FB Posts by Araathu அராத்து |
Posted: 31 Jul 2014 10:01 PM PDT நீயா நானா நேற்று ஒரு நீயா நானா வில் கலந்து கொண்டேன். கார்கள் பற்றிய ஷோ! நடுவர் / ஸ்பெஷல் கெஸ்டாக கலந்து கொண்டால் பல்லு புடுங்கிய பாம்பாகி விட வேண்டியுள்ளது. அந்த புதைகுழி போன்ற ஷோஃபாவில் புதைந்து கொண்டு இரண்டு பக்கமும் பேசுவதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு சற்று மோன நிலைக்கு செல்கையில் , சடாரென கோபி இதைப்பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க என கேட்கும் போது அரைத் தூக்கம் கலைந்து தூக்கி வாரிப்போடுகிறது. ஒவ்வொரு ரவுண்டிலும் நமக்கு பல பாயிண்ட்கள் பேச தோன்றும்.சிறப்பு அழைப்பாளராக செல்கையில் கடைசியில் கேட்கும் கேள்விக்கு மட்டும் பதிலளித்து விட்டு இடத்தை ஏறகட்ட வேண்டியதாகி விடுகிறது. உதாரணமாக , முதல் ரவுண்டில் ஜாலியாக போய்க்கொண்டு இருக்கும் , அப்போது நமக்கும் ஜாலியாக பல பாயிண்ட்ஸ் தோன்றும். அப்போது பேச முடியாது. கடைசியில் சீரியஸாக ஷோ மாறிவிடும். அப்போது நாம் , அவரு அப்ப அப்பிடி சொன்னாரு இல்லையான்னு நீட்டி மொழக்கி பேசிக்கிட்டு இருக்க முடியாது. ஓகே , அதனால் ? அதனால் சிறப்பு அழைப்பாளர் பதவியை ராஜினாமா செய்து என் கைப்பட எழுதி ஆண்டனியிடம் கடிதம் கொடுத்து விட்டு வந்துவிட்டேன். இனி என்னை அழைத்தால் பங்கேற்பாலர்களில் ஒருவனாக மட்டுமே கலந்து கொள்வே. ஒப்பம் - அராத்து |
You are subscribed to email updates from FB-RSS Feed for Araathu அராத்து (via Thenali Raman Vaarisu) To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment