Relax Please: FB page daily Posts |
- குட்நைட் செல்லம்ஸ் <3
- இந்த பசுமையை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y) இடம்: நாகர்கோவில் - திருவனத்தபுர...
- அருமை :)
- Relaxplzz
- உங்கள்யெல்லாம்...ம்..ம்
- சற்றும் ஓய்வெடுக்காமல் உழைக்கும் சாலைக்கு நிழல் கொடுத்து உதவுகிறது சாலையோர மரம்
- பாட்டி வைத்தியம் :- 1. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்ல...
- எவ்ளோ பிரச்சனை லைஃப் ல வந்தாலும் நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான 3 விஷயங்கள் ....
- இந்த குழந்தையை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- #செருப்படி
- இராணுவத்தில் உயர் அதிகாரி போஸ்ட்டுக்கு பெண்களுக்கான இன்டெர்வியூ நடைபெற்றுக் கொண்...
- கிரேக்க அறிஞர் பிளாட்டோவிடம் செல்வந்தர் ஒருவர் வந்தார். “பெருந்தகையீர், என் மகன...
- ஹா ஹா ஹா.. உண்மைதான.. :P :P
- :P :P Relaxplzz
- Relaxplzz
- இன்று தொலைக்காட்சி பார்த்தவர்களுக்கு இது பழைய செய்தி... பார்க்காதவர்களுக்கு இது...
- சிகரெட் இல்லாமல் ஒருவரால் வாழமுடியும்... ஆனாலும், சிகரெட் உற்பத்தியாளர் பணக்காரர...
- ஒட்டிப்பிறந்த இரட்டை பெண்களுக்கு 45 வயதில் கிடைத்த காதலன்..
- யதார்த்தம்
- ட்ரெய்னியாக ஒரு பெரிய கம்பெனியில் ஒருவன் வேலைக்கு சேர்ந்தான்.சேர்ந்ததும் மிதப்பு...
- ஒரு சமயம் காந்திஜியும் காகா கலேல்கரும் கர்நாடக மாநிலத்தில் உள்ள “ஷிமோகா“ என்ற இட...
- வடிவேலு வசனம் ஒரு சின்ன கற்பனை கரண்ட் : வரும் ஆனா வராது... நதிநீர் பங்கீடு : ப...
- :)
- # ஆத்திசூடி ## Share to friends 1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue....
- வில்லேஜ் விஞ்ஞானி :P :P
- :)
- இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம். ……. மார்க்கப்பொலோ...
- வாழ்க்கை என்பது கையில் இருக்கும் பட்டாம்பூச்சி போல லேசாக பிடித்தால் பறந்து விடும...
- Relaxplzz
- உனக்கு என்னிடம் ரொம்ப பிடித்த விஷயங்கள் என்ன? அஞ்சு விஷயம் ரொம்ப பிடிக்கும். அ...
Posted: 20 Nov 2014 10:00 AM PST |
Posted: 20 Nov 2014 09:50 AM PST |
அருமை :) Posted: 20 Nov 2014 09:40 AM PST |
Posted: 20 Nov 2014 09:31 AM PST |
Posted: 20 Nov 2014 09:20 AM PST |
Posted: 20 Nov 2014 09:10 AM PST |
Posted: 20 Nov 2014 09:00 AM PST பாட்டி வைத்தியம் :- 1. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். 2. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது. 3. கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும். 4. எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும். நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 5. எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும். 6. கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும். 7. எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும். 8. கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும். 9. தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும். 10. வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். Relaxplzz ![]() |
Posted: 20 Nov 2014 08:50 AM PST எவ்ளோ பிரச்சனை லைஃப் ல வந்தாலும் நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான 3 விஷயங்கள் . . . . . . . . . . . . . . . . . . . . 1) காலைல சாப்பிடனும் 2) மதியம் சாப்பிடனும் 3) நைட் கண்டிப்பா சாப்பிடனும்.. # வளரணுமில்ல.... :P :P Relaxplzz |
Posted: 20 Nov 2014 08:40 AM PST |
#செருப்படி Posted: 20 Nov 2014 08:29 AM PST |
Posted: 20 Nov 2014 08:15 AM PST இராணுவத்தில் உயர் அதிகாரி போஸ்ட்டுக்கு பெண்களுக்கான இன்டெர்வியூ நடைபெற்றுக் கொண்டிருந்தது. ப்ல சோதனைகளுக்குப் பிறகு மூவர் இறுதிக்கட்ட இண்டெர்வியூவிற்கு செலக்ட் ஆனார்கள். மூவருக்கும் தனித்தனியாக செய்யவேண்டியது விளக்கப் பட்டது! இதோ பாரும்மா, இது சீக்ரெட் ஆர்மி போஸ்ட். இங்கு பந்த பாசங்களுக்கெல்லாம் இடமில்லை. இங்கு சொன்னதை, ஏன் எதற்கு என்று கேட்காமல் செய்யணும், அவ்வளவுதான். இப்ப இந்த ரூமுக்குள்ள் உங்களோட ஹஸ்பெண்டை கட்டிப் போட்டிருக்கோம்.இதோ உங்களுக்கான துப்பாக்கி. உள்ளே போன வேகத்துல, மூனே ஷூட்டுல உங்க ஹஸ்பெண்ட் காலியாகி இருக்கணும். இது தான் டாஸ்க். ;) எனக்குக் குடும்பம்தான் முக்கியம். கணவனை கொன்றபின்தான் இந்த வேலையென்றால் அது எனக்கு வேண்டவே வேண்டாம் என்று சொல்லி முதல் பெண் எடுத்த எடுப்பில் விலகிக் கொண்டாள். அடுத்த பெண் ஆக்ரோஷமாக உள்ளே நுழைந்தவள், அங்கு கட்டிப் போட்டிருந்த தனது கணவனையும் அவிழ்த்துவிட்டு அழுதபடி வெளியேறினாள். இப்போது கடைசிப் பெண்ணுக்கான வாய்ப்பு. அவள் உள்ளே சென்றதும், டுமீல், டுமீல், டுமீல் என்று துப்பாக்கி சுடும் ஓசை கேட்டது. பின் தள்ளு முள்ளு சத்தம், அப்புறம் கடமுடாவென்று ஏதேதோ சத்தம், கடைசியாக ஐயோ என்ற பெருஞ்சத்தம். வியர்க்க விறுவிறுக்க அந்தப் பெண் வெளியில் வந்தாள். இன்டெர்வியூ நடத்திய ராணுவ அதிகாரிகளைக் கண்டபடி திட்டினாள், போகும்போது அந்தத் துப்பாக்கியில் குண்டு இல்லை என்ற உண்மையைச் சொல்வதில்லையா? இருந்த அந்த ஒரு நாற்காலியைப் பயன்படுத்தி, அவரை அடித்து கொல்வதற்குள் பெரும்பாடாய் போய்விட்டது...! ஹாஹாஹா! எங்கோ படித்தது.... நேற்று உலக ஆடவர் தினமாம்... அதான் ஞாபகம் வந்தது! :P :P Relaxplzz |
Posted: 20 Nov 2014 08:03 AM PST கிரேக்க அறிஞர் பிளாட்டோவிடம் செல்வந்தர் ஒருவர் வந்தார். "பெருந்தகையீர், என் மகனுக்குத் தாங்கள் கல்வி கற்றுத் தர வேண்டும். அதற்கு எவ்வளவு சம்பளம் கேட்கிறீர்கள்?" என்று கேட்டார் செல்வந்தர். "500 வெள்ளிக்காசுகள் தாந்துவிடுங்கள்" என்றார் பிளாட்டோ. "என்ன... 500 வெள்ளிக் காசுகளா...?" என்று அதிர்ந்து போய்க் கேட்டார் செல்வந்தர். "ஆமாம்" என்றார் பிளாட்டோ. "இது மிக மிக அதிகம். அதை விடக் குறைந்த பணத்தில் நான் ஓர் அடிமையையே விலைக்கு வாங்கி விடுவேன்" என்றார் செல்வந்தர். அதைக் கேட்டுப் புன்னகைத்த பிளாட்டோ, "நீங்கள் சொல்வது சரிதான். இதைவிடக் குறைந்த பணத்திற்கு நீங்கள் ஓர் அடிமையையே வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால், அதன் பிறகு பாருங்கள், உங்கள் வீட்டில் உங்கள் மகனையும் சேர்த்து இரண்டு அடிமைகள் இருப்பார்கள்" என்றார் பிளாட்டோ. அதைக் கேட்ட செல்வந்தர் உறைந்து போனார். Relaxplzz ![]() "வரலாற்றுப் பதிவுகள்" |
Posted: 20 Nov 2014 07:51 AM PST |
Posted: 20 Nov 2014 07:40 AM PST |
Posted: 20 Nov 2014 07:30 AM PST |
Posted: 20 Nov 2014 07:15 AM PST இன்று தொலைக்காட்சி பார்த்தவர்களுக்கு இது பழைய செய்தி... பார்க்காதவர்களுக்கு இது புதிய செய்தி..ஒரு அதிசய மற்றும் அதிர்ச்சியான செய்தியும் கூட.. NASA-விஞ்ஞானிகள் நிலவை ஆராய்ந்துகொண்டிருந்த போது அதில் ஒரு மனித உடல் இருப்பதற்கான அறிகுறியை கண்டார்கள்.. இன்னமும் சற்று விரிவாக ஆராய்ந்ததில் அது மனித உடல்தான் என உறுதி படுத்தியிருக்கிறார்கள்...அதன் வயது 2 நூற்றாண்டுகளுக்கு மேல் இருக்கும் எனவும் தெரிகிறது இந்த செய்தி அனவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது..உடனே உலக விஞ்ஞானிகள் அனைவருக்கும் தகவல் பரிமாறப்பட்டிருக்கிறது.. நிலவில் தண்ணீர் இருந்ததை உலகிற்கு முதன்முதலில் கண்டுபிடித்து அதை உறுதி செய்த இந்திய விஞ்ஞானிகளின் பெரு முயற்சியால் இறந்த உடல் நிலவில் இருந்த்தற்கான புதிர் விடுபட்டிருக்கிறது. இறந்து கிடந்த உடல் ஒரு வயதான பெண்மணியின் உடல் என இந்திய விஞ்ஞானிகள் உறுதிபடுத்தியிருக்கிறார்கள். மனிதர்களே நிலவுக்கு போக பிரம்மபிரயத்தனம் பன்னவேண்டியிருக்கும் இந்த காலத்தில் இந்த பாட்டி எப்படி ந்லவுக்கு போனார்கள் என்று விஞ்ஞானிகள் மூளையை கசக்கிகொண்டிருக்கையில்.. அனைவரையும் உலுக்கிய அந்த உண்மை புலப்பட்டது.. அந்தப் பாட்டி வேறு யாருமல்ல... நிலவில் வடை சுட்டுக்கொண்டிருந்த ஆயா பாட்டிதான் அது.. இதைக்கேட்டவுடன் காலயிலிருந்தே மனசு சரியில்லை... ....வடை போச்சே... :P :P Relaxplzz |
Posted: 20 Nov 2014 07:00 AM PST சிகரெட் இல்லாமல் ஒருவரால் வாழமுடியும்... ஆனாலும், சிகரெட் உற்பத்தியாளர் பணக்காரராக இருக்கிறார். மதுவில்லாமல் ஒருவரால் வாழமுடியும்... ஆனாலும், உற்பத்தியாளர் பணக்காரராக இருக்கிறார். மொபைல் இல்லாமலும் ஒருவர் வாழமுடியும்... ஆனாலும், மொபைல் உற்பத்தியாளர் பணக்காரராக இருக்கிறார். உணவில்லாமல் எவரும் வாழமுடியாது!... ஆனாலும், உணவு உற்பத்தியாளர்களான விவசாயிகள் ஏழைகளாகவே இருக்கின்றனர்...!- ஆங்கிலத்தில் கிடைக்கபெற்ற வாசகத்தின் தமிழாக்கம் - Shiva Krishnan. Relaxplzz ![]() |
Posted: 20 Nov 2014 06:40 AM PST |
யதார்த்தம் Posted: 20 Nov 2014 06:30 AM PST |
Posted: 20 Nov 2014 06:15 AM PST ட்ரெய்னியாக ஒரு பெரிய கம்பெனியில் ஒருவன் வேலைக்கு சேர்ந்தான்.சேர்ந்ததும் மிதப்பு தாங்காமல் இண்டர்காமில் டயல் செய்து "ஹலோ யாரது? எனக்கு ஒரு காபி உடனே வேண்டும்" "என்னது காபியா? நீ தவறான நம்பர் டயல் செய்திருக்கிறாய்?" "சரி சரியான நம்பர் எது?" "ஹலோ நீ யார் கிட்ட பேசிக்கிட்டிருக்க தெரியுமா?" "யாரு கிட்ட?" "நான் தான் இந்த கம்பெனியோட CEO" "நீ யார்கிட்ட பேசிக்கிட்டிருக்க தெரியுமா?" "தெரியாது,யார் கிட்ட?" "தெரியாதா அப்பாடா…ரொம்ப நல்லது" டொக்… :P :P Relaxplzz |
Posted: 20 Nov 2014 06:01 AM PST ஒரு சமயம் காந்திஜியும் காகா கலேல்கரும் கர்நாடக மாநிலத்தில் உள்ள "ஷிமோகா" என்ற இடத்திற்குச் சென்றிருந்தனர். ஓர் ஓய்வு நேரத்தில் கலேல்கர் காந்திஜியிடம், "இங்குள்ள ஜெர்சப்பா நீர்வீழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றது. நாம் அவசியம் அதைப் பார்க்க வேண்டும்" என்றார். "நீர்வீழ்ச்சியில் என்ன இருக்கிறது பார்க்க?" எனறு கேட்டார் காந்திஜ "இந்தியாவில் உயரமான நீர்வீழ்ச்சி அது!" என்றார் கலேல்கர். "இருக்கட்டுமே! அதனாலென்ன?" என்று மிகச் சாதாரணமாகச் சொன்னார் காந்திஜி. "இல்லை. அதைப் பார்க்க வேண்டும் போலுள்ளது." என்று குழைந்தார் கலேல்கர். "அங்கு இங்கு சுற்றி நேரத்தை வீணாக்குவது எனக்குப் பிடிக்காது என்பது உங்களுக்குத் தெரியும். எனக்கு வேலை இருக்கிறது. என்னால் வரமுடியாது" என்று தீர்மானமாகச் சொன்னார் காந்திஜி. கலேல்கரோ அவரை விடுவதாக இல்லை. "மன்னிக்க வேண்டும். உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சியான வெனிசுலா நாட்டிலிருக்கும் ஏஞ்சல் நீர்வீழ்ச்சியைப் போல் உள்ளதாம் இந்த நீர்வீழ்ச்சி. போனவுடன் பார்த்துவிட்டு உடனே திரும்பி விடலாம்" என்றார் கலேல்கர். காந்திஜி அவரைத் தீர்க்கமான கண்களால் பார்த்தார். "சரி. இப்பொழுது நான் ஒன்று சொல்லுகிறேன். நீங்கள் சொல்லுவதை விட உயரமான நீர்விழ்ச்சி ஒன்றை நான் பார்த்திருக்கிறேன். ஏஞ்சல் நீர்வீழ்ச்சியைவிட பல மடங்கு உயரத்தில் இருந்து அது விழுகிறது. மகா அற்புதம் போங்கள்" என்றார் காந்திஜி. "அப்படியா...! நீங்கள் சொல்லும் அந்த நீர்வீழ்ச்சி எங்கே இருக்கிறது?" என்று கேட்டார் கலேல்கர். "எங்கும் பார்க்கலாம். மழைதான் அந்த நீர்வீழ்ச்சி. அதைவிடவா நீங்கள் சொல்லும் ஜெர்சப்பா நீர்வீழ்ச்சி உயரத்திலிருந்து விழுகிறது?" என்றார் காந்திஜி. கலேல்கர் வாயடைத்துப் போனானர். அதோடு ஜெர்சப்பா நீர்வீழ்ச்சியைப் பார்க்கும் எண்ணத்தையே விட்டு விட்டார். Relaxplzz ![]() "சில நிகழ்வுகள்" |
Posted: 20 Nov 2014 05:46 AM PST வடிவேலு வசனம் ஒரு சின்ன கற்பனை கரண்ட் : வரும் ஆனா வராது... நதிநீர் பங்கீடு : பேச்சு பேச்சாதான் இருக்கணும்..!! விலைவாசி : ரணகொடூரமா இருக்கு..!! பெண்கள் : வாம்மா மின்னலு..... இந்திய பாகிஸ்தான் எல்லை : இந்த கோட்டத் தாண்டி நீயும் வரக் கூடாது.... நானும் வரமாட்டேன்..!! பெட்ரோல் விலை : நா அப்டியே ஷாக் ஆயிட்டேன்.!! ஷேர் மார்க்கெட் : எதையும் பிளான் பண்ணி பண்ணனும் ... பிளான் பண்ணாம பண்ணா இப்படித்தான்..!! சினிமா : அப்பா ....கண்ண கட்டுதே......... அரசியல் : கிளம்பிட்டாங்கையா ........கிளம்பிட்டாங்க..!!!! :P :P Relaxplzz ![]() குசும்பு... 2 |
Posted: 20 Nov 2014 05:27 AM PST |
Posted: 20 Nov 2014 05:08 AM PST # ஆத்திசூடி ## Share to friends 1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue. 2. ஆறுவது சினம் / 2. Control anger. 3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity. 4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy. 5. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence. 6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation. 7. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise learning. 8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload. 9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast. 10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great. 11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and learn. 12. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy. 13. அகம் சுருக்கேல் / 13. Don't shortchange. 14. கண்டொன்று சொல்லேல் / 14. Don't flip-flop. 15. ஙப் போல் வளை / 15. Bend to befriend. 16. சனி நீராடு / 16. Shower regularly. 17. ஞயம்பட உரை / 17. Sweeten your speech. 18. இடம்பட வீடு எடேல் / 18. Judiciously space your home. 19. இணக்கம் அறிந்து இணங்கு / 19. Befriend the best. 20. தந்தை தாய்ப் பேண் / 20. Protect your parents. 21. நன்றி மறவேல் / 21. Don't forget gratitude. 22. பருவத்தே பயிர் செய் / 22. Husbandry has its season. 23. மண் பறித்து உண்ணேல் / 23. Don't land-grab. 24. இயல்பு அலாதன செய்யேல் / 24. Desist demeaning deeds. 25. அரவம் ஆட்டேல் / 25. Don't play with snakes. 26. இலவம் பஞ்சில் துயில் / 26. Cotton bed better for comfort. 27. வஞ்சகம் பேசேல் / 27. Don't speak sugar-coat words. 28. அழகு அலாதன செய்யேல் / 28. Detest the disorderly. 29. இளமையில் கல் / 29. Learn when young. 30. அரனை மறவேல் / 30. Cherish charity. 31. அனந்தல் ஆடேல் / 31. Over sleeping is obnoxious. 32. கடிவது மற / 32. Constant anger is corrosive. 33. காப்பது விரதம் / 33. Saving lives superior to fasting. 34. கிழமைப்பட வாழ் / 34. Make wealth beneficial. 35. கீழ்மை அகற்று / 35. Distance from the wicked. 36. குணமது கைவிடேல் / 36. Keep all that are useful. 37. கூடிப் பிரியேல் / 37. Don't forsake friends. 38. கெடுப்பது ஒழி / 38. Abandon animosity. 39. கேள்வி முயல் / 39. Learn from the learned. 40. கைவினை கரவேல் / 40. Don't hide knowledge. 41. கொள்ளை விரும்பேல் / 41. Don't swindle. 42. கோதாட்டு ஒழி / 42. Ban all illegal games. 43. கெளவை அகற்று / 43. Don't vilify. 44. சக்கர நெறி நில் / 44. Honor your Lands Constitution. 45. சான்றோர் இனத்து இரு / 45. Associate with the noble. 46. சித்திரம் பேசேல் / 46. Stop being paradoxical. 47. சீர்மை மறவேல் / 47. Remember to be righteous. 48. சுளிக்கச் சொல்லேல் / 48. Don't hurt others feelings. 49. சூது விரும்பேல் / 49. Don't gamble. 50. செய்வன திருந்தச் செய் / 50. Action with perfection. 51. சேரிடம் அறிந்து சேர் / 51. Seek out good friends. 52. சையெனத் திரியேல் / 52. Avoid being insulted. 53. சொற் சோர்வு படேல் / 53. Don't show fatigue in conversation. 54. சோம்பித் திரியேல் / 54. Don't be a lazybones. 55. தக்கோன் எனத் திரி / 55. Be trustworthy. 56. தானமது விரும்பு / 56. Be kind to the unfortunate. 57. திருமாலுக்கு அடிமை செய் / 57. Serve the protector. 58. தீவினை அகற்று / 58. Don't sin. 59. துன்பத்திற்கு இடம் கொடேல் / 59. Don't attract suffering. 60. தூக்கி வினை செய் / 60. Deliberate every action. 61. தெய்வம் இகழேல் / 61. Don't defame the divine. 62. தேசத்தோடு ஒட்டி வாழ் / 62. Live in unison with your countrymen. 63. தையல் சொல் கேளேல் / 63. Don't listen to the designing. 64. தொன்மை மறவேல் / 64. Don't forget your past glory. 65. தோற்பன தொடரேல் / 65. Don't compete if sure of defeat. 66. நன்மை கடைப்பிடி / 66. Adhere to the beneficial. 67. நாடு ஒப்பன செய் / 67. Do nationally agreeables. 68. நிலையில் பிரியேல் / 68. Don't depart from good standing. 69. நீர் விளையாடேல் / 69. Don't jump into a watery grave. 70. நுண்மை நுகரேல் / 70. Don't over snack. 71. நூல் பல கல் / 71. Read variety of materials. 72. நெற்பயிர் விளைவு செய் / 72. Grow your own staple. 73. நேர்பட ஒழுகு / 73. Exhibit good manners always. 74. நைவினை நணுகேல் / 74. Don't involve in destruction. 75. நொய்ய உரையேல் / 75. Don't dabble in sleaze. 76. நோய்க்கு இடம் கொடேல் / 76. Avoid unhealthy lifestyle. 77. பழிப்பன பகரேல் / 77. Speak no vulgarity. 78. பாம்பொடு பழகேல் / 78. Keep away from the vicious. 79. பிழைபடச் சொல்லேல் / 79. Watch out for self incrimination. 80. பீடு பெற நில் / 80. Follow path of honor. 81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / 81. Protect your benefactor. 82. பூமி திருத்தி உண் / 82. Cultivate the land and feed. 83. பெரியாரைத் துணைக் கொள் / 83. Seek help from the old and wise. 84. பேதைமை அகற்று / 84. Eradicate ignorance. 85. பையலோடு இணங்கேல் / 85. Don't comply with idiots. 86. பொருள்தனைப் போற்றி வாழ் / 86. Protect and enhance your wealth. 87. போர்த் தொழில் புரியேல் / 87. Don't encourage war. 88. மனம் தடுமாறேல் / 88. Don't vacillate. 89. மாற்றானுக்கு இடம் கொடேல் / 89. Don't accommodate your enemy. 90. மிகைபடச் சொல்லேல் / 90. Don't over dramatize. 91. மீதூண் விரும்பேல் / 91. Don't be a glutton. 92. முனைமுகத்து நில்லேல் / 92. Don't join an unjust fight. 93. மூர்க்கரோடு இணங்கேல் / 93. Don't agree with the stubborn. 94. மெல்லி நல்லாள் தோள்சேர் / 94. Stick with your exemplary wife. 95. மேன்மக்கள் சொல் கேள் / 95. Listen to men of quality. 96. மை விழியார் மனை அகல் / 96. Dissociate from the jealous. 97. மொழிவது அற மொழி / 97. Speak with clarity. 98. மோகத்தை முனி / 98. Hate any desire for lust. 99. வல்லமை பேசேல் / 99. Don't self praise. 100. வாது முற்கூறேல் / 100. Don't gossip or spread rumor. 101. வித்தை விரும்பு / 101. Long to learn. 102. வீடு பெற நில் / 102. Work for a peaceful life. 103. உத்தமனாய் இரு / 103. Lead exemplary life. 104. ஊருடன் கூடி வாழ் / 104. Live amicably. 105. வெட்டெனப் பேசேல் / 105. Don't be harsh with words and deeds. 106. வேண்டி வினை செயேல் / 106. Don't premeditate harm. 107. வைகறைத் துயில் எழு / 107. Be an early-riser. 108. ஒன்னாரைத் தேறேல் / 108. Never join your enemy. 109. ஓரம் சொல்லேல் / 109. Be impartial in judgement. - ஔவையார் / Great Poetess Avvaiyaar Relaxplzz ![]() "தமிழ் - தமிழர் பெருமை" - 1 |
Posted: 20 Nov 2014 04:48 AM PST |
Posted: 20 Nov 2014 04:30 AM PST |
Posted: 20 Nov 2014 04:07 AM PST இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம். ……. மார்க்கப்பொலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார். பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும். உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான். மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன. பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது. பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும். நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை. நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும். ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும். தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் – மனிதன். முன்னாள் பின்னல் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை – தேன்சிட்டு. தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்க தெரியாது. மனித உடலில் மட்டும் 17,000 வகை நுண்கிருமிகள் வாழ்கின்றன. புற்று நோய் உட்பட எந்த நோயுமே வராத ஒரே உயிரினம் – சுறாமீன். நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்துவிடும் ஒரே மீன் – சுறாமீன். தயிராக மாற்ற முடியாத ஒரே பால் – ஒட்டகப்பால் ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் – கங்காரு எலி. துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை. பின்புறமாக மரம் ஏறும் விலங்கு – கரடி. ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன்படுகிறது. மீதமுள்ள 70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனோ ஆக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது. சீனாவில் ஒரு மனிதனின் பிறந்தநாள் அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது. ஆக்டோபஸ்க்கு மூன்று இதயம் இருக்கும். அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும். குரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது. சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள்(2010 ஆண்டு வரை). பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதை கணக்கிட்டுள்ளனர். சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர் . அதனால்தான் இந்த முறைக்கு சீசரியன் என்று பெயர் வந்தது. பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது. நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்க்கும். நாம் நேற்று கட்டிய பள்ளிகூடங்கள் எல்லாம் இன்று விரிசல் விழும் நிலையில் இருக்க… ஷி-ஹூவாங்-டி என்பரின் ஆட்சி காலத்தில் சீன பெருஞ்சுவர் கி.மு 200களில் கட்டப்பட்டது. தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம் 4120 ஆண்டுகள் பழைமையானவை. காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு சிங்கம் ஆனால் அதான் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் தான். வயிறு நிரம்பி இருந்தால்தான் சிங்கம் கர்ஜிக்கும். மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு – சிங்கம். "லங்கா வீரன் சுத்ரா " என்ற மத நூல் முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டது. தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு – ஒட்டகம். இலைகள் உதிர்க்காத மரம் – ஊசி இலை மரம். காட்டு வாத்து கருப்பு நிறத்தில்தான் முட்டையிடும். குளிர் காலத்தில் குயில் கூவாது. எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை அறிமுகபடுத்தியுள்ளார். அவர் மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர். லியான்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதி கொண்டே மறுகையால் படம் வரையும் திறன் உடையவர். அவர் வரைந்த உலகபுகழ் பெற்ற மோனாலிச ஓவியம் இடது கையால் வரையப்பட்டது. கரப்பான்பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும் அது தலை இன்றி ஒன்பது நாள் வரை உயிர்வாழும். ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசியில் தான் இறந்து போகும். கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்துவிடும். யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே – யானையின் உயரம். கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு – இதயம். 1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் 310 பேர் தான். ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் – ஈரிதழ்சிட்டு. வால்டிஷ்ணி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார். ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள். பெரியார் பொதுக்கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21400 மணிநேரம் பேசியுள்ளார். அவருடைய சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும். ஒட்டகம் ஒரே சமயத்தில் ௦90 லிட்டர் தண்ணீரை குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது. தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகுதான் கராத்தே வீரர் ஆனார் – புருஸ்லீ. சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது. விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டிஆரஞ்சு நிறத்தில் இருக்கும். சீல்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும். யானை குதிரை நின்று கொண்டே தூங்கும். நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும். டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும் புழுக்களுக்கு தூக்கம கிடையாது. நாம் இறந்து பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது. Relaxplzz ![]() தகவல் துணுக்குகள் |
Posted: 20 Nov 2014 03:45 AM PST வாழ்க்கை என்பது கையில் இருக்கும் பட்டாம்பூச்சி போல லேசாக பிடித்தால் பறந்து விடும் அழுத்தி பிடித்தால் இறந்து விடும் சரியாக பிடித்தால் அழகாய் இருக்கும். Relaxplzz ![]() |
Posted: 20 Nov 2014 03:30 AM PST |
Posted: 20 Nov 2014 03:17 AM PST உனக்கு என்னிடம் ரொம்ப பிடித்த விஷயங்கள் என்ன? அஞ்சு விஷயம் ரொம்ப பிடிக்கும். அப்படியா? என்னென்ன சொல்லு... ஒன்னு உன்னுடைய பெரிய கண்ணு ம்ம்ம்ம் அப்புறம் உன் அழகான ஸ்மைல் ம்ஹூம்... அப்புறம்... உன் ஹேர் ஸ்டைல் வாவ் உன் ட்ரெஸ் சென்ஸ் கியூட். மேலே சொல்லு... லாஸ்ட் பட் பட் நாட் லீஸ்ட் , நான் சொல்றது எல்லாம் பொய் என்று நல்லா தெரிஞ்சும், அதை அப்படியே நம்பும். உன் குழந்தை மாதிரி மனசு ... யூ ஸ்டுபிட்.... :P :P Photo Aa Photography Relaxplzz ![]() குசும்பு... 1 |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment