவதும், எனக்கு உதவுவதும் பிடிக்கல.. செயற்கைக் கால்களை மாட்டிக்கினு வீட்டுக்குள்ளேளே சுவரைப் பிடிச்சு நடந்து பாத்தேன். பத்து, இருபது தடவ கீழே விழுந்தேன். கையில ஒரு தடியை வெச்சு கீழே ஊனி நடந்து பாத்தேன். கொஞ்சம் கொஞ்சமா நடந்தேன். ராப்பகலா தூங்காம புழு பிடிச்சு அடமானத்துல இருந்து மீட்ட தோட்டத்தைப் போய் பாத்தேன். அப்புறம் விவசாய வேலைகள கொஞ்ச கொஞ்சமா செய்ய ஆரம்பிச்சுட்டேன். முன் இருந்த வேகம் வரல.. நேரம் அதிகமானாலும் மெதுவா வேலைகள செஞ்சிட்டு வர்றேன். வீட்டை விட்டாத் தோட்டம், தோட்டத்தை விட்டா வீடுன்னு இந்த எட்டு வருஷத்துல எங்கேயும் போகல.. விவசாய வேலைகள் மட்டுமே என் காயத்துக்கு மருந்தா இருந்துட்டு வந்துச்சு. இப்போ பழையபடி நெல், தக்காளி, வெண்டை, வெள்ளரி, புடலைன்னு பயிர் செஞ்சிட்டு இருக்கேன். காய்கறிகளை சந்தைக்கு எடுத்து போறதுக்கு மட்டும் மத்தவங்களோட உதவி தேவைப்படுது. மத்த வேலைகள முடிஞ்சளவு நானே பாத்துக்குறேன். யாருகிட்டயும், எந்த உதவியையும் கால் இருக்கும் போதும் சரி, இப்போ இல்லாம இருக்கும்போதும் சரி எதிர்பாக்குறது இல்ல" என்று கட்டை விரலை உயர்த்தி சொல்லும் முருகனின் கண்களில் ஒளிர்ந்த தன்னம்பிக்கையை பார்க்க முடிந்தது. இ.கார்த்திகேயன் படங்கள்: எல்.ராஜேந்திரன் -Vikatan Relaxplzz ![]() "சாதனையாளர்கள்" |
Posted: 24 Feb 2015 07:50 AM PST |
Posted: 24 Feb 2015 07:45 AM PST மைக்கு கிடைச்சா எதையாவது ஒலறுவது #அரசியல்வாதி Like க்குகாக எதையாது ஒலறுவது #முகநூல்வாதி #எதையாது_ஒலருவோம் ;-) - அமெரிக்கா மாப்பிள்ளை |
Posted: 24 Feb 2015 07:40 AM PST |
Posted: 24 Feb 2015 07:29 AM PST |
Posted: 24 Feb 2015 07:20 AM PST |
Posted: 24 Feb 2015 07:10 AM PST லாஸ்ட் பெஞ்ச் Vs பர்ஸ்ட் பெஞ்ச் 1. முதல் பெஞ்ச்ல உட்கார்ந்து நீங்க நோட்ஸ் எடுப்பதற்காகவே பாடத்தை கவனிச்சிங்க, நாங்க நல்லா தூக்கம் வருமேன்னு பாடத்த கவனிச்சோம். 2. அப்சர்வேஷன் நோட்டையும், ரெக்கார்ட் நோட்டையும், அசைன்மென்டையும், எழுதின உடனே முன்னாடி கொண்டு போய் வாத்தியார்ட்ட நீட்டுவிங்க. நாங்க நண்பன் காப்பி அடிச்சிட்டு கொடுக்கற வரை காத்திருப்போம். 3. பரீட்சைக்கு என்ன கேள்வி வரும்ன்னு நீங்க யோசிச்சிட்டு இருக்கப்ப, பரிட்சையே வராமா இருக்க என்ன செய்யலாம்ன்னு நாங்க யோசிச்சிட்டு இருந்தோம். 4. ஜூனியர் பசங்களுக்கு நீங்க நோட்ஸ் கொடுத்து உதவி செஞ்சிங்க. நாங்க எந்த வாத்தியார எப்படி சாமாளிக்கனும்னு டிப்ஸ் கொடுத்து உதவி செஞ்சோம். 5. லைப்ரேரில நெறைய புக்ஸ் எடுத்து நீங்க சாதனை செஞ்சிங்க. நாங்க நாலு வருசமா லைப்ரேரி பக்கமே போகலன்ற சாதனையை செஞ்சோம். 6. கேண்டின் ல சாப்பாட்டுக்கு லேட் ஆனா, ஐயையோ லேப் ஸ்டார்ட் ஆக போவுதுன்னு சாப்புடாம ஓடுவிங்க. எங்களுக்கு எப்பவுமே சோறு தான் பர்ஸ்ட், லேப்லாம் நெக்ஸ்ட். 7. நீங்க பாடம் புரியலைன்னா கேள்வி கேப்பிங்க; நாங்க எங்களுக்கு போர் அடிச்சா கேள்வி கேட்டு நேரத்தை ஓட்டுவோம். 8. நீங்க காலேஜ் டே, ஹாஸ்டல்டே லாம் டைம் வேஸ்ட் ன்னு சொன்னிங்க. நாங்க அதுக்காகவே வருசம்பூரா வெயிட் பண்ணோம். 9. பர்ஸ்ட் மார்க் வேணும் ன்னு பரிட்சை டைம் டேபிள் வந்த உடனே படிக்க ஆரம்பிசிருவிங்க. நாங்க பாஸ் ஆனா போதும்ன்னு பரீட்சைக்கு முதநாள் தான் புக்கையே எடுப்போம். 10. வாத்தியார் பனிஸ்மென்ட் கொடுத்து வெளிய அனுப்பிட்டா, அவமானமா நினைச்சி மூஞ்ச தொங்க போட்டுபிங்க. நாங்க வாத்தியாரே ரெஸ்ட் எடுக்க சொன்னதா நினைச்சி ஆனந்தப் படுவோம். 11. எக்ஸாம் க்கு முக்கியமா சிலபஸ் தெரிஞ்சி இருக்கணும்னு நீங்க நினைச்சிங்க. சீட்டிங் அரெஞ்ச்மென்ட் தெரிஞ்சா போதும்ன்னு நாங்க நினைச்சோம் # மொத்தத்துல நீங்க வாழ்க்கைய தேடிட்டு இருந்தப்பவே, நாங்க வாழ ஆரம்பிச்சிட்டோம். :) :) Relaxplzz |
Posted: 24 Feb 2015 06:57 AM PST பெருகிக்கொண்டிருக்கும் அடுக்கு மாடி குடியுருப்புகளால் நாம் நமக்கே தெரியாமல் இழந்து கொண்டிருப்பது என்ன? மாலை நேர திண்ணை அரட்டை, திண்ணைத் தோழர்கள், துளசி வழிபாடு, முற்றத்தில் தலை முழுகுதல், நம் வீட்டில் ஒரு நபராக வசிக்கும் சிட்டுக் குருவிகள், வீட்டின் கதவில் ஏறி நின்று ஆடும் சுகம், திண்ணையில் அமர்த்து வெற்றிலை போடும் கிழவி, மழை பெய்தால் முற்றத்தில் ஆடும் சுகம், இவை எல்லாவற்றிற்கும் மேலாக தனி வீட்டில் கூட்டாக வாழ்ந்தோம், இன்று கூட்டான வீடுகளில் தனிமையாக வாழ்கிறோம்.. இழந்ததை இனி பெற முடியாது.. :( :( Relaxplzz ![]() "சமுக கட்டுரைகள்" -2 |
Posted: 24 Feb 2015 06:50 AM PST |
Posted: 24 Feb 2015 06:40 AM PST |
Posted: 24 Feb 2015 06:26 AM PST ஆயிரம் படங்களை கடந்த இசைஞானி இளையராஜாவை கவுரவிக்கும் விதமாக மும்பையில் நடைபெற்ற விழாவின் போது, கமல் ஸ்ரீதேவி ரஜினி. ![]() "அரிய புகைப்படங்கள்" |
Posted: 24 Feb 2015 06:19 AM PST |
Posted: 24 Feb 2015 06:10 AM PST ஆம்லெட்டும் கணவன் மனைவியும்….. ஆம்லெட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்டுபிடிப்பது எப்படி? கணவன்: என்னம்மா இத்தன தொட்டுக்க இருக்கும்போது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லெட் போட்டுகிட்டு இருக்க வாம்மா வந்து உட்கார்.எவ்ளோதான் நீ செய்வ, வா சேர்ந்து சாப்பிடலாம்! மனைவி: இருங்க உங்களுக்கு தொட்டுக்க ஆம்லெட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க.அதுவும் சின்ன வெங்காயத்த வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பரா இருக்கும்னு சொல்லுவீங்க அதுக்குதான். இப்படி சொன்னா கல்யாணமாகி ஆறுமாதம் என்று அர்த்தம். *************************** கணவன்: என்னம்மா இன்னைக்கு ஸ்பெஷல்? மனைவி: சாம்பார், பெரிய வெங்காயம் போட்டு, ஆம்லெட் தொட்டுக்க கணவன்: அவ்ளோதானா? மனைவி: முடியலைங்க! இது ஒரு வருடம் ஆன ஜோடிங்க! ************************ கணவன்: என்னம்மா….சாப்பிடலாமா? மனைவி: இருங்க இந்த சீரியல் முடியட்டும்.என்னங்க கொஞ்சம் பெரிய வெங்காயம் உரிச்சு தாங்களேன் ஆம்லெட் போட்டுடறேன்! இது ஒன்றரை வருடம் ஆன ஜோடிங்க! ****************************** கணவன்: என்னம்மா இது வெங்காயமே இல்லாம ஆம்லெட் போட்டிருக்கே.எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்லே? மனைவி: ஒரு நாளைக்கு இதை சாப்பிட்டாதான் என்ன? எல்லாத்தையும் நானே செய்யனுமா? இது இரண்டு வருடம் ஆன ஜோடிங்க! *********************** கணவன்: என்னம்மா இது இத்துனூன்டு இருக்கு.முட்டைய கலக்க கூட இல்ல அப்படியே ஃபுல் பாயிலா போட்டிருக்க? மனைவி: முட்டை என்ன நானா போடுறேன்? கோழி போட்டது சின்னதா இருக்கு, அதுக்கு நான் என்ன செய்ய?சும்மா குறை சொல்லிகிட்டு இருக்காம தொட்டுகிட்டு சாப்பிடுங்க! இது மூன்று வருடம் ஆன ஜோடிங்க! ************************* கணவன்: என்ன இது ஆஃபாயில் போட்டிருக்க….நான் இத சாப்பிடவே மாட்டேன்னு தெரியும்ல? மனைவி: ஒரு நாள் தின்னா ஒன்னும் குறைஞ்சு போயிடாது.ஊருல இல்லாத அதிசய புருஷன் எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு! இது நான்கு-ஐந்து வருடம் ஆன ஜோடிங்க! ***************************** கணவன்: என்னம்மா இன்னைக்கு ஒன்னும் செய்யலையா? மனைவி: சாதம் வைத்து இருக்கேன், ஃப்ரிட்ஜில் நேற்று வாங்கிய மோர் இருக்கு,முட்டையும் இருக்கு ஆம்லெட் போட்டு சாப்பிடுங்க! இது ஏழு வருடம் ஆன ஜோடிங்க! ************************************ கணவன்: என்னம்மா இன்னைக்கு என்ன சமையல் செய்யனும்? மனைவி: அதையும் நான்தான் சொல்லனுமா? எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியாதா? அதை செய்யுங்க! இது பத்து வருடத்துக்கு மேற்பட்ட ஜோடிங்க! *********************************** இதுல ஒரு விஷயம் கவனிச்சீங்களா? அதாங்க…..நம்ம ஆளு(கணவன்) என்னம்மா என்று சொல்வது மட்டும் கடைசி வரை மாறவே இல்லீங்கோ,!! ஆமாம், உங்க வீட்ல எப்படி? எண்ணம்மா இப்படி பண்ரிங்கலேம்ம்ம்ம்ம்மா :D :D Relaxplzz |
Posted: 24 Feb 2015 05:57 AM PST மலச்சிக்கல் ஏற்படுவது ஏன்? காலையில் எழுந்ததும் மலம் போகாவிட்டால், பலருக்கு அந்த நாள் முழுவதும் எந்த வேலையும் ஓடாது. வெறும் வயிற்றில் லிட்டர் கணக்கில் தண்ணீர் குடிப்பார்கள். சூடாக காபி, தேநீர் அருந்துவார்கள். பீடி, சிகரெட் புகைப்பார்கள். இன்னும் சிலர் எப்படியாவது மலத்தை வெளியேற்றியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு மூச்சை இழுத்துப் பிடித்து முக்குவார்கள். இந்தப் பகீரதப் பிரயத்தனங்கள் எதுவும் தேவையில்லை. தினமும் காலையில் எழுந்ததும் மலம் கழித்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் எதுவுமில்லை. மலம் காலையில் வரலாம். மாலையில் வரலாம். இரவிலும் வரலாம். ஒரு நாளைக்கு ஒருமுறை வரலாம். இருமுறை வரலாம். எதுவும் தப்பில்லை. எது மலச்சிக்கல்? வழக்கத்துக்கு மாறாக மலம் வெளியேறாமல் இருப்பது. மலம் இறுகிப்போவது. மலம் கழிப்பதில் சிக்கல். மலம் முழுவதுமாகப் போகவில்லை என்கிற உணர்வு, மலம் கொஞ்சம்கூடப் போகாமல் ஆசனவாயை அடைத்துக்கொள்வது போன்ற நிலைமைகளை 'மலச்சிக்கல்' என்று அழைக்கிறோம். மருத்துவ மொழியில் சொன்னால் ஒருவருக்கு வாரத்துக்கு மூன்று முறைக்குக் குறைவாக மலம் போவது 'மலச்சிக்கல்'. அடிப்படைக் காரணம் நாம் சாப்பிட்ட உணவு இரைப்பை, முன் சிறுகுடல், சிறுகுடல் என்று பயணம் செய்து தன்னிடமுள்ள சத்துகளையெல்லாம் ரத்தத்துக்குக் கொடுத்துவிட்டு, சக்கை உணவாகப் பெருங்குடலுக்கு வரும். அதில் 80 சதவீதம் தண்ணீர்தான் இருக்கும். இந்தத் தண்ணீரில் பெரும்பகுதியை உறிஞ்சி எடுத்துக்கொண்டு சுமார் 250 மி.லி. அளவில் மலத்தில் வெளியேற்ற வேண்டியது பெருங்குடலின் வேலை. சமயங்களில் அது தண்ணீர் முழுவதையும் உறிஞ்சிக்கொள்ளும். இதனால் மலம் கட்டியாகி மலச்சிக்கலை ஏற்படுத்தும். இப்படித் தண்ணீர் அதிகமாக உறிஞ்சப்படுவதை ஊக்கப்படுத்தப் பல காரணிகள் இருக்கின்றன. அவற்றைத் தவிர்த்தால் மலச்சிக்கல் ஏற்படாது. அந்தக் காரணங்கள்? தூண்டும் காரணிகள் மலச்சிக்கலுக்கு முக்கியக் காரணி நம் உணவு முறை. கொழுப்பு மிகுந்த மேற்கத்திய உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது. பால் சார்ந்த உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது, பிட்ஸா, பர்கர், நூடுல்ஸ் போன்ற துரித உணவு வகைகளையும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளையும் அதிக அளவில் சாப்பிடுவது. நார்ச்சத்துள்ள உணவு வகைகளைக் குறைவாகச் சாப்பிடுவது. தண்ணீர் குறைவாகக் குடிப்பது. காய்கறி, கீரை, பழங்களைச் சாப்பிடாதது போன்ற தவறான உணவுப் பழக்கங்கள்தான் பலருக்கும் மலச்சிக்கலை உண்டாக்குகின்றன. அடுத்து, தினமும் மலம் கழிக்கும் முறை சரியாக அமையாவிட்டால், அது நாளடைவில் மலச்சிக்கலுக்கு வழி வகுக்கும். குறிப்பாக, மலம் வருகிற உணர்வு உண்டாகும்போது கழிப்பறை அருகில் இல்லாதது, முக்கிய வேலையில் ஈடுபட்டிருப்பது, பயணத்தில் இருப்பது போன்ற காரணங்களால் மலம் கழிப்பதைத் தவிர்த்தால் காலப்போக்கில் பெருங்குடலில் உள்ள உணர்வு நரம்புகள் செயலிழந்து மலத்தை வெளியேற்ற வேண்டும் என்கிற உணர்வைத் தெரிவிக்காது. இதன் காரணமாக மலச்சிக்கல் ஏற்படும். பொதுவாகவே வயது ஆகஆக மலம் போவது குறையும். முதுமையில் உணவுமுறை மாறுவது, உடற்பயிற்சி குறைவது, தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காதது மலச்சிக்கலுக்கு வழிவிடும். மூட்டுவலி, இடுப்புவலி உள்ள முதியவர்கள் அடிக்கடி மலம் கழிப்பதைத் தவிர்ப்பதால் அவர்களுக்கு மலச்சிக்கல் வருகிறது. கர்ப்ப காலத்தில் மசக்கை காரணமாக தண்ணீர் அதிகமாகக் குடிக்காமல் இருப்பது, கருவில் வளரும் குழந்தை தாயின் குடலை அழுத்துவது, ஹார்மோன் மாற்றம், ஆசனவாய் சுருங்குதல் ஆகிய காரணங்களால் கர்ப்பிணிகளுக்குத் தற்காலிகமாக மலச்சிக்கல் உண்டாகலாம். வேறு உடல் பிரச்சினைகளுக்காக நாம் சாப்பிடும் மருந்துகளும் மலச்சிக்கலுக்குக் காரணமாகலாம். எடுத்துக்காட்டாக, வயிற்றுப் புண்ணுக்குச் சாப்பிடப்படும் 'அலுமினியம்', 'கால்சியம்' கலந்துள்ள 'ஆன்டாசிட்' மருந்துகள், இரும்புச்சத்து மாத்திரைகள், வயிற்றுவலி மாத்திரைகள், வலிப்பு மருந்துகள், மன அழுத்த மருந்துகள், 'ஓபியம்' கலந்த வலிநிவாரணிகள் மலச்சிக்கலை ஏற்படுத்துகிற மருந்துகளில் முக்கியமானவை. இன்னொன்று, மலச்சிக்கலைப் போக்குவதற்காக பேதி மாத்திரைகளைச் சாப்பிடுகிறோம். ஆனால், அந்த பேதி மாத்திரைகளை அடிக்கடி சாப்பிட்டாலும் மலச்சிக்கல் உண்டாகும். காய்ச்சல், வாந்தி, பசிக் குறைவு போன்ற பொதுவான பிரச்சினைகள் ஏற்படும்போதும், வெயிலில் அதிகம் அலையும்போதும் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும். அப்போது மலச்சிக்கல் ஏற்படும். மூல நோய், ஆசனவாய் வெடிப்பு, ஆசனவாய் சுருங்குதல், குடல் அடைப்பு, குடலில் கட்டி, பெருங்குடல் புற்றுநோய், 'டைவர்ட்டிகுலைட்டிஸ்' எனும் குடல் தடிப்பு நோய், சர்க்கரை நோய், தைராய்டு குறைவாகச் சுரப்பது, பேரா தைராய்டு அதிகமாகச் சுரப்பது, குடலிறக்கம், பித்தப்பைக் கற்கள், பார்க்கின்சன் நோய், மூளைத் தண்டுவட நோய்கள், மன அழுத்தம், தூக்கமின்மை ஆகிய பாதிப்புகள் இருக்கும்போது மலச்சிக்கல் ஒரு முக்கிய அறிகுறியாக வெளிப்படும். இளம் பெண்களுக்குப் பெருங்குடல் சுவரில் தளர்ச்சி ஏற்பட்டு 'இடியோபதிக்டிரான்சிட் கோலன்' எனும் நோய் வரலாம். அப்போது அவர்களுக்கு மலச்சிக்கல் உண்டாகும். குழந்தைகளுக்குத் தாய்ப்பாலை நிறுத்திவிட்டு செயற்கைப் புட்டிப்பால் தரப்படும்போது, மலச்சிக்கல் ஏற்படலாம். கழிப்பறையை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாத குழந்தை களுக்கு ஆரம்பத்தில் மலச்சிக்கல் வரலாம். வயதுக்குத் தேவையான உடற்பயிற்சி இல்லாதது, முதுமையின் காரணமாகவோ அல்லது நோயின் காரணமாகவோ படுக்கையில் நீண்டகாலம் படுத்தே இருப்பது போன்றவையும் மலச்சிக்கலை வரவேற்பதுண்டு. எப்போது கவனிக்க வேண்டும்? மலச்சிக்கலை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால் ஆசனவாயில் விரிசல் ஏற்பட்டு ரத்தக்கசிவு உண்டாகும். அஜீரணம், வாயுத் தொல்லை, வயிற்று உப்புசம், குடலிறக்கம், குடல் அடைப்பு, சிறுநீர் அடைப்பு, நெஞ்சுவலி, மயக்கம் ஏற்படலாம். எனவே, மலச்சிக்கலுடன் கீழ்க்காணும் அறிகுறிகள் தெரிந்தால் உடனே மருத்துவரிடம் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்: 1. மூன்று வாரத்துக்குமேல் மலச்சிக்கல் பிரச்சினை தொடரும்போது. 2. மலம் போவதில் சிக்கல் உண்டாகி வயிறு வலிக்கும்போது. 3. குமட்டல் மற்றும் வாந்தி வரும்போது. 4. மலம் கழிக்கும்போது ஆசனவாய் வலித்தால். 5. மலத்துடன் ரத்தம், சீழ், சளி வெளியேறும்போது. 6. உடல் எடை குறையும்போது. 7. காய்ச்சல், தலைவலி, வாய்க் கசப்பு இருந்தால். 8. மலச்சிக்கலும் வயிற்றுப்போக்கும் மாறிமாறி வந்தால். 9. வயிற்று உப்புசம், பசிக் குறைவு இருந்தால். 10. சுவாசத்தில் கெட்ட வாசனை வந்தால். சிசிச்சை என்ன? மலச்சிக்கலுக்குக் காரணம் தெரிந்து சிகிச்சை பெற்றால், நிரந்தரமாகக் குணப்படுத்தலாம். இப்போது மலச்சிக்கலுக்குப் பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகள் கிடைக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் வேலை செய்கிறது. வயதைப் பொறுத்து, அடிப்படை நோயைப் பொறுத்து, மலச்சிக்கலின் தன்மையைப் பொறுத்து மருந்து தேவைப்படும். ஆகவே, மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்து சாப்பிடுங்கள். மலச்சிக்கலுக்குச் சுயசிகிச்சை செய்ய வேண்டாம். குறிப்பாக, பேதி மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சாப்பிடும்போது பெருங்குடலில் உள்ள உணர்வு நரம்புகளை அவை பாதிக்கும். பிறகு, சாதாரணமாக மலம் கழிப்பதும் சிரமமாகிவிடும். 'எனிமா' தர வேண்டிய அவசியம் ஏற்படும். அடிக்கடி `எனிமா' தருவதும் நல்லதல்ல. தவிர்ப்பது எப்படி? மலச்சிக்கலைத் தவிர்க்க, கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. ஆரோக்கியமாக உள்ள ஒருவர் சரியான உணவு முறையைப் பின்பற்றி, தேவையான அளவுக்குத் தண்ணீர் குடித்து, தினமும் உடற்பயிற்சி செய்து, மலம் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு வந்ததும் மலம் கழித்துவிடுகிற பழக்கத்தைப் பின்பற்றினாலே போதும். தினமும் சரியான / முறையான நேரத்தில் மலம் கழிப்பது வழக்கமாகிவிடும். இதன் பலனால், அவருக்கு மலச்சிக்கல் ஏற்படுகிற வாய்ப்பு 90 சதவீதம் குறைந்துவிடும். நார்ச்சத்து உதவும்! நாம் சாப்பிடும் உணவு வகைகளில் நார்ச்சத்து நிறைந்த கோதுமை, கேழ்வரகு. தினை, வரகு, கொள்ளு போன்ற முழுத் தானிய உணவு வகைகள் மலச்சிக்கலைத் தவிர்க்க உதவும் (தவிடு நீக்கப்பட்ட தானியங்களில் நார்ச்சத்து இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்). வாழைத்தண்டு, காரட், முள்ளங்கி, முட்டைக்கோஸ், பாகற்காய், புடலங்காய், அவரைக்காய், கொத்தவரங்காய் போன்ற காய்கறிகள், பொட்டுக்கடலை, கொண்டைக்கடலை, மொச்சை போன்ற பருப்புகள், கீரைகள், ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, ஆப்பிள், அத்திப்பழம், பேரீச்சை, மாம்பழம் போன்ற பழங்களில் நார்ச்சத்து அதிகம். இவற்றை தினசரி உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். மிளகு, ஓமம், கொத்துமல்லி, மிளகாய் போன்றவற்றிலும் நார்ச்சத்து அதிகம். இவற்றில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை அதிகப்படுத்தவேண்டும். உதாரணம்: மிளகு ரசம், கொத்துமல்லிச் சட்னி. தினமும் 3 லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும். காபி, தேநீர், மென்பானங்கள் குடிப்பதைக் குறைத்துக்கொண்டு, இளநீர், பழச்சாறுகள் குடிப்பதை அதிகப்படுத்த வேண்டும். இனிப்பு வகைகளையும் கொழுப்பு உணவுகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும். விரைவு உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். இரவில் இரண்டு பழங்களைச் சாப்பிட வேண்டும். வாழைப்பழம்தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. பருவத்துக்குத் தகுந்த எந்தப் பழத்தையும் சாப்பிடலாம். தினமும் நடைப்பயிற்சி செய்ய வேண்டியது மிக அவசியம். இயலாதவர்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய உடற்பயிற்சிகளைச் செய்யலாம். புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. தேவையில்லாமல் வெயிலில் அலையக் கூடாது. மலம் கழிப்பதற்கு என்று போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டியது மிகவும் முக்கியம். வேலை அவசரம் காரணமாகக் குறைந்த நேரத்தில் மலம் கழிக்கக் கூடாது. மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வந்துவிட்டால் அதை அடக்காதீர்கள். காலை நேரமானாலும் சரி, மாலை நேரமானாலும் சரி தினமும் ஒரே நேரத்தில் கழிப்பறைக்குச் செல்லும் வழக்கத்தை உண்டாக்கிக்கொண்டால் அடுத்தடுத்த நாட்களிலும் அதே நேரத்தில் மலம் வந்துவிடும் Relaxplzz ![]() "நலமுடன் வாழ" - 2 |
Posted: 24 Feb 2015 05:51 AM PST |
Posted: 24 Feb 2015 05:42 AM PST |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment