Monday, 1 June 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


:) Relaxplzz

Posted: 01 Jun 2015 08:44 AM PDT

ரூபாய்க்கு பத்து சொல்லி பன்னிரெண்டாக இலந்தை.. நாவல்பழங்களை முந்தானைச் சீலையில் த...

Posted: 01 Jun 2015 08:23 AM PDT

ரூபாய்க்கு பத்து சொல்லி
பன்னிரெண்டாக
இலந்தை.. நாவல்பழங்களை
முந்தானைச் சீலையில்
துடைத்துக் கொடுக்கும் பாட்டிகளிடமும்...

வரப்பில் இறங்கி..
கடலைக் கொத்துக்கள் பிடுங்க...
தூரத்து மண்வெட்டி சகிதமாய்
ஆசைக்கு ரெண்டு கொத்துமட்டும்
என அனுமதித்திருந்த அண்ணன்களிடமும்....

இந்தப்பழம் இனிக்கும் எனக் கேட்டு
கல்லெறிந்து தோற்கையில்..
அலக்குகளில் செங்காய்ப் பத
புளியம்பழங்கள்
உலுக்கித் தரும் ஆட்டுக்காரத் தாத்தாவிடமும்...

இந்தமுறை கண்டிப்பாகச்
சொல்லிவிட வேண்டும்......ஹைஜீனிக்
காரணங்களுக்காய்
மொறுவல் பண்ட காகிதப்
பொட்டலங்கள் மட்டுமே பிள்ளைகளுக்குக்
கொடுக்கிறோம்..... என்பதை....
மாதம் ஒருமுறையாவது
வயிற்றுக் கோளாறுகளுக்காய் மருத்துவம்
பார்த்துக் கொள்கிறோம் என்று
நாங்கள்
சொல்லாமலேயே அவர்கள்
புரிந்து கொண்டிருக்கக் கூடும்.....

- திவ்ய தர்ஷினி

Relaxplzz


"நினைவுகள்"

:) Relaxplzz

Posted: 01 Jun 2015 08:10 AM PDT

கல்வித்துறையில் உடனடியாக செய்ய வேண்டிய முதல் விசயம் இதுதான். கிறிஸ்தவ, இஸ்லாமிய...

Posted: 01 Jun 2015 08:00 AM PDT

கல்வித்துறையில் உடனடியாக செய்ய வேண்டிய முதல் விசயம் இதுதான்.

கிறிஸ்தவ, இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள், மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயாக்கள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அனைத்து வகை உயர்கல்வி நிறுவனங்களிலும் இறை வழிபாடுகள், மதப்பிரச்சாரங்கள், ஆன்மீக வகுப்புகள் இவை அனைத்தையும் முற்றிலும் தடைசெய்துவிட்டு, கல்வியை மட்டும் கற்றுக் கொடுப்பதே சிறந்த கல்வியியல் அணுகுமுறை.

எல்லாவகை மத வழிபாடுகளையும் உங்கள் பிரார்த்தனைக் கூடங்களிலும் உங்கள் வீட்டு பூஜை அறைகளோடும் நிறுத்திக் கொள்வதே இந்தியாவிற்கும் அதன் எதிர்காலத்திற்கும் நல்லது.

.
- Nelson Xavier @ Relaxplzz

கூத்தாடிகளின் பேச்சை நம்பி குழந்தைகளை தரம்கெட்ட கல்வி நிலையங்களுக்கு அனுப்பாதீர்...

Posted: 01 Jun 2015 07:45 AM PDT

கூத்தாடிகளின் பேச்சை நம்பி குழந்தைகளை தரம்கெட்ட கல்வி நிலையங்களுக்கு அனுப்பாதீர்கள்.

பணத்திற்காக எதைவேண்டுமானாலும் செய்யும் பண்புகெட்டவர்களை அடையாளம்கண்டு புறக்கணியுங்கள்.

- சிவ சிவா @ Relaxplzz

:) Relaxplzz

Posted: 01 Jun 2015 07:42 AM PDT

மூவர்ண கொடியோடு வருவேன், அல்லது மூவர்ண கொடி சுற்றப்பட்டு வருவேன் - கேப்டன் விக்ர...

Posted: 01 Jun 2015 07:28 AM PDT

மூவர்ண கொடியோடு வருவேன்,
அல்லது மூவர்ண கொடி சுற்றப்பட்டு வருவேன்
- கேப்டன் விக்ரம் பத்ரா

உங்களின் வாழ்நாள் சாகசம், எங்களது தினசரி வாழ்க்கை

என் ரத்தத்தின் வீரத்தை உணர்த்துவதற்கு முன்பாக,
எனக்கு மரணம் வருமானால்,
மரணத்தை துரத்தி கொள்வேன் - கேப்டன் மனோஜ் குமார் பாண்டே

தேசிய கொடி காற்றினால் அசைவதல்ல,
அதை காக்க முயன்ற வீரர்களின் கடைசி மூச்சினால்

கடவுளுக்கு வேண்டுமானால் கருணை இருக்கலாம்,
எங்களின் எதிரிகளின் மேல்,
ஆனால் எங்களுக்கு இல்லை..

வாய்ப்புகளினால் வாழ்கிறோம்,
சந்தர்ப்பங்களால் நேயமுருகிறோம்,
உத்யோகத்தினால் உயிரிழக்கிறோம்..

மரணம் எனக்கு பயமில்லை என்று ஒருவன் சொன்னால்,
அவன் கூறுவது பொய்யாக இருக்கலாம்,
அல்லது அவன் படைவீரனாக இருக்கலாம்..

Relaxplzz


"மனம் தொட்ட வரிகள்" - 2

கோக் பிரியரா நீங்க, இதை பார்த்தா சத்தியமா இனிமே அந்த கருமத்தை குடிக்க மாட்டீங்க..

Posted: 01 Jun 2015 07:21 AM PDT

கோக் பிரியரா நீங்க, இதை பார்த்தா சத்தியமா இனிமே அந்த கருமத்தை குடிக்க மாட்டீங்க..


கோக் பிரியரா நீங்க, இதை பார்த்தா சத்தியமா இனிமே அந்த கருமத்தை குடிக்க மாட்டீங்க..

பறவை முனியம்மா என்ற துணை நடிகை தூள் படத்தின் மூலம் அறிமுகமாகி,சினிமாத்துறையில் அ...

Posted: 01 Jun 2015 06:47 AM PDT

பறவை முனியம்மா என்ற துணை நடிகை தூள் படத்தின் மூலம் அறிமுகமாகி,சினிமாத்துறையில் அவரது பாடல்கள் ஒளிபரப்பாகி நல்ல நிலையில் இருந்தார்.

75 படங்களில் நடித்தும் இருக்கிறார்.பல மேடைக் கச்சேரிகளில் இவரது பாடல்கள் ஒலிக்காத இடங்களே இல்லை என சொல்லலாம்.வெளிநாடுகளுக்குச் சென்று கூட பாடியிருக்கிறார்.கடைசியாக மான்கராத்தே படத்தில் சிவகார்த்திகேயன் கூட ஒரு பாடல் காட்சியில் தோன்றினார்.அதன்பிறகு காணாமல் போன பறவை முனியம்மா என்ன ஆனார் என்று தெரியாமல் இருந்த எனக்கு ஒரு வார இதழில் அவரின் தற்போதைய நிலமையைக் கண்டு மிக வருத்தமாக இருந்தது....

பறவை முனியம்மா தற்போது குரல் உடைந்துபோய் பாட முடியாமல்,தைராய்டு மூட்டுவலி,என பல உடல் உபாதைகளால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். அதனால் கச்சேரி,பட வாய்ப்புகள் இல்லாமல் மிகவும் கஷ்டமான சூழலில் சில குழந்தைகள் பெற்றாலும்,ஒரே ஒரு மகளின் வீட்டில் மருமகனின் கரிசனத்தோடு மருத்துவச் செலவிற்கே பணம் செலவளிக்க வழியில்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பது தான் மிகவும் கொடுமை.

அவரது கணவர் இறந்த சோகம் ஒருபுறமும், நடிப்பையும், பாட்டையும் நம்பியே வாழ்ந்து கொண்டிருந்த இவருக்கு, இப்போது நடிக்க முடியாமல் தன் குரலும் உடைந்துபோய்விட்டதால்,தன்னால் பேசக்கூட முடியாத நிலைக்கு ஆளாகிவிட்டோமே என்றக் கவலை பறவை முனியம்மாவிற்கு பெருத்த சோகமாக குடிகொண்டு இருக்கிறது.பலருடன் நடித்த பறவை முனியம்மாவிற்கு விவேக், சிவகார்த்திகேயன், சந்தானம் உள்ளிட்டவர்கள் கூட உதவி செய்ய முன்வரவில்லை என்பது மட்டுமல்ல, தன்னை சந்திக்கக்கூட செல்லவில்லை என்பது தான் சினிமாத்துறை ஒருபுறம் நல்லநிலையிலும், ஒருபுறம் மிகவும் மோசமான நிலையிலும் இருப்பதை காட்டுகிறது.

விதவை பென்சனாவது தனக்குக் கிடைத்தால் மருத்துவ உதவிக்கு வசதியாக இருக்கும் ஆனால் அதுகூட தனக்கு கிடைக்கவில்லை என்கிறார். நடிக சங்கங்கள் இவரைப் போன்றோருக்கு உதவி செய்ய வேண்டும், துணை, இணையாக நடிக்கும், நடிகர், நடிகைகளுக்கு கோடிக்கணக்கில் கொட்டி கொடுக்காவிட்டாலும், நடிப்பவர்களுக்கு தகுந்த அளவில் சம்பளப்பணத்தை அதிகரிக்கச் செய்யலாம். இல்லை வாழ்நாள் முழுதும் கஷ்டப்படாமல் இருக்க நடிக சங்ககளில் இருந்து பென்ஷன் போன்ற ஏதாவது திட்டங்கள் கொண்டுவரலாம்..

பறவை முனியம்மாவைப் போல் எத்தனை பேர் நடிப்பை நம்பி, சம்பளம் குறைவாகப்பெற்று, நடிக்க வாய்ப்பில்லாதபோது, தங்கள் கடைசி காலங்களில் சாப்பிடக்கூட வசதியில்லாமல், கஷ்டப்பட்டு கண்ணீர் விட்டுக்கொண்டுருக்கிறார்கள் என்பதற்கு பறவைமுனியம்மாவின் வாழ்க்கை ஒரு உதாரணம்.

- Prathiba Prathi

Relaxplzz


Relaxplzz

Posted: 01 Jun 2015 06:34 AM PDT

சென்னை அமிர்தாவுடன் எனக்கு தொடர்பில்லை, மாணவர்கள் விசாரித்து சேருங்கள் - ராதிகா....

Posted: 01 Jun 2015 02:04 AM PDT

சென்னை அமிர்தாவுடன் எனக்கு தொடர்பில்லை, மாணவர்கள் விசாரித்து சேருங்கள் - ராதிகா.

சென்னை அமிர்தா இவங்கள எப்படி மாத்திருச்சு பாருங்க...

- Boopathy murugesh

0 comments:

Post a Comment