Relax Please: FB page daily Posts |
- வேண்டுதல் பலித்தால், கற்பூரம் ஏற்றுவதைவிட , உண்டியலை நிரப்புவதைவிட , உயர்ந்தது,...
- :P Relaxplzz
- உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான "வாரன் பபேட்" நமக்கு கூறும் அறிவுரை......
- ஆயிரங்கால் மண்டபம் ... ஆயிரம் தூணிலும் ஆயிரம் கலை நயம். நம் முன்னோர்களின் திறமை...
- "அந்த டாக்டர் பெரிய மல்டீ ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் ஆக இருக்கலாம்..அதுக்காக"..?,... "...
- " கொஞ்ச நேரம் என் சிங்கத்தை பார்த்துகிறிங்களா?... ஒரு வேலை இருக்கு... போய்ட்டு...
- :) Relaxplzz
- :) Relaxplzz
- உங்கள் குடும்பம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியது: 1. உங்கள் துணைய...
- தெரிந்துகொள்வோம் * நத்தைகளில் 80 ஆயிரம் வகைகள் உள்ளன. * தன் காதை நாவால் சுத்த...
- :D Relaxplzz
- அருமையான பேப்பர் ஆர்ட்.. (y)
- :) Relaxplzz
- ஒரு பெண் தனக்கு நடந்த சோகக் கதையை இங்கே விவரிக்கிறாள்.. அவளுடன் சேர்ந்து நாமும்...
- :D Relaxplzz
- 'அனுபவம் என்பதே நான்' "ஆண்டவனின் விளக்கம்" பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்...
- முடியும் வரை முயற்சி செய்யுங்கள்.! உங்களால் முடியும் வரை அல்ல..! நீங்கள் நினைத்த...
- மனைவி : ''என்னங்க! நேத்து ராத்திரி நீங்க எனக்கு பட்டுப் புடவை வாங்கித் தர்றா மாத...
- அருமையான ஓவியம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)
- :) Relaxplzz
- "தாயின் சமயோஜிதம்" தாய் வயலில் வேலை செய்து கொண்டிருந்தாள். அவள் குழந்தை பக்கத்த...
- உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த...
- ஜப்பானில் உள்ள மட்சுயாமா நகரில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் நீச்சல் போட்டி, பெண்கள் ப்ரீ...
- வாழை பழ "பஜ்ஜி" [ ரோஸ்ட் ] பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)
- :) Relaxplzz
- :P Relaxplzz
- நாம் சாப்பிடும் எந்த உணவுப் பொருளுக்கும் ஒரு சுவை உண்டு. அறுவகைச் சுவை என்ன என்ன...
- இந்த பசுமை சூழ் சாலையை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y) இடம்: பார்வதிபுரம் - ந...
- :) Relaxplzz
- "ஆராய்ந்து பார்க்காத ஒரு முட்டாள்தனம்" ஒரு இளஞ்ஜோடியருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள...
Posted: 06 Apr 2015 08:50 AM PDT |
Posted: 06 Apr 2015 08:20 AM PDT |
Posted: 06 Apr 2015 08:10 AM PDT உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான "வாரன் பபேட்" நமக்கு கூறும் அறிவுரை..... * * * 1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள். * (ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றும்.) * * * 2. தேவையில்லாத பொருள்களை வாங்கினால், விரைவிலேயே தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும். * (ஆடம்பரத்தை தவிர்த்திடுங்கள். தேவையில்லாத ஆடம்பரம் நமது சந்ததியை தெருவில் நிறுத்திவிடும்.) * * * 3.சேமித்த பிறகு இருக்கும் மீதத்தை தான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தை சேமிக்கக்கூடாது. * (சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானது.) * * * 4. ஆற்றின் ஆழத்தை இரண்டு கால்களாலும் அளவிடக்கூடாது.... * (எதிலும் முன்னெச்சரிக்கை அவசியம்.) * * * 5. அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே... * (நஷ்டம் ஏற்பட்டாலும், வாழ்க்கையை இழக்கும் அளவிற்கு இருக்ககூடாது என்பதற்கான சிந்தனை.) * * * 6. நேர்மை ஒரு விலை மதிப்பற்றது. அது அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்.... * (மிக அவசியமான ஒன்று. எல்லோரையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது.) மேற்கூறிய அனைத்jதும் ஒவ்வொரு மனிதன் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்று... Relaxplzz |
Posted: 05 Apr 2015 10:56 PM PDT ஆயிரங்கால் மண்டபம் ... ஆயிரம் தூணிலும் ஆயிரம் கலை நயம். நம் முன்னோர்களின் திறமையை பாராட்டாமல் இருக்க முடியாது (y) ![]() சும்மா... சும்மா... 4 |
Posted: 05 Apr 2015 10:45 PM PDT "அந்த டாக்டர் பெரிய மல்டீ ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் ஆக இருக்கலாம்..அதுக்காக"..?,... "இப்போ என்ன"?... "அவர் வீட்டு கல்யாணத்துலே, டையபீடிஸ் பந்தி, பிளட்பிரஷர் பந்தி, கொலஸ்ட்ரால் பந்தி, அல்சர் பந்தி ன்னு தனித்தனியா வைக்கறது கொஞ்சம் ஓவரா இருக்கு...!.." |
Posted: 05 Apr 2015 10:40 PM PDT |
Posted: 05 Apr 2015 10:31 PM PDT |
Posted: 05 Apr 2015 10:21 PM PDT |
Posted: 05 Apr 2015 10:10 PM PDT உங்கள் குடும்பம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியது: 1. உங்கள் துணையிடம் அன்பாகப் பேசுவது மற்றும் அக்கறை காட்டுவது. 2. வீட்டை அழகாக வைத்துக் கொள்வது. 3. குறை கூறாமல் இருப்பது. 5. சொன்னதைச் செய்து கொடுப்பது. 6. இன்முகத்துடன் இருப்பது. 7. முன் மாதிரியாக நடந்து கொள்வது. 8. உங்கள் துணையை முழுமையாக நம்புவது. 9. ஒன்றாக பயணம் போக விரும்புவது. 10. பணிவு. 11. எதையும் எடுத்த, உரிய இடத்தில் வைப்பது. 12. ஒருவருக்கொருவர் வேலைகளில் உதவுவது மற்றும் விட்டுக் கொடுப்பது. 13. உங்கள் துணை வருந்தும் போது ஆறுதல் கூறுவது. 15. சுறுசுறுப்பு. 16. சிறிய விசயங்களைக் கூடப் பாராட்டுவது. 17. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது. 18. நகைச்சுவையாகப் பேசுவது. 19. அதிகமாக வேலை செய்ய விரும்புவது. 20. செலவுகளைக் குறைக்க ஆலோசனை கூறுவது. 21. நேரம் தவறாமை. 22. தற்பெருமை பேசாமல் இருப்பது. 23. தெளிவாகப் பேசுவது. 24. நேர்மையாய் இருப்பது. 25. உங்கள் துணையின் மனதைப் புண்படுத்தாமல் இருப்பது. - Senthil Kumar Palani Relaxplzz |
Posted: 05 Apr 2015 10:01 PM PDT தெரிந்துகொள்வோம் * நத்தைகளில் 80 ஆயிரம் வகைகள் உள்ளன. * தன் காதை நாவால் சுத்தம் செய்யும் விலங்கு ஒட்டகம். * பென்குயினால் பறக்க முடியாது. ஆனால் 6 அடி உயரம் வரை குதிக்கும். * 23 நொடிகள் மட்டுமே பறக்கும் திறனுடைய பறவை கோழி. * யானையின் துதிக்கையில் 4 லட்சம் தசைகள் உள்ளன. * சிப்பியில் முத்து விளைய 15 ஆண்டுகள் ஆகும். * திருக்குறளில் பயன்படுத்தாத ஒரே உயிரெழுத்து ஒள. * மிக நீண்ட நாள் உயிர் வாழும் விலங்கு ஆமை. * தாய்லாந்தில் உள்ள ராயல் டிராகன் என்ற உணவகம் உலகில் மிகப் பெரியது. * சிறுத்தைகள் மணிக்கு 76 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும். * மரங்கொத்தி பறவைகள் ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தைக் கொத்துகின்றன. * ஜவஹர்லால் நேரு சிறையில் இருந்த காலத்தில் தனது மகள் இந்திராவுக்கு 930 கடிதங்கள் எழுதினார். * எறும்புகள் தனது மோப்ப சக்தியை இழந்துவிட்டால் இறந்துவிடும். * வண்ணத்துப் பூச்சி கால்களால் ருசியை உணர்கிறது. * பாம்புக் கடி விசமுறிவு மருந்தின் பெயர் ஆன்டி வெனின். * விலங்குகளில் மிகச் சிறிய இதயத்தைக் கொண்டது சிங்கம். * 1லிட்டர் கடல் நீரில் 35 கிராம் உப்பு உள்ளது. * சோதனைக் குழாய் மூலம் முதல் எருமைக் கன்றை உருவாக்கிய நாடு இந்தியா. * தொலைபேசி, வானிலை, வானொலி இந்த மூன்றிற்குமாக ஒரே செயற்கைக்கோளை உலகில் முதன் முதலாக அனுப்பிய நாடு இந்தியா.! Relaxplzz ![]() தகவல் துணுக்குகள் |
Posted: 05 Apr 2015 09:52 PM PDT |
Posted: 05 Apr 2015 09:40 PM PDT |
Posted: 05 Apr 2015 09:31 PM PDT |
Posted: 05 Apr 2015 09:20 PM PDT ஒரு பெண் தனக்கு நடந்த சோகக் கதையை இங்கே விவரிக்கிறாள்.. அவளுடன் சேர்ந்து நாமும் பயணிப்போம்.. நான் எனது அலுவலக மீட்டிங்கை முடித்துக் கொண்டு வெளியே வந்தேன். வழக்கம் போல எனது பையில் கார் சாவியை தேடினேன். என்னால் ஆன மட்டும் பையின் அனைத்து மூலை முடுக்குகளையும் தேடிவிட்டேன்… இல்லைவே இல்லை என்று சொல்லிவிட்டன கை விரல்கள். அந்த விரல்களுக்கு கண்ணில்லை என்று நினைத்து பையை ஒரு முறை கண்களால் துளாவினேன். இல்லை கண்களும் அதே பதிலைத் தான் சொன்னது. மூளையில் திடீரென ஒரு பல்ப் எரிந்தது… ஒரு வேளை காரிலேயே சாவியை விட்டு விட்டு வந்திருப்பேனோ.. (அய்யோ எத்தனையோ முறை காரில் சாவியை வைத்து விட்டு வறாதே என்று கணவர் திரட்டியுள்ளார். காரிலேயே சாவி இருந்தால் சாவி தொலையாது என்பது எனது நினைப்பு. ஆனால் காரே தொலைந்துவிடும் என்பது அவரது தரப்பு).. சரி இறுதியாக ஓடிச் சென்று பார்க்கிங்கில் தேடினேன்.. அய்யோ எனது கணவர் தரப்பு தான் சரி.. காரை காணவில்லை.. ஒரு நிமிடம் மூளையில் எரிந்து கொண்டிருந்த பல்ப் பளிச்சென்று எரிந்து வெடித்தது. என்ன செய்வது என்று தெரியாமல், காவல்துறைக்கு போன் செய்து, என் பெயர், விலாசம், கார் எண், காரை பார்க் செய்த இடம், காணாமல் போன நேரம் எல்லாவற்றையும் விரிவாகக் கூறினேன். காவலரும் உடனடியாக நான் இருக்கும் இடத்துக்கு வருவதாகக் கூறினார். சற்று ஆஸ்வாசப்படுத்திக் கொண்டு எனது கணவருக்கு போன் செய்ய முடிவு செய்தேன். போனை எடுத்து கணவருக்கு ரிங் செய்தேன். எடுத்த வேகத்தில், என்னங்க கார் சாவியை காரிலேயே வைத்து விட்டு சென்றுவிட்டேன். வந்து பார்த்தால் காரைக் காணவில்லை என்று கொட்டினேன். சற்று நேர மௌனத்துக்குப் பிறகு இடியட் என்று மட்டும் காட்டமாக பதில் வந்தது. நானே ஆரம்பித்து… மன்னிச்சிடுங்க.. என்ன வந்து அலுவலகத்தில் இருந்து கூட்டின் போறீங்களா என்று கேட்டேன். அதற்கு அவரிடம் இருந்து வந்த பதில் என்னை சுக்குநூறாக்கியது… "ஹேய்.. இன்று காலை நான் தான் உன்னை காரில் கொண்டு வந்து அலுவலகத்தில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தேன். இங்கு போலிஸ் காரர் உன் காரை திருடிவிட்டதாக என்னை பிடித்து வைத்துள்ளார்.. அவரிடம் உண்மையை விளக்கிவிட்டு உன் அலுவலகத்துக்கு வந்து உன்னை அழைத்துச் செல்கிறேன்" என்றாரே பார்க்கலாம். :O :O Relaxplzz |
Posted: 05 Apr 2015 09:15 PM PDT |
Posted: 05 Apr 2015 09:00 PM PDT 'அனுபவம் என்பதே நான்' "ஆண்டவனின் விளக்கம்" பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான்! படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான்! அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் அறிந்து பாரென இறைவன் பணித்தான்! அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன் அளித்துப் பாரென இறைவன் பணித்தான்! பாசம் என்பது யாதெனக் கேட்டேன் பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன் மணந்து பாரென இறைவன் பணித்தான்! பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன் பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்! முதுமை என்பது யாதெனக் கேட்டேன் முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! வறுமை என்பது யாதெனக் கேட்டேன் வாடிப் பாரென இறைவன் பணித்தான்! இறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் இறந்து பாரென இறைவன் பணித்தான்! 'அனுபவித்த்டேதான் அறிவது வாழ்க்கையெனில் ஆண்டவனே நீ என்' எனக் கேட்டேன்! ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி 'அனுபவம் என்பதே நான்' தான் என்றான்! - கண்ணதாசன் Relaxplzz ![]() |
Posted: 05 Apr 2015 08:50 PM PDT |
Posted: 05 Apr 2015 08:45 PM PDT மனைவி : ''என்னங்க! நேத்து ராத்திரி நீங்க எனக்கு பட்டுப் புடவை வாங்கித் தர்றா மாதிரி கனவு வந்தது...'' கணவன் : ''எனக்குக் கூட நீ உன்னோட தங்க செயினை அடகு வைக்க கழட்டித் தர்றா மாதிரி கனவு வந்தது...'' மனைவி : ???? :O :O |
Posted: 05 Apr 2015 08:40 PM PDT |
Posted: 05 Apr 2015 08:27 PM PDT |
Posted: 05 Apr 2015 08:15 PM PDT "தாயின் சமயோஜிதம்" தாய் வயலில் வேலை செய்து கொண்டிருந்தாள். அவள் குழந்தை பக்கத்தில் மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தது. வேலை மும்மரத்தில் தாய் சிறிதுநேரம் குழந்தையைக் கவனிக்க வில்லை. திடீரென ஞாபகம் வந்து பார்த்தபோது குழந்தை கைபிடியில்லாத ஒரு கிணற்றின் விளிம்பருகே நின்று கொண்டிருந்ததைக் கவனித்தாள். அடுத்து ஒரு அடி எடுத்து வைத்தாலும் குழந்தை கிணற்றுக்குள் விழுந்துவிடும்.கூட இருந்தவர்கள் பதைபதைத்தார்கள். தாய் சிறிது கூட யோசிக்காமல் கொஞ்ச தூரம் மெதுவாக நடந்துசென்று,குழந்தையைப் பார்த்து,''பாப்பா,அம்மா வீட்டுக்குக் கிளம்பி விட்டேன். நீ வருகிறாயா, இல்லையா?'' என்று சப்தம் போட்டு சொன்னாள் . அடுத்த நிமிடம் குழந்தை திரும்பிதாயைப் பார்த்து ஓடி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டது. தாயன்பு தானே அந்த இக்கட்டானநேரத்தில் சமயோசிதமாக சிந்திக்க வைத்தது.. :) Relaxplzz |
Posted: 05 Apr 2015 08:04 PM PDT உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி.. நண்பர்களே இந்த செய்தியை நீங்கள் படித்தது மட்டுமின்றி மற்ற (குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும்) பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து உதவுங்கள். தற்போது நிலவி வரும் பருவ நிலா மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம்(வெப்பம்) ஏற்படுகிறது, இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது, இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது, இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வாயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் நிகழ்வுகள் நிகழ்கிறது, இதனை சரி செய்ய நம் சித்த பெருமைக்க அன்றைய காலகட்டத்திலேயே ஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை உங்களுக்காக கொடுக்கிறோம். தேவையான பொருள்கள் : 1.நல்லெண்ணெய் 2.பூண்டு 3.மிளகு செய்முறை: நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும், எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறினதும் எண்ணையை காலின்(இரு கால்) பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும், 2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும், இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும், 2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது, சளி ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம், மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள். இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும். அந்த காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம். ஏனெனில் இதனை செய்வதன் மூலம் ஆண்களின் விந்து விருத்தி அடைந்து மூன்று மாதத்தில் குழந்தை பிறக்குமாம், இதனை IT (18 வயதுக்கு மேல்) துறையில் வேலை செய்பவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் 1 நிமிடத்திற்கு எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும். மேலும் சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை இதனை செய்யலாம். நண்பர்களே இந்த செய்தியை நீங்கள் படித்தது மட்டுமின்றி மற்ற (குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும்) பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து மகிழுங்கள். Relaxplzz ![]() இயற்கை வைத்தியம் - 2 |
Posted: 05 Apr 2015 07:50 PM PDT |
Posted: 05 Apr 2015 07:40 PM PDT |
Posted: 05 Apr 2015 07:32 PM PDT |
Posted: 05 Apr 2015 07:19 PM PDT |
Posted: 05 Apr 2015 07:10 PM PDT நாம் சாப்பிடும் எந்த உணவுப் பொருளுக்கும் ஒரு சுவை உண்டு. அறுவகைச் சுவை என்ன என்ன? #காரம்: உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும். கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது. #கசப்பு: உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சளியைக்கட்டுப்படுத்தும். கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவைமிகுதியாய் உள்ளது. #இனிப்பு: உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும். கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது. #புளிப்பு: இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக்கூட்டும். கிடைக்கும் உணவுப் பொருட்கள்: எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது. #துவர்ப்பு: இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது. கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது. #உப்பு: ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும் கிடைக்கும் உணவுப் பொருட்கள்: கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது. Relaxplzz |
Posted: 05 Apr 2015 07:00 PM PDT |
Posted: 05 Apr 2015 06:56 PM PDT |
Posted: 05 Apr 2015 06:44 PM PDT "ஆராய்ந்து பார்க்காத ஒரு முட்டாள்தனம்" ஒரு இளஞ்ஜோடியருக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை பாக்கியமே இல்லை. அதனால் அவர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்தனர். ஒரு நாள் அழகிய நாய் குட்டியை வாங்கி வந்தனர், அதை தங்கள் மகன் போல வளர்க்க ஆரம்பித்தனர். அந்த நாய் குட்டியும் அவர்களுடன் விளையாடி மகிழ்ந்தது.ஒரு முறை திருடன் அவர்கள் வீட்டிற்கு வந்தபோது தன்னுடைய எஜமானருக்கு விசுவசாமாக நடந்து கொள்ள தன் உயிரையும் பொருட்படுத்தாமால் அவர்களை விரட்டியது. நாட்கள் உருண்டோடின அந்த குட்டி நாய் நல்ல பெரிய நாயாக வளர்ந்தது. 7 வருடம் கழித்து அந்த தம்பதியனருக்கும் ஒரு மகன் பிறந்தான். இப்போதெல்லாம் அந்த குழந்தையுடன் தான் அந்த தம்பதியினர் நேரத்தை செலவிடுகின்றனர் .நாய் இப்போதெல்லாம் தனிமையிலே தன் பொழுதை கழிக்க வேண்டியதாயிற்று. அவர்கள் வளர்த்த நாய்க்கு அந்த குழந்தை மேல் பொறாமை உண்டாயிற்று ஒரு நாள் அந்த தம்பதியினர் குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்து விட்டு மாடியில் நின்று பேசி கொண்டு இருந்தனர். சிறிது நேரம் கழித்து நாயின் சத்தம் கேட்டதும் மேலே இருந்து இறங்கி ஓடி வந்தனர். படி அருகில் நாய் வாயில் ரத்தக்கறையுடன் நின்று கொண்டு இருந்தது.இதைப் பார்த்ததும் அதன் எஜமானர் ஓடி சென்று துப்பாக்க்கியை எடுத்து வந்து நாயை சுட்டு வீழ்த்தினார். பிறகு வீட்டின் உள்ளே சென்று பார்த்த அவர்களுக்கு ஒரே அதிர்ச்சி.குழந்தையின் அருகில் நல்ல பாம்பு இரண்டு துண்டுகளாக கிடந்தது .குழந்தையை காப்பாற்ற அவர்கள் வளர்த்த நாய் அந்த பாம்பை கடித்து போட்டுள்ளது, அந்த பாம்பின் ரத்தக் கறை தான் நாயின் வாயில் இருந்தது என்று அப்போது தான் அவர்களுக்கு புரிந்தது. தங்கள் குழந்தையை காப்பாற்றிய நாயை அநியாயமாக கொன்று விட்டனே என்று கதறி அழுதனர். முன்கோபம் முட்டாள் தனத்தில் போய் முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்து காட்டு. எப்ப நாம ஒரு முடிவு எடுப்பது என்றாலும் நன்றாக ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். Relaxplzz ![]() நெகிழ வைத்த நிஜங்கள் - 2 |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment