Relax Please: FB page daily Posts |
- அருமையான படைப்பு...! பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :: தகவல் துணுக்குகள் :: எடிசனின் உயிர் பிரியும்போது கடைசியாக 'விளக்கை எரியவிடுங...
- தற்பொழுது ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம் வழியே பணம் எடுக்கவ...
- :) Relaxplzz
- ஒரு நாள் ...எமதர்மன் ஒரு மனிதனிடம் வந்து சொன்னான் : "மனிதா! இன்று உன்னுடைய வாழ்க...
- "பேசும் படம்"
- (y) Relaxplzz
- :) Relaxplzz
- ஆசிரியர்கள் என் தெய்வங்கள்" ----------------------------------------------------...
- எத்தனையோ பேர் நான் இருக்கிறேன் எனச் சொன்னாலும் அப்பாவை போல் யார் இருக்க முடியும்...
- கை குடுத்தவர்களையும் , கை விட்டவர்களையும் , உயிர் உள்ள வரை மறவாதீர்கள்.
- கல்யாணமாகி 25 வருஷத்துல ஒரே ஒரு தடவைதான் உங்க கணவர்கிட்டே சண்டை போட்டீங்களா..ஆச்...
- அட்லான்டிக் ரோட், நார்வே Atlantic road, Norway
- :) Relaxplzz
- :) Relaxplzz
- திருமணமானவர்கள் ­ கீழே உள்ள செய்தியைப் படிக்கவேண்டாம்: ஒரு பெண்மணி நடு இரவில் த...
- தயவு செய்து முழுமையாக படியுங்கள் & பகிருங்கள்... ஷாஹித் அப்ரிடி... புயல் வேக ம...
- ஐந்தறிவு கொண்ட மிருகங்களிடமும் நட்பு என்ற உறவும் நன்றி பாசம் அன்பு என்ற உணர்வுகள...
- பானி பூரி பிரியர்கள் லைக் போடுங்க (y)
- :) Relaxplzz
- :) Relaxplzz
- எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்... இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம்...
- ஆண்கள் கவனத்துக்கு !!! 1. முட்டாள் கணவன் மனைவியிடம் வாயை மூடு என்பான், புத்திசா...
- பிச்சைக்காரி என்று பலர் என்னை ஏளனம் செய்யலாம், பலருக்கு தர்மம் செய்து, நான் பெ...
- அருமையான ஐடியா பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- ஜெபிக்கும் உதடுகளை விட... சேவை செய்யும் கரங்களே உயர்வானவை..! -அன்னை தெரேசா.
- ஆபிரஹாம் லிங்கன் முதன் முதலாகத் தேர்தலை சந்தித்து, தோல்வியடைந்த நேரத்தில், பிரா...
- எப்போது கிடைக்கும் சுதந்திரம் ??? "அ"னாதை இல்லங்கள் அழிக்கப்படும்போது "ஆ"தரவ...
- மிக எளிமையான முறை, மனமிருந்தால் இடம் கொடுக்கலாம்... இத்தகைய சிறு உயிரினங்களுக்கு...
Posted: 19 Dec 2014 09:20 AM PST |
Posted: 19 Dec 2014 09:10 AM PST :: தகவல் துணுக்குகள் :: எடிசனின் உயிர் பிரியும்போது கடைசியாக 'விளக்கை எரியவிடுங்கள் என் ஆவி பிரியும்போது வெளிச்சமாக இருக்கட்டும்!' என்றாராம்!!. ஆண்களாக பிறந்து பெண்ணாக உணருபவர்கள் 'திருநங்கை' பெண்ணாக பிறந்து ஆணாக உணருபவர்கள் 'திருநம்பி'!. தலைவா படத்துக்காக தற்கொல பண்ணிக்கிறது ரஜினி படத்துக்காக மண்சோறு திங்கிறது போன்றவை Celebrity Worship Syndrome என்ற மனநோய் வகையறாக்கள்!!. பறவை இனங்களில் ஆந்தை மட்டுமே கண் சிமிட்டும் போது மேல் இமையை மூடுகிறது மற்ற அனைத்து பறவைகளும் கண்களை சிமிட்டுவது கீழ் இமையால்தான்!. கூகுள் என்ற சொல் ஒரு கோடி பூஜ்ஜியங்களைக் கொண்ட எண்களுக்கான பொதுவான பெயர் ஆகும்!. உங்களுடைய கை நகங்கள் 24 மணி நேரத்தில் 0.00007 அங்குலம் வளர்கின்றன!. மொகலாயப் பேரரசர் பாபர் உயிரிழக்கும் போது தன் மகன் ஹுமாயூனிடம் "இந்தியாவில் உள்ள இந்துக்களைத் துன்புறுத்தாதே!" என்றாராம்!. ஹிட்லர் ஒரு சைவ விரும்பி! மேலும் மிருகவதையை தீவிரமாக எதிர்ப்பவர்!!. இங்கிலாந்தைச் சேர்ந்த மாத்யூ கிரீன் என்பவர் இதயமேயில்லாமல் இயந்திரங்களின் உதவியால் 2 வருடங்கள் வரை வாழ்ந்திருக்கிறார்!. 15.23 நிமிடத்தில் லேப்டாப்பை கழற்றி மாட்டி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் 8 வயது கோவை சிறுமி இடம் பிடித்துள்ளார்!. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம்!. ஐன்ஸ்டீனின் கணிப்புப்படி உலகில் தேனீ இனம் முற்றிலும் அழிந்து போனால் அன்றிலிருந்து 4 வருடத்திற்குள் மனித இனம்அழிந்து போகுமாம்!!. தோல்விகளைக் கண்டு துவளாதீர்! மில்லியன் கணக்கான விந்தணுக்களின் வெற்றி பெற்றது நீங்கள் ஒருவரே! பயாலஜிப்படி சாதிக்கப் பிறந்தவர் நீங்கள்!. Relaxplzz |
Posted: 19 Dec 2014 09:00 AM PST தற்பொழுது ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம் வழியே பணம் எடுக்கவோ அல்லது வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை பார்க்கவோ முடியும். அதற்கு மேல் பார்த்தால் ஒவ்வொரு முறைக்கும் 20 ரூபாய் பிடித்துக்கொள்ளப்படுகின்றது. இதனால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது இலவசமாக வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இலவச எண்ணிற்கு கால் செய்தால் போதும், உங்களுடைய போன் எண்ணிற்கு கையிருப்பு தொகையை sms அனுப்பிவிடுவார்கள். உங்கள் நம்பர் பதிவு செய்யப்பட்ட நம்பராக இருக்கவேண்டும். 1. Axis bank- 09225892258 2. Andra bank- 09223011300 3. Allahabad bank- 09224150150 4. Bank of baroda- 09223011311 5. Bhartiya Mahila bank- 09212438888 6. Dhanlaxmi bank- 08067747700 7. IDBI bank- 09212993399 8. Kotak Mahindra bank- 18002740110 9. Syndicate bank- 09664552255 10. Punjab national bank- 18001802222 11. ICICI bank- 02230256767 12. HDFC bank- 18002703333 13. Bank of india- 02233598548 14. Canara bank- 09289292892 15. Central bank of india- 09222250000 16. Karnataka bank- 18004251445 17. Indian bank- 09289592895 18. State Bank of india- Get the balance via IVR 1800112211 and 18004253800 19. union bank of india- 09223009292 20. UCO bank- 09278792787 21. Vijaya bank- 18002665555 22. Yes bank- 09840909000 --- படித்தால் மட்டும் போதுமா, நீங்கள் தெரிந்து கொண்டதை மற்றவருக்கும் தெரியபடுத்துங்கள்... இந்த பதிவை பகிருங்கள் ..... Relaxplzz ![]() |
Posted: 19 Dec 2014 08:55 AM PST |
Posted: 19 Dec 2014 08:50 AM PST ஒரு நாள் ...எமதர்மன் ஒரு மனிதனிடம் வந்து சொன்னான் : "மனிதா! இன்று உன்னுடைய வாழ்கையின் கடைசி நாள் " மனிதன் :!!!!ஆனா நான் உன்னுடன் வர தயாராக இல்லை !! எமதர்மன் சொன்னான் : " நல்லது,இன்று உன்னுடைய பெயர்தான் பட்டியலின் முதலில் உள்ளது ....." மனிதன்: " சரி,நீங்கள் இருக்கையில் உட்காருங்கள் ,நாம் இருவரும் புறப்படுவதற்கு முன் ஒரு COFFEE சாப்பிட்டு விட்டு போகலாம் " எமதர்மன் : சரி,அப்படியே செய்யலாம் ! அந்த மனிதன் எமதர்மனுக்கு தூக்க மருந்து கலந்த COFFEE கொடுத்தான்,குடித்தவுடன் எமதர்மன் நன்றாக தூங்கி விட்டான்!!! மனிதன் உடனே அந்த பட்டியலை எடுத்து முதலில் இருந்த தன் பெயரை எடுத்துவிட்டு,கடைசியில் கொண்டு எழுதி வைத்தான் .... எமதர்மன் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் அந்த மனிதனிடம் சொன்னான் "நீ என்னிடம் மிகவும் நன்றாக, அன்பாக நடந்து கொண்டாய் ,அதனால் நானும் உனக்காக என்னுடைய முடிவை மாற்றி கொண்டேன்... என்னவென்றால் பட்டியலின் மேலிருந்து இல்லாமல் ,பட்டியலின் கிழே இருந்து உயிர்களை எடுக்க முடிவு செய்துள்ளேன் என்றான் "!!! கதையின் நீதி :எல்லாம் விதியின்படிதான் நடக்கும் ....... நீ எவ்வளவு முயற்சி செய்தாலும் கூட ......... :P :P Relaxplzz |
"பேசும் படம்" Posted: 19 Dec 2014 08:40 AM PST |
Posted: 19 Dec 2014 08:30 AM PST |
Posted: 19 Dec 2014 08:20 AM PST |
Posted: 19 Dec 2014 08:10 AM PST ஆசிரியர்கள் என் தெய்வங்கள்" ---------------------------------------------------------------------- நாங்க அசந்து தூங்குனாலும்,அசராம பாடம் நடத்திட்டு கடைசில மனசாட்சியே இல்லாம கேள்வி கேப்பியே தெய்வமே! என் தெய்வமே!! கடைசி பெஞ்சுல இருந்த எங்கள முதல் பெஞ்சுல வந்து உக்கார சொல்லி தினம் கொடுமைப்படுத்துனியே தெய்வமே! என் தெய்வமே!! 'போடா நாயே கிளாஸ விட்டு'ன்னு சொன்னா காலேஜை விட்டே வெளிய போய் டீ கடைல இருப்போமே தெய்வமே! என் தெய்வமே!! உங்க வீட்ல சண்டைனா கோவமா காலேஜ் வந்து அந்த கடுப்புல எனக்கு இம்போசிசன் கொடுத்தியே தெய்வமே! என் தெய்வமே!! எந்த புள்ளையவாது சைட் அடிச்சா அந்த பொண்ணு பார்க்குறதுக்கு முன்னாடி நீ பார்த்து முறைப்பியே தெய்வமே! என் தெய்வமே!! இந்தியா அணுஆயுதம் வச்சு பாகிஸ்தானை மிரட்டுற மாதிரி,இன்டெர்னல் மார்க்கை வச்சு இந்த பாவியை மிரட்டுனியே தெய்வமே!என் தெய்வமே!! நீங்க இத்தனை பண்ணலும்,என்னைக்காவது பாடத்துல சந்தேகம்ன்னு கேட்டு உன் மனசை சங்கடப்படுதிருப்போமா தெய்வமே! யோசி என் தெய்வமே! Relaxplzz |
Posted: 19 Dec 2014 08:00 AM PST எத்தனையோ பேர் நான் இருக்கிறேன் எனச் சொன்னாலும் அப்பாவை போல் யார் இருக்க முடியும்..? கேட்ட உடனே கொடுப்பதற்கு முடியாததால் தான் அப்பாவை அனுப்பி இருக்கிறாரோ கடவுள்..? எப்படி எப்படி எல்லாமோ தன் பாசம் உணர்த்துவாள் அம்மா ஒரேயொரு கைஅழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார் அப்பா... அம்மா எத்தனையோ முறை திட்டினாலும் உறைத்ததில்லை உடனே உறைத்திருக்கிறது என்றேனும் அப்பா முகம் வாடும் போது.. முன்னால் சொன்னதில்லை பிறர் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன் என்னைப் பற்றி பெருமையாக அப்பா பேசிக்கொண்டிருந்ததை... சொல்லிக் கொடுத்ததில்லை திட்டியதும் இல்லை இல்லை என்றும் சொன்னதுமில்லை வேண்டாம் எனக் கூறியதும் இல்லை இருந்தும் ஏதோ ஒன்றினால் கட்டுப்படுத்தியது அப்பாவின் அன்பு சிறுவயதில் என் கைப்பிடித்து நடைபயில சொல்லிக்கொடுத்த அப்பா என் கரம் பிடித்து நடந்த போது என்ன நினைத்திருப்பார்..? லேசாக என் கால் தடுமாறினாலும் பதறும் அப்பா இன்று நான் தடுமாறிய போது பதறாமல் இருக்கிறார் மீளா துயிலில்... நானும் காட்டியதில்லை அவரும் காட்டியதில்லை எங்கள் பாசத்தை... இருந்தும் காட்டிக் கொடுத்த கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை.. அம்மாவிடம் பாசத்தையும் அப்பாவிடம் நேசத்தையும் இன்றே உணர்த்துங்கள் சில நாளைகள் இல்லாமலும் போகலாம்... - நவீன் ப்ரகாஷ் Relaxplzz ![]() |
Posted: 19 Dec 2014 07:50 AM PST |
Posted: 19 Dec 2014 07:45 AM PST கல்யாணமாகி 25 வருஷத்துல ஒரே ஒரு தடவைதான் உங்க கணவர்கிட்டே சண்டை போட்டீங்களா..ஆச்சரியமா இருக்கே..? ஆமா…அந்த சண்டையில அவர் வீட்டை விட்டுப் போனவர்தான், 25 வருஷமா திரும்பியே வரலியே..! |
Posted: 19 Dec 2014 07:40 AM PST |
Posted: 19 Dec 2014 07:30 AM PST |
Posted: 19 Dec 2014 07:20 AM PST |
Posted: 19 Dec 2014 07:10 AM PST திருமணமானவர்கள் கீழே உள்ள செய்தியைப் படிக்கவேண்டாம்: ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!. வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததைக் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது. அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டார். மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று, இதமாகக் கையைப் பிடித்து, "என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?" என்று கேட்டார். கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா? 20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே? மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது. கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்): அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே? மனைவி: ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்) கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து "மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா? இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?" என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா? மனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன? கணவன் கண்களைத் துடைத்தவாறு: அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்!!! # இதுக்கு அப்புறம் விழுந்த அடி, கேக்கவா வேணும்... :P :P Relaxplzz |
Posted: 19 Dec 2014 07:00 AM PST தயவு செய்து முழுமையாக படியுங்கள் & பகிருங்கள்... ஷாஹித் அப்ரிடி... புயல் வேக மட்டை வீச்சில் பிரசித்தி பெற்றவர். ஜெயசூரியா வேகமாக நூறு ரன்களை அடித்த சாதனையை சில மாதங்களுகுள்ளகவே அந்த சாதனையை 16 வயதில் முறியடித்தவர். அதுவும் தன்னுடைய முதல் அறிமுக தொடரில்... இவர் எந்த அளவிற்கு அதிரடி ஆட்டகாரரோ அதே அளவிற்கு இளகிய மனம் படைத்தவர். இந்தியாவில் கோடி கோடியாக கிரிக்கெட் விளையாடி சம்பாரிதவர்கள் எல்லாம் ஹோட்டல் , கம்பனி என்று தங்களின் தொழிலை மட்டுமே வளமாக்கி கொண்டார்கள். தனக்காக கைதட்டிய ரசிகனை பற்றி ஒரு முறையும் சிந்திக்காதவர்கள். இன்று ஓய்வு பெற்ற பின்பும் எதாவது வருமானம் வருமா என்று ஏங்கி கொண்டு இருக்கிறார்கள்... அந்த வகையில் ஷாஹித் அப்ரிடி தான் வாழ்நாளில் சம்பாரித்த பணத்தை எல்லாம் அவர் பிறந்து வளர்ந்த கிராமத்திற்கு இலவச மல்டி ஸ்பெஷல் மருத்துவமனை, மற்றும் தரமான சாலைகள் போடுவதற்கு செலவு செய்து உள்ளார். இதுவரை அவர் 17 மில்லியன் டாலர்களை அவர் செலவு செய்து உள்ளார். இந்திய மதிப்பில் 77 கோடிக்கும் மேல். ஆனால் இந்தியாவில் இருக்கும் கிரிக்கெட் ஆட்டகாரரர்கள் என்ன செய்ய போகிறார்கள்... ஓய்வு பெற்ற பிறகு கிரிக்கெட் அகடமி தொடங்குவார்கள். அதில் புதிய புதிய ஆட்டகாரரர்கள் நுழைவதற்கு லட்ச கணக்கில் பீஸ் வாங்குவார்கள். அவர்களின் சம்பளத்தில் இருபது சதவீதம் வாழ்நாள் முழுவதும் கமிசன் பெறுவார்கள். இது தானே நடந்து கொண்டு இருக்கிறது... அப்ரிடியின் மனிதநேய செயலை கிரிக்கெட் மைதானத்தில் இருந்து விலகி நின்று பாராட்டுவோம்...! Relaxplzz ![]() |
Posted: 19 Dec 2014 06:50 AM PST |
Posted: 19 Dec 2014 06:40 AM PST |
Posted: 19 Dec 2014 06:30 AM PST |
Posted: 19 Dec 2014 06:20 AM PST |
Posted: 19 Dec 2014 06:10 AM PST எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்... இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்... ஆண் என்பவன் யார்.....? ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான். அவன் விட்டுக்கொடுத்த லை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் சாக்லெட்டைதன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான். பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி தியாகம் செய்கிறான். தன் மனைவி மற்றும் குழந்தைகள் மீதான அன்பை இரவுகளில் நீண்ட நேரம் வேலை செய்வதன் மூலம் தியாகம் செய்கிறான். அவன் அவர்களின் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் உருவாக்குகிறான் ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறான் . எனவே அவன் தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக எந்தவித குறையும் சொல்லாமல் தன் இளமையை தியாகம் செய்கிறான். அவன் மிகவும் கஷ்டப்பட்டாலும் , தன் தாய், மனைவி, தன் முதலாளி ஆகியோரின் இசையை (திட்டுகள்) கேட்க வேண்டியுள்ளது. எல்லா தாயும்,மனைவியும் முதாலாளியும் அவனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கின்றனர். இறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக விட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதன் மூலம் அவன் வாழ்க்கை முடிகிறது. பெண்கள உங்கள் வாழ்வில் ஒவ்வொரு ஆணையும் மதியுங்கள். அவன் உங்களுக்காக என்ன தியாகம் செய்துள்ளான் என்பதை நீங்கள் எப்போதும் அறியப் போவதில்லை. அவனுக்கு தேவைப்படும்போது உங்கள் கரங்களை நீட்டுங்கள் அவனிடமிருந்து இருமடங்காக நீங்கள் அன்பை பெறுவீர்கள். ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள். அமைதி கொள்வோம். இது ஆண்களின் அன்பு வேண்டுகோள்...! Relaxplzz |
Posted: 19 Dec 2014 06:00 AM PST ஆண்கள் கவனத்துக்கு !!! 1. முட்டாள் கணவன் மனைவியிடம் வாயை மூடு என்பான், புத்திசாலிக் கணவனோ கண்ணே உன் உதடுகள் சேர்ந்திருந்தால் நீ தேவதையாய் தெரிகிறாய் என்பான். 2. மதுவை நிறுத்துவதற்கு எளிய வழி இது தான். திருமணத்துக்கு முன் எப்போதெல்லாம் சோகமாய் இருக்கிறாயோ அப்போது மது அருந்து. திருமணத்துக்குப் பின் எப்போதெல்லாம் ஆனந்தமாய் இருக்கிறாயோ அப்போதெல்லாம் மது அருந்து. 3. விரைவான தகவல் தொடர்புக்கு செய்தியை பெண்ணிடம் சொல். அதி விரைவு சேவைக்கு 'இதை யாரிடமும் சொல்லாதே' என்னும் அடைமொழியுடன் சொல். 4. ஒரு பொண்ண சந்தோஷபடுத்த BEAUTIFUL னு சொல்லனும்.... ஒரு ஆண சந்தோஷபடுத்த ஒரு FULL னு சொன்னா போதும்... 5. ஒரு மாபெரும் தவறு செய்கையில் உலகமே வாழ்த்துமெனில் அதை திருமணம் என்க. 6. லைஃப் ல ஒரு அழகான பொண்ண லவ் பன்றத விட நம்ம லைஃப்ப அழகா வச்சிருக்கிற பொண்ண லவ் பன்றது தான் ரொம்ப நல்லது... 7. எல்லா ஆண்களுடைய ஆசைகளில் ஒன்று..."தன்னுடன் மட்டுமே எல்லா பெண்களும் பழக வேண்டும்." என்று.!!! 8. எல்லா பெண்களுடைய ஆசைகளில் ஒன்று.."தன்னை மட்டுமே எல்லா ஆண்களும் ரசிக்க வேண்டும்." என்று.!! 9. கல்யாணமான புதுசுல பொண்டாட்டி விதவிதமா சமைச்சி போடுறதோட அர்த்தம் என்னான்னு தெரியுமா? அய்யே தெரிய்லையே புருஷனை குண்டாக்கிட்டா.. அந்த சனியன எந்த பிகரும் திரும்பி பாக்காதுங்கிறதுதான்....!!! உசாரய்யா உசாரு.. . 10. ஏன் அரசு ஆண்கள் இரண்டு பெண்களைத் திருமணம் செய்யக் கூடாது என்கிறது ? அடப்போப்பா… ஒரு தப்புக்கு இரண்டு தண்டனை வழக்கத்தில் இல்லை ! :P :P Relaxplzz ![]() |
Posted: 19 Dec 2014 05:50 AM PST |
Posted: 19 Dec 2014 05:40 AM PST |
Posted: 19 Dec 2014 05:30 AM PST |
Posted: 19 Dec 2014 05:20 AM PST |
Posted: 19 Dec 2014 05:10 AM PST ஆபிரஹாம் லிங்கன் முதன் முதலாகத் தேர்தலை சந்தித்து, தோல்வியடைந்த நேரத்தில், பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார் ஆபிரஹாம் லிங்கன். கூட்டம் முடிந்ததும், "உங்களில் சொர்க்கத்துக்குச் செல்ல விரும்புவர்கள் மட்டும் கையை உயர்த்துங்கள்" என்றார் பாதிரியார். எல்லோரும் கையைத் தூக்க, ஆபிரஹாம் லிங்கன் மட்டும் பேசாமல் நின்றார். "ஆபிரஹாம்! நீ எங்கே போவதாக உத்தேசம்?" என பாதிரியார் கேட்க, தோல்வி அடைந்திருந்த அந்த மன நிலையிலும், "நான் செனட் உறுப்பினராகப் போகிறேன்" என்று உறுதியான குரலில் சொன்னார் அபிரஹாம். "நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்" என புன்னகையுடன் ஆசி வழங்கினார் பாதிரியார். 1809ம் வருடம் அமெரிக்காவின் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்த லிங்கனை, "தோல்விகளின் செல்லக் குழந்தை" என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தொடர் தோல்விகள் அவரைத் துரத்திக் கொண்டே இருந்தன. பிறந்த சில வருடங்களிலேயே தாயை இழந்தார். ஒரு கடையில் எடுபிடி வேலை பார்த்துக் கொண்டே இரவு நேரங்களில் மட்டும் பள்ளிப் பாடத்தை ஆர்வத்துடன் படித்தார். இளைஞனாகி, பக்கத்து நகருக்குப் போனபோது, அங்கே அடிமைகளை வியாபாரம் செய்யும் மனிதச் சந்தையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கறுப்பர்களின் அடிமை வாழ்க்கையைப் பற்றி அவர் கேள்விப்பட்டு இருந்தாலும் காய்கறி போல மனிதர்கள் விற்கப்படுவதை நேரில் கண்டதும் ரத்தம் சூடேற, லிங்கனுக்கு ஒரு புது லட்சியம் பிறந்தது. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் தான் இந்த அவலத்தை அகற்ற முடியும் என்று தெரிந்தும், அவசரமாக தனது 22வது வயதில் ஒரு நகராட்சி தேர்தல் வேட்பாளராக களம் இறங்கி, படுதோல்வி அடைந்தார். இந்த நேரத்தில், சொந்தமாகத் தொழில் தொடங்கி, அதில் பெரும் கடனாளியாக மாறியிருந்தார். சோர்ந்து போயிருந்த லிங்கனை ஒரு போராளியாக மாற்றியது, அவரது வளர்ப்புத் தாய் சாராபுஷ். 'ஆட்சிப் பொறுப்புக்கு வரவேண்டும் என்றால், ஆசைப்படுவதைப் பெறுவதற்கான தகுதிகளை முதலில் வளர்த்துக்கொள்'. "நீ எதுவாக விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்!" என்றார் சாரா புஷ். பாதிரியார் சொன்ன அதே வார்த்தைகள்! இப்போது லிங்கனுக்குத் தன் இலக்குப் புரிந்தது. மனதில் தெளிவு பிறந்தது. அடிமை வியாபாரத்தை சட்டம் போட்டுத்தானே ஒழிக்க முடியும்? எனவே, முழுமூச்சுடன் சட்டம் படிக்கத் தொடங்கினார் லிங்கன். மக்கள் மனதை மாற்றினால் மட்டுமே சட்டத்தை சுலபமாக அமல்படுத்த முடியும் என்பதால், சட்டப்படிப்புடன் பேச்சுத் திறமையையும் வளர்த்துக் கொண்டார். அடிமை ஒழிப்பைப் பற்றி ஊர் ஊராகக் கூட்டம் போட்டுப் பேசினார். ஒரு தலைவருக்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டு, 1834ல் நடந்த நகராட்சி உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அதன்பின் நகராட்சித் தலைவர், மாமன்ற உறுப்பினர், செனட் உறுப்பினர், உபஜனாதிபதி, எனப் பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட்டு சில வெற்றிகளையும், பல தோல்விகளையும் சந்தித்து 1860ம் வருடம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். ஆம், எதுவாக மாற நினைத்தாரோ, அதுவாகவே ஆனார் லிங்கன்!. இல்வாழ்விலும் அவருக்குத் தோல்விகள்தான்! 1835ல் அவரின் காதலி 'ஆனி' விஷக் காய்ச்சலால் மரணம் அடைந்தார். 33வது வயதில் மேரியுடன் திருமணம் முடிந்து நான்கு குழந்தைகள் பிறந்தன. மூன்று குழந்தைகள் சிறுவயதிலேயே மரணமடைந்தார்கள். மனைவிக்கு மனநோய் இருந்தது. இத்தனைத் தோல்விகளையும் மன உறுதியோடு எதிர்கொண்டதால் தான், லிங்கன் வெற்றி பெற முடிந்தது. அமெரிக்க ஜனாதிபதி ஆனதும், அதிரடி நடவடிக்கை எடுத்து அடிமை அவலத்தை ஒழித்து, மாகாணங்களை ஒன்று சேர்த்து, அமெரிக்காவைத் தலை நிமிரவைத்தார் லிங்கன். அந்தச் சாதனையால்தான், அடுத்த முறையும் அவரே மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1865ல் நாடகம் பார்த்துக் கொண்டு இருந்தபோது ஒரு நிறவெறியனால் சுடப்பட்டு மரணம் அடைந்தார் லிங்கன். மணவாழ்க்கை பற்றி லிங்கன் கூறியது - மணவாழ்க்கை லிங்கனுக்கு அவ்வளவு உவப்பாக இல்லை. பிற்காலத்தில் தம் இல்லற வாழ்க்கை பற்றி குறிப்பிடும் போது "மண வாழ்க்கை மலர்ப் படுக்கை அல்ல; போர்க்களம்" என்று குறிப்பிட்டார். "நீ எதுவாக மாற விரும்புகிறாயோ அதுவாக மாறுவாய்" என்பது ஆபிரஹாம் லிங்கனுக்கு மட்டுமல்ல… நம்பிக்கையைத் தளரவிடாமல், லட்சியத்துக்காக விடாப்பிடியாக போராடும் நம்மைப்போன்ற ஒவ்வொருவருக்கும் அது வெற்றி திருமந்திரம். (y) (y) Relaxplzz |
Posted: 19 Dec 2014 05:00 AM PST எப்போது கிடைக்கும் சுதந்திரம் ??? "அ"னாதை இல்லங்கள் அழிக்கப்படும்போது "ஆ"தரவற்றோர்கள் அரவணைக்கப்படும்போது "இ"ல்லாதவனுக்கு இருப்பிடம் கிடைக்கும்போது "ஈ"கைப்பண்பு பணம் படைத்தவன் நெஞ்சில் துளிர்விடும்போது "உ"ணவில்லா ஏழையின் பசி ஆரும்போது "ஊ"ருக்குப்பாடுபட உள்ளம் முன்வரும்போது "எ"ழில் பொங்கும் இயற்கை அழிக்கப்படாதபோது "ஏ"ழைகளுக்கும் படிப்பு ஏமாற்றமில்லாமல் கிடைக்கும்போது "ஐ"ந்தாண்டு ஆட்சியும் மக்களுக்காக மட்டுமே நடத்தப்படும்போது "ஒ"துக்கப்பட்ட மக்கள் ஒருபடியாவது முன்னேற்றப்படும்போது "ஓ"லைக்குடிசையின் கூரை ஓட்டைகளில் ஒன்றாவது அடைக்கப்படும்போது "ஔ"வை பாட்டிக்கு தரப்படும் அதே மரியாதை நம் பாட்டிக்கும் தரப்படும்போது "ஃ"அஃறிணையையும் உயர்திணையாய் மதித்துப்பார்க்கும்போது அதுதான் முழுச்சுதந்திரம் தீர்க்கமான சுதந்திரம் Relaxplzz ![]() |
Posted: 19 Dec 2014 04:50 AM PST |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment